Pages

Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts

Thursday, 12 May 2011

ஒசாமா முதல் திரைப்படம்...பகுதி-3



(ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்)

முஸ்லீம்கள் சிறுமையை பொறுத்துக்கக் கூடாதுன்னும் சொல்லுவாரு! இப்ப பின்லேடன் எண்ணங்கள் என்னவோ? அதெல்லாம் அவர் சொன்ன அடிப்படைகளா இருந்தது.


1979 இல் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அது பின்லேடனுடைய கனவாகிய ஜிகாத் உண்மையாகும்படி அமைஞ்சது. அது இஸ்லாமிய உலகைத் தட்டி எழுப்பியதோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆயுதம் ஏந்தும்படி தூண்டிவிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையன்று செம்படை ஆப்கானிஸ்தானிற்குள் எல்லை தாண்டி நுழைந்தது. ரஷ்யப்படைகள் அந்த நாட்டைத் திடீர் என்று ஆக்கிரமித்ததுடன், ஆப்கானியர்களுக்கு சிறு சந்தர்ப்பம் கூட அளிக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் ஒரு திருப்புமுனையான தேதியைத் தொடர்ந்து அமைந்த, அந்த யுத்தத்தை, அடுத்த உலக மகாப் பிரிவினைக்கு அடிகோலியத் துவக்கமாகவும், பனிப்போரின் கடைசி அங்கமாகவும், எதிர்காலத் தலைமுறைகள் தெளிவாக காண முடியும்.

அந்த காட்சிகளுக்கு பின்னணியில் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவான சி.ஐ.ஏ ஒரு பெரும் மறைமுகமான நடவடிக்கையைத் தூண்டியது.


நாங்களும் (அமெரிக்கா), சவுதி அரேபியாவும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை, ஆப்கானியர்களுக்கு கொடுத்தோம். அதுவும் அவங்க கோபம் ரஷ்யர்கள் மேல திரும்புனா, அந்த நாடு பின்வாங்க நேரிடும் என்ற நம்பிக்கையில கொடுத்தோம்.


அந்த யுத்தம் தொடர்ந்து கொண்டே போகப்போக, பாக்கிஸ்தானில் கண்ணுக்கெட்டியத் தூரம் வரை அகதிகள் முகாமாக தென்பட்டன. ஆப்கானிய மக்களின் துன்பங்கள் ஒட்டு மொத்த உலக இஸ்லாமிய அமைப்பான ஹூம்மாவை அதிர்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.

ஹூம்மா (Ummah) என்பது முஸ்லீம்களின் உலக சமுதாய மையம். உலகில் ஒரு கோடி முஸ்லீம்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியானதும் மிக ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்ட முஸ்லீமுக்கு, தனது பக்கத்து வீட்டுக்காரர் தாக்கப்பட்டதும், போன்ற வலியையும் வேதனையையும் தனிப்பட்ட முறையில் தரும். ஹூம்மாவின் எந்தப் பகுதியைத் தாக்கினாலும், அது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தாக்கியதாகும். மற்ற சாதாரணமானவர்களுக்கு பதிலாக ஒருமதவாதிக் கல்வியாளரான ஷேக் அப்துல் அசாம் (Abdullah Yusuf Azzam) என்பவர் ஹூம்மா அமைப்பை ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக, ஒரு எதிர்த்து நிற்கும் யுத்தத்தில் ஆதரவு தருமாறு, கோரிக்கை விடுத்தார். அது ஒரு யுத்தம். அதாவது, ஜிகாத்.

Right-click here to download pictures. To help protect your privacy, Outlook prevented automatic download of this picture from the Internet.

பின்லேடன் தன்னை எங்கப்பாகிட்ட தானாவே அறிமுகப்படுத்திக்கிட்டாரு!

ஹலோ என் பேர் பின் லேடன், எனக்கு இந்த ஆப்கான் ஜிகாத்தை பத்தி தெரிஞ்சிக்கணும்னாரு!

நான் சின்னப்பயனா இருந்தா நாள்லேயிருந்தே அது என்னென்னு? தெரிஞ்சிக்கணும்னு எதிர்பார்த்துகிட்டேயிருந்தேன்! எனக்கு ஒரு ஜிகாத்தாவோ? இல்லை புனித வீரனாவோ? ஆகணும்னு கனவு கண்டுகிட்டிருந்தேன்னாரு! அதானால எங்கப்பா அவருகூட உட்கார்ந்து நாலு மணிநேரத்துக்கும் மேல பேசிக்கிட்டிருந்தாரு! அந்த சந்திப்புக்கப்புறம், பின்லேடன் ஆப்கானிஸ்தானத்துக்கு வந்துட்டாரு!
 ************


1984 இல் அசாமை பின்பற்றி பாக்கிஸ்தானில் இருக்கும் பெஷாவருக்கு அவர் சென்றார். அது ஆப்கானிஸ்தானின் எல்லைக்கருகில் இருக்கும் ஒரு புழுதி நிறைந்த நகரம். அந்த நேரத்தில் அந்த செல்வந்தரான் இளம் அராபியர், தங்களத்உ நோக்கத்துக்காக நிதி திரட்டும் வேலையை செய்து கொண்டிருந்தார். பின்லேடன் அங்குள்ள ஒரு ஆங்கிலேயர் அரசு விடுதியில் முகாமை அமைக்க உதவி செய்து, அதற்காக அந்த பணத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். அந்த அலுவலகம் அல்கொய்தாவுக்கு ஒரு முன்னோடி அலுவலகமாக இருந்தது. ஆனால் அதை துவக்குவதற்கு முன்பாக,அது இளம் தன்னார்வத் தொண்டர்களுக்கு, ஒரு அடையாள மாற்றம் செய்து கொள்ளும் இடமாகச் செயல்பட்டது. அவர்கள் பெஷாவருக்கு உதவிப்பணியாளர்கள், மருத்துவர்கள் அல்லது யுத்த வீரர்கள் போன்று ஜிகாத்துக்கு ஆதரவு தருவதாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.


அப்போது அங்கே ஒசாமா பின்லேடனை முதலில் சந்தித்த மனிதர்களில் ஒருவர் அல்ஜிரியாவைச் சேர்ந்த ஜிகாதியவாதி. அவர் பெயர் அப்துல்லா ஆன் ஆஸ். (Abdullah Anas) அவர் இன்னமும் ஒசாமா பின் லேடனை தன் நண்பராக மதித்து வருகிறார்.


அந்த சமயத்துல என்னோட கவனத்தை கவர்ந்த ஒன்னு என்னென்னா? அந்த மீட்டிங் முழுசும், அவர் அமைதியாவே உட்கார்ந்து இருந்தார். அந்த மீட்டிங் இரண்டு மூன்று மணிநேரம் நடந்தது. அதோட அவர் கொஞ்சமாத் தான் பேசினாரு! அதைப் பார்த்த எங்களுக்கு ரொம்பவே ஆச்சரியமாவே இருந்தது.


ஜிகாத்தின் தொட்க்க நாட்களில் அதில் இருந்தவர்கள், உயரிய லட்சியவாதிகளாக இருந்த காலகட்டமது. 1984 ஆம் ஆண்டு குளிர் கால்த்தில் அப்துல்லா ஆன் ஆஸ் முஜாகிதினோட விநியோக அணியில் சேர்ந்தார். முன்னணிக்கு பயணம் செய்து ஜிகாத்தை துவக்கியது என்பது ஒரு புனிதமான நோக்கத்துக்காகத்தான் என்று, தான் நம்பியதை பிரச்சாரம் செய்த முதல் மூன்று அராபியர்களில் இவரும் ஒருவர்.    


அந்த பயணம் எனக்கு மறுபிறப்பு மாதிரி இருந்தது. நம்மை நாட்டை மீட்டு, விடுதலைக்கிடைக்கப் போராடுற, ஆப்கானியி முஜைகிதினுக்கு (Mujahideen) நடுவுல நாம வாழறா மாதிரி இருந்த்து.அவங்களோட  ஒரு அங்கம் மாதிரி, நான் ரொம்பவே உணர ஆரம்பிச்சேன்.

*****************
உங்கத் துப்பாக்கி உங்கத் தோள்ல தொங்கும், அதோட, அதுக்காக நீங்க பெருமையும் படுவீங்க.
****************

பின்லேடன் ஜிகாத்துக்காக தானும் சண்டையிட விரும்பினார், அவர் நிதியுதவி திரட்டும் பணியை விரும்பவில்லை. ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து அதற்குள் பத்துமைல் தொலைவில் இருக்கும் கிராமமான ஜியாஜிக்கு (Jaji )அருகில் 1986 இல் அவர் தனது சொந்தமான சுதந்திரப் படையை உருவாக்கினார். அப்துல்லா ஆன் ஆஸ் இதுபோல பல புது முகாம்களை அமைப்பதில் பணத்தை விரயம் செய்வதுடன், தங்களது எதிர்ப்பு இயக்கத்தை வலுகீனப்படுத்திவிடும் என்று பின்லேடனே எச்சரித்தார்.




ஒரு மிகப்பெரியப் போர் நடந்துகிட்டிருக்கும்போது, அளவில்லாத பணமும், தளவாடங்களும் ஜியாஜிக்கு அனுப்பப்பட்டது. அது அவங்களுக்குப் போதுமானதா இல்லை. அவங்களுக்கு ஜியாஜியைவிட அதிகமாகத் தேவையிருந்தது. பன்ஷீர் பள்ளத்தாக்குக்குள (Panjshir Valley ) ரொம்ப உக்கிரமானப் போர் நடந்துகிட்டிருந்தது.  அதுமட்டுமில்லாம கந்தகார்லேயும் (Kandahar), அராத்துலேயும் (Arad) கூட ரொம்ப கடுமையானப்போர் நடந்துகிட்டு இருந்தது.


ஆனா ஒசாமா தன் சொந்த விஷயத்தை தானே கவனிச்சிக்கிற அளவுக்கு மிகுந்த பொருளாதார வசதிகளோட இருந்தாரு! அவர் அதை நடத்த யார்கிட்டேயும் பொருளுதவி கேக்கவேயில்லை. எல்லாம் அவரோட சொந்த கையிருப்பில் இருந்தே செலவுப் பண்ணிகிட்டிருந்தாரு!

**********************



பின்னர், 1987, ஏப்ரல் மாதம் எல்லையோரத்திலும் பெரும் தாக்குதல் ரஷ்ய ராணுவம் நடத்தியது.

***********************



ஜியாஜி கிராமம் அப்கானிஸ்தானுக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே கடந்து போறப் பாதையா இருந்தது. அதுதான் அப்கானிஸ்தானுக்குள்ள இடிபாடுகளை கடக்கறதுக்கு, ஒரு வழியா இருந்து வந்துருக்கு! அந்த வழியை ரஷ்யர்கள் தடுக்க விரும்புனாங்க!





முதல்தடவையாக அராபிய யுத்த வீரர்கள், ஒரு தனி அணியாக ரஷ்யர்களை எதிர் கொண்டார்கள்.

****************

பின்லேடன் அப்ப உண்மையாவே தலைமைப் பொறுப்புல இல்லை. அவர் தன்னோட தலைமை பொறுப்பை, ரொம்பத் திறமையுள்ள ராணுவத் தளபதியான, எகிப்திய உதவியாளர்கள்ல ஒருத்தர் கிட்ட விட்டுட்டாரு! ஆனா! எது எப்படியிருந்தாலும், எல்லாத்திலேயும் பின்லேட்ன ரொம்பத் தைரியமா போரிட்டாரு!

******************



ஜியாஜிக்கு எந்தவிதமான ராணுவ முக்கியத்துவமும் இல்லையென்றாலும், அது பின்லேடனை புகழ் வாய்ந்த முக்கியஸ்தராக்கியது.


*********************


அவர் ரொம்ப பிரபலமாயிட்டாரு! இதுவரைக்கும் முதல் முதலா பிரசுரமான அவரோட படங்கள் எல்லாமே நான் எடுத்தது தான். அதற்கப்புறம் ஒசாமா எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரு நபராயிட்டாரு!

**************



அன்றுவரை ஒசாமா பின்லேடன் எப்பொழுதும் ஒளிப்பதிவாளருக்கும், புகைப்படக்காரர்களுக்கும் முகத்தை காட்டாது திரும்பிய நிலையிலேயே இருப்பார். இந்த ஒளிப்பதிவாளர் உலகுக்கு செய்தியளிக்க விரும்புகிறாரா? என்று ஒசாமாவேக் கேட்கும்வரை, ஒருமாதமாக அவர் தன்னை படம் எடுப்பதை மறுத்து தவிர்த்து வந்திருக்கிறார். இப்படித்தான் அவர் உருவம் முதன் முறையாக படம் பிடிக்கப்பட்டது.


******************

ஒசாமா......

“”நம்பிக்கையையும், மதத்தையும் வரமாக வழங்கிய ஆண்டவனுக்கு, நன்றி செலுத்துகிறேன். அத்துடன் இந்த ஜிகாத்தை கொடுத்ததற்காகவும், அவருக்கு நன்றி! இது ஒரு நன்றிக்கடன்!””


*********************


அன்றிலிருந்து பின்லேடன், தன்னைபற்றி அபிப்பிராயத்தை உருவகப்படுத்த ஊடகத்தை பயன்படுத்திக்கொண்டார்.


*********************


அந்த சம்பவத்துகப்புறம் அராபிய முஜாகிதினை சேர்ந்தவங்க எல்லாருமே ரொம்ப பிரபலமாயிட்டாங்க. அராபிய முஜாகிதினுடைய எண்ணிக்கை பலமடங்கு பெருகி, அதுவும் ஒரு வருஷத்துக்குள்ளே மூணு மடங்காயிடுச்சி.

**********************



அவர் ஒரு ஒட்டுமொத்த அராபிய படையணியை உருவாக்க ஆசைப்பட்டாரு! ஒரு அவசர காலப் படையா! இந்த பயிற்சி பெற்ற வீரர்களை, உலகம் முழுக்க எந்த இடத்துல முஸ்லீம்கள் அச்சுருத்தப்பட்டாலும், அங்க கொண்டு போய் அவங்க பாதுகாப்புக்கு இருக்கிறா மாதிரி அமையணும்கிறது, அவரோட விருப்பம். பின்லேடனுக்கு ஏற்கனவே இருந்த, யோசனையிலிருந்து உருவானது தான் இந்த அல்கொய்தா”.



************************



ஆனால் எகிப்தில் இருந்து அய்மன் அல் ஜவாஹிரி வந்தபிறகு அதிலிருந்து பின்லேடனுடைய நோக்கம், நிரந்தரமாக மாற்றமைடந்துவிட்டது. அரசாங்கத்திற்கு எதிராக, சதி செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, 1996 இல் விடுதலையாகி, பாக்கிஸ்தானில் இருக்கும் பெஷாவருக்கு (Peshawar), அவர் வந்து சேர்ந்தார். அங்கு அவருடன் எகிப்தில் இருந்து வந்த சக தீவிரவாதிகளும், சேர்ந்து கொண்டனர்.

*********************

1986 இல், ஒரு கட்டத்தில், இளைஞனும், அரசியலில் மிகக்குறைந்த அளவே அனுபவம் உள்ளவருமான பின்லேடன், அப்போது அய்மன் அல் ஜவாஹிரியை சந்தித்தார்





ஒசாமா பின்லேடன் தீவிரவாதத்து மேல இச்சைக் கொள்ள ஆரம்பிச்சாரு! அய்மன் அல் ஜவாஹிரியை சந்திக்கறதுக்காக, பயங்கரவாதிகளோட காலங்கழிக்கத்துவங்கினாரு!



****************

ஜவாஹிரி தங்கிட்ட வந்த பின்லேடனை சந்திச்ச உடனே, அவருக்குள்ள இருந்த ஆற்றலை புறிஞ்சிக்கிட்டாரு! அதோட ஜவாஹிரிக்கு பின்லேடன் ரொம்ப நெருங்கின நண்பரா ஆனதோட, ஜவாஹிரிக்கு அதிக நம்பிக்கைக்கு உரியவராவும் ஆயிட்டாரு! ஜவாஹிரி அவருகிட்ட எழுச்சியடையற மாதிரியும், அறிவுப் பூர்வமாவும், மனோரீதியாவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரு! ஜவாஹிரி கடைசியில பின்லேடனோட மூளையாவே மாறிட்டாரு!



****************

பயங்கரவாதத்தால் மட்டுமே எகிப்தில் இருக்கும் ஆட்சியை கவிழ்க்க முடியும், என்று ஜவாஹிரி நம்பத் துவங்கினார்.



குரான் சக இஸ்லாமியர்களின் ரத்தத்தை, இஸ்லாமியரே சிந்த வைப்பதை தடை செய்கிறது. ஆனால், தக்பீர் எனப்படும் முரண்பட்ட தெளிவில்லாத கோட்பாடு அந்த மாதிரி ரத்தம் சிந்துவதை ஞாயப்படுத்துகிறது.



*********************

அந்த வார்த்தையான தக்பீர் (takfir ) என்பது இப்ப அதிகளவில புழக்கத்துல வந்தாச்சு! அதோட அடிப்படையில மதத்துரோகம் என அறிவிக்கற ஒரு வார்த்தை. அதாவது யார்? இவங்களை அனுசரிச்சு போகலியோ அவங்களை மதநம்பிக்கையற்றவர்னு முடிவு பன்றதா அர்த்தம்.





***************

இஸ்லாத்தில் யார் முஸ்லிம்? என்றும், யார் அல்ல? என்றும் தீர்மானிக்கக்கூடியது கடவுள் ஒருவர் மட்டுமே!



***********************



ஒரு தீவிரவாதி அல்லது ஒரு பயங்கரவாதி தாங்களே ஒருத்தரை உண்மையான இஸ்லாமியன் இல்லைன்னு, அதுவும் அவரு உண்மையான மதநம்பிக்கையுள்ள இஸ்லாமியரா இருந்தாலும், தீர்ப்பளிக்கக்கூடியத் தகுதி தங்களுக்கு இருக்கறதா நம்பறாங்க! இதான் இப்ப இஸ்லாத்துக்குள்ள யுத்தம் ஆரம்பிச்சதுக்கான காரணம்.



*********************

ஜவாஹிரியும், அவரோட சக எகிப்தியர்களும், அதாவது தக்பீர் (takfir) சிந்தனையுள்ள எகிப்தியர்களும் தான், அவங்களால எதிர்காலத்துல என்ன? சாதிக்கமுடியும் என்ற சிந்தனைய பின்லேடன் மனசுக்குள்ள விதைச்சது.

*******************

யார்? வேணுன்னாலும் கொலை செய்யப்படலாம். இது அல்கொய்தாவுக்கும், இஸ்லாமியவாதி இயக்கத்துக்கும் சரித்திரத்தில திருப்புமுனையா அமைஞ்சது. அந்த இயக்கத்துக்குள்ள இந்த தக்பீர் (takfir ) கருத்து ஆழமா பதிஞ்சதுனால யாருக்கும் பாதுக்காப்பு இல்லைன்னு ஆயிடுச்சு!

***************
*******************


1988 இல் பின்லேடன் தொடர்ச்சியான பல கூட்டங்களை பெஷாவரிலிருந்த  தனது வீடுகளில் ஒன்றில் நடத்தினார். அந்த சந்திப்பின் அதிகாரப்பூர்வ குறிப்புகள் கிடைத்துள்ளன. ஜவாஹிரியையும் அவருடைய எகிப்திய ஆதரவாளர்களையும் பாராட்டிய பின்னர், ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதை அந்த குறிப்புகள் விவரிக்கின்றன.



************



அல்கொய்தாவின் பணிகள், 1988 செப்டம்பர் மாதம், 10 ந் தேதி துவங்கியது. அதனுடைய லட்சியம் கடவுளுடைய கட்டளைப்படி, அவருடைய மதத்தை வெற்றிகரமாக்குவதற்காக உயிர் வாழ்வது.



********************



ஜவாஹிரி இதுவரை அல்கொய்தாவில் சேரவில்லை, என்றாலும்  பின்லேட்ன் மீதான அவருடைய தாக்கம் மிகவும் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறது.



********************



அந்த தக்பீர் ( takfir ) என்ற கோட்பாடு, ஆழ்ந்த சமயப்பற்றோடு இருந்த, ஒரு சாதாரண இளம் இஸ்லாமிய மக்களை கூட்டம் கூட்டமா படுகொலை செய்யும் ஒரு கொலைகாரனா மாத்திருக்கு!



****************

ஒசாமா........
Right-click here to download pictures. To help protect your privacy, Outlook prevented automatic download of this picture from the Internet.

“”எனக்கும், உங்களுக்கும் ஜிகாத்தை பின்பற்றக் கூடிய வகையில ஆண்டவர் உதவி செய்வாருங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு! இது தான் நாம செய்யணும்னு கடவுள் விரும்பறாரு! அதாவது இந்த மதத்தை வெற்றியடைய செய்யணும்!””
**************************


...நன்றி; தமிழ் டிஸ்கவரித் தொலைக்காட்சி...03.05.2011-ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்


மதங்களை ஒழித்து, மனிதத்தை காப்போம்!

Wednesday, 11 May 2011

ஒசாமா முதல் திரைப்படம்...பகுதி-2


(ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்)

..............முழுமையா நாசப்படுத்தியிருக்கும்னு விளக்கம் கொடுத்தாரு!


ஒரு சமூகம் வெளிப்பார்வைக்கு இஸ்லாமிய சமூகம் மாதிரி இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு புறமத சமுதாயமா வகைப்படுத்தற மாதிரிதான் இன்னமும் இருக்கமுடியும்னு இறுதியா சொன்னாரு! அதாவது அவர் இது மூலமா விளக்கமா புரியவைச்சது என்னென்னா? இந்த சமூகம் இஸ்லாமிய கோட்பாடுகள் படி காட்டிக்கிட்டாலும் அது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரா நடந்துக்கலாம் என்கிறதை தான்.

இந்த முறைகேட்டையும், புறம்பான நடத்தையையும் மாற்றியமைக்க குதூப்புக்கு தென்பட்ட ஓரே வழி, மானூடச் சட்டங்களால் உருவாக்கப்பட்டதற்கு பதிலாக, கடவுளால் இயற்றப்பட்ட சட்டங்களை கொண்ட ஒரு இஸ்லாமிய குடியரசை நிறுவதுதான். எகிப்தின் புதிய மதச்சார்பற்ற ஆட்சியாளர்களுடனும், குத்தூப்பும் அவருடைய  சக இஸ்லாமிய மதவாதிகளும் தாங்கள் முரண்பட்டுகொண்டிருந்ததை வெளிப்படுத்தினர்.

மேற்கத்திய நாடுகளான உறவாலும் அதன் முன்னால் அரசர் பரூக் நாடுகடத்தப்பட்டது இன்னமும் தீர்க்கப்படாத கேள்வியாகவே உள்ளது.

1952 இல் ஒரு ராணுவ அதிகாரிகள் கூட்டம் எகிப்தின் ஆட்சியை கைப்பற்றியது. எகிப்தின் புதிய இரும்பு மனிதராக இருந்தவர் கேமல் அப்துல் நாசர் (Gamal Abdel Nasser Hussein). ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும், எகிப்தும் மதச்சார்பற்ற, தேசிய மற்றும் சோசலிச நாடுகளாக இருக்கவேண்டுமென்பது அவருடைய லட்சியமாக இருந்தது. அதாவது மெக்காவைவிட அவருடைய நோக்கு மாஸ்கோ மீது அதிகமாகப் பதிந்தது. தோல்வியில் முடிந்த ஒரு கொலை முயற்சியானது, இஸ்லாமிய சகோதரர்களை ஆயிரக்கணக்கில் வளைத்து கைது செய்ய நாசருக்கு போதுமான காரணமாக அமைந்தது. ஆறு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பலருக்கு நீண்டகால கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவராக சையத் குத்தூப்பும் இருந்தார். இன்று அந்த இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு தலைமை தாங்கி நடத்துபவர் அன்று குத்தூப்புடன் சிறையில் இருந்தார்.

அவரல் தன்னோட சகோதரர் கடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதைப் பார்த்தார். மிக பலசாலியான மனிதனால கூட அந்த மாதிரி சித்தரவதையை தாங்க முடியாது.

நான் கைகால்களில விலங்குகளோட இருந்தேன். என் உடலில புழுக்கள் என் தசைகளை சாப்பிடுவதை பார்க்கமுடிஞ்சது. ஆனா அசையக்கூட முடியாது,

அவர் கூட சிறையில கூட்டமா இஸ்லாமிய சகோதரர்கள் இருந்தாங்க. அவங்க எல்லோரும் இதை எதிர்க்க ஆசைப்பட்டாங்க. ஆனா சிறை அதிகாரிகள் கையால சிறைக்கதவுகளை திறந்து விட்டு அவங்க எல்லோரையும் சுட்டுத்தள்ளினாங்க.. குத்தூப் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இந்தா மாதிரியான காரியத்தை, ஒரு சக இஸ்லாமியனுக்கு செய்யறவ, ஒரு உண்மையான இஸ்லாமியனா இருப்பானா? ன்னு தனக்குத்தானே கேட்டுக்கிட்டாரு!. அவங்க எல்லோரும் முஸ்லிம்கள் இல்லைன்னு முடிவு கட்டுனாரு.!. மனசுக்குள்ளே அவங்களை மதத்தை விட்டு தள்ளிவைச்சாரு!.

இந்த அனுபவம் அவரை சாலைகளில் அடையாள வாசகங்களை எழுத வைத்தது. மிகச்சுருக்கமாக, எளிமையாக, துல்லியமாக சொல்வதென்றால் அதை இஸ்லாமிய வாதிகளின் புரட்சி என்று கூறலாம்.

எங்களால ஜகல்லியா சமுதாயத்தோட சமாதானமா போகமுடியாது. அதனால் எங்களால எந்த விசுவாசமும் காட்டமுடியாது. இஸ்லாமிய ஜிகாத் மானிட இனத்தை இன்னொரு மனிதனுக்கு அடிமையாயிருக்கறதிலிருந்து விடுவிக்கறதால, அது ஆண்டவருக்கு செய்யற தொண்டாயிடுது.


இனைறய அல்கொய்தாவின் துணைத்தலைவராக இருக்கும் நபருக்கு, குத்தூப்பின் வாழ்க்கையும், கொள்கைகளும் மிகப் பலமான பாதிப்பை உருவாக்கியது.

அய்மன் அல் ஜவாஹிரி, 1951 ஆம் ஆண்டு கெய்ரோவில் பிறந்தார். ஜவாஹிரி ஒரளவிற்கு வசதி வாய்ப்புகள் நிறைந்த மனிதர்கள் வசிக்கக்கூடிய புறநகர்ப் பகுதியான மாடியில் (Maadi-Cairo sub urban place), கல்வியறிவு நிறைந்த மத்தியத்தரக் குடும்பத்தில் வளர்ந்தார். குத்தூப்பின் வழக்கறிஞராக இருந்த மவுஸ் அசாம் (Mahfouz Azzam) தான் ஜவாஹிரியின் தாய்மாமன்.

அய்மன் (ஜவாஹிரி) ரொம்ப அமைதியானவர். அதோட சில நண்பர்கள் மட்டும் தான் அவருக்கு இருந்தாங்க! ஆனா நிறைய படிப்பாரு! அவரு உண்மையிலேயே பெரிய அறிவாளி! அவரோட சிறு வயசிலேயே சையத் குத்தூப்போடயும் மத்தவங்களோடயும் சேர்ந்து மத அரசியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பார். அவருக்கு எல்லா விஷயங்களிலேயும் ஆர்வம் ரொம்ப அதிகம்.


சையத் குத்தூப் ஒரு குடும்ப நண்பராக இருந்ததுடன், அவர் மீது நடந்த வழக்கும், கிடைத்த தண்டனையும், வாலிப வயதில் இருந்த அய்மன் அல் ஜவாஹிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கின.

1965 இல் எகிப்திய அதிகாரிகள் குத்தூப்பை மீண்டும் கைது செய்தனர்.


நான் அந்த வழக்கு விசாரணை குறிப்புகளை படிச்சேன்! இந்த மனிதருக்கு தனக்கு மரணதண்டனை கண்டிப்பா விதிக்கப்படும்ணு நிச்சயமா தெரிஞ்சிருக்கு! நாசர் அரசு அவரை மறுபடியும் கைது செஞ்சி விசாரணைக்குட்படுத்தியதே தன்னைப் படுகொலை செய்யத்தான் என்பதை தெரிஞ்சிக்கிட்டாரு!


நாசரிலிருந்து கீழ்மட்டம் வரை குத்தூப் மரண தண்டனையை எதிர்த்து முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.


தன்னோட கொள்கைகளும் கோட்பாடுகளும், தான் உயிரோட இருக்கறதை விட இறந்தாத்தான், அதிக பாதிப்பை ஏற்படுத்தும்னு, குத்தூப் பதில் கொடுத்தாரு!


தளபதி போர்ட் அலார்ம் அந்த மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தார்.


அவர் ரொம்ப சத்தமா பேசுவாரு! கடவுளோட தீர்ப்பைத் தவிர மத்த தீர்ப்பை எல்லாம் பொய்யானது! என சொல்லிகிட்டேயிருந்தார். அவரை பின்பற்றி நடக்கிறவங்க, கடவுளோட தீர்ப்பை மட்டும் தான் நம்பியாகணும்ன சொல்லுவாரு!


குத்தூப்பின் மரண தண்டனை சிறைவேற்றப்பட்டது. அய்மன் அல் ஜவாஹிரிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த சம்பவம் தான் ஜிகாத்திய இயக்கத்தை பற்றவைத்த ஒரு தீப்பொறியாக அமைந்ததாக அவர் விவரித்தார்.


இந்த இளைஞன் தன்னோட பதினாறாவது வயசில, இந்த இஸ்லாமிய இயக்கத்துல சேர்ந்தான். சையத் குத்தூப்புக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதுக்கப்புறம் மக்கள், தங்களுக்கு ஏதாவது கெடுதல் நடக்குமோன்னு பயந்து அந்த இயக்கத்தை விட்டு ஒடிக்கிட்டிருந்தப்போ! இவன் போய் அதில சேர்ந்தான். அவன் அந்த பாதிப்பை விரும்பி அதில சேர்ந்தான். இதிலிருந்து அய்மன் அல் ஜவாஹிரியோட மனதிடம் எப்படியிருந்ததுன்னு நமக்கு காட்டுது.


தான் எழுதிய கட்டுரைகளில் ஜவாஹிரி இந்நாட்களில் சையத் குத்தூப்பின் கவிதை ஒன்றிலிருந்து கோடிட்டு காட்டயிருக்கிறார்.

“”சகோதரா! உனக்கெதிரே நின்றிருக்கும் பாதை!, ரத்தத்தால் நனைந்துள்ளது!. உனது தலையை இடதோ! அல்லது வலதோ! திருப்பாது நேரே சொர்க்கத்தை மட்டும் நோக்கி பார்ப்பாய்””


1967 இல் இஸ்ரேல் தனது எல்லைகளில் நிறைந்திருந்த மூன்று அரேபிய ராணுவங்களின் மீது ஒரு எதிர்பாராத கடுமையான தாக்குதலை நிகழ்த்தியது.


1967 ல நடந்த அந்த ஆறு நாள் தாக்குதல்ல, ஏழாவது நாள், நவீன கால அரேபியர்களால முகம்மது நபிக்கப்புறம் வந்த தலைவர்கள்ல, அடுத்த சக்தி வாய்ந்த, மகத்தான அரேபியரா இருக்கலாம்னு கருதப்பட்ட நாசருடைய செல்வாக்கு முறியடிக்கப்பட்டது. அரேபிய தேசிய வாதம் அவரோட சேர்ந்து அழிஞ்சு போச்சு! இது அரேபிய தேசியவாதத்துக்கு எதிரா நடந்த வாட்டர்லூ யுத்தம்!


இந்தளவுக்கான மாபெரும் தோல்வியால், விழிப்படைந்த இஸ்லாமிய புத்துணர்ச்சியானது, முஸ்லிம் உலகத்தையே அதிர வைத்தது. அதற்கான அரேபிய வார்த்தையான சாஹவாவுக்கு (Sahawa) "விழித்தெழுதல்" என்று அர்த்தம்.

நாசர் இறந்த பொழுது அவரோடு சேர்ந்து தேசியவாத கனவும் அழிந்தது. ஜவாஹிரி, அதை இது போல வர்ணிக்கிறார்.


1967 இல் நடந்த முறியடிப்புக்கு பிறகு, அதன் நேரடியான பாதிப்பினால் பலமக்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் துவக்க கட்ட அடையாளத்திற்குத் திரும்பினார்கள். அதாவது நாகரிகமடைந்த இஸ்லாமிய நாட்டின் அங்கத்தினர்களாக மாறினார்கள்.


அந்த காலக்கட்டத்தில் தான் அப்துல்லா ஸ்லைப்பருக்கு ஜவாஹிரியின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அறிந்து கொள்ள நேர்ந்தது.


அசாம் குடும்பம் ரொம்ப பிரபலமான குடும்பம், உண்மை என்னென்னா? நான் இஸ்லாமியனா மதம் மாறினவன். அவங்க ரொம்ப பாராட்டினாங்க! அதனால அவங்க மூலமா, நான் அய்மனை சந்திச்சேன். அவர் அப்பத்தான் திருமணம் பண்ணிகிட்டு, ஒரு மருத்துவ படிப்பையும் , மருத்துவக்கல்வி நிலையத்திலேயும் முடிக்கிற நிலைமையில் இருந்தாரு. அவரு மட்டும் தான் நான் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சக்கனும்கிறதுக்காக, உலகத்துக்குள்ளே ஒரு சுற்றுப்பயணாமா கூட்டிட்டுப் போனாரு.

நான் இளைஞர்கள் போஸ்டர்கள் தயார் பன்றதையும், ஹிஜாப் (hijab-muslim women traditional dress) எனப்படும் பெண்கள் பர்தாக்கள் தயாரிக்கறதையும், நான் பார்த்தேன். அங்க முழு நேரமும் செயல் விளக்கம் நடத்திகிட்டே இருந்தாங்க!


இஸ்லாமிய புத்துணர்ச்சி எல்லாப் பல்கலைக்கழகங்களையும் கூட அடைந்திருந்தது.


அவர் ஒரு தீவிரவாதின்னு நான், ரொம்ப நேரங்கழிச்சு உணர்ந்துகிட்டேன். பல்கலைக்கழக்ங்கள்ல பெருகிட்டு வந்த, இந்த இஸ்லாமியவாத மனோபாவத்துக்கு, அவர் ஒரு முக்கிய காரணகர்த்தான்னு நினைச்சேன்.

ஆனா ஒரு திடீர் புரட்சியில, ஆட்சியையே கைப்பற்றக்கூடிய அளவுக்கு, ஒரு ரகசிய இயக்கத்தை அவர் சேர்ந்தவர்னு, அப்ப நினைச்சு கூடப் பார்க்கலை.

ஜவாஹிரி தன் உண்மை நோக்கத்தை வெளியில தெரியாது, சாமர்த்தியமாக மறைத்து வந்தார். மருத்துவக் கல்லூரியில் நல்ல மாணவனாக, தாடியற்ற நவீன இளைஞனாக இருந்தார். ஆனால் நாசருக்கு, அடுத்த ஆட்சியாளருக்கு எதிரான கொலை சதியில், அவர் ராணுவ அதிகாரிகளை ரகசியமாக சேர்க்கத்துவங்கினார்.

டேவிட் முகாமில் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தில் அன்வர் சதாத் கையெழுத்திட்டார். அதனால் அவர் எகிப்துக்கும், இஸ்லாமுக்கும் துரோகமிழைத்தவராக, ஜவாஹிரி கருதினார்.


ஜவாஹிரி ஒரு புரட்சியாளர் என்கிறதோட இந்த அரசை, ஒரு சட்டவிரோதமானதுன்னு நம்பினார். அவரோட புட்சிகரமான கொள்கைகள் அவரோடப் பதினாறாவது வயசுல ஆரம்பிச்சது. இந்த ஆட்சியமைப்பைத் தூக்கியெறிய, ஆயுதப் போராட்டம், இல்லை ராணுவ அமைப்புதான் தேவைங்கற எண்ணம், அவரை ஆட்டி வைச்சது.


இஸ்லாமியத் தீவிரவாதிகளால வளர்ந்து வரும் அச்சுறுத்தலால் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக, அரசாங்கம் வழக்கமாக சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்யத் துவங்கியது. 1981 இல் ஜவாஹிரி ஏற்கனவேத் திட்டமிட்டு சேர்த்திருந்த, ராணுவத்திலிருந்த அதே பயங்கரவாதக் குழுவின் பகுதி, தாங்களும் பிடிபடுவதற்கு முன்பாக ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.


ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அன்வர் சதாத் (Muhammad Anwar Al Sadat ), ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதும் வழக்கம். அந்த நிகழ்ச்சிதிட்டமிட்டபடி வழக்கம்போல  நடைபெற்றது. ஆனால் அணிவகுப்பு மரியாதையேற்கும் மேடைக்கு முன்பாக ராணுவ வாகனங்களில் ஒன்று திடீரென்று நின்றபோது, பத்திரிகையாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் சிதறி ஒடினார்கள். நான்கு வீரர்கள் அந்த மேடையை நோக்கி தோட்டாக்களை மழையாக பொழிந்தார்கள். சதாத் இறந்து வீழ்ந்தவுடன் கொலைகாரர்களில் ஒருவன், ““நான் பேரோவைக் கொன்று விட்டேன்”” என்று உரத்தக்குரலில் கூவினான்.


ஜவாஹிரியும் அவரோட குழுக்களும் சையத் குத்தூப்போட கருத்துகளை படிச்சதால, அவங்க அந்த படுகொலையை, அவங்க புறிஞ்சிகிட்டபடி, இன்னொரு முஸ்லீமை மதநீக்கம் செய்யறதை ஞாயப்படுத்துனாங்க! அந்த தர்க்கத்துக்கு முதல்ல பலியானவரு அன்வர் சதாத். அவங்க அன்வர் சதாத் படுகொலையை ஞாயப்படுத்துனாங்க!. ஏன்னா? இனிமேலும் அவர் ஒரு இஸ்லாமியர் இல்லைன்னு அவங்க முடிவுப் பண்ணிட்டாங்க! அதனால அவர் வாழத்தகுதியில்லாதவர்ன்னும் அறிவிச்சாங்க!


காலத்தாமதமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மதவாதிகளில் அய்மன் அல் ஜவாஹிரியும் ஒருவர். ஜவாஹிரிக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் மன்டாசாத் அல் சையாத்.


அவங்க போலிஸ் உபயோகிக்கற தடி மாதிரி ஒன்னை உபயோகிச்சி எங்களுக்கு எலிக்டிரிக் ஷாக் கொடுத்தாங்க! எங்களோட ஈறுகள்ல, எங்க உதடுகள்ல, எங்க மார்புல, எங்க பிறப்புறுப்புகள் எல்லாத்திலேயும் அதிர்ச்சி கொடுத்தாங்க!  அவங்க எங்களை ஒரு நாற்காலி மேல நிக்கவைச்சி, அப்புறம் எங்க கைகளை பின்பக்கமா வைச்சி கட்டி அதை ஒரு கதவு முனையில இழுத்து கட்டிட்டாங்க, அப்புறம் அந்த நாற்காலியை நகர்த்திட்டாங்க!. உங்க கைகளோட ஆதாரத்துல, நீங்க அந்த கதவுல இருந்து தொங்கிகிட்டு இருப்பீங்க! அது கைகள்ல, ஒரு தற்காலிக வாதத்தை உருவாக்கிடும். சிலபேர் ஆயுள் முழுக்க வாதத்தால செயலிழந்து போயிட்டாங்க!.


அந்த உடல் ரீதியான சித்திரவதை மிகக்கொடுமையாக இருந்தாலும், மனரீதியாக இழிவுப்படுத்தி செய்த கொடுமைகள் தான் அதைவிட கொடுமையாக இருந்தன. ஜவாஹிரி மனம் பேதலித்து எல்லாப் பெயர்களையும் கூறிவிட்டார். அந்தச் சித்திரவதைகளை அனுபவித்தது ஜவாஹிரியின் மனதில் ஆறாத பழிவாங்கும் தாகத்தை தூண்டிவிட்டது. அவருடைய வழக்கு விசாரணையின்போது மிக வரம்பு மீறிய முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டார்.
********************

ஜவாஹிரி....
நாங்க எங்க மதத்தை நம்பறோம் அதோட கொள்கைகளையும், அதை பின்பற்றி நடக்கிறதையும், நமிபிக்கையோடு செஞ்சு, ஒரு இஸ்லாமிய நாட்டையும், ஒரு இஸ்லாமிய சமூகத்தையும் ஸ்தாபிக்க எங்களால முடிஞ்சதை செஞ்சிட்டு வர்றோம்””

லாஹி...லாஹ...இல்ல்லா....லாஹி...லாஹ...இல்ல்லா

  எங்க மதத்துமேல எங்களுக்கு நம்பிக்கையிருக்கறதுக்காக நாங்க வருத்தப்படல, அதுமட்டுமில்லாம நாங்க, பல தியாகங்கள் பண்ணியிருக்கோம். இஸ்லாமுக்கு வெற்றி கிடைக்கிற வரைக்கும், இன்னும் பலத் தியாகங்கள் பண்ணத் தயாரா இருக்கோம்!

லாஹி...லாஹ...இல்ல்லா....லாஹி...லாஹ...இல்ல்லா


கிட்டத்தட்ட மூனுலிருந்து நாலு வருஷங்கள் வரைக்கும், ஜவாஹிரி சிறையில இருந்திருக்கார்னு நான் நினைக்கிறேன்.
அப்ப அவர் அனுபவிச்ச சித்திரவதைகளால, அவரோட மனசு உடைஞ்சு போனதோட, அதனால அவர் வாழ்க்கையே அந்த கணத்திலேயிருந்து கடுமையான மாற்றமடைஞ்சது. அவர் அந்த நாட்டை மன்னிக்கவோ? ஏன்? தன்னையேக் கூட மன்னிச்சிக்கலைன்னு நான் நினைக்கிறேன்.


எகிப்திய அரசாங்கம், இஸ்லாமிய சகோதரத்துவத்தை ஒட்டுமொத்தமாக நசுக்கிவிட முயற்சிகள் செய்தது. ஆனால் அந்த கொள்கைகளை அழிக்கமுடியவில்லை. இந்த செயலானது சவுதி அரேபியாவையும், இளம் ஒசாமா பின்லேடனையும் சென்றடைந்தது.



எகிப்து அரசாங்கம் தொடர்ந்த, இஸ்லாமிய சகோதரத்துவ அங்கத்தினர்கள் மேல் நடந்த அடக்குமுறைகளால் பலர் தலைமறைவானார்கள். இப்படி நாட்டை விட்டுவந்த பல முஸ்லிம் சகோதரர்கள், பின்லேடன் மாணவராக ஜெட்டா பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது, கல்வி கற்பிக்க வந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் சையத் குத்தூப்பின் சகோதரரான முகம்மத் குத்தூப்.


சையத் குத்தூப்பின் சகோதரரான முகம்மத் குத்தூப் சிறையிலிருந்து வெளியே வந்ததும், நேரா சவுதி அரேபியா வந்து சேர்ந்தாரு! அவரு மத்தவங்களை கவரக்கூடியவரு! ஒரு எழுத்தாளராவும், தத்துவவாதியாவும், அவரோட கொள்கைகள்ல தன்னோட சகோதரர்களுக்கு அவர் சமமாக இருந்தாரு! ஜெட்டாவில அவர் விரிவுரைகள் கொடுப்பாரு! அதை பின் லேடன் போய் ஆர்வமா கேப்பாரு!


முஸ்லிம்கள் ரொம்ப ஆதிக்கத்தோட இருக்கணும்னும், தனித்துவத்தோட இருக்கணும்னும் முகம்மத் குத்தூப் அறிவித்து அழைப்பு விடுப்பாரு!.....

************
...தொடரும்..பகுதி-3
...நன்றி; தமிழ் டிஸ்கவரித் தொலைக்காட்சி...03.05.2011-ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்

Tuesday, 10 May 2011

ஒசாமா முதல் திரைப்படம்...பகுதி-1



(ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்) 

இது தான் ஒசாமா பின்லேடனுடைய முதல் திரைப்படம். 1989 இல் எடுக்கப்பட்டது. அதில் அவர் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து தான் செய்யும் போரில் கலந்து கொள்ள இஸ்லாமியரை வேண்டிக்கொள்கிறார். ஆக்கிரமிப்பை எதிர்த்த இந்த இளம் தலைவனை உலகிலேயே அதிகமாகத் தேடப்படும் பயங்கரவாதியாக எது மாற்றியது? இன்று தனது பிரதிநிதியாக இருக்கும் அய்மன் அல் ஜவாஹிரியின் தூண்டுதலுக்கு எப்படி அவர் ஆளாக்கப்பட்டார்?

இந்த மனிதர்கள் எப்படி? சாதாரண யுத்தமாக இருந்த ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டை மேற்கத்திய உலகுக்கு எதிரான பயங்கரவாத யுத்தமாக மாற்றினார்கள்? அத்துடன் தாங்கள் ஜிகாத் என்று கூறிக்கொள்ளும் ஒரு மரண எண்ணிக்கையை ஞாயப்படுத்த அமைதியையும், மகிமையும் வாய்ந்த இஸ்லாத்தை அல்கொய்தாவால் எப்படி? பயன்படுத்திக்கொள்ள முடிந்தது?

1998 இன் துவக்கத்தில் ஒசாமா பின்லேடன் தனது செயற்கைகோள் தொலைபேசியிலிருந்து தொடர்ச்சியாக பலமுறைத் தொட,ர்பு கொண்டார். அந்த அழைப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வடக்கு லண்டனில் ஒரு புறநகர் பகுதியில் இருந்த வீதிக்கு சென்றிருப்பதை, அமெரிக்க சமிக்ஞை உளவுத்துறை கண்டுபிடித்து பதிவு செய்திருக்கிறது. அது ஒரு காலத்தின் அல்கொய்தாவின் லண்டன் பிரிவின் தலைவராக இருந்தவரின் இருப்பிடமாக இருந்துள்ளது.

1998 பிப்ரவரி 22 ந் தேதி மேற்கு லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு அரபு மொழி தினசரியான அல்கொர்ட்ஸ்க்கு (AL-Quads-AL Arabi) ஒரு செய்தியை பேக்ஸ் மூலம் அனுப்பினார். அதன் ஆசிரியர் ஒரு காலத்தில் ஒசாமா பின்லேடனை ஆப்கானிஸ்தானில் பேட்டி கண்டிருக்கிறார். ஆனால் அமெரிக்கர்களையும் யூதர்களையும் கொல்வதாக விடப்பட்ட அச்சுறுத்தல் செய்தி அடங்கிய பேக்சை எதிர்கொள்ள எதுவும் அவரை தயார் செய்திருக்கவில்லை.


""அமெரிக்கர்களையோ, அவர்களின் கூட்டணியில் இருப்பவர்களையோ, ராணுவத்தினரோ அல்லது பொது மக்களோ போரிடுவதும் கொல்வதும் உலகின் எந்தவொரு பகுதியில் இருக்கும் ஒரு இஸ்லாமியரின் கடமை.""

அது அப்படி திகில் அடிக்கவைச்சது. ரொம்ப ரொம்ப பயங்கரமான லெட்டர் அது. அப்பாவி மக்களை எந்தவொரு நியாயுமுமில்லாம கொல்றதுங்கிறது, ரொம்ப கொடுமை. இது இஸ்லாமோட கொள்கை இல்லை. அப்படி செய்யறது இஸ்லாத்துக்கு புறம்பானது. ஆனா அது ரொம்ப முக்கயமானதுங்கறதுனாலே, நான் அதை வெளியிட்டேன்.
 


மேற்கத்திய நாடுகள் மீதான அல்கொய்தாவின் போர் அறிவிப்பானது, ஆங்கிலேய பத்திரிகையுலகில் மிக்ச்சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியது. ஒசாமா பின்லேடன் என்னும் இந்த அற்ப மனிதன் யார்? என்கிற அலட்சியம்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு உள்ளூர் பழங்குடியினர் போல வேடமணிந்து ஏ பி சி (ABC) செய்தி நிருபரான ஜான் மில்லர் இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிப்பதற்கான வழியில் சென்று கொண்டிருந்தார். அவரும் கனடாவைச் சேர்ந்த அவருடைய கேமரா மேனும் அல்கொய்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் ஊடுருவிச்  சென்றிருந்தனர்.

ஆனால் ஒவ்வொரு சாலைத் தடையிருக்கும் இடத்திலும், காவலாளிகள் கூடுதலான விரோத பாவத்துடனும், சந்தேகத்துடனும், இருக்கத் துவங்கினார்கள்.


அந்த காலத்துல அல்கொய்தா உலகளவில ஆரம்ப நிலையில இருந்த ஒரு பயங்கரவாத இயக்கமா இருந்தாலும், மத்த அதிகார மையங்கள் மாதிரி தான் செயல்பட்டது. எப்படின்னா? எங்க இரண்டு டிரைவரும், அத்தாட்சி காகிதங்களை கொண்டுவர மறந்துட்டதுனால, எங்களை எல்லா இடத்திலேயும் நிறுத்தி விசாரிச்சாங்க.


போகும்போது ஆட்கள் புதர்கள் பின்னாடி இருந்து ஒடி வந்தாங்க. 
அவங்க கைகள்ல கிரானைட் லாஞ்சர்களும்,  ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளும் இருந்தது. அவங்க வண்டியை  நோக்கி ஒடி வந்து, வண்டி கதவை இழுத்து திறப்பாங்க. அது துரதிருஷடவசமா ஏம்பக்கமா இருந்தது. என் கண்ல டார்ச்சையோ, இல்லை பிளாஷ் லைட்டையோ அடிப்பாங்க. ஒரு துப்பாக்கி என் தலைல பதியும், ஒரு துப்பாக்கி என் விலால பதியும்.


எங்க இரண்டு பக்கத்திலே இருந்தும் எச்சரிக்கைக்காக அவங்க சுட்டாங்க. இருட்டல துப்பாக்கி வெடிக்கும் போது வர்ர வெளிச்சமும், அந்த துப்பாக்கி சுடும்பொழுது  மேக்சினிலிருந்து வெளி வருகின்ற முப்பது ரவுண்டு தோட்டாக்களின் சத்தமும் கேட்டது. அப்ப எங்கம்மா சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. யாருக்காக நீ போய் சாகணும்?. யார்? அந்த ஒசாமாங்கிறதுதான்?

நடுராத்திரில அந்த மலைமேல பெட்ரோல்ல இயங்குற ஜெனரேட்டர் மூலமா அதீத பிராகாசமான விளக்குகளை எரிய விட்டிருந்ததோட, அந்த இடத்துல ஒரு பெருங்கூட்டமே கூடியிருந்தது. எல்லாருமே முழுக்க முழுக்க ஆயுதங்களோட இருந்தாங்க.
*********
அது மூன்றாம் உலகயுத்தம் துவங்கிட்ட மாதிரி ஒரே ரகளையா இருந்தது. அதோட ஒசாமா அங்கு வந்து சேர்ந்தாச்சுன்னு தெரிஞ்சது. அப்புறம் திடீர்னு நடந்து வந்து கண் முன்னாலே நின்னாரு!
***********
நான தயாரா வச்சிருந்த பதினாறு கேள்விகளோட உக்கார்ந்திருந்தேன்! இது ராணுவ வீரர்கள் யுத்த களத்தில சண்டை போடற மாதிரி இல்லையே! இந்தப் போர்ல அப்பாவிக் குழுந்தைகளும் பெண்களும் தானே பாதிக்கப்பட்டிருக்காங்க! கோழைகளால செயல் வடிவம் கொடுக்கப்படற இந்த பயங்கரவாதத்தை எப்படி? நீங்க போர்னு சொல்லமுடியுது?

அதுக்கு அவர் உங்களை மாதரி ஒரு அமெரிக்கர் கிட்டேயிருந்து, இந்த மாதிரி வினோதமான கேள்வி வருதே! ன்னாரு!

ஒசாமா....

“”ஹிரோஷிமாவையும் (Hiroshima), நாகசாகியையும் (Nagasaki) அழிச்சி இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது, உங்க நாடு இல்லையா! இந்த இடத்துல இருந்தவங்க யுத்தத்தில ஈடுபடாத அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் இல்லையா!
நாங்களும் நீங்க வகுத்த சட்டத்தை, அப்படியே கையிலெடுத்துகிட்டு, அதை உங்கமேல பிரயோகம் பண்ணிக் காட்டறோம். அவ்வளவு தான்.”” னாரு!


அதற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒசாமா பின்லேடன் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இந்த முதல் தாக்குதலை தொடுத்தார்.

கென்யாவிலும், தான்சான்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களுக்கு முன்பாக வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. அந்த வெடிகுண்டு விபத்து 1 சி.ஐ.ஏ உளவாளியையும், 11 அமெரிக்கப் பிரதிநிதிகளையும் கொன்றது. 5000 க்கும் மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் படுகாயமடைந்ததுடன், 234 பேர் கொல்லப்பட்டனர்.

பின்லேடன் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த இஸ்லாத்தை நெறிபிறழ்வாக பயன்படுத்துவதாக பெரும்பாலான இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.

ஜிகாத் என்பதற்கு நேரடியான அர்த்தம், கடும்முயற்சி அல்லது போராட்டம். ஆகவே இஸ்லாம் கூறுவதின்படி, ஜிகாத் என்பது பாவங்களையும் தூண்டுதல்களையும் எதிர்த்து நடத்தும் அமைதியான போராட்டம். ஆனால் வாட்கொண்டு நடத்தும் ஜிகாத்துகளும் உண்டு.

ஏசுவையும், புத்தரையும் போல் அல்லாது தீர்க்கதரிசி முகம்மது, ஒரு வீரரும், ஆட்சியாளருமாக இருந்திருக்கிறார். அவர் படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்று யுத்தங்களில் போரிட்டிருக்கிறார்.

முகம்மது நபி வரையறுத்த ஜிகாத், கிருஸ்தவ கோட்பாட்டின்படி சாதாரணமான யுத்தம் என்று கூறப்படுவதிலிருந்து, வேறுபட்டதல்ல.

ஒரு அமெரிக்க யூதர், அவர் எகிப்தில் வாழ்ந்த இஸ்லாம் மதத்தை தழுவியவர்.


""இஸ்லாமே, ஒரு யுத்த அடிப்படை சூழலிலே தான் பிறந்தது. சுய தற்காப்பிற்காக ஒருத்தர் போரிடலாம், அப்படிங்கறது தான் அந்த சமுதாயத்துக்கு நபிகள் நாயகம் வெளிப்படுத்திய உண்மை. ஆனா உங்க எதிரி அமைதியை நாடினா? அவரோட சமதானமா போகணும், ஏன்னா? ஆண்டவர் அதைத்தான் விரும்பறாரு! அதிலேயிருந்தும், நபிகளோட மத்த வாசகங்கள் மூலமாகவும், ஜெனிவா ஒப்பந்தத்தோட முதல் விதிகள் மாதிரியே இருக்கறதை, அதாவது பெண்களையும், குழந்தைகளையும் கொல்லக்கூடாதுன்னும், எதிரி சமாதானத்தை நாடுனா? அவனோட சமாதான ஒப்பந்தம் செஞ்சிக்கணும்கிறது தான் தெரியுது. இது தான் உண்மை.

மேலும் மக்கள் நடத்துற வழிபாட்டுத்தலங்களையும், தேவாலயங்களையும், யூத திருக்கோயில்களையும் நாம பாதுகாத்தாகணும்.

ஆனா பின்லேடன் பன்றது என்னென்னா? எல்லாத்தையும் தலைகீழாப் புரட்டி போடற வேலை தான்.""

1930 இல் ஏமனிலிருந்து சாதாரண கொத்தனார் ஒரு ஒட்டகப் பயண கூட்டத்தில் இணைந்து கொண்டார். வேலை தேடி அவர் சவுதி அரேபியா வழியாக, வடதிசையில் பயணித்து, செங்கடல் துறைமுகமான ஜெட்டாவிற்கு வந்தார். அது கிட்டதட்ட 1600 கி.மீ பயணம். அந்த தொலைவுக்கு அவர் நடந்தே பயணம் செய்திருக்கிறார். அவரது பெயர் முகம்மத் பின் லேடன். (Sheikh Mohammed bin Awad bin Laden)

கால ஓட்டத்தில் அவர் சவுதி மன்னர்களின் அபிமான ஒப்பந்தக்காரராகிவிட்டார். எண்ணெய் கண்டுபிடிப்பால் அந்த அரச குடும்பம் பெரும் பணக்காரர்களான அதே நேரத்தில், முகம்மத் பின் லேடனும் பெரும் பணக்காரர் ஆனார். அவருடைய கட்டுமான நிறுவனம் அந்த நாட்டிலேயே மிகப்பெரிய  நிறுவனமாகியது. எந்தளவு என்றால்? இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்காவிலிருக்கும் மகா மசூதியை புனரதுராணம் செய்யும் பணியை மேற்கொள்ளும் அளவிற்கு கௌரவம் அடைந்தது.

சவுதி தங்களது இஸ்லாமிய அடிப்படை வாதமாகிய வகாபிசத்தை பரப்புவதற்காக வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான மசூதிகளையும், மதக்கலவி கற்பிக்கும் பள்ளிகளையும் கட்ட பின்லேடன் குடும்பம் பெருமளவில் உதவிகள் புரிந்தது. 1967 இல் ஒரு விமான விபத்தில் காலமாவதற்கு முன் முகம்மத் பின் லேடன் 22 பெண்களை மணந்து 54 குழந்தைகளுக்குத் தந்தையாக விளங்கினார்.

அவர்களுடைய தந்தை இறந்த பொழுது 24 மகன்களில் ஒவ்வொருவரும் பல கோடிகளுக்கு அதிபதிகளாக விளங்கினார்கள். குடும்பத்தோடு விடுமுறையை கழிக்க சுவிடனுக்கு வந்திருக்கும் அந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் அதிகம் ஊறியவர்கள். ஆனால் ஒரு தற்காலிக மனைவிக்கு முகம்மதுவின் 17 வது மகனாக பிறந்த ஒசாமா அந்த புகைப்பட்த்தில் காணப்படாதது ஒன்றும் தற்செயலாக நடந்தது அல்ல.


ஒசாமா ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவரு! அவர் தன்னை போட்டோ எடுக்கறதை விரும்பினதே இல்லை. எழுபதுகளோடத் தொடக்கத்துல அவரு எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு வந்தாரு! எனக்கு அவர ரொம்ப நல்லாத் தெரியும்.


ஒசாமா ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்டவரு! அவர் அப்படித்தான் வளர்ந்தாரு! தன்னுடைய வாழ்க்கையில் ரொம்ப ஆரம்ப கட்டத்திலேயே அவரு இந்த மாதிரியான வாழ்க்கையைத் தொடங்கிட்டாரு!
*******
ஒரு நாளைக்கு 5 தடவைக்கு மசூதிக்கு போகணும்னு வற்புறுத்துவாரு! எங்கள்ல பெரும்பானவங்க இரண்டு  அல்லது மூணு தடவைதான் தொழுகைக்கு போவோம்.

1976 இல் அவர் அப்துல்லா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயில்வதற்காக பதிவு செய்து கொண்டார். அரசியல் ஒசாமா பின்லேடனின் வாழ்க்கையில் இன்னமும் தனது பங்கை துவங்கவில்லை. ஆனால் பல்கலைக்கழகம் அவரை இஸ்லாமிய சகோதர கோட்பாடுகள் கொண்டவர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.

ஒசாமா பின்லேடனிடம் தாக்கத்தை ஏற்படுத்திய, எகிப்திய இஸ்லாமிய சகோதரத்துவத்தின் கோட்பாடுகள் கெய்ரோவில் உருவாயின. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருந்த இந்த பல கலாச்சாரம் நிறைந்த நகரம், எகிப்தின் தலைநகரமாக இருந்ததோடு, அரேபிய உலகின் அறிவு மையமாகவும் திகழ்ந்தது. சவுதி அடிப்படை வாதத்தால் தாக்கமடைந்த இந்த சகோதரத்துவக் கோட்பாடு, காலணி ஆதிக்கம், வறுமை மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஒரு இயக்கமாக உருப்பெற்றது.

இந்த இயக்கம் ஒரு பேரியக்கமாக மாற்றமடைந்து, அது பாரம்பரிய இஸ்லாத்தை, இஸ்லாமிசம் என்று அறியப்படும் ஒரு அரசியல் கோட்பாடாக உருமாற்றம் அடையச்செய்து விட்டது.


இப்ப இங்கு இருக்கிற நிறைய இஸ்லாமியர்கள், இஸ்லாம் என்ற வார்த்தையை புறக்கணிக்கத்தான் விரும்புறாங்க! ஏன்னா? அது அவங்க எதிரிகளால பயன்படுத்தப்படுகிற வார்த்தையா எடுத்துக்கறாங்க! அது ஒரு சரியான வார்த்தை தான்! ஏன்னா? நீங்க அது மூலமா இஸ்லாத்தை பத்தி பேசறதுக்குப் பதிலா, வேற ஒன்னை பத்தி பேச்ப்போறீங்கறது தெளிவாயிடுது!.

ஆனா இந்த இஸ்லாம் மதத்தோட ஆன்மீக நிறைகள் இழந்து சூனியமாகி காலியாயிடுச்சி! அந்த ஆன்மீக நிறைகள் இருந்த இடத்துல, ஒரு ஆய்வு விளக்கம் புகுந்துடுச்சு! ஒரு புரட்சிகரமான போர்க்கத்திய ஆய்வு விளக்கத் தத்துவம் மார்க்சிய வாதிகள், லெனினிய வாதிகளை எப்படி விவரிப்பாங்களோ? சோசலிச வாதிகளை அல்லது எதேச்சதிகார வாதிகளை அது போன்ற வேறு எதையும் எப்படி வர்ணிப்பாங்களோ? அதே மாதிரி இஸ்லாமிய வாதிகளை வர்ணிக்கிறாங்க!


இஸ்லாமிய சகோதரத்துவம், இஸ்லாமிய அடிப்படை வாதத்துடனும், இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தத்துவங்களுடனும் சேர்ந்து இரண்டற கலந்து விட்டது. இஸ்லாமிய சகோதரத்தில் இருந்த முன்னணி அறிவுத்திறத்தோடு, தனது சொந்த சிந்தனைகளையும் கலந்து, அல்கொய்தாவுக்கு வடிவம் கொடுத்த ஒரு நபர் “”சையத் குத்தூப்”” (Sayyid Qutb)



அவரு! இஸ்லாமிய இயக்கத்தோட லெனினா?அப்படியும் இருக்கலாம். சையத் குத்தூப்போட பங்கு இல்லாம இன்னைய இஸ்லாமிய கோட்பாடுகளும், இஸ்லாமிய வாதிகளோட கருத்துக்களும், ஜிகாத்திய வாதியோட எண்ணங்களும் இப்ப இருக்கற மாதிரி இருந்திருக்குமா? என்பதை நம்மால நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது.


குத்தூப் எகிப்திய கல்வித்துறை அமைச்சகத்தில் ஒரு அதிகாரியாக பணியாற்றி வந்தார். சிறுகதைகள் நாவல்கள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எழுதுபவராகவும் இருந்தார். இஸ்ரேல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்கனவே அரேபிய மற்றும் இஸ்லாமிய மனப்பான்மையை அமெரிக்காவுக்கு எதிராக விஷமாக மாற்றியிருந்தன.


1940 களோட பிற்பகுதியில, பாலஸ்தீனத்துக்குள்ள யூதர்கள் குடியேறினதை வைச்சி மேற்கத்திய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான அபிப்பிராயத்துக்கு வந்திருக்கார்னு அவரோட மேலதிகாரிங்களுக்கு கடுமையான எச்சரிக்கையுணர்வு அதிகரிச்சது. அதனால இந்த பிரச்சினையிலேயிருந்து குணப்படுத்த அவரை அமெரிக்கா முழுக்க இருக்கிற கல்வி முறைகளை கத்துகிட்டு வரத்துக்காக அமெரிக்காவுக்கு அனுப்பிவைப்பது தான் அறிவுப்பூர்வமான வழின்னு அவங்க நினைச்சாங்க!


அவரு கடைசியா கொலரோடோவில (Colorado) இருக்கிற கிரிலேக்கு (City of Greeley) வந்து சேர்ந்தாரு! இந்த இரண்டு வருஷங்கள் அவரோட மூளையில மேற்கைப்பத்தி பதுக்கிவைக்கப்பட்டத் தகவல்கள் அவரோட படிப்படியான முன்னேற்றத்துல முக்கிய பங்கு வகிக்குது. அவரு 1948 இல அமெரிக்கா வந்தாரு ஆனா திரும்பி போகும் போது முதல்ல இருந்ததைவிட மேற்கத்திய நாடுகள் மேல அதிக விரோதத்தோட அம்ரிக்காவை விட்டுப்போனாரு!


மேற்கத்திய உலகின் தாக்கத்தால் முகம்மது நபி பிறப்பதற்கு முன்பு இருந்த உருவ வழிபாடுகளை கொண்ட ஜகல்லயா (ஜஹில்லியா-Jahiliyyah) என்ற புறமதத்தைச் சார்ந்த நிலைக்கு அரபு நாடுகள் தள்ளப்பட்டுவிட்டதென,  ஒரு தீர்மானமான நம்பிக்கையுடன் குத்தூப் எகிப்துக்குத் திரும்பினார்.
************ 
இஸ்லாமிய இலக்கியத்துல அந்த ஒரு வார்த்தைக்கு ஒரு பலமான அர்த்தம் இருக்கு, அதுக்கு மடமை இல்லைன்னா அகந்தை, அதாவது திமிர்னு ஒரு அர்த்தம் இருக்கு. புறமதத்தவர்களுக்கு இருக்கும் அகந்தை காரணமா அவங்க கடவுளைப் பத்தின உண்மையை, அதாவது முகம்மது நபியோட இறைவாசகங்களில இருக்கிற உண்மையை ஏத்துக்கறதில்லை.

குத்தூப் இந்த பிரத்தியேகமான சொல்லுக்கு முழுசா வேற அர்த்தம் கொடுத்தாரு! ஜஹிலியா(Jahiliyyah) என்ற வார்த்தைக்கு எகிப்தின் கெய்ரோவில (Cairo) சமகாலத்தில இருக்கிற சமூக கலாச்சாரத்தை நவீன சமூகமா மாறியிருக்கும்னும், அதன் மேற்கத்திய உருவமும் தோற்றமும்..........
************
...தொடரும்..பகுதி-2
...நன்றி; தமிழ் டிஸ்கவரித் தொலைக்காட்சி...03.05.2011-ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்