Pages

Showing posts with label புதுமனை புகுவிழா. Show all posts
Showing posts with label புதுமனை புகுவிழா. Show all posts

Saturday, 27 March 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-15







தமிழ்த்திருமணம் (5)

புதுமனை புகு விழா


1. விடியல் 5-00 மணி போல, நல்ல நேரத்தில், தெரு வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டி, இரு குத்து விளக்குகள் ஏற்றி வைக்க.
2. பூசைக்குரிய பொருள்களைத் தட்டுகள், பிறவற்றில் அங்கே வைத்துக் கொள்க. (பால் காய்ச்சுவதற்குத் தேவையான பால் உள்பட) வீட்டுப் பிள்ளையாரை மணையுடன் வீற்றிருக்கச் செய்க.
3. வீட்டுக்கு உரியவரும், அவர் மனைவியாரும் நீராடி சின்னங்கள் அணிந்து வாயிலில் நிற்க.
4. பசுவும் கன்றும் அங்கு வரச்செய்து அவற்றின் நெற்றியை நீர் கொண்டு துலக்கி, மஞ்சள் குங்குமம் இடுக. உடலிலும் அங்ஙனம் செய்க கழுத்தில் பூச்சுற்றுக. கற்பூரம் காட்டுக, பழம் அளிக்க.
5. பசுவும் கன்றும் நுழையும்போதே, முன்னே குத்து விளக்குகளையும்
பூசைப் பொருள்களையும் உள்ளே கொண்டு சென்று பூசை செய்யவேண்டிய இடத்தில் வைக்க. வீட்டுக்குரிய இருவரும் உடன் செல்க.
6. விழாச் சேலை வேட்டி வழங்குதற்குரியவர் வழங்குக.
7. இரு வாழை இலைகள் நடுவில் அரிசி பெய்து கலசம் நிறுவுக, மஞ்சள் பிள்ளையார் அமைக்க.
8. வீட்டுக்குரிய இருவரும் புத்தாடை உடுத்திக்கொண்டு கிழக்கு நோக்கிக் கலசத்திற்கு எதிரே அமர்க. திருமணச் சடங்குக்கு உரிய மந்திரங்களை ஓதி வழிபடுக.
9. திருமண அழல் ஓம்பல் மந்திரங்கள் ஓதி, ஓமம் வளர்த்துக. ஓமப் பொட்டு இடுக.
10. கலசநீரை இருவர் மீதும் தெளிக்க. பின் வீடு முழுவதும் தெளித்துக் கொண்டே சென்று அ.ல் ஓம்பிய நெருப்பை சமையல் அறைழில் புது அடுப்பில் இடுக. பால் காய்ச்சுக.
11. கலச நீரை இருவர் மீதும், வீட்டைச்சுற்றியும் தெளிக்க.
12. கணவன் மனைவியர் இருவரும் காய்ச்சிய பாலை அனைவருக்கும் வழங்கித் தாமும் உட்கொண்டு கிழக்கு நோக்கி நிற்க.
13. ஆசிரியர் பின்வரும் மந்திரங்களை ஓதி வாழ்த்துக;


அ. ‘களித்துக் கலந்த்தோர் காதல் கசிவோடு, காவிரி வாய்க் குளித்து தொழுது, முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்துப் பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே’

ஆ. ‘அன்பர் அங்கிருப்ப, நம்பர் அருளினால், அளகை வேந்தன்
தன்பெருநிதியம் தூர்த்துத் தரணிமேல் நெருங்க, எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும், பொருவில் பல்வளனும் பொங்க
மன்பெருஞ் செல்வம் ஆக்கி, வைத்தனன், மனையில் நீட

இ. இல்லத்தில் சென்று புக்கார், இருநிதிக் குவைகள் ஆரந்த
செல்வத்தைக் கண்டு, நின்று திருமனையாரை நோக்கி,
‘வில் ஒத்த நுதலாய்! இந்த விளைவிலம் என்கொல்?’ என்ன
‘அல ஒத்த கண்டன், எம்மான், அருள்தர வந்தது!’ என்றார்.

ஈ.’பரந்த நிதியின் பரப்பெல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்துக் காட்டி ‘மற்று இவையும்
உரம் தங்கிய வெம்கரி, பரிசுகள், முதலாம், ‘உயிருள்ள தனமும்,
புரந்த அரசும், கொள்ளும்!’ என மொழிந்தார்,பொறையர் புரவலனார்


14. புதுமனை புகும் கணவன் மனைவியர் இருவரும் அவையினரை விழுந்து வணங்கிக் கொள்க.
15. அவையினர் மஞ்சள் அரிசி சொரிந்து வாழ்த்துக.

பின்வரும் மந்திரம் ஓதி.
நன்மை பெருக அருள் நெறியே வந்து, அணைந்து, நல்லூரில்
மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து, எழும்பொழுதில்
உன்னுடைய நினைப்பு அதனை, முடிக்கின்றோம்’ என்று அவர் தம்
சென்னிமிசைப் பாதமலர் சூட்டினன், சிவபெருமான்.’


16. அனைவரும் மகிழ்ச்சியில் மலருதல்;
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள,
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாக, குணம் ஒரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே யாக.
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லை இல் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

-சேக்கிழார்

புதுமனை புகுவிழா நிகழ்ச்சி முற்றிற்று
மூட நம்பிக்கை

மனிதன் பகுத்தறிவோடு பிறந்தும் இல்லறத்தை ஏற்றுக் கொள்வதால், கவலையோடேயே சாகிறான். பகுத்தறிவுள்ள மனிதன் எதற்காக்கஃ கவலைக்கு ஆளாக வேண்டும். மனிதனுக்கு கவலை இல்லை என்றால் நீண்ட நாள்கள் வாழ்வான்; நோயற்று வாழ்வான்; மற்ற மனிதருடன் அன்பாக நடந்து கொள்வான். மடமைக்கு அனுகூலமான முறையில் நிகழ்ச்சிகளை அமைத்து அதில் புகத்தி விட்டதால் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறான்.




.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -16