ஆம் முன்பு பயன்படுத்தி வந்ததை நாம் அப்படியே பின்பற்றி வருவது தான் நம்பிக்கைகள் எல்லாம். தாமாக எவருக்கும் எந்த நம்பிக்கைகளும் வந்துவிடுவதில்லை. முதன் முதலில் தந்தையை யார் அறிமுகப்படுத்துகிறார். தாய். அவர் சொல்லாமல் இவர் தான் தந்தை என்று எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதை போன்றவைதான் மதங்களும், அதை சார்ந்த கடவுள்களும். நீங்கள், இருக்கும் கடவுள்களின் உருவங்கள் (எந்த மதக்கடவுள்களின் உருவங்கள் ஆனாலும்) தான் என்றில்லை, எந்த ஒரு புதிய உருவத்தையும் காட்டி சிறு குழந்தையை வணங்க சொல்லுங்கள். முதல்ல குழந்தை ஏன்? வணங்க வேண்டும்? (வணங்குதல் என்றாலே தெரியாது) அப்படியென்றால் என்ன? இது என்னது? என்று தான் கேட்கும். ஏன் அதை வணங்கா விட்டால் அடிக்க கூட செய்வோம். அப்போதும் ஆட்டம் காட்டிவிட்டு செல்லத்தான் செய்யும். பிள்ளைகளை வன்முறையில்லாமல் கண்டிக்க பேய் பிசாசுகளை அறிமுகப்படுத்துகின்றோம். இப்படி ஆரம்பிப்பது தான் நம்பிக்கைகள்.
அதைப்போல ஒரு வீட்டில் தாடியுடன் இருக்கும் பெரியாரையும், விவேகானந்தர் (இன்னும் சில படங்கள்) காட்டி இந்த மாதிரி செய்தால் இவரிடம் சொல்லி விடுவோம், அவர் வந்ததும் உன்னை தண்டிப்பார் என்று அந்த குழந்தையின் சேட்டையைத் வன்மையின்றி தடுக்க தாய், தந்தையர் ஏற்படுத்திய செயலை குழந்தை தவறாக உருவகப்படுத்தி கொண்டு விட்டது. நடு இரவில் அந்த உருவத்தை கனவாக கண்டு, அவர் (பெரியார்) என்னை துரத்தி வருகின்றார், நான் எந்த தவறும் செய்யமாட்டேன், அவர் என்னை பார்க்கிறார், அவரை மூடுங்கள் என்று அலர ஆரம்பித்து விட்டது. பின் துணிய மூடிய பிறகுதான் தூங்க ஆரம்பித்தது. (ஒன்றை நினைத்து கொண்டிருக்கையில், அதுவே கனவாக வரும்)
இப்படித்தான் குழந்தைகளுக்கு நம்பிக்கைகள் பலரால் ஊட்டப்பட்டு வளருகின்றன. எந்தக் குழந்தையும் அதுவாக நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வதில்லை. அப்படித்தான் வேதங்கள், மதநம்பிக்கைகள், உயர்வான எண்ணங்கள், உயர்சாதி, தாழ்ந்த சாதி, மொழிப்பற்று என்ற எண்ணம் எல்லாமே. ஏன் அனைத்து மனித மாச்சர்யங்களும், யாராவது கற்று கொடுத்தால் தான் வரும்.
ஏன்? மரணங்கள் என்றால் என்ன? என்று குழந்தைக்கு தெரியாது? காரிய வீட்டிற்கு செல்லும் குழந்தை எல்லோரும் அழுவதை பார்த்து அதுவும் அழுகின்றது. அதை பார்த்ததும் அனைவரும் அழுவதை நிறுத்திவிட்டு குழந்தையைத்தான் சமாதனப்படுத்துவார்கள். அதேபோன்று அந்த சவத்தை கண்டு அது அஞ்சுவதும் இல்லை, மாறாக அதன் மீதே ஏறி ஆடும், அதை எழுப்பும். ஏன் என்றால் அதற்கு மரணம் என்றால் என்ன என்று தெரியாது.அதைத்தான், அந்த வயதை இளங்கன்று பயமறியாத வயது என்று கூறுகின்றனர். (பெரிய மனிதனுக்கு அந்த சவத்தை பார்த்தாலே பயம், ஆனால். சுடுகாட்டிலேயே பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த குழந்தைக்கு அது மாதிரி நம்பிக்கைகளை வளர்த்திருக்கமாட்டார்கள் அந்த பெற்றோர்கள்.)
அதே குழந்தைக்கு மரணம் என்பதை அறிந்தவுடன் பயம் என்று ஒன்று வந்து விடுகின்றது. மரணம் எப்படி இருக்கும்? ஏன் அழுகிறார்கள்? என்று தாய் தந்தையரை பார்த்து கேட்கும் குழந்தையின் கேள்விக்கு, ""இதுவரை அதை அனுபவிக்கமுடியாது, யாரும் அனுபவித்தது கிடையாது, அதுதான் முடிவு. இயற்கையிலிருந்து தோன்றியவை எல்லாம் இயற்கையை அடைவது வாடிக்கை "", என்பது தான் பதிலாக இருக்கும். இன்னும் சிலர் ""இறைவனிடம் அடைவது"" என்றும், இன்னும் சிலர் முன்பு மறைந்த உறவினர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களிடம் சென்றடைவது தான் மரணம்"" என்றும் ஒப்புக்கு சப்பாக ஒன்றை கூறுவார்கள். உடனே அந்த குழந்தைக்கு அங்கிருந்து பயமும், அது குறித்த தேடல்களும் ஆரம்பித்துவிடும். வளர்ந்தவுடன் அந்த கேள்விக்கு விடை தேட அதுவும் முற்படுகின்றது. அவ்வாறு தேடுதலின் படி அவரவர்க்கு கிடைத்தவைகளின் மூலம் நம்பிக்கை ஒன்று ஏற்படுகிறது. அந்தந்த நம்பிக்கைகளின் படிஎழுந்தவைகளே இத்தனை கடவுள்கள்.
இப்படி புறப்பட்டவர் தான் புத்தர் (மரணம்,....இதை பார்த்து தியானம் மேற்கொண்டார்). இப்படி புறப்பட்டவர் தான் இராமலிங்க அடிகளார், விவேகானந்தர் (மிக சமீபமாக). அவர்கள் இருக்கும் பொழுதே ஆரிய இந்து மதம் இருந்தது, ஆரிய வேதமும் இருந்தது. அவருக்கும் இந்த மத நம்பிக்கைகளை அவரின் தாய் தந்தையர் விதைத்திருந்தனர், குருமார்கள் இருந்தனர். அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் புறப்பட்டவர்கள் தான் இவர்கள். அவர்கள் இதிலிருந்து வேறு பட்டு ஒரு புதிய தத்துவங்களை அறிமுகப்படுத்தினர். அப்போது இவர்களுக்கு கிடைத்த பட்டம் கடவுள் நம்பிக்கையற்றவன் என்பது தான். இன்னும் சிலர் பார்ப்பன துவேசி என்று ஒரு படி அதிகம் போய் விமர்சித்தனர்.
இன்னும் சமீபமாக தந்தை பெரியார் ஆன்மீகவாதியாக புற்ப்பட்டு, இவைகளை ஒதுக்கியப்பின் பகுத்தறிவுவாதியானவர். ஆன்மீகத்தில் கண்டவைகளை கொண்டு அவர் உருவாக்கியது தான் ""கடவுளை மற மனிதனை நினை""........இப்படி நினைத்தாலும் மரணத்தை சந்தித்து தான் ஆகவேண்டும். இப்படி நினைக்காவிட்டாலும் மரணத்தை மனிதன் சந்தித்து தான் ஆக வேண்டும் என்ற கோட்பாடுதான் இது. (மரணம் வரும்போது வரட்டும், அதுவரை ஏதாவது உருப்படியாக இந்த உலகுக்கு செய் என்பது தான்...) இது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது சிலருக்கு விருப்பமானதாக இல்லை. அதாவது விருப்பமில்லாதவர்கள் இன்னும் தேடுகிறார்கள் அவ்வளவு தான்...
கற்பனையாக இது நடந்தால் என்று வைத்து கொண்டால்....... இரு குழந்தைகளை தேர்ந்தெடுத்து (சற்று நினைவு தெரிந்தவுடன்) ஒன்றை காட்டில் வளருமாறு அனுப்பினோமானால், ஒரு 18 வருடம் கழித்து அந்த காட்டில் வளரும் குழந்தை மொழி தெரியாமல், எந்த நம்பிக்கைக்கும் ஆட்படாமல் மிகத் தெளிவாக அந்த சூழலுக்கு ஏற்ப வளர்ந்து விடும். பேய், பிசாசு, கடவுள் போன்ற எந்த அச்சத்தையும் கொண்டிராமல் இருக்கும். இங்கிருந்து வளர்ந்த குழந்தை எல்லாவித நம்பிக்கைகளுடன், பயங்களுடனும் வளர்ந்திருக்கும்.
இதெல்லாம் அறியாதவர்கள் அல்ல நாம் என்பதை அறியாத ஆன்மீக வாதிகள், மதங்களையும், கடவுள்களையும் என்னமோ இவர்களுக்கு மட்டும் கடவுள் என்று ஒன்று வந்து அருள்பாலித்தது போல் தத்துவங்களை பொழிந்து தள்ளுவார்கள். ( கடவுளுக்கே இன்னும் காஸ்டியும் மாற்றாமல் (costume changing) இருக்கின்றோம், என்பதை உணராமால். இதுவே பண்டைய ராஜா காலத்து உடைகள் தான், வேல், கதாயுதம்....நகைகள்..... இப்போது எல்லாம் ஏ கே 47, ஜீன்ஸ், டீ சர்ட்.....) இவர்களும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்ததை மறந்து விட்டு. நாம் ஏதாவது கேட்டால் நீங்கள் அந்த நம்பிக்கையில் இருந்து பாருங்கள என்று நமக்கே புத்திமதி சொல்லுவார்கள். இந்த அதிமேதாவித்தன ஆன்மீகவாதிகள். மீறி ஏதாவது கேட்டால் இதை உணரமுடியுமா? அதைப் போல் தான் இதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்? இதனால் என்ன பயன்? ஒன்றும் இல்லை. (உணர்ந்தது போல் நடித்தாலும் மண்டையை போட்டு தான் ஆகவேண்டும். ஒதுக்கினாலும் மண்டையைப் போட்டு தான் ஆகவேண்டும்.)
இப்படி நம்பிக்கைகள், கோட்பாடுகள் அவரவர் கண்டுபிடிப்புகளின் படி உருவாகிக்கொண்டே வருகின்றது. தத்துவங்களும் உருவாகிக்கொண்டே வருகின்றது. இவையெல்லாம் மரணபயத்தை அடிப்படையாக கொண்டே உருவாகின்றது. இந்தியாவை பொறுத்தவரை பெரும்பான்மையானவரின் ஒரே மதம் இந்து மதம் அப்புறம் எப்படி? இத்தனை விதமான தத்துவங்கள். இத்தனை விதமான குருமார்கள். இன்று அவரவர் ஏற்படுத்திய தத்துவங்கள ஒவ்வொன்றும் ஒவ்வொரு மதங்களாகிவிட்டன. அந்த காலத்தில் அவ்வளவுதான் பகுத்தறிவு. அவ்வளவுதான் அவர்களால் சிந்திக்க முடிந்தது, அவ்வளவுதான் முடியும். (இந்த காலத்திலும் டெக்னாலஜியை பயன்படுத்தி கொண்டு ஆரிய பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் அதே வேதங்களை புகுத்துகின்றார்களே, அதை விடவா?). இப்படி இன்னும் மரண பயத்தை நோக்கி புறப்படுபவர்கள், ஏதாவது சிந்தித்து கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் புதிய புதிய தத்துவங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.
இப்படித் தேடிக்கொண்டிருப்பதற்குள் வேற்று கிரகத்திலிருந்து புறப்பட்டு வரும் மனிதர்கள் வேறொன்றை கொண்டு வந்து புகுத்தி விடுவார்கள். (அவர்கள் மனிதர்களா? ). அவர்கள் இன்னும் 150 வருடங்களுக்குள் வந்து சேருவார்கள் என்பது கேரள விஞ்ஞானியின் இ.எஸ்.பி (Extra Sensational Power). (செய்தி விஜய் டி.வி) ஆனால் ஆராய்ச்சிக்காக வியாழனுக்கு நாம் ராக்கெட்டை அனுப்பிவிட்டோம். அவர்கள் பார்ப்பதற்கே மிக பயங்கரமாக இருக்கின்றனர். (அவர்களுக்கு இங்கிருப்பவர்கள் பயங்கரமாகத் தெரியலாம்) அவர்கள் என்ன மதத்தை கொண்டு வரப்போகின்றனரோ? எந்த என்ன சாதியை கொண்டு வரப்போகின்றார்களோ? எந்த கடவுளை கொண்டு வரப்போகின்றார்களோ? என்ன மொழியை கொண்டு வரப்போகின்றார்களோ? என்ன புத்தகத்தை கொண்டுவரப்போகின்றார்களோ?அல்லது இங்கு வந்து தான் புத்தகம் எழுதப்போகின்றார்களோ?.....இல்லை இங்கிருப்பவர்களோடு போர் புரியப்போகின்றார்களோ?.. எதிர்காலத்தினர் தான்..... பார்க்கப்போகின்றனர்......
Tweet



