Pages

Sunday, 20 December 2009

தமிழ்நாடு மனிதவுரிமை ஆணையம் என்ன செய்யும்?


 மாநில மனித உரிமை ஆணையம் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் அதில் எப்படி புகார் செய்வது என்பது பற்றி தெளிவாக குறிப்பிட வில்லை. இணையத்திலும் ஆங்கிலத்திலேயே உள்ளன. மக்களுக்கு எளிதில் எட்டக்கூடியவைகளை இன்னும் அவர்கள் மொழியில் வழங்காமல் இருந்தால். அவை இருந்தும் எட்டாக்கனி மாதிரி தான்.


           
மாநில மனிதவுரிமை ஆணைய அலுவலகம், 
143 பி எஸ் குமாரசாமி ராஜா (கிரின்வேஸ் சாலை) சாலை,.சென்னை 28

        
அதன் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகள்                                      

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பின்வரும் செயற் பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் புரிதல் வேண்டும்[2][1]
  
(அ) தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-

மனித உரிமைகளின் மீறுகைக்கான அல்லது அதில் தலையீட்டு குறைத்தலுக்கான; அல்லது


அரசு பணியாளர் ஒருவரால் அத்தகைய மீறுகையைத் தடுப்பதில் காணப்பட்ட கவனமற்ற தன்மைக்கான முறையீட்டினை விசாரித்தல் வேண்டும்.


(ஆ) நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் மாநில மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.


(இ) அணுகுமுறை, சீர்திருத்தம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் காவலில் வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் மாநில அரசாங்கத்திற்கு தகவல் அளித்துவிட்டு மாநில மனித உரிமை ஆணையம் அதனைப் பார்வையிடலாம்.

(ஈ) மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்படச் செயற்படுத்துதற்கான நடைமுறைகளைப் பரிந்துரை செய்யலாம்.


 (உ) வன்முறைச் செயல்கள் (தீவிரவாதம்) உள்ளடங்களாக மனித உரிமைகள் நுகரப்படுவதை தடுத்து நிறுத்துகின்ற விடயங்கள் மறு ஆய்வு செய்தல் மற்றும் தீர்வழிக்கான உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யலாம்.

 (ஊ) மனித உரிமைகள் மீதான உடன்படிக்கைகள், பிற பன்னாட்டு முறையாவணங்களைக் கவனமாக ஆராயவும் அவை திறம்பட செயற்படுதலுக்குப் பரிந்துரை செய்யலாம்.

 (எ) மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியினை ஆணையமே மேற்கொள்ளலாம்.

 (ஏ) மனித உரிமைகள் பாதுகாப்புக் குறித்த கல்வியை, விழிப்புணர்வை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் பரப்பவும், மக்கள் தொடர்பு சாதனங்கள், கருத்தரங்கங்கள், ஊடகங்கள், பிரசுரங்கள் வாயிலாக மக்கள் அறிய ஆணையம் வழிகள் ஏற்படுத்தலாம்.
  
(ஐ)மனித உரிமை போன்ற துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகளின் மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கின்றது.

 (ஒ) மனித உரிமை மேம்பாட்டிற்குத் தேவையானதென்று கருதுகின்ற இன்னபிற பணிகளையும் மாநில மனித உரிமை ஆணையம் ஆற்றலாம்.


  • புகார் மனுவுக்கு கட்டணம் கிடையாது.
  • புகாரில் முழுமையான விவரத்தை தெரிவித்தல் வேண்டும்.
  • ஆணையம் புகார் சம்பந்தமான கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறலாம். புகார்களை பிரமாணப் பத்திரம் (அபிடாவிட்) மூலம் அளிக்குமறு சொல்லலாம்.
  •  தந்தி மற்றும் தொலை நகல் மூலம் அனுப்பும் புகார்களை சற்று எச்சரிக்கையுடன் ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.
  •  புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-
        புகார் மனுவில் குறிப்பிடவேண்டியவை

  1.  பெயர்
  2.  இருப்பிட முகவரி
  3. புகார் எழுந்த நிகழ்விடம் மற்றும் முகவரி
  4. .நாள் மற்றும் நிகழ்வின் காலம்
  5. மனித உரிமை மீறல்களின் விரிவான/சுறுக்கமான விவரங்கள்
  6. எந்த பொது ஊழியர் குறித்து புகார் அல்லது துறையினர் குறித்து புகார்.
  7. நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளனவா/தீர்ப்பாயம்/வேறு பிற ஆணையங்களில் நிலுவையில் உள்ளனவா?
  8. .இடர்/ துயர்/பதிலீடு குறித்து வேண்டுவன
 ஏற்றுக்கொள்ளப்படாத புகார்கள்

  • தெளிவற்ற புகார்.
  •  தெளிவற்ற பெயர் இல்லாத புனைப் பெயரில் கொடுக்கப்பட்ட புகார்.  
  • மிகச் சிறிய அளவிலான புகார்.
  • பொது ஊழியருக்கு எதிரானல்லாத குற்றச்சாட்டு.
  • சொத்துரிமைகள், ஒப்பந்த கடப்பாடுகள், உரிமையியல் சார்ந்த பிரச்சினைகள்.
  • பணி விடயங்கள் (சர்விஸ் மேட்டர்) சம்பந்தமானப் புகார்.
  • மனித உரிமைகள் மீறுதல் எதனையும் கொண்டிராத குற்றச்சாட்டுகள்.  
  • தொழில் அல்லது தொழில் தகராறு சம்பந்தமானப் புகார்.
  • ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட புகார்.
மாநில மனிதவுரிமை ஆணைய இணையதளம்   http://www.shrc.tn.nic.in/


சட்ட நூல் ஆதாரம்- மனிதவுரிமைகள் பாதுகாப்பு சட்டம்-புலமை வெங்கடாசலம்

    Saturday, 19 December 2009

    பேசும் கலை வளர்ப்போம் -1




    பேசும் கலை வளர்ப்போம் என்ற இந்த இடுகையை தொடராக வெளியிடுவதில் பெருமை படுகின்றேன். எனக்கு தமிழின் மீது ஈடுபாடு வர முதல் காரணம் என் தந்தைதான்.  இருந்தாலும் அதன் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது கலைஞரின் எழுத்துக்களும், அவருடைய பேச்சும் என்றால் மிகையாகாது. எழுத்தை விட பேச்சையே அதிகம் ரசித்திருக்கிறேன். அரசியல் கூட்டங்களுக்கு  என் தந்தையுடன் சிறுவயதிலேயே சென்று வந்ததால் கலைஞரின் பேச்சுக்களில் நானும் என்னை அறியாமல் ஈடுபாடு கொண்டேன்.


    எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் திமுக வின் பிரச்சார கூட்டமானாலும் சரி அது கொள்கை விளக்க கூட்டமானாலும் சரி இல்லை பொது விளக்க  கூட்டங்களானாலும் சரி. யார் யார் பேசுகிறார்கள் என்பதை சுவரொட்டி மூலம் மக்கள் அறிந்து கொண்டு மிதி வண்டியில் எவ்வளவு தூரம் ஆனாலும் சென்று அப்பேச்சுக்களை கேட்டு ரசிப்பார்கள். ஒருகூட்டம் முடிந்தவுடன். பேச்சாளர்கள் இன்னொரு இடத்தில் நடக்கும் கூட்டத்திற்கு செல்லுவதற்கு முன் அங்கேயும் விரைவாக சென்று (மிதிவண்டியில் தான்) பேச்சை ரசிப்பவர்களும் உண்டு. 



     திமுக காரனுக்கு பேசத் தெரியவில்லை எனறால் பெரிய இழுக்காக நினைத்த காலமது. பெரியார், அண்ணா இவர்களின் பேச்சுக்களை கேட்காதவர்கள் கூட இவர்களின் பேச்சுக்களை வைத்து அவர்களின் பேச்சுக்கள் எப்படியிருந்திருக்கும் என்று யூகித்து கொண்டனர். பேசுபவருக்கே நாவலர் என்று பெயர் வைத்த காலம். எப்படி பேசுவார்கள் என்று எவராலும் யூகிக்க முடியும். சரியாக பேசவில்லை என்றாலும், அவதூறாக பேசினாலும் கலைஞரிடமிருந்து குட்டு வரும் என்று கட்சியின் பேச்சாளர்கள் அனைவரும் அறிந்து கொண்டு பேசுவார்கள். இது பெரியாரிடமிருந்து, அண்ணாவும் அண்ணாவிடமிருந்து கலைஞரும் பின்பற்றி வந்த கலைகள்.


    கட்சி கூட்டங்களில் கலைஞர் தான் என்றில்லை. எல்லாருடைய பேச்சுக்களையும் ரசிப்பவர்களாக, இருந்தனர். கலைஞரை விட, அவரை மிஞ்சுகின்ற அளவுக்கு மிக இலக்கியத் நயத்துடன் பேசக்கூடியவர்கள் நிறைந்திருந்தவர் காலமது. கரகரத்த தொண்டைக்கு சொந்தக்காரர் கலைஞர், அதற்கடுத்து நாஞ்சிலார், (நாஞ்சில் கி மனோகரன்) , மூக்கடைத்தார் போல் பேசும் அன்றும் அதே மகா கண்டிப்புடன், கேட்பவர்களின் முடிகள் புடைக்க, பேசுவதில் பேராசிரியரை விட சிறந்தவர் என்று ஒருவரையும் கூற முடியாது. 

    பேராசிரியரின் பேச்சுக்களிடையே அடிக்கடி இடம்பெருபவை.....



    "ஈரமானத் தமிழன், சொரணையற்றத் தமிழன், தன்னை சுற்றி ஈரம் சூழ்ந்திருக்கிறதே என்று உணராமல் "இன்னுஞ் சொல்லப்போனால்" தூங்கி கொண்டிருக்கின்ற தமிழன், தன்னை உணராத தமிழன், அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்கினாலும் ஏன் என்று காப்பாற்ற நாதியற்ற தமிழன், தன் வரலாற்றை பின்னோக்கி பார்க்காத தமிழன் " ..........  இப்படி இன்னுஞ் சொல்லப்போனால் என்று போய்க்கொண்டேயிருக்கும்.




    அவரின் உஷ்ணப் பேச்சுக்கள் ஆரவாரமில்லாமல்  கேட்பவர்களின் உள்ளங்கள் உணர்ச்சிகளில் கொப்பளித்து கொண்டிருக்க செய்துவிடும். அது மாதரி பேசக்கூடியவர் பேராசிரியர். அதற்காகத்தான் அவருக்கு இனமான பேராசிரியர் என்ற பொருத்தமான அடைமொழி.



    பேராசிரியர் உணர்ச்சி வார்த்தைகள் ஏற்படுத்திய கொந்தளிப்பு மனதோடு உடன்பிறப்புக்கள் இருந்தால் கலைஞரின் நகைச்சுவை  பேச்சு அவர்களை அமைதிப்படுத்தி பிறகு மெதுவாக உணர்ச்சியை ஏற்றும்.


    இன்று வயதின் (இருவரும்) காரணமாக அவர்கள் தனது நடையை குறைந்திருந்தாலும். அன்று 3, 4 மணிநேரம் என்பது சாதரணமான நேரங்கள் தான்.  மக்கள் அத்துணை மணிநேரமும் பொறுமை காத்து கேட்கும் ஆவல் கொண்டிருந்தனர்.



    கட்சியினர் என்று இல்லை அனைத்து நடுநிலைவாதிகளும், அறிஞர்களும், ஆசிரியர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் இக்கூட்டங்களுக்கு செல்லும் வழக்கமுடையவர்களாக இருந்தனர்,  மாற்றுக் கட்சியினரும் செல்வார்கள்.  செல்வந்தர்கள் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஒலிபெருக்கி அருகே நின்று அத்தனையும் கேட்டு ரசிப்பார்கள்.


    அனைறைய காலகட்டத்தில் சிறந்த பேச்சாளராக நாவலர் (நெடுஞ்செழியன்- மிகப் பிரபலமாக பேசப்பட்டவர், அதன்பிறகு கட்சி மாறியதால் அவர் தன் பேச்சாற்றலை அவ்வளவாக வெளிப்படுத்தவில்லை,  டாக்டர் காளிமுத்து, துரை முருகன், வெற்றி கொண்டான், வைகோ,திருச்சி சிவா (இளைஞர் அணி).... இன்னும் பலர்.. சிறந்த பேச்சாளர்களாக வலம் வந்தனர்.


    .இதில் டாக்டர் காளிமுத்து இலக்கிய நயத்துடன் குரல் ஏற்ற இறக்கங்களுடன் மிக சிறப்பாக பேசும் ஆற்றல் பெற்றிருந்தார்.  ஒரு முறை தமிழகத்தில் உள்ள ஜாதிகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி தொடர்ந்து பேசியது மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இதில் பேராசியரும் வியந்து பாராட்டினார்.  (அந்த நேரத்தில் விசில் பறக்கும். பேசும் போது யாராவது சலசலத்தால் தர்ம அடிதான். அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் மக்கள் இருப்பார்கள்.)



    திமுக மேடைகளில் பேச வரும்போது தோழமைக்கட்சியின் பேச்சாளர்கள் அதிக முன்னேற்பாட்டுடன் வருவார்கள். மக்களும்  நிறைய எதிர்பார்ப்புடன் இருப்பார்கள் என்பது அவர்களுக்கு முன்பே தெரியும். அதற்கேற்ப தங்களை தயார் படுத்தி கொண்டு வருவார்கள்.  மக்களும் அனைத்து தகவலும் தெரிந்தவர்களாக (அப்டேட்டாக) இருப்பார்கள்.  அதற்கு ஒரு உதாரணம் சில இடங்களில் பேச்சாளர்களின் அரசியல் நையாண்டிக்கு மக்கள் சிரிப்பார்கள். மெத்த படித்த செல்வந்தருக்கு கூட என்ன என்று புரியாது அருகில் இருப்பவர் விளக்கியவுடன் தான் புரியும்.



    இது தமிழுக்கே உரிய தனித்தன்மையை , அவர்கள் எடுத்து சென்ற விதம், மக்களிடத்தில் தமிழை கையாண்ட விதம்,  மக்கள் அந்த தமிழோடு ஒன்றியிருக்க காரணமாயிற்று. அதுவே எனக்கும் காரணமாயிற்று. ஒரு தெருமுனை பிரச்சார கூட்டம் போடுகிறவர் கூட சர்வ சாதாரணமாக பேசும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார்கள். அன்றைய காலகட்டங்களில் திமுக பாசறை கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள், பட்டி மன்றங்கள் என்று நிறைய நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதுவும் எதிர் கட்சியாக இருந்த போது அதிக கூட்டங்கள் நடைபெற்றன.


    அந்த மாதிரி மேடை பேச்சுக்களை கேட்கின்ற காலங்கள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டு வருவதாக நான் அறிகின்றேன்.  இலக்கிய கூட்டங்களும்  குறைந்து கொண்டு வருகின்றன. (நடக்கின்றது ஆனால் முன்பு போல் இல்லை) மனிதன் தன்னை இணையத்தில் சுருக்கி கொண்டதன் விளைவாக இருக்கலாம். 

    ஒருவர் முகம் பார்க்காமல் எதையோ தட்டச்சு செய்து, பேசுவதாக தன்னையே ஏமாற்றிக் கொண்டு திருப்தியடைகின்றான். இதனால் பேச்சுக்கள் எப்படியிருக்கும் என்று கூட அறிய முடியாத, அந்த சூழல்களை அறிய முடியாத சூழ்நிலை இப்போது.



    இவைகளெல்லாம் நாம் சமூகங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதையே நிரூபித்து கொண்டிருக்கின்றது.

    ( வேர்க்கடலை ஒரு பொட்டலம் வாங்கி கொண்டு அந்த மாபெரும் கூட்டத்தினரிடையை "வாதோழா உட்காரு, என்று கூப்பிட்டு இடம் கொடுப்பார்கள். "அப்படி போடு", " வா வந்த" என்னம்மா "பேசறாருய்யா இந்த மனுச" என்று கூறும் அந்தசாமான்யர்களின்  கருத்துக்களை அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கலாம்.) 

    சிலர் உணர்ச்சி பெருக்கால் வாய் விட்டு அழுவார்கள். சிலர் கண் களங்குவார்கள. உணர்ச்சிகள் இல்லாதவர் யார்?


    அப்பொழுதெல்லாம் திமுக மேடைகளில் பேசத்தெரியாதவர்கள் அவர்களாகவே மேடைகளிலிருந்து ஒதுங்கி கொள்வார்கள். திமுக மேடை என்பது சொற்பொழிவு போன்றது, (போன்றது என்ன சொற்பொழிவுதான்).அனைத்து குறிப்புகளும் பேச்சாளரின் கைகளில் இருக்கும். உதாரணங்களுடன் வருவார்கள். அப்படி பயிற்றுவிக்கப்பட்டாதாலேயே அன்றும், இன்றும், என்றும் சொல்லுவார்கள். திமுக காரனுக்கு பேசக் கத்துக்கொடுக்கனுமா?


    பலருக்கு மேடைகளில் எப்படி பேசுவது எனபது தெரியாது.  ஒருவரை எப்படி மக்களின் முன் எப்படி அழைப்பது என்பது கூடத் தெரியாது. பிரபல பத்திரிகையளருக்கே தெரியவில்லை. 
     (இன்று பிரபலம்,  அன்று வளர்ந்து வரும் பத்திரிகையாக இருந்த்து) . 

    1994 ஆம் ஆண்டு  நக்கீரன் கோபால் அனைறைய முதல்வர் ஜெயல்லிதாவை கடுமையாக விமர்சித்து தொடர் கட்டுரைகளை க.சுப்பு (அன்று காங்கிரஸ்-அரசியல் பிரமுகர்- பிறகு விலகிவிட்டார்) மூலம் வெளியிட்ட ''இங்கே ஒரு இட்லர்'' என்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டார்.  அதற்கு தலைமையேற்க கலைஞரை நடிகர் சங்க கட்டிட கலையரங்கத்தில் புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடு செய்து அழைத்தனர். அப்பொழுது விழாத் தலைவரை வரவேற்று பேசிய பத்திரிகை ஆசிரியரும் நிறுவனருமான நக்கீரன் கோபால் கருணாநிதி அவர்களை வரவேற்கின்றேன் என்று அடைமொழியின்றி கூறினார். இது அவரின் தொண்டர்களை கொதிப்படைய செய்யும் எனத் தெரியாமல்.


    கூட்டம் முழுவதும் எழுந்து கொண்டு அவரை அடிக்க முண்டியடித்தது. (அப்போது பாதுகாப்பெல்லாம் பெரிதாக கிடையாது) அவரும் விழித்தார். (புரியாத மாதிரி விழித்தாரோ, என்னவோ).  அதன் பிறகு கலைஞர் என்று அழைக்கவேண்டும், அது தெரியாதா! உங்களுக்கு என்று திருநாவுக்கரசு கூறியவுடன், அது போல் நக்கீரன் கோபால் மீண்டும் அழைக்க கூட்டம் அமைதியனது. 

    திருநாவுக்கரசு (மத்தியமைச்சராக  இருந்து இன்றைய காங்கிரசில் சேர்ந்திருப்பவர் தான்) பேசும் பொழுது இதை சுட்டிகாட்டத் தவறவில்லை.  இது மேடை பேச்சு பற்றி அறியாததினால் வந்த விளைவு அது பத்திரிகையாளருக்கு தெரியாதது அதைவிட ஆச்சரியம்..... (இன்று அவர் நெருக்கமானவராக மீசையை தடவுகிறார்....)


     இப்பொழுது இணையத்தில் கருத்துரைகளை கூட முழுமையாக வெளியிடமுடியாமல், புரிந்தும் புரியாமலும் ஏற்றுக் கொள்கின்ற நிலைக்கு உலகம் சுருங்கி விட்டது. ஒருவரிடமும் மனம் விட்டு பேசுவது என்பதே இப்பொழுது கிடையாது. ஆகையால் பேசுவது என்றால் என்ன என்பது கூட தெரியாது.

    இல்லங்களில் இன்றைய தலைமுறையினர்களுக்கு ஒரு விருந்தினரை வரவேற்க கூட  தெரியவில்லை.  எல்லோரையும் ஒருமையில் அழைப்பது வழக்கமாக உள்ளது.  (குப்பை அள்ளும் நகர சுத்தி தொழிலாளரை பார்த்து) குப்பைக்காரன் வந்திருக்கான், காய்கறிக்காரன் வந்திருக்கான், செருப்பு தைக்கறவன் வந்திருக்கான், மளிகை கடைக்காரன் வந்திருக்கான், பிச்சைக்காரன் வந்திருக்கான் என்று வளர்ந்த பிள்ளைகளே அழைக்கின்றனர். 

     அதையும்  கண்டிக்காத பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் பேச்சை குறைத்து கொண்டதால் வந்த வினை. அவர்கள் பெற்றோருக்கு பேச தெரியாததால் பிள்ளைகளுக்கும் பேச  தெரிவதில்லை.
     
    இணையத்தில் பலர் கருத்துக்கள் என்ற பேரில் ஏக வசனங்களால் தாக்கி  கொள்கின்றனர் அதை பார்க்கும் பொழுது எனக்கு இந்த எண்ணம் தான் வந்தது. 




    ஒரு மனிதனுக்கு மொழி, பேச்சு, இவைகள் சுத்தமானதாக இருக்கவேண்டும் மற்றவர்களுக்கு புரியவேண்டும். வாயிருந்தும் பேசமுடியாதவர்களாக வாழ்வது வீண். அதை போக்க நம்மை நாமே வளர்த்து கொள்ளவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலும் ஒருவர் மேடை பேச்சாளராக என்னென்ன தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்  இந்த தொடர் கட்டுரை, முத்தாரத்தில் கலைஞர் அவர்களால் எழுதப்பட்டது. இதை படிக்கும் பொழுது பலருக்கு நாமும் பேச்சாளராக ஆகலாம் என்ற எண்ணம் தோன்றும். ஆங்கிலத்தில் உரையாட நினைப்பவர்களும் கருத்தில் கொள்ளவேண்டியவைகளையும் குறிப்பிட்டுள்ளார். 

    அதை அனைவரின் பார்வைக்கு  தொடராக வைக்கலாம் என்ற நல்லெண்ணத்திலும் தான். திரைப்படம், மற்ற கேளிக்கைகளின் இடையிடையே இந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றால் மனதில் உள்ள சஞ்சலங்கள், சோகங்கள்  மறையும், மனம் தெளிவடையும், நாமும் பிறரிடத்தில் எப்படி உரையாடவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் வளரும். அது இந்த இயக்க கூட்டங்கள் என்றில்லை எந்த இயக்க கூட்டங்களிலும் கலந்து கொண்டு நமது பேச்சாற்றலை வளர்த்து கொள்ளலாம்.
    (எனக்கு தெரிந்தது திமுக கூட்டங்கள் தான்)



    இனி மீதி விஷயங்களை கலைஞரே அவருடைய நடையில் சொல்வார் பார்த்துக் கொள்ளுங்கள்.
    நன்றி!


    பேசும் கலை வளர்ப்போம்
    1

    கலையை வளர்ப்போம் என்ற பொருளில், கலையைக் கலைக்காக
    வளர்ப்போம் என்ற பொருளில் சிலர் கருத்து அறிவிப்பது
    ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல!

    ''கலை என்பது கலைக்காக” என்றால், விளக்கு
    என்பது விளக்குகாக என்று மட்டுமேயென விவாதிப்பது
    போலாகிவிடும்.



    விளக்கு ஒளி தருவதற்காக
    அதைப்போலவே கலையும், சமுதாயத்துறையில் பொருளாதாரத் துறையில் அரசியல் துறையில் அறிவு ஒளியை, ஆராய்ச்சி ஒளியை, சிந்தனை ஒளியை,
    செயலாற்றும் ஒளியைத்தர வல்லதாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
    வீணை, யாழ், நாதசுரம் போன்ற இசைக் கருவிகளில்
    கலையை மட்டுமே காணுகிறோம்.



    ஆனால் ‘இராக, ‘தாள, பாவங்களுடன் இனிய குரலில்
    இசைவாளர் பாடுகிறார். அவரது இசைத் திறனை
    வியந்து பாரட்டிகிறோம். மண்டபத்திலுள்ள நூற்றுக்கணக்கான தலைகள் தம்மை மறந்து ஆடுகின்றன.
    ஆகா! சபாஷ்!” என்று ஒலிகள் எழுப்புகின்றன.



    அந்த இசை, வெறும் நுணுக்கத்துடன் நின்று
    விடாமல் ‘வெண்ணிலா வானும் போலே வீரனும்
    கூர்வாளும் போலே கன்னல் தமிழும் நானும் அல்லவோ’ ‘என்ற
    பாரதிதாசனாரின் பாடலாக இருந்தால் இசையைப் பருகுகிறோம்.



    அத்துடன் தமிழ் இன்பத்தைப் பருகுகிறோம் கவிஞரின்
    கவிதைச் சுவையைப் பருகுகிறோம் அனைத்துக்கும்
    மேலாகத் தாய்மொழி உணர்வோடு கலந்துவிடுகிறோம்.



    எனவே, இசைப் பாடலாயினும், கூத்தாயினும்
    அவை உணர்வு கலந்த கலையாக இருந்திடல் வேண்டும்.
    மேடையில் பேசுவதும் ஒரு கலைதான்- இசையில்


    நடனத்தில் நாடகத்தில் அதற்குரியோர்- ஏற்கனவே பசிற்சி பெற்று ஒத்திகை பார்த்துகொண்டு திரும்ப திரும்ப அதே பாடலை, அதை ஆடலை, அதே நடிப்பை, அந்தந்தநிகழ்ச்சிகளுக்கேற்ப காட்டிட இயலும்.



    ‘ஆனால், பேச்சுக்கலை ‘அப்படியல்ல! ஜனநாயகம்
    வளர்ந்து வரும் இந்த யுகத்தில் எல்லாவற்றையும்
    விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.’


    ‘பள்ளிக்கூடங்களிலேயே பேச்சு போட்டிகள், பரிசளிப்புகள் என்று
    ஆரம்பமாகிவிடுகின்றன.’


    ‘ஊராட்சி மன்றங்களில் ஊருக்குத் தேவையான விஷயங்களுக்காகப்
    பேசவேண்டியிருக்கிறது.’
    ‘நகராட்சிமன்றங்களிலும், மாநகராட்சி மன்றங்களிலும்
    அதே மாதிரியான தேவைகளைப் பற்றி நறுக்குத்
    தெறித்தாற் போல பேசவேண்டியிருக்கிறது.’


    ‘சட்டமன்ற அவைகளில் தொகுதியைப் பற்றியும்
    மாநிலத்துப் பிரச்சினைகளைப் பற்றியும் சுவையாகவும்
    விவாதிக்க வேண்டியிருக்கிறது. சூடாகவும் விவாதிக்க
    வேண்டியிருக்கிறது.’

    ‘பாரளுமன்ற இரு அவைகளிலும் நாட்டுப்
    பிரச்சினை, மாநிலங்களின் பிரச்சினை, அரசியல் கட்சி
    பிரச்சினை, அந்நிய நாட்டுப் பிரச்சினையென்று
    எத்தனையோ பிரச்சினைகளைப்பற்றிக் கனிவுடனும்
    பேசவேண்டியிருக்கிறது; காரசாரமாகவும் பேசவேண்டியிருக்கிறது;’


    ‘கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களிடையே வாதம்
    எழும்போது உண்மைகளை எடுத்து வைப்பது மட்டு
    மல்லாமல்,’ அவற்றை வாதாடும் திறமையுடனும்
    நடத்திட வேண்டியிருக்கிறது.’


    ‘நேர்மையான ஒருவருக்காக வழக்கு மன்றத்தில்-
    வாதாடுகிற வழ.க்குரைஞர் எவ்வளவு பெரிய சட்டமேதை
    யாக இருந்தாலும் நியாயத்தை நிலைநாட்டப் பேச்சாற்றல்
    தேவைப்படுகிறது.’


    இப்படியுள்ள பல்வேறு துறைகளைப் பற்றியும் விமர்சிக்கிற’
    அரசியல்வாதிக்கு மேடையில் பேசிடும் கலை மிகமிகத் தேவையானது-


    -எல்லாத் துறைகளின் பெயர்களையும் நான் இந்தத்
    தொடர்- கட்டுரையின் முகப்பிலேயே கோடிட்டு காட்ட
    வில்லையென்றாலும் கூட பல்வேறு துறைகளிலும்
    தேவைப்படுகிற பேச்சுக்கலை குறித்து, பலசெய்திகளையும்,
    விளக்கங்களையும் அளிக்க இருக்கிறேன். அவை ‘உங்களில்
    பலருக்குப் பேச்சுப் பயிற்சியை வழங்கிட உதவு
    மென்றுநம்புகிறேன். 

    ஏற்கனவே பேச்சாளராக இருக்கிற
    சிலருக்குத் தங்களின் குறைபாடுகளை நீக்கிக்
    கொண்டு மேலும் சிறந்த பேச்சாளராகத் திகழத் துணை
    புரியும் என்று எதிர்பார்க்கிறேன்.-


    அத்தகைய நல்ல நோக்கத்துடன் தான் இந்தத்
    தொடர் கட்டுரை தீட்டப்படுகிறது..



    குறிப்பிட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே
    பயனைடைய வேண்டுமென்றல்ல. பேச்சுக் கலையில்-
    சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்ற இளந்தலை
    முறையினர் அனைவருமே இந்தக் கருத்துக்களைச்,
    சிந்தித்து பார்த்து ஏற்க முடிந்தவைகளை, ஏற்கக்
    கூடியவைகளை ஏற்றுக் கொள்ளலாம்.


    "விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
      சொல்லுதல் வல்லார்ப் பெறின்”


    என்றார் வள்ளுவர்! கருத்துக்களை ஒழுங்காக அமைந்து


    இனிமையாகச் சொல்லக்கூடியவரைப் பெற்றால்
    அவருடைய ஏவலை உலகம், விரைந்து கேட்டு அவ்வாறு
    நடக்கும், என்பது இந்தக் குறளுக்குப் பொருள்.

    இரண்டாயிரம் ஆண்டுகட்டு முன்பே எண்ணத்தில்
    எழிகின்ற கருத்துக்கள் மட்டும் போதாது, அவற்றைச்
    சொல்ல வேண்டிய முறையில் சொன்னால்தான் வெற்றிகிட்டும் என்று
    சொல்வன்மை என்ற அதிகராத்தையே
    வழங்கியுள்ளார் வள்ளுவர்.


    “அம்மா அப்பா” என்று மழலை பேசத் தொடங்கி
    ஆங்கிலம் போன்ற மொழிகளில் பட்டம்பெற்று எண்ணற்ற
    சொற்களைக் கற்றவர்களாகக்கூட இருக்கலாம்.

    ‘சொற்களை தெரிந்து வைத்திருப்பது வேறு
    அவற்றை ஆள்வது என்பது வேறு!’


    அந்தச் சொல்லை ஆள்வது பற்றிய சுவையான
    தகவல்களைத்தான் உங்களுக்கு சொல்லப்
    போகிறேன்.


    1970- ஆம் ஆண்டு மேல்நாடுகளில் சுற்றுப்பயணம்
    மேற்கொண்டிருந்த போது இலண்டன் மாநகரத்தில் பல
    பகுதிகளைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. “ஹைட் பார்க்”
    (Hyde park) என்று ஒரு அழகான இடம்! அதனை
    ஒரு சொற்பொழிவுக்களம் என்று கூடக் கூறலாம். 
    அந்தப் பார்க்கில் இடையிடையே உள்ள பரந்த வெளிகளில் புல்
    தரைகளில் நூற்றுக்கணக்கில் மக்கள் வட்டமாக நின்று
    கொண்டிருப்பர். இவ்வாறு ஒரு இடத்தில் மட்டுமல்ல;
    பல இடங்களில்!


    அங்கெல்லாம் ஒரு மேசை மீது, அல்லது ஒரு
    முக்காலி மீது அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது,
    யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பர்.
    நமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச்
    சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும்
    கூடியிருக்கும். அந்தச் சொற்பொழிவாளர்கள் அந்த இடத்தைத்
    தங்களின் பயிற்சிக் கூடமாகவே ஆக்கிக்
    கொண்டு பேசுகின்றனர். அவர்கள் அங்கே எதைப் பேசினாலும்
    தடையில்லை. ஆங்கிலேய அரச பரம்பரையினரைப் பற்றிக் கூட
    ஆசை தீர தாக்கிப் பேசுவார்கள்.


    பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிக்
    கடுமையாக அலசுவார்கள்.


    ‘பார்க்கிற்கு வருகின்ற மக்களும் ஒவ்வொருவர் பேச்சாக
    கேட்டுக்கொண்டே அன்றைய பொழுதைக்
    கழித்துவிட்டு வீடு திரும்புவர்.



    அந்தப் பார்க்கிலே பேசி இந்திய நாட்டு உரிமைகளை
    அந்த நாட்டு மக்களுக்கு விளக்கிய ஒரு தலை
    சிறந்த இந்தியப் பேச்சாளருடைய பெயர் உங்களுக்குத்
    தெரியுமா?


    ஐ. நா. சபையில் மிக நீண்ட நேரம் பேசி பெரியதொரு
    “ரிக்கார்டையே ” ஏற்படுத்திய வி.கே. கிருஷ்ணமேனன் தான்
    அந்த பூங்காவிலே ஆரம்ப காலத்தில் பேசியவர்.



    அவர் இலண்டன் நகரத்து “ஹைட் பார்க்கில்
    நூற்றுக்கணக்கானவரை வைத்துக்கொண்டு பேசியபோது
    அவர் ஒரு காலத்திலே, ஐ.நா. அவையில் புகழ்மிக்க
    சொற்பொழிவாளராக விளங்குவார் என்று யாராவது
    நினைத்திருப்பார்களா?


    ‘எதற்கும் முயற்சி வேண்டும். முயற்சி திருவினையாக்கும்
    முதலில் நான் எப்படி பேசக் கற்றுக் கொண்டேன்? அதைச்
    சொல்ல வேண்டாமா?
    மேடையில் பேசியதைத்தான் குறிப்பிடுகிறேன்; வீட்டில் பேசக் கற்றுக் கொண்டதை அல்ல!


    ---- கலைஞர் மு. கருணாநிதி




    அது அடுத்த பகுதியில் வரும்................2

    Thursday, 17 December 2009

    தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!









     தமிழர் திருமணங்கள் எப்படி வடமொழி புரோகிதத்தால் கேவலப்படுத்தப்படுகின்றன. என்பதை தமிழர் இன்னும் உணராமல் அவர்களை நம்பியே மோசம் போகின்றனர். தந்தை பெரியார் தமிழர் திருமணங்களை சுயமரியாதையுடன் கூடிய  திருமணங்களாக, ஒரு எளிமையான ஜாதிமத பேதமற்ற திருமணம முறையாக அறிமுகப்படுத்தினார். இதில் பலர் இறைபற்றை கணக்கில் எடுத்து கொள்வதால், அதற்கு தமிழர் முறைத் திருமணங்களே மிகவும் நன்று.என்று  தமிழ் முறைத் திருமணங்களை பற்றி ஆசிரியர் கீ. இராமலிங்கனார் எடுத்துரைக்கின்றார். வடமொழியில் செய்யப்படும் திருமணங்களில் தமிழர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டே திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில் பெண்ணை படு கேவலமாக சித்தரிக்கின்றனர்.. இன்றுவரை அதன் பொருள் புரியாமல் தமிழர் திருமணங்கள் பார்ப்பன புரோகிதர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன.


    திருமணங்கள் மட்டுமின்றி அனைத்து நல்ல நிகழ்ச்சிளும் தமிழ் மந்திரங்களையே உச்சாடணை செய்து கொண்டு நல்லறத்துட்ன வாழலாம், என ஆசிரியர் இராமலிங்கனார் தெரிவிக்கின்றார்.  அதில் கூறப்படும் மந்திரங்கள் அனைவருக்கும் புரியும்  அதன்படி நடந்து இல்லறமும் நல்லறமாக விளங்க தம்பதியர்கள் நடந்து கொள்வர்.  இறைவனை வழிபடுவது முதல் திதி கொடுப்பது வரைஅனைத்திற்கும் தமிழ் மந்திரங்கள் உள்ளன, என்பது இராமலிங்கனாரின் வாதம்.





     பேராசிரியர் மா நன்னன் பெரியாரியலில் விளக்கப்பட்டுள்ள பார்ப்பனர்களின் 8முறை திருமண முறைகளும் பார்ப்பனியர்களின் காட்டுமிராண்டித்தன்மையை விளக்குகின்றன என்று கூறுகின்றார். ஆரியப பார்ப்பனர் இந்நாட்டுக்குள் புகுந்தபொழுது அவர்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்தனர். என்றும் அயோக்கியர்களாகப் பிறகு மாறினர்.
    (இந்த நாகரிகப்படி நேர்மையாக வாழ முயலாமல் அயோக்கியர்களாக ஏய்த்து வாழ முற்பட்டனர், போலும்)  அவர்கள் தமிழர்கள் திருமண முறையை மாற்றிக் கெடுத்தனர் என்றும் கூறும் பெரியார், இறையனார் களவியல் கூறும் எண்வகைத்திருமண முறைகளை எடுத்துக் காட்டி அப்பார்ப்பனர் எத்தகைய நாகரிகத்தை உடையவர்களாயிருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.





    தமிழர்களுக்காக பார்ப்பனர்கள் பயன்படுத்தும் திருமண மந்திரங்கள்; அதில் மறைந்திருக்கும் கேவலமான உட்பொருட்கள்.



     1. சோமன் முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய  மூன்றாவது கணவன் அக்கினி.  உன்னுடைய நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன். 
    2. சோமன் உன்னைக் கந்தருவனுக்கு கொடுத்தான். கந்தருவன் அக்கினிக்குக் கொடுத்தான். அக்கினி தேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்துப் பிறகு எனக்குத் தந்தான்.
    3. சாந்தி முகூர்த்த அறையில் சொல்லப்படும் மந்திரம்; 
       கந்தருவனே, உன்னை வணங்கி வேண்டுகிறோம. முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக; நீ  தயவு செய்து இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக; என் மனைவியை என்னிடம் ஒப்படைப்பாயாக. 
         இப்படிப்பட்ட மந்திரங்கள் விளங்காத மொழியில் ஓதப்படுவதால் கேட்டுக் கொண்டிருக்கிறார்களேயன்றி விளங்கும் மொழியில் கூறப்பட்டால் அவற்றை எந்த மணமகனும், எந்த மணமகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  மானக்கேட்டை விளைக்கும் இத்தகு இழிவுகளுக்குதவும் மந்திரங்களை வாழ்வில் எந்த இடத்திலும், எந்த நிலையிலும்  எக்காரணத்தாலும் மானமும் அறிவும்ள்ள மக்கள் அனுமதிக்க கூடாது என்று பெரியார் கூறியுள்ளார். 


    இறையனார் களவியல் உரை கூறும் பார்ப்பனரின் எட்டு வகையான திருமணங்களின் பெயர்களும அவற்றின் பொருள்களும் ;


    1. பிரமம்: நாற்பத்தெட்டு ஆண்டு பிரமச்சரியம் காத்தாற்குப் பன்னீராட்டைப் பிராய்த்தாளை அணிகலன் அணிந்து கொடுப்பது.
    2. பிரசாபத்தியம்: மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மாறாது கொடுப்பது.
    3.ஆரிடம்: ஆவும், ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நீரில் கொடுப்பது.
    4. தெய்வம்: வேள்வி ஆசிரியர்க்கு வேள்வித் தீ முன் வைத்துக் கொடுப்பது.
    5. காந்தர்வம்: இருவர் ஒத்தார் தாமே கூடும் கூட்டம் அதனை யாழோர் கூட்டம் என்ப. (யாழ் தமிழரின் இசைக் கருவி, ஆதலின் யாழோர் என்பது தமிழரைக் குறிக்கும். ஆகவே, இது தமிழர் திருமணமுறை. இது மட்டும் தமிழரைப் பார்ப்பார் கற்றுக் கொண்ட முறையயாக இருக்கலோமோ?)
    6. அசுரம்: கொல்லிறு கொண்டான் இவளை எய்தும்; வில்லிற்றினான் இவளை எய்நும்; திரிபன்றி எய்தான் இவளை எய்தும்; மாலை சூட்டப்பட்டான் இவளை எய்தும்; என இவ்வாறு சொல்லிக் கொடுப்பது.
    7. இராக்கதம்:அவள் தன்னிலும் தமரினும் பெறாது வலிந்து கொள்வது.
    8. பைசாசம்: மூத்தாள் மாட்டும், துயின்றாள் மாட்டும், களித்தாள் மாட்டும் சார்வது.
     இவற்றுள் ஓரிரு கூறுகள் தவிரப் பிற யாவும் நாகரிகமற்ற காட்டுத் தன்மை வாய்ந்தவை என்பது பளிச்செனத் தெரிகிறது. அந்த இரு கூறுகளும் தமிழர்களைப்  பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ள முயன்றதன் அடையாளங்களாக இருக்கலாம் என்றும் நல்லோராகிய அறிஞர் சிலர் கருதுகின்றனர். 


    காட்டுமிராண்டிகளாக வந்து கயவர்களாகவும் மாறிய பார்ப்பனர் இந்நாட்டில் தாம் முன்னரே அறிவு முதிர்ச்சியும், நாகரிகச் சிறப்பும் பெற்று வாழ்ந்த தமிழர்களைத் தம் அடிமைகளாக்கி ஏய்த்து வாழக்கடவுள், மதம். போன்ற கருவிகளைப் பயன்படுத்தினர். அவற்றுள் ஒன்னுதான் இத்திருமண முறையில் அவர்கள் புகுத்திய மாற்றங்கள். அவர்களின் மனுதரும சாத்திரத்தில் தமிழர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையே இல்லை என்றும் மேல் சாதிக்காரனுக்குத்தான் மணம் புரிந்து கொண்டு கணவனும் மனைவியுமாக வாழும் உரிமை உண்டு என்றும் எழுதி வைத்தனர். 


    இவ்வஞ்சக ஏற்பாடுகள் ப்ற்றி பெரியார் கூறுபவை ......



                   தமிழர்களுக்கு வைதீக மார்க்கப்படி திருமணம் இல்லை. நமக்கு இருந்து வந்த முறையானது, புராண மார்க்கப்படி புரோகித முறைப்படிதான் நடைபெறுகிறது.  வைதீகம் என்பது புரோகித முறைப்படிதான் நடைபெறுகிறது. வைதீகம் என்பது வேதத்தை ஆதாரமாக்கஃ கொண்டது. வேதம் சூத்திரனுக்குக் கிடையாது. புரோகித மார்க்கமானது கற்பனையானது பார்ப்பான் நம்மை ஏமாற்றித் தாங்கள் வயிறு பிழைக்க நம் தலையில் கட்டியதாகும். இதுகளால் நாம் இழிமக்கள் என்பதை ஏற்றுக்கொண்டு நாம் மடையர்களாவதற்கே பயன்படுகின்றன.


    பேராசிரியர் கண்ணப்ப முதலியார் ஆராய்ந்து கூறும்  தமிழ் மந்திரம் வடமொழி மந்திரம் பற்றிய விளக்கத்தை ஆசிரியர் கீ இராமலிங்கனார் கூறுபவை....



    "மந்திரங்கள் என்று வடமொழியாளரால் திருமணங்களில் சொல்லப்படுவன எல்லாம், அவர்கள் திருமணங்களில் செய்யும் செயல்களைக்க குறிப்பனவாகவே உள்ளன. சில வாக்கியங்கள் (அவைகளின் பொருள்கள் தெரிந்தால்) அ திக அருவருக்கத்தக்க இழிந்த பொருள்களை உடையனவாக இருக்கின்றன.  மணமகளைச் சந்திரனுக்கும், கந்தருவருக்கம், அக்கினி தேவனுக்கும் மனைவியாகத் தந்து, பின் மணமகன் ஏற்றுக்கொள்வது என்பது தமிழ் மக்கள் வழக்கமன்று. இப்பொருளுடையது இச்சடங்கு என்று தெரிந்தால் ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்ட அன்றே அப்போதே, அச்சடங்கினை விலக்கிவிடுவான் என்பது ஒரு தலை. பொருள் புலப்படாத வேறு மொழில் சடங்கு நிகழ்வதால் அது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 




    புரோகிதம் பண்ணும் பார்ப்பனர்கள் சொல்லும் அசாகாயசூர மந்திரங்கள் சில

                                                                                                                                                    ---- ஆசிரியர் கீ இராமலிங்கனார்
    " பண்டைத் தமிழ் மக்கள் கண்ட மந்திர இலக்கணம்இதுவாகவும் இதனுண்மை உணராது, வட மொழியில் சொல்லப்படுபவைதான் மந்திரங்கள் என எண்ணி ஏமாற்றமுறும் இக்காலத் தமிழ் மக்கள் நிலை பெரிதும் இரங்கத்தக்கது . அன்றியும்





    • 'மனண போட்டேன்'------'-----------------------------(ஆசனம் சமர்ப்பயாமி)
    • 'வெற்றிலைப் பாக்கு படைத்தேன்'---------------------(தாம்பூலம் சமர்ப்பயாமி)
    • 'வாழைப்பழம் படைத்தேன்' -------------------------------(கதலீபம் நைவேத்யாமி)
    • 'வெல்லம் படைத்தேன்' --------------------------------(குளோபகாரம் நைவேத்தியாமி)
    • 'தேங்காய் படைத்தேன்' -------------------------------(நாரிகேளம் நைவேத்தியாமி)
    • 'மலர் சூட்டினேன்'--------------------------------(புஷ்பம் சமர்ப்பயாமி)
    • 'அரிசி தூவினேன்'--------------------------(அக்ஷதன்ன மஹா)
    • 'புகை காட்டினேன்'-----------(தூபம் சமர்ப்பயாமி)
    • 'விளக்கொளி காட்டினேன்'----------------------------(தீபம் தர்சியாமி)


    முதலாவதாக செல்லப்படுவன எல்லாம் மந்திரங்களளாக எண்ணுதல் நம் தமிழ் மக்கள் பேதமே, பெரிதும் வருந்தத்தக்கது. இவைகள் ஒழிய ஆரியர்களால் திருமணங்களில்  சொல்லப்படுபடுவன எல்லாம் மிக இழிந்த பொருள்களை உடையன.


    ''தாயை நீக்கி ஒருவன் மணஞ்செய்து கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம் பழிக்குமோ அங்ஙனமே தாய்மொழியை நீக்கி, மணஞ்செய்து கொள்வோர்களைத் தமிழ் தெய்வமும் தமிழினச் சான்றோர்களும் பழிப்பர் என்று தமிழர்கள் அறிதல் வேண்டும். ''


    'தமிழ் திருமணம்' என்பது விவாகம் அன்று திருமணமே. 'விவாகம்' எனும் சொல்லுக்குப் பொருள் தெரியாமல் ஒரு வடமொழிப் பேராசிரியரைக் கேட்டதில் அதற்குப் பொருள் தூக்கிக் கொண்டு போவது என்றார். 'வாகனம் என்பது தூக்கிக்கொண்டு போகும் கருவி அச்சொல்லின் பகுதி 'வக்' என்பதாகும். 'வக் என்றால் 'துக்கு' என்று பொருள். 'வி' என்றால் சிறப்பாக 'செவ்வையாக' 'ஒப்பில்லாத' வகையில் என்றெல்லாம் பொருள். 'விவேக்' என்றால் சிறப்பாகத் தூக்கிக்கொண்டு போவது என்றுதான் பொருள். 'விவக்' 'விவாகம்' என்று ஆகிறது என்று மேலும் அந்தப் பேராசிரியர் விளக்கினார். 


    குழந்தைப் பருவத்திலேயே மணஞ்செய்து கொடுத்து வரும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தவர்கள் குழந்தையை மடியில் தூக்கிவைத்துக் கொண்டுதான் மணம் செய்து கொடுக்க முடியும்.  குழந்தை தனியே மாப்பிள்ளை பக்கத்தில் அமராது.  மாலை மாற்றும்போது குழந்தையைத் தூக்கிக் கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் மாப்பிள்ளையின் கழுத்து குழந்தைக்கு எட்டாது. மணப்பெண்ணை மணமகன் தன் ஊருக்கு அழைத்துச் செல்லும்போது தன் தோளில் தூக்கிக்கொண்டு தான் செல்ல வேண்டும். சிறு குழந்தை ஆயிற்றே! நடந்து செல்ல முடியாதே! இந்தக்க காரணத்தால் தான் 'மணத்தை விவாகம்' என்னும் சொல்லால் குறித்தனர் என்று அப்பேராசிரியர் தொடர்ந்து சொன்னார். இன்றுங்கூட அப்பண்டைக்கால வழக்கத்தை உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டு 25 வயதான மணமகளையும் அவள் தந்தையார் மடியில் அமர்த்திக் கொண்டு மணம் செய்து கொடுக்கும் வழக்கம் தமிழ் மரவில் நம்பிக்கை இலல்லாத இனத்தவரிடம் இருப்பதை அறியலாம். 




    தமிழ் மந்திரம்


    மந்திரம் என்பது என்ன என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார் வரையறுத்துக் கூறுகின்றார்...


    "திரைமொழி மாந்தர் ஆணியிற்கிளந்த
    மறைமொழி தானே மந்திர மென்ப"


    தமிழ் மந்திரங்கள் என்றும் அவற்றை வல்லார் வாய்க் கேட்டுணர்க என்ற பொருளில் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.



    இனி அனைத்து சடங்குகளும் தமிழ் முறையிலே செய்ய  உறுதி கொள்வோம். திருமணங்களை தமிழ் மந்திரங்களை பயன்படுத்தி நடத்துவோம். அதில் தம்பதியர்களுக்கான உறுதிமொழியும் இருக்கும், மந்திரங்களும் எளிமையாக, ஆபாசமின்றி இருக்கும். தமிழர் திருமணங்கள் தமிழரால் மட்டுமே நடத்தப்படவேண்டும் என உறுதி கொள்வோம்.



    தமிழ் முறையில் திருமணம் செய்வோம் தமிழராக வாழ்வோம்.


    நூல் திரட்டு


    ---தமிழ்த் திருமணம் ஆசிரியர் கீ, இராமலிங்கனார். (தமிழ்த் திருமண மந்திரங்கள் முறைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன)

    ---பெரியாரியல் (8 )திருமணம்- பேராசிரியர் மா.நன்னன்.





    -....தொடரும்......தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-2

    Monday, 14 December 2009

    சிகரம் தொட்ட முதல் தமிழரின் துயரம்!


      சிகரத்தை தொட்ட முதல் தமிழர், திரு சண்முக வடிவேலு. ஆம் இவரே உலகின் மிக உயரமான மலைச்சிகரமான மவுண்ட் எவரஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழர் என்ற பெருமைக்குரியவர். தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம், சூளுரைச் சேர்ந்த பழனியப்பன், காளியம்மாள் தம்பதியர்களின் மகன்.

    Sunday, 13 December 2009

    ஏன் விலங்குகளின் ஆவியை மட்டும் யாரும் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை?


    எப்ப பார்த்தாலும் மனித ஆவி, பூதம், பிசாசு என்று இருக்கிறவங்களை பயமுறுத்தற வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றவர்கள், ஏன்? விலங்குகளின் ஆவியை கண்டுபிடிக்க கூடாது?. விலங்குகள் தான் ஆவிகளையே கண்டிபிடிக்கின்றன என்பதாலா? (அப்படி ஒரு கருத்து நிலவுவதால்). அந்த ஆவிகளைப்பார்த்து மனிதர்கள் கண்டிப்பாக பயப்பட மாட்டார்கள் என்பதாலா?

    இனிமேல் யாராவது சிங்கம் ஆவி, புலி ஆவி,........ஆடு, மாடு, பன்றி, ஒட்டகம் இதனுடையை ஆவிகளையும், அதற்கு மேல் முடிந்தால் கரப்பான் பூச்சி, பல்லிகள்,........ஒனான்,............. தேள், பூரான்,............. பாம்பு.......... இவைகளின் ஆவிகளையும் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். இன்னும் முடிந்தால் பாக்டீரியா, வைரஸ்.....  இவைகளையும் கண்டுபிடிக்கலாம். இதெல்லாம் அதுங்களே கண்டுபிடித்து கொள்ளவேண்டுமா?  மனிதர்கள் ஆவியை மட்டும்தான் மனிதர்கள் கண்டுபிடிக்க முடியும், மிருகங்கள் ஆவியை மிருகங்களே கண்டுபிடித்து கொள்ளவேண்டும் என்ற நியதி இருக்கின்றதோ? அதுங்களுக்குத்தான் 5 அறிவு ஆயிற்றே? நமக்குத்தானே ஆறறிவு? நாம் தான் கண்டுபிடித்து சொல்லவேண்டும். இணையத்தில் இதுபற்றி தேடிப்பார்த்தேன் யாரும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை. ஒரு வேளை இந்த குறுந்தகவல் பதிவிற்கு பிறகு கண்டுபிடிப்பார்களோ?

    Saturday, 12 December 2009

    காஷ்மீர் பற்றித் தெரியுமா?







    காஷ் மீர் சட்டப்படி இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேற மாநில வாலிபனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளுக்கு சொத்துரிமையும் கிடையாது வாக்குரிமையும் கிடையாது.

    இப்படியொரு சட்டமா?

    ஆம், இந்த சட்டத்துக்கு பேரே 370 -வது பிரிவு........!

    இந்த சட்டப்படி இன்னும் பல விசித்திரங்கள் அங்கே இருக்கு.....

    ஒருத்தர் இந்த இந்தியாவில் கேரளத்தில் பிறந்தாலும் சரி. ஆந்திரா, தமிழ்நாடு எங்கே பிறந்தாலும் சரி அவன் ஒரு இந்திய குடிமகன். ஆனால் ஒருத்தர் காஷ்மீரில் பிறந்தால் மட்டும் இரண்டு குடியுரிமை சட்டங்கள் இதுக்கு டுயல் சிட்டிசன்சிப் (Duel Citizenship) ன்னு பெயர்.

    சகிப்புத்தன்மையை போற்றும் மாமனிதர்கள்!



    ஒரு சில மாதங்களுக்கு முன் கடந்த ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி  ஒருவருடைய பேட்டியை குற்றம் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அவரின் பெயர் திரு. கோபிநாதன். கடந்த 30 வருடங்களாக சென்னை பொது மருத்துவமனையில் சவப்பரிசோதனை அதிகாரியாக அங்கு பணிபுரிகின்றார். அங்கு அவர் இதுவரை பணியாற்றிய காலத்தில் அவர் சந்தித்திருக்கும் பிணங்களின் எண்ணிக்கை சுமார் 100000. (ஒரு இலட்சம்). அவர் இதுவரை அந்த பிணவறையில் பணிபுரிகையில்  எந்தவித அச்சமோ, அருவருப்போ கொண்டதில்லை. என்றும் தெரிவித்திருந்தார். நான் தொடர்ந்து ஈடுபாட்டுடனே இப்பணியினை மேற்கொள்கின்றேன் என்றும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.......