Saturday, 30 July 2011
கலைஞரோடு ஒரு பயணம்!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
9:11 pm
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
ஓளியும்ஒலியும்,
திராவிட இயக்கம்,
திராவிடம்


சமச்சீர் கல்வி! உண்மையை ஒத்துக்கொண்ட அரசு!
காலாண்டு பரிட்சை நடக்குமா நடக்காதா?, முழு ஆண்டு பரிட்சைக்குள் பாதி புத்தகத்தையாவது படிக்க முடியுமா, முடியாதா? - தவிப்பும் குழப்பமுமாக இருக்கிறார்கள் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள். சமச்சீர் கல்வி விவகாரத்தில், தமிழக அரசு வழக்கறிஞரே குழம்பிப்போனதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆச்சரியத்தோடு பார்த்த நிலைமையும் ஏற்பட்டது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கும் ஜெ. அரசு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அரசு நிலைக்கு ஆதரவாக மெட்ரிக் பள்ளி சங்கங்களும் முறையீடு செய்தன. உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்டு 2-ந் தேதிக்குள் சமச்சீர் பாட்ப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதுவரை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான பணி தொடங்கப்படவில்லை என்பதுடன், இணையதளத்தில் இருந்த சமச்சீர்கல்விப் பாடங்களும் அகற்றப்பட்டுவிட்டன. ஜெ. அரசின் நிலைப்பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்துள்ள நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஜூலை 26-ந் தேதி தொடங்கியது.
நீதியரசர்கள் ஜே.எம்.பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய மூவர் பெஞ்ச் முன் நடந்த விசாரணையில், தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.பி. ராவ்வை நோக்கி சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார்கள். நீதிமன்ற உத்தரவுகள் தான் இறுதித் தீர்ப்பு என்றபிறகும் தமிழக சட்டமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வந்ததற்கு என்ன காரணம்? இது அரசின் அதிகாரத்தை மீறிய செயல் இல்லையா? என்பது உள்ளிட்ட கேள்விகள் சீறின. 27 -ந் தேதியும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தபோது தமிழக அரசு வழக்கறிஞரான பி.பி. ராவ், "இது போன்ற சட்டதிருத்தம் தேவையில்லை எனத் தெளிவான -துணிவான -சுதந்திரமான சட்ட ஆலோசனை அரசுக்கு வழங்கப்படவில்லை. தேவையில்லாத வேலைகளைச் செய்ததால், தேவையில்லாத பிரச்சினகளை நாங்களே (அரசு) தேடிக்கொண்டோம் என்பது தான் உண்மை "என்றார். நீதிபதிகளும், சமச்சீர் கல்விக்கு ஆதரவாகப் போராடும் பெற்றோர் -மாணவர் சார்பிலான வழக்கறிஞர்களும் தமிழக அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் வாதத்தால் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தனர்.
மதியமும் தொடர்ந்த வாதத்தின் போது, தன்னுடைய கருத்துக்கள் சொந்தக்கருத்துதான் என்றும் தமிழக அரசின் சட்ட ஆலோசகர்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதாகவும் பி.பி. ராவ் சொன்னார். எனினும், சம்ச்சீர் கல்வி விவகாரத்தில் ஜெ. அரசின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை நீதிமன்றஃத்தில் பதிவு செய்துவிட்டது அரசு வழக்கறிஞரின் வாதம் என்கிறார்கள் பெற்றோர்-மாணவர்களுக்கான வழக்கறிஞர்கள்.
பாடத்திட்டத்தை தேசிய-சர்வதேச அளவில் உயர்த்தவிருப்பதாகவும் அதனால் அடுத்த ஆண்டு தான் (2012-13) சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள ஜெ.அரசு, அதற்கான டைம் டேபிளையும் கொடுத்துள்ளது. புதிய அறிவிக்கை வெளியிட ஒரு வாரம், அட்வைசரி கவுன்சில் அமைக்க ஒரு வாரம், பள்ளிக்கான அடிப்படை கட்டமைப்பு -பாடம் நடத்துவதற்கான கருவிகள் -ஆசிரியர் விகிதம் உள்ளிட்டவற்றை முடிவு செய்ய ஒருவாரம், புதிய பாடத்திட்டம் பற்றி முடிவு செய்ய ஒரு வாரம், அந்தப் பாடத்திட்டத்தை வடிவமைக்க 2 மாதம் என செப்டம்படர்வரை பல்வேறு பணிகள் இருப்பதாகவும், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதும் அதை இணையதளத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள்- பெற்றோர் - பெற்றோர் -பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கு 2 வார அவகாசம் தேவைப்படும் என்றும், இதன்பின் பாடங்களை எழுதி, மறு ஆய்வு செய்ய 4 மாத காலமும், புத்தகங்களை அச்சிட மேலும் 4 மாத காலமும் தேவைப்படுவதால் 2012 மே மாதம்தான் தரமான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாராகும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகஸ்டு 2-க்குள் புத்தகங்களை வழங்குவதற்கான அவகாசம் போதாது என அரசுத் தரப்பு தெரிவித்த்தால் 5-ந் தேதி வரை அவகாசம் தந்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஜெ. அரசின் இழுத்தடிப்பு நடவடிக்கைகளை நன்கறிந்த பெற்றோர்-மாணவர் சார்பிலான வழக்கறிஞர்கள் 28-ந் தேதியன்று தங்களின் வலுவான வாதங்களை எடுத்து வைத்தனர். இதனிடையே, தமிழகத்தின் பல பகுதிகளிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
சி.பி.எம்.மின் இந்திய மாணவர் சங்கம், சி.பி.ஐ.யின் இந்திய மாணவர் பெருமன்றம், ம.க.இ.க.வின் புரட்சிகர இளைஞர்-மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டங்களை நடத்திவரும் நிலையில், சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்த தி.மு.க. இப்போது போராட்டக்களத்திற்கு வந்துள்ளது.
ஜூலை 29-ந் நேதியன்று தமிழக மாணவர்கள் தங்கள் பள்ளி-கல்லூரிகளை புறக்கணிக்க வேண்டுமென்றும் பெற்றோரும் அலுவலகங்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றும் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்ததுடன், தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் அனைத்து பள்ளி கல்லூரிகள் முன்பாகப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ரொம்பவும் தாமதமான போராட்ட அறிவிப்பு என்ற எண்ணம் தி.மு.க.வினர் மத்தியிலேயே உள்ளபோதும், 27-ந் தேதி இரவு வரை போராட்டத்திற்கான ஏற்பாடுகளை பல மாவட்டங்களிலும் மேற்கொண்டனர்.
சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் என்னென்ன போராட்ட யுக்திகளை கையாளலாம் என்று விவாதிக்கப்பட்டது என்கிறார்கள் தி.மு.க. இளைஞரணி-மாணவரணி நிர்வாகிகள்.
அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், சமச்சீர் கல்வி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே பெற்றோர்-மாணவர் மனதில் எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
--நமது நிருபர், நக்கீரன் 2011 ஜூலை 30-ஆக.02
************************
பொது ஜனம்; ஜெ. சர்வதேச அளவில் தமிழகக் கல்வியைக் எவ்வளவு அக்கறையா உச்சநீதிமன்றத்தை ஏமாத்தியாவது கொண்டுவரணும்னு! நினைக்குது! இதை இந்த ஜனங்க புறிஞ்சிக்க மாட்டேங்கதுங்களே!
பொது ஜனம்; இந்த பொம்பளையை நல்லா புறிஞ்சிகிட்டுத்தான் 29 ந் தேதி போராட்டம் பண்ணாங்களோ!
பொது ஜனம்; போலீசை விட்டு மாணவர்களின் போராட்டத்தை தடுக்குதேப்பா!
பொது ஜனம்; தடுத்தா மட்டும் சும்மா விட்டுருவாங்களா? போலீஸ்காரன் புள்ளைங்களும் படிக்குது இல்லே! அவங்களுக்கும் சேர்த்து தானே இந்த போராட்டம்! அ.தி.மு.க அள்ளக்கைங்களோட புள்ளைங்களுக்கும் சேர்த்துதான்.
இடுகையிட்டது
நம்பி
நேரம்
4:45 pm
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்


Wednesday, 27 July 2011
தமிழக அரசில் "தரமான" ( தகுந்த) நபர்கள் இல்லை!...தமிழக அரசு வக்கீல்! உச்சநீதிமன்றத்தில் சேம் சைடு கோல்!
நீதிமன்ற நேரத்தை விரயம் செய்துவிட்டது தமிழக அரசு - சமச்சீர் கல்வி வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதத்தால் பரபரப்பு
கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றும் சட்டத்தில் திருத்தம் செய்து நீதிமன்ற நேரத்தை விரயம் செய்துவிட்டதாகவும் சமச்சீர் கல்வி வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று 2வது நாளாக தமிழக அரசு வழக்கறிஞர் பி.வி.ராவ் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்று கேட்டனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் சட்டத் திருத்தம் ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ், கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றார்.
அவ்வாறு ஆலோசனைகள் வழங்காததால் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என்றும் ராவ் வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 2011ஆம் ஆண்டோ அதற்கு பிறகோ அமல்படுத்தலாம் என்று கூறியதை ராவ் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ளலாம் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்துவிட்டது என்றார்.
தமிழக அரசு மீதே அரசு வழக்கறிஞர் கூறிய புகாரால் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாதிட்ட வழக்கறிஞர் ராவ், சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்றார்.
அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ அமல்படுத்தலாம் என்று அரசின் வாதம் தொடர்ந்து நடைபெற்றது.
நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று 2வது நாளாக தமிழக அரசு வழக்கறிஞர் பி.வி.ராவ் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்று கேட்டனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் சட்டத் திருத்தம் ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ், கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றார்.
அவ்வாறு ஆலோசனைகள் வழங்காததால் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என்றும் ராவ் வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 2011ஆம் ஆண்டோ அதற்கு பிறகோ அமல்படுத்தலாம் என்று கூறியதை ராவ் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ளலாம் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்துவிட்டது என்றார்.
தமிழக அரசு மீதே அரசு வழக்கறிஞர் கூறிய புகாரால் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாதிட்ட வழக்கறிஞர் ராவ், சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்றார்.
அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ அமல்படுத்தலாம் என்று அரசின் வாதம் தொடர்ந்து நடைபெற்றது.
...வெப்துனியா 27.07.2011
*****************************
பொது ஜனம்; தமிழக அரசில் கல்வி, சட்டம் பத்தி தெரிஞ்ச தகுதியான ஆட்கள் இல்லைன்னு! அரசாங்க வக்கீலே சொல்றாரே! அப்ப! எப்படி? சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களின் தரத்தைப் பற்றி ஆராய முடியும்?
பொது ஜனம்; அப்ப தமிழக அரசில இருக்கிற தரமில்லாதவங்க தான், சமச்சீர் பாடப்புத்தகத்தை தரமில்லைன்னு சொல்லி டகால்டி பண்ணியிருக்காங்க! யாருக்காக?
பொது ஜனம்;எல்லாம் மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காகத்தான்!
பொது ஜனம்; அப்ப தமிழக அரசில இருக்கிற தரமில்லாதவங்க தான், சமச்சீர் பாடப்புத்தகத்தை தரமில்லைன்னு சொல்லி டகால்டி பண்ணியிருக்காங்க! யாருக்காக?
பொது ஜனம்;எல்லாம் மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காகத்தான்!
பொது ஜனம்; அடப்பாவிங்களா! சின்ன புள்ளைங்க கிட்ட கேட்டாக் கூட, அதுங்க இதப்பத்தி சொல்லிக் கொடுத்து இருக்குமே! இந்த லட்சணத்தில இந்த பொம்பளை 2 மாசமா பசங்க படிப்பை பாழாக்கிடுச்சே! இதுக்கு வாந்தி பேதி வர!
பொது ஜனம்; இந்த அலப்பறைக்குத்தான், பெத்தவங்க வயிறை எரியவைச்சுதா!
பொது ஜனம்; பள்ளிக்கூடம் சரியா நடக்காதனாலே புள்ளைங்க ஹோமோ செக்ஸ் வரைக்கும் போய் ஒரு 7 வயசு குழந்தை கொலையாயிடுச்சு! செஞ்சது எல்லாம் சின்னப்பசங்க தான்!
பொது ஜனம்; பாடப்புத்தகம் இருந்தா ஒரு வேளை கவனம் சிதறாமல் இருந்திருக்கலாம்!
பொது ஜனம்; பாடப்புத்தகம் இருந்தா ஒரு வேளை கவனம் சிதறாமல் இருந்திருக்கலாம்!
பொது ஜனம்; ஆமாய்யா! இரண்டு மூன்று புள்ளைங்க விளையாடப்போய், குளத்தில மூழ்கி செத்துடுச்சுங்க!
பொது ஜனம்; பல பசங்க ஸ்கூல் கட்டடிச்சுட்டு ஊர் சுத்த போயிடுச்சுங்க! படின்னாலும் புக்குதான் இல்லையேண்டு சொல்லுதுங்க! "புக்கு இல்லாம எதுக்கு படி படின்னு உயிரை வாங்கறீங்கண்டு" சொல்லுதுங்க!
பொது ஜனம்; எல்லா நாசத்தையும் 2 மாசத்தில உருவாக்கிடுச்சுய்யா! இதை லேசுல விடக்கூடாதுய்யா! உச்சநீதிமன்றம் இதுக்கு சரியான தண்டனை வழங்கனும். ஒன்றரை கோடி புள்ளைங்களோட வாழ்க்கையில விளையாடிய குற்றத்துக்கு தண்டனையை அனுபவிச்சே ஆகணும்.
பொது ஜனம்; இட்லர் இருந்தாக் கூட இந்த மாதிரி பண்ணியிருக்க மாட்டான்யா!
பொது ஜனம்; இட்லர் இருந்தாக் கூட இந்த மாதிரி பண்ணியிருக்க மாட்டான்யா!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
3:06 pm
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்


Thursday, 21 July 2011
சமச்சீர் கல்வி! அரசை விளாசிய நீதிபதிகள்!
30 நாட்களாக படிப்பதற்கு பாடப்புத்தகங்களே இல்லாமல் தங்கள் எதிர்காலம் என்னவாகுமோ? என இருளில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் மாணவர்கள் வாழ்வில் சென்னை உயர்நீதிமன்றம் ஒளியேற்றியுள்ளது.
தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை திங்களன்று படிக்க ஆரம்பித்தபோது நேரம் சரியாக 12.50 மணி... "தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டம், ' இந்திய மக்கள் அனைவரும் சமமான கல்வி பெற வேண்டும். 'அது அவர்களின் அடிப்படை உரிமை' என்கிற இந்திய அரசியல் சாசனம் 14-வது பிரிவுக்கு எதிரானது. எனவே தமிழக அரசு நிறைவேற்றிய அந்தச் சட்டத்தை ரத்து செய்கிறோம்" என உரத்த குரலில் மைக்கை கூட உபயோகிக்காமல் தலைமை நீதிபதி சொன்னபோது நெரிசல் மிகுந்திருந்த கோர்ட் அறையில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
அதற்குப்பிறகு நீதிபதி என்ன சொல்கிறார் என கேட்கமுடியாத அளவிற்கு முணுமுணுப்புகள் நிறைந்திருந்தன. அரசு வழக்கறிஞராக இந்த வழக்கில் ஆஜரான வெங்கடேசன், "நாங்கள் இந்த வழக்கில் எங்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை விளக்க ஒரு மனு தாக்கல் செய்வதற்காக கல்வித்துறை செயலாளரிடம் கையெழுத்துப் பெற முயற்சித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் தீர்ப்பு வந்து விட்டது" என்றார். அதற்கு நீதிபதிகள் 'உங்களுடைய தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் எங்கே' என கேட்டார்கள். 'இதோ நான் வந்துவிட்டேன்' என அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன் ஓடிவந்தார்.
'இந்த தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள். நாங்கள் அப்பீலுக்கு போகப்போகிறோம்' என்றெல்லாம் வேக வேகமாக பேசினார். ' நீங்கள் எதை வேண்டுமென்றாலும் தாக்கல் செய்யுங்கள். யார் வேண்டுமென்றாலும் அப்பீல் செய்யலாம். இரண்டு நாட்களுக்குள் எதுவும் நடக்கலாம்' என்றார்கள் நீதிபதிகள். கடந்த முறை இதேபோன்று சமச்சீர் கல்வி திட்ட சட்டதிருத்தத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தபோது இரண்டே நாளில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டிற்கு போய் அப்பீல் செய்து உயர்நீதிமன்றம் விதித்த தடையை விலக்கியதை மறைமுகமாக குத்திக்காட்டி நீதிபதிகள் பேசியதை கேட்ட அரசு தரப்பு அதிர்ச்சியடைந்தது.
கோர்ட் வளாகத்திலிருந்த என்.சி.ஆர்.பிரசாத் போன்ற சீனியர் வழக்கறிஞர்கள் 'தமிழக அரசின் சட்டதிருத்தத்தையே கோர்ட் ரத்து செய்தபிறகு அரசுக்கு கூடுதல் நேரம் வழங்கத்தேவையில்லை' என எடுத்துச் சொன்னார்கள். அதோடு அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைப்பதை கைவிட்டு விட்டது.
தீர்ப்புன் விவரங்கள் மெதுவ்வாக வெளியே வர அரம்பித்தது. ' தி.மு.க. அரசு அச்சடித்து வைத்துள்ள புத்தகங்களை ஜூலை மாதம் 22-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வழிவகை செய்யவேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்வி வல்லுநர்கள் அடங்கிய கமிட்டியைச் சேர்ந்தவர்கள் மூன்று மாதத்திற்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களில் எவற்றையெல்லாம் சேர்க்கவேண்டும், நீக்க வேண்டும்' என ஆலோசனைகளை சொல்லலாம்.
சமச்சீர் கல்வி என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்கும் என்கிற நம்பிக்கையோடு அந்தத் தீர்ப்பை முடித்துள்ள நீதிபதிகள். சமச்சீர் கல்வி எப்படி கடந்த ஆட்சிகாலத்தில் உருவானது என்பதை தெளிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.
'சமச்சீர் கல்வியை அமல்படுத்த 2006-ம் ஆண்டு முதல் கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலான கமிட்டி விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டது. அதன்பிறகு விஜயகுமார் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின் பேரில் கல்வியாளர்கள் கொண்ட பல நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அது நான்காண்டுகள் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டப் பிறகே 2010-ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே இன்றைய தமிழக அரசும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் சமச்சீர் கல்வியை முந்தைய அரசு ஏனோ தானோவென்று கொண்டு வந்தது என்று கூறுவதை ஏற்கமுடியாது. கடந்த அரசு அமல் படுத்திய சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமச்சீர் கல்வியை ஆதரித்து தான் கோர்ட்டுகள் இதுவரை தீர்ப்பளித்தன. ஆகவே இன்றைய அரசால் நேரடியாக சமச்சீர் கல்வியை ரத்து செய்யமுடியாது. ஆகவே மறைமுகமாக ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமச்சீர் கல்வியை அரசு ரத்து செய்ய முடியாது' என தமிழக அரசை விளாசி தள்ளியுள்ளனர்.
'இந்த தீர்ப்பு சமூகநீதிக்கும் வர்க்க பேதமற்ற சமூகம் உருவாவதற்கு பெருமளவில் வழிவகுக்கிறது' என்கிறார் வழக்கறிஞர் பாலு. 'இதை தமிழக அரசு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் தமிழக அரசு இதை பாசிட்டிவ் ஆக பார்க்க வேண்டும். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போகக் கூடாது' என்கிறார் பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
'ஆனால் நாங்கள் அப்பீலுக்கு போகப் போகிறோம்' என தமிழக அரசு தரப்பு சொன்னதை கேட்டு பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
...பிரகாஷ்..நக்கீரன் ஜூலை 20-22--2011
*******************
பொது ஜனம்; கலைஞர் கூட இதை தோல்வியா எடுத்துக்க வேணாம்னு! இத்தோட விட்டுரு! காண்டுல மக்களை சாகடிக்க வேணாம்னு சொல்லியிருக்காரே! அப்பக் கூட வேணும்னுட்டு திமிருத்தனமா இந்த "சொர்ணாக்கா" மீண்டும் சுப்ரீம் கோர்ட் போயிருக்குதே!
பொது ஜனம்; கலைஞர் மட்டுமா சொன்னாரு! எல்லாக் கட்சித்தலைவர்களும் தான் சொன்னாங்க! ராமதாஸ் ஒரு படி மேல போய் மக்கள் சாபத்துக்கு ஆளாகாதே! என்று கூட சொன்னாரு!
பொது ஜனம்; கலைஞர் சொன்னதற்காகவே இது சுப்ரீம் கோர்ட் போகும்! கலைஞர் தேவையில்லாம இதை உசுப்பி விட்டிருக்காரு!
பொது ஜனம்; "மக்கள்" பாதிக்கப்படக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு! இதுக்காக ஒரு பெரிய கட்சித்தலைவரு! சும்மா இருக்க முடியுமா? அவருக்கு லட்சக்கணக்கானத் தொண்டர்கள் இல்லையா?!
பொது ஜனம்; அதானே! இந்த பொம்பளை அவரு!சொல்றதுக்கெல்லாம் ஆப்போசிட்டா செய்யும்னா! என்ன பண்ணமுடியும்?
பொது ஜனம்; ஆப்போசிட்டா செய்யறதுன்னா! எப்படி? கலைஞர் நல்லா நீடுழி வாழணும்னு! இதை வாழ்த்துனா! உடனே இந்த மானஸ்தி "மடார்னு! மண்டைய போட்டுருமா!"?
பொது ஜனம்; அப்ப கலைஞரை உடனடியா வாழ்த்த சொல்லணும்!
பொது ஜனம்; ஆந்திராவில தெலுங்கானாவுக்கு இப்ப நடக்குது பாரு! அது மாதிரி இங்கு நடக்கணும் அப்பதான் இது அடங்கும்!
பொது ஜனம்; கூடிய சீக்கிரம் இங்கேயும் நடந்துரும்!
பொது ஜனம்; மொத்தத்தில இந்த இரண்டு நீதியரசர்களும் மக்கள் மனசுல நின்னுட்டாங்கப்பா! இவங்களை என்னைக்கும் மக்கள் மறக்கமாட்டாங்க! இவங்க! எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்!
பொது ஜனம்; மொத்தத்தில இந்த இரண்டு நீதியரசர்களும் மக்கள் மனசுல நின்னுட்டாங்கப்பா! இவங்களை என்னைக்கும் மக்கள் மறக்கமாட்டாங்க! இவங்க! எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
10:52 am
1 கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்


அ.தி.மு.க. வினர் கதறல் புகார்! நிலமோசடியில் சிக்கும் அமைச்சர்!
ஜெ. 10-ஆம் தேதி ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ..."2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் நிலங்கள் அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெருமளவில் நடந்ததை தமிழக மக்கள் அறிவார்கள். நில அபகரிப்பு தொடர்பாக கடந்த ஆட்சியில் புகார் அளிக்கப்பட்டிருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1-7-2011 வரை நில அபகரிப்புத் தொடர்பாக வந்திருக்கும் புகார்களின் எண்ணிக்கை 1440" என்ற ரீதியில் காட்டம் காட்டிய ஜெ...
"இது குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்வதற்காக காவல்துறையில் தனியாக சிறப்புப் பிரிவு ஒன்றை காவல்துறை தலைமை அலுவலகத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன். நிலமோசடியில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. புள்ளிகளை மட்டும் குறிவைத்து விறுவிறுப்பாக களவமறிங்கிய காக்கிகள், நில மோசடி வழக்கில் கோவை தி.மு.க துணை மா.செ. ஆனந்தனை கைது செயதனர். திருவாண்ணாமலை மாவட்ட தி.மு.க துணைச்செயலாளரும் எக்ஸ் எம்.எல்.ஏ.வுமான ஆரணி சிவானந்தத்தை கைது செய்ய தேடிக்கொண்டிருக்கிறது. கொடைக்கானல் தி.மு.க சேர்மன் முகமது இப்ராகிமை கைது செய்து சிறையில் அடைத்தது. வீரபாண்டியார், அவர் மகன் வீரபாண்டி ராஜா, மதுரை மேயர் தேன்மொழி போன்ற தி.மு.க புள்ளிகளின் மீது வழக்கைப்பதிவு செய்ததோடு மு.க.அழகிரியின் மனைவி காந்தி, மாஜி மந்திரி நேரு மீதும் புகாரை வாங்கியிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க... திருவண்ணாமலை மாவட்ட ர.ர.க்களோ "கட்சிக்காரர்களாகிய எங்களிடமே ஜெ. சொன்ன காலகட்டத்திலேயே... நிலமோசடியில் ஈடுபட்ட ஒருவரை அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்க்கும் கார்டன், அவர் மீதான நிலமோசடிப் புகார்களையும் விசாரிக்க உத்தரவிடுமா?" என கதறியபடி குரல் எழுப்ப...இதை அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் வழிமொழிந்து வருகிறார்கள்.
பொதுமக்களும் ர.ர.க்களும் 'நிலமோசடி ஆசாமி' என சுட்டு விரலை நீட்டுவது வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைத்தான். அவர் மீதான புகார்களை -நில மோசடிப் புகார்களை பார்ப்போம்.
மோசடிப் புகார்-1 :
2008-2009-ல் தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் இருந்து, ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கே.சம்பத்குமார். இவர் கல்லூரி ஒன்றைத் தொடங்க ஆசைப்பட்டார். இதற்காக அங்குள்ள நாயுடு மங்கலத்தில், தன் மனைவி கீதா மற்றும் மகன் சஞ்சீவ்புமார் ஆகியோர் பெயரில் 18 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதே பகுதியில் ஆதிமூலம் எனபவர் நடத்தி வந்த திருமண மண்டபத்தையும் லீசுக்கு எடுத்து, மொத்த இடத்திலும் 2009-ல் இந்தியன் கலை அறிவியல் கல்லூரியைத் தொடங்கினார். இதை திருவண்ணாமலை கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் நடத்த ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் அக்ரி வடிவத்தில் இவருக்கு சனி பிடித்தது. அது என்ன என்பதை அவரே வருத்தத்தோடு விவரிக்கிறார்.
"இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த என் கல்லூரி கால நண்பர் ஜெயராமனோ இந்த டிரஸ்ட்டில் குரியகோஸ் என்ற பாதிரியாரையும் தம்பிராஜா எனபவரையும் அப்போது எம்.எல.ஏ.வாக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி விஜயகுமாரியையும் உறுப்பினரா சேர்க்கச் சொன்னார். மரியாதைக்குரிய ஆட்கள்னு நினைச்சி அவர்களை டிரஸ்ட் உறுப்பினராக்கினேன். அந்த நிலத்தின் மதிப்பு 2 கோடி வரை உய்ர்ந்ததையும், எங்கள் கல்லூரியில் நிறைய மாணவர்கள் சேர்ந்ததையும் பார்த்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியை அபகரிக்கும் முயற்சியில் இறங்கிட்டார். என்னை கல்லூரிப் பக்கமே வரவிடாமல் ரவுடிகள் மூலம் தொந்தரவு கொடுத்தார். பிறகு கல்லூரியில் மாணவர்கள் கட்டிய கட்டணத்தையும் சருட்டத்தொடங்கிவிட்டார். கல்லூரியை விரிவாக்கம் செய்ய என் ஊட்டி நில்த்தை வைத்து வங்கியில் நான் கடன் வாங்கிய 6 கோடி ரூபாயையும் தன்னிடம் கொடுக்க வேண்டும்னு அடியாட்களை வைத்து மிரட்ட ஆரம்பித்தார் அக்ரி. இவரது டார்ச்சர் அதிகமானதால், எம் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு போனேன். என் மகன், சசிகலாவின் உறவினர் வீட்டில் பெண் எடுத்ததால் இந்த முடிவுக்கு வந்தேன்.
ராமச்சந்திரனின் மயிலாப்பூர் வீட்டில் பஞ்சாயத்து நடந்தது. அப்போது, டிரஸ்ட்டில் இருந்த விஜயகுமாரியை தன் மனைவியே இல்லைன்னு அக்ரி சத்தியம் செய்ததோடு என் விஷயத்தில் இனி தலையிடமாட்டேன்னு உறுதிகொடுத்தார்" என்றபடி மினரல் வாட்டரை வாயில் சரித்துக் கொண்டவர், தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
" ஆனால் அதன்பிறகும் அக்ரி சும்மா இருக்கலை. கல்லூரியை அடியாட்கள் மூலம் கைப்பற்றிக் கொண்டதோடு மற்றொரு இடத்தில் இருந்த என் மகன் சஞ்சீவ் குமாரின் நிலத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டார். இதே பகுதியில் இருந்த அரவிந்தர் பள்ளியையும் ஆதிமூலம் என்பவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டதோடு, அரவிந்தர் பள்ளி கட்டிடத்துக்கு என் கல்லூரியைக் கொண்டுபோகத் திட்டமிட்டார்.
எங்கள் கல்லூரி, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது எனபதால், அங்கிருந்த அதிகாரிகளின் துணையோடு அக்ரியின் இடம் மற்றும் முயற்சியை எப்படியோ தடுத்திட்டேன். இதோடு நிறுத்தாத அக்ரி என் கல்லூரியை டம்மியாக்குதற்காக அப்போதைய தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு மூலம் முயற்சி செய்து அரவிந்தர் பள்ளியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார். இப்படி பலவகையிலும் அக்ரி டார்ச்சர் செய்ததால், கடந்த தி.மு.க ஆட்சியிலேயே அவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்தேன். போலீஸ் அப்போது அக்ரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால்... வேறு வழியின்றி அக்ரி மீது நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறேன்" என தனது துயர அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
மோசடிப் புகார்-2 :
அ.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதியான சி.மூர்த்தி ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொடு கட்டிப் பறக்கிறவர். இவர் திருவண்ணாமலை புறநகர் பகுதியான பாரதி நகரில் நான்கரை ஏக்கர் நிலத்தை வாங்கி, பிளாட் போட்டு ஒரு செண்ட் 22 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் விற்பனை செய்துவந்தார். இவரையும் அக்ரி விட்டுவைக்கவில்லை.
மூர்த்தியின் அனுபவத்தை அவரது குரலிலேயே கேட்போம். "என்னிடம் நான் நிரணயித்த விலைக்கே பிளாட் வாங்கிக்கொள்வதாக சொல்லி 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டுக்கொண்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மீதத்தொகையை 30 நாளில் கொடுத்துவிடுவதாகச் சொன்னார். ஆனால் 3 வருடம் ஆகியும் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் கட்சித் தலைமையிடம் பலமுறை புகார் கொடுத்தேன். இதை கட்சி விசாரிக்கும் போதெல்லாம் என்னை கடுமையாக மிரட்ட ஆரம்பித்தார் அக்ரி. இதனால் பயந்துபோன நான் சசியின் உறவினர்களான டாக்டர் வெங்கடேஷ், மிடாஸ் மோகன் ஆகியோரிடம் சென்று முறையிட்டேன். இதன் பிறகு செண்டுக்கு 13 ஆயிரம் என அடிமாட்டு விலைக்கு என் பணத்தை செட்டில் செய்தார். நிலமோசடி, கட்டாய விற்பனை, கூலிப்படை மூலம் மிரட்டுவது என அத்தனை தாதாத்தனத்திலும் இறங்கிய அக்ரியை, அமைச்சராக்கியிருப்பதை எங்கள் கட்சிக்காரர்களாலேயே ஜீரணிக்கமுடியவில்லை" என்கிறார் காட்டமாக.
மோசடிப் புகார்-3 :
திருவண்ணாமலை கோயில் அறங்காவலராக இருந்தவர் சிவாஜி. இவருக்குக் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கிறது. இந்த நிலையில் 2009-ங் சிவாஜி நோய்வாய்ப்பட்டு இறந்துபோக, அவரது சொத்துக்களில் ஒரு பகுதி அவரது மகள் தனலட்சுமிக்கு வருகிறது. தனலட்சுமிக்கும் அரவிந்தன் எனகிற இளைஞருக்கும் காதல் மலர, அரவிந்தன் கட்டிய புடவையோடு அழைத்துப்போய் 2010 ஜூலையில் தனலட்சுமிக்குத் தாலி கட்டுகிறார். இதன் பிறகு நடந்ததை தனலட்சுமியே விவரிக்கிறார்.
"நான் காதல் திருமணம் செயதுகொண்டதை அறிந்த எங்கள் உறவினரும் அ.தி.மு.க. நகர செயலாளருமான கனகராஜ், ஒரு அடியாட் படையோடு எங்களைத் தீர்த்துக்கட்டப் பார்த்தார். உயிருக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த நாங்கள் கனகராஜ் மீது புகார் கொடுத்தோம். போலீஸ்காரர்களோ 'பயப்படாதீங்க அந்தக் கும்பலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று ஆறுதல் சொன்னார்கள். அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினார். அதன்பின் போலீஸின் போக்கே மாறிவிட்டது. எங்களை மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அதோடு நிறுத்தாமல் போலீஸ் துணையோடு எங்களை இரவு 8 8 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்குக் கொண்டு போனார்கள். அங்கு எனக்கும் என் அப்பாவின் சொத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள். உயிருக்கு பயந்து நானும் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிட்டேன். இப்போது அக்ரி அமைச்சரானதால், மிக தைரியமாக கனகராஜூம் சேர்ந்து கொண்டு எங்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் அம்மா செல்வி, அக்கா சாந்தி, தம்பி முருகன் ஆகியோரையும் இந்தக் கும்பல் மிரட்டி வாயை அடைத்துவிட்டது. நில மோசடியை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு போலீஸில் நாங்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கனகராஜ் மீது புகார் கொடுக்க இருக்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்" என்கிறார் கவலை பொங்க.
தி.மு.க.வினர் மீது குறி வைத்துப் பாயும் நில மோசடி வழக்குகள் அ.தி.மு.க. அமைச்சர் மீதும் பாயுமா? இல்லையெனில் தி.மு.க.வினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஜெயலலிதா இறங்கியுள்ளார் என்பதே நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
அமைச்சரின் விளக்கம்!
அக்ரி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரது விளக்கத்தை அறிய அவரை நேரில் சந்திக்க தொடர்ந்து முஞன்றோம். 4-வது நாள் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் உள்ள ஒரு பெர்சனல் அறையில் சந்தித்தார்.
"நான் நன்றாக செயல்படுவதாக அம்மா நம்புகிறார். அதனால் தான் உணவுத்துறையை விட வெயிட்டான வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை (இரண்டுமே செம "மால்" உள்ள துறை) எனக்குக் கொடுத்தார். அதனால் உங்களை நான்கு நாட்கள் அலைய வைத்தேன் ஸாரி..." என சொன்னவரிடம், அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடுக்கினோம். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், "நான் எனது சகோதரரை டி.எஸ்.பி. யாக ஃபுட் செல்லுக்கு நியமிக்கவில்லை. அதைச் செய்தது அம்மா தான். அம்மா அப்படிச் செய்தால் என் மீது புகார் வரும் என நான் சொன்னதால் அவனை, வேறு துறைக்கு மாற்றினார்கள். ஆட்சிக்கு வந்து சில நாட்களில் கோடிக்கணக்கான ரூபாய் வாங்கி கடன்களை நான் அடைத்ததாகப் புகார்கள் ஏற்கனவே அம்மாவின் கவனத்திற்கு வந்துள்ளது. அது தவறு என நிருபிக்க வங்கி ஸ்டேட்மெண்ட்டை வாங்கி வைத்துள்ளேன்" என ஒரு ஸ்டேட்மெண்ட்டைக் காட்டினார். "ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கும் எனக்கும் இடையில் பிரச்சினை உள்ளது. அரவிந்தர் பள்ளியை நான் மிரட்டி வாங்கவில்லை. அரவிந்த் எனபது என் மகனின் பெயர். யாரையும் நான் மிரட்டி அடிமாட்டு விலைக்கு எதையும் வாங்கவில்லை. நகரச் செயலளர் கனகராஜ் செய்யும் நில மோசடிகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்றார் பகிரங்கமாகவே.
........பிரக்காஷ்...நக்கீரன்..ஜூலை 20-22-2011
********************
பொது ஜனம்; ஆமாம் தலைவி மோசடிப் பண்ணலாம் அள்ளக்கை மோசடிப்பண்ணக்கூடாதா? இது என்ன? போங்கா! இருக்குதே!
பொது ஜனம; இதுதான் போயஸ் கார்டன் போங்கு!
பொது ஜனம்; ஜெயலலிதா கிட்ட மோசடி, ஊழல் செய்யற விஷயத்தில கூட "சமச்சீர்" இல்லை. "நான் மட்டும் தான் மோசடி, ஊழல் செய்யணும்!" நான் பார்த்து பிச்சை போட்டா நீ வாங்கிக்க!
பொது ஜனம்; ஒண்டிக்கட்டையே மோசடி பண்ணும் பொழுது, புள்ளக் குட்டிக்காரன் மோசடி பண்ண மாட்டானா!
பொது ஜனம்; என்னய்யா ஆளாளுக்கு வக்காலத்து வாங்கறீங்க! நீங்க ஏதுனா மோசடி பண்ணியிருக்கீங்களா!
பொது ஜனம்; அந்தம்மா பெரியப் பதவிக்கு, எவ்வளவு வேணுமோ? வேண்டியதை கொள்ளையடிச்சுகிட்டும். குட்டியமைச்சருக்கு,தொண்டர்களுக்கு கால்வாசியாவது கொள்ளையடிக்க விட்டுக்கொடுக்க கூடாதா?
பொது ஜனம்; நில மோசடி சிறப்புப்பிரிவே அதிமுக வுக்காகத்தான் அந்த பொம்பளை அமைச்சிருக்கும்! எங்கே! நம்மளை விட இவனுங்க ஸ்பீடாப் போய் சிறுதாவூர், கொடைக்கானல், டான்சின்னு நம்மளையே மிஞ்சிடுவானுங்கன்னு மறைமுகமாக இந்த பிரிவை அமைச்சிருக்கும்! இது தெரியாம இதுங்க மாட்டிக்கிச்சுங்க!
பொது ஜனம்; திருப்பதிக்கே லட்டு! மோசடிக்கே! மோசடி!
பொது ஜனம்; அ.தி.மு.க அமைச்சரவையே படு மோசடியான அமைச்சரவை போலிருக்குது! 2 மாசத்துக்குள்ளேயே இரண்டு மோசடி அமைச்சர்களா! இன்னும் குப்பைய கிளருனா! நிறைய வண்டி வண்டியா வரும்!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
2:40 am
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்


Sunday, 17 July 2011
பெரிய தமாஷ்!
சூரிய கிரணம் படத்தில் சூரியன் படம் ஸ்கெட்ச் கொண்டு அழிப்பாம். கிரகணம் ஏற்படுவதே சூரியன், பூமி, சந்திரன் நேர்கோட்டு வருகை. இது நூற்றாண்டுகளாக நடக்கும் பாடம். சூரியன் தி.மு.க சின்னம் அழி என்றால் எப்படி புரிய வைப்பது? செம்மொழி மாநாட்டில் நிற்கும் வள்ளுவர் கலைஞர் கட்சியாம். அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் அம்மா கட்சியாம். நிற்பவர் மீது பச்சை ஸ்டிக்கர். ஐயா! வள்ளுவர் எந்தக் கட்சி?
-தேர்தல் சின்னங்கள் ஏதும் பாடப்புத்தகத்தில் வரக்கூடாது என்றால் ஊன்றிப் பார்த்தால் ஒரு படமும் அச்சிடமுடியாது. தாவரவியல் பாடத்தில் 'இலைகள்' இல்லா செடி போடனும். பாரதியார் முரசு பாடலுக்கு 'முரசு' போட முடியாது. மாம்பழ பாப்பா பாட்டில் 'மாம்பழம்' படம் போட முடியாது. 'இ' என்ற எழுத்தை போதிக்க 'இலை' படம் போடுவதும் அரிச்சுவடி தவறு.
சமச்சீர் கல்வி பெயர் மட்டுமே. உண்மை சமத்துவம் இல்லை. பாடத்திட்டம் மட்டும் சமமாக்கிவிட்டு பிற இனங்கள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. சமமாக்க விதிகள் தேவை.
அரசே அரிசிக்கு மானியம். கேஸூக்கு மானியம். அரசியல் சாசனப்படி இலவச கல்வி சேவைக்கு மெட்ரிக் ஆசிரியைக்கு 50% ஊதியம் மானியமாக தந்து மீதி 50% நிர்வாகம் எனக் கூறி சமமாக்கலாமே? சம உழைப்பு, சம கூலி அரசியல் சாசன விதி இல்லையா?
சமச்சீர் கல்வியை விட மெட்ரிக் பாடத்திட்டம் தரம் உயர்ந்தது என வாதம் புரியும் மெட்ரிக் நிர்வாகிகள் தரமான கல்விக்கு ஊதியம் கூடுதலாக (சமச்சீரைவிட) நிர்ணயிக்கணும். ஆனால் 1000, 2000 தானே ஊதியம் தருகிறீர்!
மெட்ரிக் ஆசிரியைக்கு வார விடுமுறையும் இல்லை. ஞாயிறும் தனி வகுப்பு எடுக்கப் போகணுமாம். அரசு விடுமுறை, கலெக்டர் விடுமுறை -கேட் -ஐ பூட்டிவிட்டு உள்ளே வகுப்பு நடக்கும். கொத்தடிமைகள்! வாய் திறந்தால் உடனே டிஸ்மிஸ்தான். அரை வயிறு கஞ்சிக்கும் ஆபத்து. எம்.ஏ., பி.எச்.டி., டாக்டர் பட்டம் பெற்றவர் எல்லோரும் 1000, 2000தான் ஊதியம். கொத்தடிமைகள் தான். குறைந்தபட்சம் ஊதியம் நிர்ணயம் அவசியம்.
-நக்கீரன் ஜூலை 9-12 வாசகர் அ.ஜோசப்சாமி, கும்பகோணம்.
இடுகையிட்டது
நம்பி
நேரம்
6:18 pm
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்


Thursday, 14 July 2011
இந்தியப்பள்ளிகள் வரலாற்றில் முதல் முறையாக பாடங்களே இல்லாத பள்ளிகள் தமிழகத்தில்-உங்கள் பிள்ளைகளை சேர்க்கத் தவறாதீர்!
பாடங்களே! இல்லாத பள்ளிகள்!
குலக்கல்வி போற்றும் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை!
பேராசிரியர் சுப.வீ
....நன்றி! கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி!
Tweet
இடுகையிட்டது
நம்பி
நேரம்
12:26 am
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
ஓளியும்ஒலியும்


Monday, 11 July 2011
குலக்கல்வி-சமச்சீர் கல்வி- ஓர் ஆய்வு
நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் -உச்சநீதிமன்றத் தீர்க்கமான தீர்ப்பையும் பெற்ற பின்னர் -சமச்சீர் கல்வித் திட்டத்தை சென்ற ஆண்டுதான் தி.மு.க அரசு செயல்படுத்தத் தொடங்கியது.
ஆனால் அந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது புதிய அ.தி.மு.க அரசு முடிவு செய்தது. அந்த முடிவுதான் அரியணை ஏறியதும் எடுத்த முதல் முடிவு. அதிர்ந்து போனோம்.
ஏனெனில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவைக்கவேண்டும் என்று எந்த இயக்கமும் கோரவில்லை. ஆனால் துக்ளக் "சோ"தான் அந்தத் திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வந்தார். அனைத்து கல்வி முறையையும் கீழே இறக்கி சமன் செய்யும் சமத்தாழ்வு கல்வித்திட்டம் என்று அவர் சாடி வந்தார்.
அவர் இன்னும் ஒருபடி மேலே சென்றார். ஒரு சிலர் உயர்க்கல்வி பெறுவதைத் தடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வித்திட்டம் என்றார். இதனை ஏற்கனவே விளக்கியிருக்கிறோம். அவர் சொல்லும் ஒருசிலர் யார் எனபது தெரியும்.
சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தப்படுகிறது என்ற தமிழக அரசின் அறிவிப்பை ஒரே ஒருவர்தான் ஆனந்தமாக வரவேற்றார். அவர்தான் இந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன்.
சமஸ்கிருதத்தை மையப் பாடமாகக் கொண்டு ஓரியண்டல் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு உதவியோடு செயல்படும் அந்தப் பள்ளிகள் தமிழகத்தில் மொத்தமே 27-தான். அந்தப் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி வேண்டாம் என்று மாம்பலம் அகோபில மடம் ஓரியண்டல் பள்ளியின் செயலாளர் வாசுதேவாச்சாரியார் செல்வி ஜெயலலிதாவிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான ஒரு கருவி. எனவே சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்றால் சமஸ்கிருதம் ஓரம்கட்டப்பட்டுவிடும். ஆகவே, அந்தக் கல்வித்திட்டம் கூடாது என்று வாசுதேவாச்சாரியார் மிகத்தெளிவாகக் கூறியிருக்கிறார்.
ஆம்...துக்ளக் சோ, இராமகோபாலன், வாசுதேவாச்சாரியார் போன்றவர்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நஞ்சென வெறுக்கின்றனர்.
எதனையும் வர்க்கக் கண்ணோட்டத்தோடு பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு இவர்கள் எதிர்ப்பதன் பின்னணி தெரியவில்லை. அய்யா...எதிர்ப்பவர்கள் வர்ணாஸ்ரம கண்ணோட்டத்தில் எதிர்க்கிறார்கள், இது சோலைக்குத் தெரியவில்லையா? என்று ஒரு வாசகர் நமக்கு ஒரு குட்டு வைத்தார்.
சமச்சீர் கல்வித் திட்ட எதிர்ப்பும் அன்று ராஜாஜி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வித் திட்டமும் ஒன்றுதான் என்று அவர் நமக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதன்பின்னர்தான் நமது சிந்தனைச்சாளரம் திறந்தது. 'விடுதலையில் தோழர் மின்சாரம் தொகுத்துத் தந்துள்ள கருத்துக்கள் மண்டையில் உறைத்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னணியில் இயங்குவது நியூ செஞ்சுரி புத்தக நிலையம். 'உங்கள் நூலகம்' என்ற சஞ்சிகையை நடத்துகிறது. சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் யார் என்று அந்த இதழ் (ஜூன் 2011) அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். சமச்சீர் பாடப்புத்தகங்களை நிபுணர் குழு வைத்து ஆராயப்போவதாக அறிவித்திருக்கிறார். அவர் நிறுத்தி வைத்துள்ளாரா? குப்பைத் தொட்டியில் வீசிவிட்டாரா என்று தெரியவில்லை. இதுபற்றி வெளிவந்திருக்கும் செய்திகளுக்கு இணையதளங்களில் பலர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். அவற்றிலிருந்து பார்ப்பனீய கருத்து நிலையை ஊக்கமுடன் ஆதரிக்கும் சீரழிந்த நடுத்தர வர்க்கத்தினர் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகக் குதூகலிக்கின்றனர் என்று தெரிகிறது. இவ்வாறு 'உங்கள் நூலகம் படம் பிடித்துக் காட்டுகிறது. கிறித்துவ சமுதாய மக்களின் இதயநாதமாக வெளிவருவது, 'நம் வாழ்வு'. சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று தமிழக அரசு எடுத்த முடிவுகளைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறது.
அம்மாவின் மனுதர்ம பார்ப்பன சித்தாந்தம் அய்ந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல் படுத்தப்படும். முதல் அடியே முதல் கோணலானது. நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும்.
சமச்சீர் கல்வி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக்கல்வித் திணிப்பு போன்ற பார்ப்பன இனச்சதியின் நூற்றாண்டுகாலப் போராட்டத் தொடர்ச்சியாக இனம் காணலாம்.
-இவ்வாறு நல்லவர்களின் நாடித் துடிப்பாம் 'நம் வாழ்வு' விளக்கியிருக்கிறது.
எந்தக் கருத்தையும் நெருப்புச் சொற்களால் விமர்சிக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் என்ன சொல்கிறார்கள்?
"பறையனுக்கும் பார்ப்பானுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வியை இங்கே நடைமுறைப்படுத்திவிடக்கூடாது. இதனை அழித்தே தீருவேன் என்ற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது" -என்கிறார் தொல்.திருமாவளவன். (தமிழ் மண் ஜூன் 2011)
ஆனால் அதே சமயத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நீக்க முன்வந்த தமிழக முதல்வருக்கு சென்னையில் பாரட்டுவிழா நடைபெற்றது. ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை, ஆனாலும், அந்த விழாவை சீரோடும் சிறப்போடும் நடத்தியவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள்தான்.
அவர்கள் கல்வியை வியாபாரமாக நடத்துகிற நேற்றைய லட்சாதிபதிகள். நாளைய கோடீஸ்வரர்கள். அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்றால் அவர்களுடைய வியாபாரம் படுத்துவிடும். எனவே துக்ளக் சோ, இராம.கோபாலன், வாசுதேவாச்சாரியாரோடு இவர்களும் கரம் கோர்க்கிறார்கள். ஒரே லட்சியம், ஆனால் வெவ்வேறு பாதையில் அந்த எல்லையை நோக்கி நடைபோடுகிறார்கள்.
அதே சமயத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் அரசின் முடிவை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அந்தக் கல்வித் திட்டத்தைக் கைவிடுவதை மக்கள் விரும்பவில்லை. வேதனைப்படுகிறார்கள் என்பதனை லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது. இவை முதல்வரின் கவனத்திற்குச் சென்றதா? அநேகமாக எல்லா இயக்கங்களும், பொதுநல அமைப்புக்களும் சமச்சீர் கல்வித் திட்டத்தை வரவேற்கின்றன. சர்வதேச தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்போடு இணைந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியாகும். மிகப்பெரிய இயக்கம். அதன் வழிகாட்டி ஈசுவரன் சர்வதேச அமைப்பின் துணைத்தலைவராக மீண்டும் தேர்வுப் பெற்றிருக்கிறார்.
கட்சிகளுக்கு அப்பால் தமிழகத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகளில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தான் பெரிய அமைப்பாகும். சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டணி தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. சமச்சீர் கல்வி ஏன் என்பதனை அந்தக் கூட்டணி அற்புதமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது.
எல்லோரும் இந்நாட்டு மன்னர், எல்லோரும் ஓரு நிறை, எல்லோருக்கும் ஓர் விலை என்பதே மக்களாட்சியின் மாண்பு, மாபெரும் சிறப்பு. அதனை அடியொற்றியே செல்வந்தருக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலையை தமிழ்நாட்டில் முற்றிலும் அகற்றி, அனைவருக்கும் ஒரே கல்வி முறை அது சமச்சீர் கல்வி முறை என்று கொண்டு வரப்பட்டது. தமிழகத்து அனைத்து தரப்பு மக்களும் அதனை ஆமோதித்து ஏற்றுக்கொண்டனர். கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியில் ஒரு வரப் பிரசாதமாக சமச்சீர் கல்வியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்வியைத் தொடர்ந்து அமுல்படுத்திட உத்திரவிட்டுள்ளது -என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெளிவுப்படுத்தியிருக்கிறது. பாடத்திட்டங்களில் மாறுதல் செய்யலாம். ஆனால் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
இவ்வளவு சிறப்பான கல்வித் திட்டத்தை கைவிடுவது நிறுத்தி வைப்பது எனபது சரித்திரச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுகின்ற செயலாகும்.
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தையும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதையும் ஏன் ஒரே நிலையில் காண்கிறார்கள்?
அப்பன் தொழிலை மகன் அரைநாள் கற்றுக் கொள்ள வேண்டும். மீதி அரைநாள் பள்ளிக்குப் படிக்க வர வேண்டும் எனபதுதான் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டமாகும்.
விளங்கச் சொல்வதானால் செருப்புத் தொழிலாளியின் மகன் செருப்புத் தைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பள்ளிக்கு செல்ல வேண்டும்.
சலவைத் தொழிலாளியின் மகன் அரைநாள் துணி வெளுக்கப் போக வேண்டும். பின்னர் பள்ளியை எட்டிப்பார்க்கவேண்டும். இந்தக் குலக்கல்வித்திட்டம் ஜாதீய அமைப்புகளுக்கு உயிரூட்டவதாகும். பிறப்பால் கற்பிக்கப்பட்ட பேதத்திற்கு வலுவூட்டுவதாகும். வர்ணாசிரம தர்மத்தை நிலைநிறுத்துவதாகும். எனவே ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகமே கொந்தளித்தது. அரியாசனத்திலிருந்து அவரும் இறங்கிச் சென்றார்.
இதுவரை தமிழகத்தில் இருக்கும் கல்வியின் நிலை என்ன? ஏழை, எளிய கிராமத்து மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் ஒரு பாடம்.
நடுத்தர வர்க்கத்து வசதியான மாணவர்கள் படிக்க மெட்ரிகுலேஷன் கல்வி. அதற்கு ஒரு பாடம். பெரிய தனக்காரர்களும் அரசியல் பெரிய வீட்டுப் பிள்ளைகளும் படிக்க சி.பி.எஸ்.இ. கல்வி. அதற்கு மத்திய அரசின் பாடத்திட்டம். ஆனால் அந்தப் பாடத்திட்டம் இந்தியா முழுமைக்கும் பொதுவான சமச்சீர் கல்வித் திட்டமாகும்.
இப்படி வசதியும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப கல்வி நிலையங்கள். தனித்தனிப் பாடத்திட்டங்கள். துக்ளக் சோ கூறுவது போல ஒரு சிலர் உயர் கல்வி கற்பதற்கு மேல்நிலைக் கல்வி நிறுவனங்கள் அதற்குத் தனியாகப் பாடத்திட்டங்கள்.
இதுவும் இன்னொரு கோணத்தில் நால்வருண தர்மம் தான். ஏழைகளுக்கு ஒரு கல்வி; சற்று தலை தூக்குகிறவர்களுக்கு இன்னொரு கல்வி என்று வசதிக்குத் தக்க கல்வி கற்கப்படும் அவல நிலை. இது கூடாது. கல்வியிலும் சமத்துவம் வேண்டும் என்றுதான் ஆன்றோரும் சான்றோரும் சமச்சீர் கல்வித் திட்டத்தை வலியுறுத்தினர். ஆனால் அதனை எதிர்ப்பவர்கள் என்ன கூறுகிறார்கள்?
ஆதிவாசிப் பையனுக்கும் அக்கிரஹாரத்துப் பையனுக்கும் ஒரே பாடமா? ஒரே கல்வியா? இது அநியாயம் என்கிறார்கள். மேல்ஜாதி மாணவனுக்கு ஈடாக கீழ் ஜாதி மாணவன் மார்க் வாங்கினால் மேல் ஜாதியின் மகிமை கீர்த்திக்குப் பங்கம் வந்து விடாதா எனகிறார்கள். இது அவர்களுடைய குல தர்மம். இந்த நூற்றாண்டில் அந்த அதர்மங்களுக்கு இடமில்லை எனபதனை முரசறைந்து சொல்வது தான் சம்ச்சீர் கல்வித் திட்டமாகும்.
........சோலை...நக்கீரன்
*****************
பொது ஜனம்; என்னய்யா திராவிட ஆரியப்போர் தொடங்கிடுச்சு போல இருக்கே! மீண்டும் பெரியார் காலத்துக்கு திரும்பிகிட்டு இருக்குது!
பொது ஜனம்; இதுங்களுக்கு பீதியில பேதியாவுது! அதனால இந்த திருட்டு வேலைகளை மீண்டும் ஆரம்பிக்குதுங்க!
பொது ஜனம்; ஆரிய மாயை எழுதிய அண்ணாவின் பெயரை வைச்சி பார்ப்பன மாயை தொடங்கிடுச்சி!
பொது ஜனம்; திருப்பி இதுங்களை ஓடவிடனுமா?
பொது ஜனம்; அதுக்கு என்ன? மொத்தமா ஓடவிட்டுட்டா போகுது!
பொது ஜனம்; யாரும் ஓடவிடவேத் தேவையில்லை! அதுங்களாவே ஓடிடும்!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
11:24 pm
2
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்


Sunday, 10 July 2011
"நான் நில மோசடி பண்ணதை மட்டும் விட்டுட்டு மத்தவங்க பண்ணது எல்லாத்தையும் கேஸ் புக் பண்ணு ங்க போலீஸ்"-ஜெயலலிதா
நிலமோசடி: 3 நாட்களில் 30 பேர் புகார்
தமிழகத்தில் நிலம், வீடுகள் அபகரிப்பு
மற்றும் மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடத்தி மீட்டு உரியவர்களிடம்
ஒப்படைக்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பேரில்
மாவட்டம் தோறும் நில மோசடி தொடர்பாக போலீசில் தனிபிரிவு தொடங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றபிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.
மாவட்டத்தில் நிலமோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களில் நிலமோசடி, அபகரிப்பு தொடர்பாக 30 பேர் கடலூர் தனிப்பிரிவு போலீசில் உரிய ஆவணங்களுடன் புகார் செய்தனர். அந்த புகார் மனுக்களின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றபிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.
மாவட்டத்தில் நிலமோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களில் நிலமோசடி, அபகரிப்பு தொடர்பாக 30 பேர் கடலூர் தனிப்பிரிவு போலீசில் உரிய ஆவணங்களுடன் புகார் செய்தனர். அந்த புகார் மனுக்களின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.....நக்கீரன் 09.07.2011
**********************
பொது ஜனம்; என்னய்யா! ஜெயலலிதா நில மோசடி பண்ணதை யார் கேஸ் புக் பண்ணுவா!
பொது ஜனம்; சிறுதாவூர் தலித் நிலத்தை அபகரிச்சதை பத்தியா! அதை சுப்ரிம் கோர்ட்ல புக் பண்ணுவாங்க! அதை பத்தி குரல் கொடுத்த கம்யூனிஸ்டுங்களே இப்ப வாயை மூடிக்கிட்டு கூட்டணியில குப்பை கொட்டறாங்களே!
பொது ஜனம்; அப்ப சுப்ரிம் கோர்ட்டுதான் டான்சி நிலத்தை புடுங்கி கொடுத்தா மாதிரி! இந்த சிறுதாவூரையும் இந்த பொம்பளை கிட்டேயிருந்து புடுங்கனுமா? இது நடுவுல திருடன சொத்தை வேற புடுங்கணும்! எதை பர்ஸ்ட்டுல புடுங்குவாங்க!
பொது ஜனம்; நாட்டில தினம் தினம் தங்கத்தை சவரன் சவரனா, நூற்றுக்கணக்குலே கொள்ளை அடிக்கிறாங்களே! லாக்கப் டெத் அசால்ட்டா நடக்குது. "பீப் பீ" வாசிக்கறவரைக் கூட விட்டு வைக்க மாட்டங்கறாங்களே! பப்ளிக்கா மர்டர் பன்றாங்களேய்யா! அந்த கொலை காரங்களையெல்லாம் போலீஸ் கேஸ் புக் பண்ணவே மாட்டேங்குது! எல்லாம் அதிமுக அள்ளக்கைங்களா!
பொது ஜனம்; அட போலீஸ்! தான் தைரியமா யூனிபார்ம் போட்டுகிட்டே தண்ணியிடிச்சுகிட்டு ரோட்டுலேயே கட்டி புரண்டு அடிச்சுக்குதே! கேஸ் கொடுக்கப் போன பொம்பளையை கற்பழிக்க பாயுதே!
பொது ஜனம்; இந்தம்மா அரசியல் சூரப்புலி! திமுகவை ரப்பர் வைச்சு அழிக்க முயற்சி பன்றாங்க! பசங்க படிப்பை கெடுத்துட்டு! போய் கொடைக்கானல்ல போய் போத்திகிட்டு தூங்க சொல்லுய்யா! அங்க தான் கேட்டு போட்டு யாரையும் ரோட்டுல கூட விடறிதில்லையே!
பொது ஜனம்; இது மட்டும் சுப்ரிம் கோர்ட் உத்தரவுப் போட்டாக் கூட ரோட்டை ஆக்கிரமிச்சுகிட்டு விதிமுறைக்கு மாறா கொடைக்கானல்லே பங்களா கட்டிகிட்டு கேட்டை மூடிவைச்சிகிட்டு இருக்கும்.
பொது ஜனம்; இதுக்கு ஒரு நியாயம் ஊருக்கொரு நியாயம்! தூ....!
இடுகையிட்டது
நம்பி
நேரம்
3:37 pm
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்


Friday, 8 July 2011
நான் சட்டத்தை மதிக்கற ஆள் கிடையாது! சட்டத்தை காலில போட்டு மிதிக்கற ஆள்!- ஜெயலலிதா
வழக்கு நடக்கும் போதே பாட புத்தகங்கள் அச்சிடுவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
சென்னை, : சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சடிப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகாதா? இது நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்காதா? என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், தமிழக அரசு வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்ற மூத்த
வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற வக்கீல் குரு.கிருஷ்ணகுமார் ஆகியோரும், மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் கே.பாலு, பிரசாத் ஆகியோரும் ஆஜராகினர்.உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் வருமாறு:மூத்த வக்கீல் பி.பி.ராவ்: சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தவறானது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின்
கட்டாயக் கல்வி சட்டம்தான் மூலச்சட்டம். இந்த சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது. இந்த மூலச்சட்டத்தை கவனத்தில் கொள்ளாமல், கடந்த அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை
கொண்டு வந்தது. தேசிய பாடத்திட்டம் வடிவமைப்பு விதி 2005ன்படி சமச்சீர் கல்வி தரமற்றது. இதுதவிர, சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது என்று கல்விக்கான தேசிய கவுன்சில் தமிழக அரசுக்கு கடந்த
2009ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கடிதம் எழுதியது. அதை கடந்த அரசு ஏற்கவில்லை.இதுதவிர, கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அரசுக்கு பல பரிந்துரைகள் செய்தது. அதாவது, சமச்சீர் கல்வி புத்தகம் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த அரசு அமல்படுத்தவில்லை. இதற்காக, மே மாதம் 15ம் தேதி
கெடு விதித்தது. அதை கடந்த அரசு மீறியுள்ளது. புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை, தனியார் பள்ளிகளுக்கு உள்ளது என்று மத்திய அரசின் மூலச்சட்டம் கூறுகிறது. இதை கடந்த அரசு மீறி
செயல்பட்டுள்ளது. மூலச்சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த முடியாது. சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், அந்த கமிட்டி 3 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி இரவு, பகலாக சமச்சீர் கல்வியை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது; இதை ஏற்க வேண்டும்.சமச்சீர் கல்வி என்பது மாணவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சமச்சீர் கல்வி மாணவர்கள் வளர்ச்சிக்கு தரமானதாக இல்லை. சமூக நீதி என்ற பெயரில் மனுதாரர்போல சிலர் தரமில்லாத பாடதிட்டத்தை மாணவர்களுக்கு திணிக்கிறார்கள். இது தவறானது. சமச்சீர் கல்வியை நாங்கள் முழுவதுமாக ரத்து செய்யவில்லை. அதை நிறுத்தி வைக்கத்தான் சட்டத்திருத்தம் செய்துள்ளோம். அதை எப்போது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம்.
முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமார் கமிட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் கமிட்டி, ஒரு நிலைக்குழுவை ஏற்படுத்த வேண்டும என்று கூறியுள்ளது. ஆனால், கடந்த அரசு எந்த குழுவையும்
அமைக்கவில்லை. அந்த நிலைக்கு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கமிட்டி பரிந்துரை செய்தும் கடந்த அரசு அதை அமல்படுத்தவில்லை.
தமிழக அரசின் சட்டத்திருத்தம் அவசர முடிவு அல்ல. தீர ஆராய்ந்து பார்த்து எடுத்த முடிவுதான். மாணவர்கள் நலன் கருதி நிதானமாக எடுத்த முடிவுதான். சமச்சீர் கல்வி சட்டம் இந்திய அரசியல்
சட்டம் பிரிவு 14 மற்றும் 15க்கு எதிரானது. மத்திய அரசின் மூலச்சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி இருப்பதால் 1 கோடியே 35 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 200 கோடி ரூபாய் வீண்
செலவு என குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பள்ளிகள் தரப்பு வக்கீல்கள் சிலம்பண்ணன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி: பழைய பாடத்திட்டப்படி புத்தகங்கள் அரசு வெளியிடுவது நியாயமானது தான். இதை ரத்து செய்யக்கூடாது.
தலைமை நீதிபதி: இன்று வெளிவந்த ஒரு ஆங்கில பத்திரிகையில், பழைய பாடதிட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை. அப்படி
இருக்கும்போது எப்படி புத்தகங்கள் அச்சடிப்பீர்கள். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகாதா? தமிழக அரசு ஏன் இந்த நிலை எடுத்துள்ளது? இது வருந்தத்தக்கது.
வக்கீல் பி.பி.ராவ்: இதுபற்றி எனக்கு தெரியாது.
தலைமை நீதிபதி: தமிழக அரசு பற்றி உங்களுக்கு தெரியாது. தமிழக அரசின் இந்த நிலை நீதிமன்றத்தை கேலிகூத்தாக்குவதாக உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது.
வக்கீல் பி.பி.ராவ்: மாணவர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தகங்களை அச்சடித்து இருக்கலாம்.
தலைமை நீதிபதி: புத்தகங்கள் அச்சடிப்பதை ஒப்பு கொள்கிறீர்கள். இதை பதிவு செய்து கொள்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
அடுத்த கட்ட விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தள்ளிவைத்தனர்.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்ற மூத்த
வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற வக்கீல் குரு.கிருஷ்ணகுமார் ஆகியோரும், மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் கே.பாலு, பிரசாத் ஆகியோரும் ஆஜராகினர்.உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் வருமாறு:மூத்த வக்கீல் பி.பி.ராவ்: சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தவறானது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின்
கட்டாயக் கல்வி சட்டம்தான் மூலச்சட்டம். இந்த சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது. இந்த மூலச்சட்டத்தை கவனத்தில் கொள்ளாமல், கடந்த அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை
கொண்டு வந்தது. தேசிய பாடத்திட்டம் வடிவமைப்பு விதி 2005ன்படி சமச்சீர் கல்வி தரமற்றது. இதுதவிர, சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது என்று கல்விக்கான தேசிய கவுன்சில் தமிழக அரசுக்கு கடந்த
2009ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கடிதம் எழுதியது. அதை கடந்த அரசு ஏற்கவில்லை.இதுதவிர, கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அரசுக்கு பல பரிந்துரைகள் செய்தது. அதாவது, சமச்சீர் கல்வி புத்தகம் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த அரசு அமல்படுத்தவில்லை. இதற்காக, மே மாதம் 15ம் தேதி
கெடு விதித்தது. அதை கடந்த அரசு மீறியுள்ளது. புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை, தனியார் பள்ளிகளுக்கு உள்ளது என்று மத்திய அரசின் மூலச்சட்டம் கூறுகிறது. இதை கடந்த அரசு மீறி
செயல்பட்டுள்ளது. மூலச்சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த முடியாது. சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், அந்த கமிட்டி 3 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி இரவு, பகலாக சமச்சீர் கல்வியை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது; இதை ஏற்க வேண்டும்.சமச்சீர் கல்வி என்பது மாணவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சமச்சீர் கல்வி மாணவர்கள் வளர்ச்சிக்கு தரமானதாக இல்லை. சமூக நீதி என்ற பெயரில் மனுதாரர்போல சிலர் தரமில்லாத பாடதிட்டத்தை மாணவர்களுக்கு திணிக்கிறார்கள். இது தவறானது. சமச்சீர் கல்வியை நாங்கள் முழுவதுமாக ரத்து செய்யவில்லை. அதை நிறுத்தி வைக்கத்தான் சட்டத்திருத்தம் செய்துள்ளோம். அதை எப்போது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம்.
முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமார் கமிட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் கமிட்டி, ஒரு நிலைக்குழுவை ஏற்படுத்த வேண்டும என்று கூறியுள்ளது. ஆனால், கடந்த அரசு எந்த குழுவையும்
அமைக்கவில்லை. அந்த நிலைக்கு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கமிட்டி பரிந்துரை செய்தும் கடந்த அரசு அதை அமல்படுத்தவில்லை.
தமிழக அரசின் சட்டத்திருத்தம் அவசர முடிவு அல்ல. தீர ஆராய்ந்து பார்த்து எடுத்த முடிவுதான். மாணவர்கள் நலன் கருதி நிதானமாக எடுத்த முடிவுதான். சமச்சீர் கல்வி சட்டம் இந்திய அரசியல்
சட்டம் பிரிவு 14 மற்றும் 15க்கு எதிரானது. மத்திய அரசின் மூலச்சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி இருப்பதால் 1 கோடியே 35 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 200 கோடி ரூபாய் வீண்
செலவு என குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பள்ளிகள் தரப்பு வக்கீல்கள் சிலம்பண்ணன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி: பழைய பாடத்திட்டப்படி புத்தகங்கள் அரசு வெளியிடுவது நியாயமானது தான். இதை ரத்து செய்யக்கூடாது.
தலைமை நீதிபதி: இன்று வெளிவந்த ஒரு ஆங்கில பத்திரிகையில், பழைய பாடதிட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை. அப்படி
இருக்கும்போது எப்படி புத்தகங்கள் அச்சடிப்பீர்கள். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகாதா? தமிழக அரசு ஏன் இந்த நிலை எடுத்துள்ளது? இது வருந்தத்தக்கது.
வக்கீல் பி.பி.ராவ்: இதுபற்றி எனக்கு தெரியாது.
தலைமை நீதிபதி: தமிழக அரசு பற்றி உங்களுக்கு தெரியாது. தமிழக அரசின் இந்த நிலை நீதிமன்றத்தை கேலிகூத்தாக்குவதாக உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது.
வக்கீல் பி.பி.ராவ்: மாணவர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தகங்களை அச்சடித்து இருக்கலாம்.
தலைமை நீதிபதி: புத்தகங்கள் அச்சடிப்பதை ஒப்பு கொள்கிறீர்கள். இதை பதிவு செய்து கொள்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
அடுத்த கட்ட விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தள்ளிவைத்தனர்.
.....தினகரன் 08.07.2011
***********************
பொது ஜனம்; ஜெயலலிதா அரசுக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் விடுத்திருக்காரே!
பொது ஜனம்;ஜெயலலிதாவுக்கு இப்படி கண்டனம் வரும்னு தெரியாதா? அது தான் சட்டத்தை எப்பவுமே மதிக்கிறது இல்லையே! நீதிமன்றத்தை பல முறை ஏமாத்தி! ஏமாத்தி! அதுக்கு பழக்கமாயிடுச்சு! உச்சநீதிமன்ற கட்டாயமா கொடநாடு எஸ்டேட் ரோட்டை பொது மக்களுக்கு திறந்து விடணும்னு கண்டிஷனா தீர்ப்பு இரண்டாவது முறையும் கூறியிருக்காங்க! திறந்து விட்டுச்சா!
பொது ஜனம்; அதோட கோர்ட்டுல அதுதான் நீதிபதி! இந்த நீதிபதிகள் எல்லாம் அதுக்கு ஒரு கால் தூசு!
பொது ஜனம்; பிக்பாக்கெட் கேசுக்காறன் கூட நீதிமன்றத்துக்கு பயப்புடறானேய்யா! இது முதலமைச்சர் பதவியிலே இருந்துகிட்டு நீதிமன்றத்தை மதிக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்!
பொது ஜனம்; அதனால தான் தினம் கொலை கொள்ளை ஊருக்கு ஊர் நடக்குது! இது ஒரு கேடி லேடி! அதனால கேடி ரவுடிங்க தைரியமா திரியறாங்க! கொலை கொள்ளையை அசால்ட்டா பண்ணிட்டு போயிகிட்டே இருக்காங்க!
பொது ஜனம்; ஆமாய்யா நேற்றுக்கூட ஒரு பொம்பளை மேல ரவுடிங்க ஆசிட் அடிச்சிட்டானுங்க! டிரிட்மென்ட் பண்ணிகிட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பிட்டல இருந்த அந்த பொம்பளையை, அப்படியே ரவுடிங்க கடத்திகிட்டு போய் கேசை வாபஸ் வாங்குன்னு மிரட்டுனாங்களாம்!
பொது ஜனம்; பின்னே! ஜெயலலிதாவே ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மேல (கூலிப்படை சுர்லாவை வைச்சி) ஆசிட் அடிச்ச பொம்பளை ரவுடி தானே! அதனால தான் இப்ப மக்கள் மூஞ்சிலேயும் ரவுடிங்க தைரியமா ஆசிட் அடிக்கிறாங்க!
பொது ஜனம்; எங்கய்யா போலீஸ்காரணுங்களே குடிச்சுட்டு பப்பளிக்கா ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறானுங்க! புகார் கொடுக்கப் போற பொம்பளையை ரேப்! பண்ணப்பாக்குறானுங்க! ஏற்கனவே ரேப் பண்ணிகிட்டும் இருக்கானுங்க!
பொது ஜனம்; எங்கய்யா போலீஸ்காரணுங்களே குடிச்சுட்டு பப்பளிக்கா ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறானுங்க! புகார் கொடுக்கப் போற பொம்பளையை ரேப்! பண்ணப்பாக்குறானுங்க! ஏற்கனவே ரேப் பண்ணிகிட்டும் இருக்கானுங்க!
பொது ஜனம்; அப்ப! டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில வந்த செய்திதான் தலைமை நீதிபதியை கோபமாக்கிடுச்சி!
பொது ஜனம்; ஏற்கனவே உச்சநீதிமன்றத்திலே பொது நல வழக்கு போட்டிருக்காங்க! இந்த ஆதாரத்தை அப்படியே அதுக்கு சேர்த்துக்கலாம்! அரசு தரப்பு வக்கீலும் பழையப் புத்தகம் அச்சடிக்கறதை ஒத்துக்கிட்டாரே!
பொது ஜனம்; கிளினா இது கோர்ட்டு அவமதிப்பு! தெளிவாயிடுச்சு! உச்ச நீதிமன்றம் இந்த செயலுக்கு கடுமையான தண்டனை தரணும்! அப்ப தான் இனிமேல் எவனும் நீதிமன்றத்தை அவமதிக்க மாட்டான்!
பொது ஜனம்; நாலு தடவை கூடியே இவங்க இந்த புத்தகம் சரியில்லைன்னு சொல்றவங்க இன்னொரு நாலு நாளுள புதிய சமச்சீர் புத்தகத்தை உருவாக்கி அச்சடிக்க முடியாதா?
பொது ஜனம்; மக்கள் கேக்கறது என்ன? எல்லோருக்கும் ஒரே கல்வி!
பொது ஜனம்; அதானே! அப்ப ஜெயலலிதாவுக்கு சமச்சீர் கல்விமேல பயங்கற காண்டு! எங்க எல்லோரும் புத்திசாலியா ஆயிட்டானுங்கன்னா நம்மளை தூக்கி ஒரம் கடாசிடுவானுங்க! அதுவும் நம்ம ஜாதிக்காரப் பாப்பானுங்க எல்லாம் கீழேப்போயிடுவானுங்க என்ற பிதறல் இதுக்கும் வந்துடுச்சி!
பொது ஜனம்; பழையப் புத்தகத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அச்சடிக்கிறதுக்குப் பதிலா புதிய சமச்சீர் புத்தகத்தையே உருவாக்கி அச்சடித்து இருக்கலாமே!
பொது ஜனம்; ஆமாம்! அப்புறம் எதுக்கு ஜெயலலிதா அள்ளக்கைங்க கோர்ட்டுல "நாங்க சமச்சீர்கல்வியை நிறுத்தலைன்னு புருடா விடுதுங்க!"
பொது ஜனம்; அது மட்டும் அவசரக் கோலமாகாதா?
பொது ஜனம்; நாலு நாளுளை அவசரக்கோலமா புத்தகத்தில இருக்கிற தப்பை கண்டுபிடிக்கிறவங்க! நாலு நாளுள அவசர! அவசரமா! புதிய சமச்சீர் புத்தகத்தை உருவாக்கி அச்சடிக்க முடியாதா?
பொது ஜனம்; அவங்க தான் தனியார் பள்ளிகள் கிட்டே கட்டிங் வாங்கிட்டாங்க! அதனால அவங்களுக்கு சாதகமா இந்த பொம்பளை செயல்படம்னு நினைக்குது!
பொது ஜனம்;பல தனியார் பள்ளிக்கூடத்தில எதுக்கும் கவலைப்படாம பழைய பாடத்தை தனியார் புத்தகத்தின் மூலமா நடத்திகிட்டுதான் இருக்காங்க! அவங்களுக்கு ஜெயலலிதா எப்படியும் கோர்ட்டை ஏமாத்திப்புடும்னு அவ்வளவு உறுதியான நம்பிக்கை!
பொது ஜனம்; இந்த பொம்பளை ஆட்சியில எந்த நல்ல திட்டமும் வராது போல இருக்கே!
பொது ஜனம்; இருக்கறதை கெடுக்காம இருந்தா போதும்! இதுதான் இலவச பஸ் பாசையே இது அறிமுகப்படுத்தின மாதிரி தேவையில்லாமத் தொடங்கி வைச்சு பில்டப் கொடுக்குதே!
பொது ஜனம்; அது கடந்த பல ஆண்டுகளா! அமலில் இருக்கும் கலைஞர் கொண்டு வந்த இலவச பஸ் பாஸ் திட்டம்!
பொது ஜனம்; இது சரியான பெருமை பீயத்தக்களை!
பொது ஜனம்; இது சரியான பெருமை பீயத்தக்களை!
பொது ஜனம்; கலைஞர் அரசில பள்ளி திறந்த ஒரே வாரத்தில மாணவர்களுக்கு பஸ் பாஸ் கொடுத்திட்டாங்க! இதுங்க ஒருமாசம் கிட்டே ஆகப்போகுது இன்னும் பஸ் பாசே கொடுக்கலை!
பொது ஜனம்; இந்த திட்டமே பேருந்து கட்டணத்தை காரணம் காட்டி பசங்களை பள்ளிக்கூடம் அனுப்பாம பெத்தவங்க இருந்துடப்போறாங்க என்பதற்காகத்தான் இந்த இலவச பஸ்பாஸ் திட்டம். இதையே இன்னும் மாணவர்களுக்கு பள்ளி திறந்து 25 நாளாகியும் கொடுக்கலை! ஆனா! அவசர அவசரமா நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னாடி பழையப் புத்தகத்தை பிரிண்ட் மட்டும் அடிக்குதுங்க! இத்தனைக்கும் சமச்சீர் புத்தகம் ரெடியா இருக்கும் பொழுதே!
பொது ஜனம்; இந்த பொம்பளை மூஞ்சில பீச்சாங்கையைத்தான் வைக்கணும்! அதுவும் கழுவா! இது ஆட்சி நடத்துற லட்சணம் அந்தளவுல இருக்கு! ஓரே மாசத்துல அந்தளவுக்கு இளிக்குது!
பொது ஜனம்; இதுதான் திமுகவை ரப்பர் வைச்சு அழிக்கப்போகுதாம்!
பொது ஜனம்; கிழிச்சது! இது கேசே இன்னும் முடியலை! இது எப்ப அழியப்போகுதுன்னு அதிமுகவில இருக்கறவங்களே காத்துகிட்டு இருக்கிறாங்க!
பொது ஜனம்; இதுக்கு ஒட்டுப்போட்டவங்களே காத்துகிட்டு இருக்காங்க! முதல்ல ஒட்டுபோட்ட ஒட்டு போடாத மக்கள் என அனைவரையும் தன் பக்கமா இழுக்கறவன்தான் சிறந்த அரசியல் வாதி இது முன்றாம் தர, நான்காம் தர அரசியல் வாதி அதனால தான் இதால இதையெல்லாம் பத்தி சிந்திக்க முடியுது.
இடுகையிட்டது
நம்பி
நேரம்
6:59 am
0
கருத்துரைகள்
லேபிள்கள்:
. தமிழகச் செய்திகள்,
அரசியல்,
குறுஞ்செய்திகள்


Subscribe to:
Posts (Atom)