Pages

Monday, 17 January 2011

தமிழ் பொது தளங்கள் என்ற பெயரில் பல சட்டவிரோதங்கள்.........எச்சரிக்கை!

  

இன்று பல இளைஞர்கள் இம்மாதிரி தளங்களால் பாதிக்கப்படுகிறார்கள்...அவர்களிடமிருந்து திரட்டிய தகவல்களாக.....இம்மாதிரி தளங்களில் சிக்கி கொள்ளமால் சாதுர்யமாக விலகுவதற்கான சில வழிமுறைகள்....
பல பொது தளங்கள் தமிழ் -மன்றம்.... , முத்தமிழ்,,,, ஈகரை தமிழ்,,,,, யாழ் தமிழ்,,,,, அதிகாலை.... இன்னும் சில தமிழ் களஞ்சியங்களும்,,தமிழ்,என்ற அடைமொழியுடனும் தமிழர்களை இணைக்கும் உறவுப் பாலம் எனவும் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும், தமிழகத்தமிழர்களையும் அதன் தமிழ் இளைஞர்கள் மற்றும் இன்றைய இளையத் தலைமுறையினரையும் தவறான வழிகாட்டுதலுக்கு அழைத்து செல்லும் தளங்களாகவே இருக்கின்றன.  தமிழை எவ்வளவு கொச்சையாக எழுத கற்று கொடுக்க முடியுமோ? அந்த அளவுக்கு கற்று கொடுக்கவும் முயலுகின்றன....இளையத்தலைமுறையினருக்கு தீவிரவாத மனப்பான்மையை இளமையிலேயே கற்று கொடுத்து விடுகின்றன......

ஏற்கனவே இளைய சமுதாயத்தினர் உணர்ச்சிவயப்படக்கூடியவர்கள் அதில் மேலும் எண்ணையை ஊற்றுவது போல் இந்த வன்முறை செயல்களுக்கு தூண்டி விடிகின்றன. இந்த தளங்களின் செய்ல்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே தெரிவிக்கிறது. இவைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தினை ஆதரித்து எழுதுகிறார்கள். அந்த அமைப்பிலிருந்து கொண்டு எழுதுகின்றனர்.

இந்த மாதிரி தளங்கள் எல்லாம் எந்த நாட்டு சட்டதிட்டத்திற்கும் கட்டுபடுவதே இல்லை...கட்டுபடமாட்டேன் என்பதற்கு ஒரு பொது தளமா?  
மக்களை வன்முறைப் பாதைக்கு அழைத்து செல்லும். இந்த தளங்களில் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை..நல்ல நோக்கமும் இல்லை....மனிதனுக்கு  முதன்மையாக இருக்கவேண்டியவை மனித நேயம் அதை நேருக்கு நேராக எழுத்தின் மூலம் பங்களிக்கும் போதே பின்பற்றுவதுமில்லை...இவர்கள் என்ன பெரிய விஷயத்தை அலசிவிடப்போகிறார்கள்...? 

சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பு மிக குறைவவாக உள்ளது என்ற எண்ணத்தை ஆரம்பதிதிலேயே சுட்டிக்காட்டிவிடுகிறது. இதெல்லாம் சில மேட்டுக்குடித்தன மனப்பான்மை கொண்டவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து அனைத்து விஷயங்களையும் தீர்க்கமாக கணிப்பதாக நினைத்து ஒருவர் கழிப்பறை சென்றதலிருந்து சிற்றுண்டி சாப்பிட்டது வரை எழுதுவார்கள். அதாவது டீக்கடையில் பேசிக்கொள்ளும்  அரசியல் போல...திண்ணையில் பேசிக்கொள்ளும் அரசியல் போல.....இன்னும் சில பேர் செய்யும் தொழில், (பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர்...) புகைப்படம், தேசியக்கொடி எல்லாம் போட்டுக் கொண்டு எழுதுவார்கள்....அரசு ஊழியர் (பாரத ஸ்டேட் வங்கி மேலாளர்) என்று கூட போட்டுக்கொண்டு மதத்தீவிரவாதத்தை வலியுறுத்தி எழுதுகின்றனர்.. இவர்களே! இப்படி என்றால் இவர்களிடம் பயிலும் மாணவர்கள் எந்த லடசணத்தில் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம், இவர்கள் பள்ளியில் தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கிறார்களா? அல்லது ஒழுங்கீனத்தை கற்றுத் தந்து மாணவர்களை கெடுக்கிறார்களா? அத்தனையும் மிகப்பெரிய குற்றம். அரசு ஊழியர்கள் இணையத்தில் பங்குபெறவேக் கூடாது, அவர் ஒரு பொது ஊழியர். இந்த எழவே தெரியவில்லை. (அவ்வளவு தைரியசாலியாம்) இதையெல்லாம் கூட அப்படியே ஸ்கிரின் ஷாட் எடுத்து அரசுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கலாம். இவர்களெல்லாம் எந்தளவில் நேர்மையாக தொழிலை கவனிக்கிறார்கள் நாட்டுக்கு எவ்வளுவு தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதற்கு இதுவே அப்பட்டமான சாட்சி. தமிழை காப்பாற்றும் அவதாரமாகவே காட்டிக்கொண்டு சாக்கடையாக எழுதும் எழுத்தை அவர்கள் குடும்பமே விரும்புமோ என்னவோ? 

இப்படி எல்லாம் எழுதுவதற்கு எதற்காக? இங்கு மக்கள் பார்க்கவேண்டும் ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பு வரவேண்டும்....கலவரம் வரவேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன நல்ல விஷயம் இருக்கிறது. 

இணையத்தில் வெளியிடுவது சுவரொட்டி, துண்டு பிரசுரம் போன்றது...அது வெட்ட வெளி... அவதூறாக இந்திய மக்களை பற்றியும், அங்கு இருக்கும் அரசியல் தலைவர்களை பற்றியும், அவர் சாகவேண்டும், இவர் சாக வேண்டும், ஏன் உயிரோடு இருக்கிறாய்? நீ ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறாய்...உயிர் ஒரு கேடா...? என்றெல்லாம் எழுதி சுவரில் அந்த நாட்டு சுவர்களில் எல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினால்..அந்தந்த கட்சியில் இருக்கும் பல இலட்சம் தீவிர தொண்டர்கள் சும்மா இருப்பார்களா?...இல்லை காவல் துறை தான் சும்மா நின்று கை கட்டி வேடிக்கை பார்க்குமா? நீதித்துறைதான் சும்மா விட்டு விடுமா...? ஏப்பா இன்னும் கொஞ்சம் நல்லா எழுது? நாடு நல்லா இருக்கும் என்று தட்டிக்கொடுக்குமா?

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கவலைப்படும் பெற்றோர்கள் இதையெல்லாம் பார்த்தால் அவர்களுக்கே மிகப்பெரிய கலவரமும், கலக்கமும் தான் ஏற்படுகிறது. மகளே, மகனே நீ எந்த இடத்திலும் மாட்டிக்கொள்ளாதே நாடு இருக்கும் நிலைமையை பார்த்தால் மிகப்பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது. பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை, பாதுகாப்பில்லை நாமெல்லாம் எம்மாத்திரம்? என்ற அச்சம் தான் தோன்றுமே தவிர? வேறெதுவுமே தோன்றாது. பணம் படைத்தவர்களுக்கு கவலை இல்லை...அவர்களுக்குத்தான் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாத அளவிற்கு இருக்கிறதே....? அது தான் இந்த தகாத செயலையும் செய்து கொண்டிருக்கிறது. எந்த பெற்றோராவது இப்படி எழுதுவதை ஊக்குவிப்பார்களா?

இவர்களிடம் துளிகூட மனிதநேயமே இல்லாத பொழுது பிற நாட்டு அரசியலையும்  அங்கே மீறப்படும் மனிதவுரிமை மீறலைப் பற்றியும் இவர்கள் வாய்கிழிய கத்துவார்கள்.  இதை நிர்வகிப்பவர்களும் மிக மிகச்சிறியவர்கள், சமூதாயத்தோடு ஒன்றியவர்களும் இல்லை, என்பதாலும் ஒரு தீவிரக்கொள்கைக்கு ஆட்பட்டிருப்பதாலும் அந்த கருத்து எவ்வளவு வன்மையாக இருப்பினும் அதை அவர்கள் அறியாமலேயை அதன் பக்கம் சாயும் மனப்போக்கு கொண்டவர்களாகவும் அதனால் சமூதாயம் எக்கேடு கெட்டால் என்ன ? என்ற  மனப்போக்கும் இயற்கையாகவே வந்து விடுகிறது. அவர்களும் அப்படி எழுதுவதை அந்த எழுத்தை அவர்கள் எழுதாவிட்டாலும்  (இன்னொரு பெயரில் நுழைந்து கொச்சையாக எழுதுவார்கள்....தளமே அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது....இதெல்லாம் சர்வசாதாரணம்) பிறர் எழுதுவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மைக்கு வந்து விடுகிறார்கள். அதாவது நம்மாள் எழுதியிருக்கிறர்...என்ற சார்புக்கொள்கையுடன் அணுகுகின்றனர்...அநாகரிகமாக யார் எழுதினால் என்ன? அதில் என்ன? நம்மாள், சித்தாள், பெரியாள்.......கொத்தனார்......

இந்த மாதிரி எழுத்துக்களை .எதிர்ப்பவர்களுக்கு  தண்டனை கூட வைத்திருக்கிறார்கள்....இது என்ன? நீதிமன்றமா? அந்த ஐயாக்கள் என்ன நீதிபதிகளா? இந்த அதிகாரங்கள் எல்லாம் எவர்? இவர்களுக்கு வழங்கினார்களோ  தெரியவில்லை...?  (இந்த விஷயங்களே இவர்களுக்கு தெரியவில்லை)..அதற்கு இவர்கள் தகுதியானவர்கள் தானா? என்பதும் தெரியவில்லை? இவற்றை எல்லாம் உணராமல் எப்படி...சர்வாதிகார மனப்போக்குடன் எப்படி இந்த தளங்களை இணைப்பு பாலமாக கட்டி மக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடமுடியும் என்பதும் தெரியவில்லை.  அப்புறம் எப்படி ஊர்ல உள்ள மனிதவுரிமை மீறல்களை எல்லாம் கேள்வி கேட்க முடியும்...?

இதில் தெரியாமல் பங்கு பெறுபவர்களையும் இவர்களின் தீவிரவாத கொள்கைக்கு ஆதரவாக மாற்ற எண்ணம் கொண்டுள்ளனர்.

இதில் பங்குபெறுபவர்களின் மின்னஞ்சல் எல்லாம் அவர்களால் பிறருக்கு களவுத்தனமாக திருடித் தெரிவிக்கப்பட்டு...அந்த குழுவில் இடம்பெற்றிருப்பவர்களே ஒன்றிணைந்து அந்த தனிநபருக்கு தொல்லைகளுடன் கூடிய தொலைபேசித் தாக்குதலையும், மிரட்டல்களையும் கொடுக்கத் தயாராகிவிடுவார்கள்.

இம்மாதிரி தளங்களில்  தமிழக மக்கள் பங்கு பெறாமல் இருப்பதே நல்லது. அப்படியும் பங்கு பெற்றால் எச்சரிக்கையுடன் உள்நுழைந்து எந்த தகவலையும் பெயர் உட்பட எதையும் வெளியிடாமல் இருப்பது மிக மிக நல்லது. தொலைபேசி எண்கள் மற்றும் இதரத் தகவல்களை இவர்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் திருட முயற்சிப்பதாக தெரிகிறது. தனிமடல் மூலமும் பெற்று விடுவார்கள்.

இவர்களுக்குள் கூட்டிணைவு இருப்பதனையும் இந்த தளங்களை நிர்வகிப்பவர்களே பல இடங்களில் வெளிப்படுத்திக்கொள்வார்கள்...அதை உண்ணிப்பாக கவனித்து அந்த தகவல்களை அப்படியே சேமித்து வைத்தும், ஸ்கிரின் ஷாட் எடுத்தும் இந்திய அரசுக்கு தெரிவிக்கலாம்.


நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஒரு நாட்டின் அதிபரை நாகரிகமாக விளிப்பது தான் அறிவுடமை...அதற்கு பின் விமர்சனங்களை நாகரிகமாக வைக்கலாம்.....அந்தளவுக்கு பொறுமையில்லை என்றால் எதற்கு எழுதவேண்டும்....? அதற்கு எதற்கு ஒரு பொது தளம்...என்ற இணைப்பு...இதையெல்லாம்  கற்று கொடுக்கவா தளங்கள்...

.இவைகள் மக்களை சீரழிக்கும் அமைப்புகள். இளைஞர்களை பாழாக்கும் தளங்கள் இதை இந்திய அளவில் இவைகள் தணிக்கை செய்யப்பட்டு தடைசெய்யலாம். இவைகள் அந்த தள தனிநபர்களின், குழுக்களின் சார்புக்கொள்கைகளால், அந்த கொள்கையை வலியுறுத்தி இயங்குகின்றன. ஆகையால் இதையெல்லாம் முன்பே நாம் அறிந்துகொள்ள முடியாது. இந்த மாதிரி தளங்களை பலநாடுகள் தடைசெய்துள்ளன.

செருப்பால் அடிப்பேன்....துடைப்பக்கட்டையால் அடிப்பேன், முதலமைச்சர் நாயே!, பிரதமர் நாயே! அதிபர் நாயே! எம்.எல்.ஏ, எம்.பி நாய்களே, நரிகளே! தமிழ்நாட்டு நாய்களே! இந்திய நாய்களே! என்று  ஒருவருக்கு,  ஒரு தனிப்பட்ட குழுவிற்க்கு, தீவிரவாத இயக்கங்களுக்கு பிடிக்காதவரை, அரசியல் தலைவர்களை, நாட்டின் பிரதமர்களை, அமைச்சர்களை, மதிக்கத்தக்க எவரொருவரைப் பற்றியும் தரங்கெட்ட முறையில் எழுதினால் எதிரே இருப்பவர் அவருக்கு பிடிக்காத ஒருவரை பற்றிஅந்த தீவிரவாத தலைவரை பற்றி இதே மாதிரி ''செருப்பால் அடிப்பேன்'' என்று எழுதப்போகிறார்.....அப்படி எழுத தமிழகத்தை சார்ந்த சாமான்யர்கள் யாரும் பெரும்பாலும் முயற்சிப்பதில்லை...ஆனால் இதெல்லாம் சரி என்ற தவறான எண்ணத்திற்கு .அவர்களும், இளைய சமுதாயத்தினரும் மாறுவதற்கு நிச்சயம் இது வழிவகுக்குகிறது. 

இதில் எல்லாம் என்ன பெரிய கருத்து எழுதிவிட்டதாக மார் தட்டிக்கொள்ள முடியும்? எல்லோருக்கும் தான் பின்பற்றாளர்கள் இருப்பார்கள்...இந்த கொள்கையை, தலைவரை பின்பற்றுவர்கள் மட்டும் உள்ளே நுழைய வேண்டும் என்று போர்டா எழுதிப்போடப்பட்டிருக்கிறது. அல்லது செருப்பால் அடிக்கும் தளம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா? அப்படியிருந்தால் எவராவது அல்லது  பெண்கள்  உள்நுழைவார்களா? இதெல்லாம் தெரியாமல் நுழைந்துவிடுவது தான். அப்படியே தெரியாமல் உழைப்பையும் கொட்டிவிடுவார்கள்...சில தளங்கள் தமிழ் என்ற பெயரிலும் இன்னும் சில ஆபாச தளங்களுடன்  (இரண்டும் ஒரே ஐ.பி முகவரியில் இருக்கும்...காமலோகம்-தமிழ்மன்றம்..... ) தொடர்பு வைத்திருக்கிறது.

(இதையெல்லாம் அந்த தளத்தின் URL முகவரியைக்கொடுத்து இதன் ஐ.பி முகவரி எண்களை அறிந்து கொள்ளலாம்........எங்கேயிருந்து இயங்குகிறது எனபதனையும் தெரிந்து கொள்ளலாம்.. இங்கு சென்று அந்த தளத்தின் (யு ஆர் எல்) முகவரிகளை கொடுத்து...அந்த தளத்தின் ஐ.பி முகவரிகளை எண்களை தெரிந்து வைத்து கொள்ளலாம்...http://www.ip-adress.com/whois/)

இப்படியெல்லாம் எழுதுவதற்கு என்று ஒரு பொது தளம்...தேவையா? ஒரு அரசு அது சார்ந்த சட்டத்திட்டங்களை, இறையாண்மைகளை மதித்து நடக்காத தளம் என்று முன்பே பொதுவில் எச்சரிக்கை குறியீட்டுடன் தெரிவித்து விட்டால் யாரும் இம்மாதிரி தளங்களை நெருங்க மாட்டார்கள்.......இதை அரசும் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும். இம்மாதிரி தளங்களை முற்றிலும் தடை செய்யவேண்டும். இந்த மாதிரி தளங்களால் தீவிரவாதங்கள் தான் வளருகிறது. நாட்டின்  பாதுகாப்பு......?

                                                       
இதில் நிர்வாக அமைப்பை சார்ந்தவர்கள் பலரும் பல தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். ஆகையால் இதில் அவர்களுக்கு வழிகாட்ட முடியாது. இதில பங்கு பெறாமல் நாம் தவிர்த்து கொள்ளலாம், எந்த அறிஞர் பெருமக்களும், ஆசிரியர் பெருமக்களும், முக்கியமாக பெண்கள் இந்த தமிழ் என்ற அடைமொழியை நம்பிவிடாமல் இருப்பதே நல்லது. இம்மாதிரி இணையத் தளத்தில் பங்கு பெறாமல் இருப்பதே நல்லது.

இப்போது எல்லோருக்கும் இது ஒரு சாக்காக போய்விட்டது ஈழம்...ஈழம்...ஈழம்....இதை கையிலெடுத்தால் பச்சை பச்சையாக எழுதலாம். அப்படி எழுதினால் உடனே ஈழத்தை தூக்கி கையில் கொடுத்து விடுவார்கள் என்ற மனப்பான்மையில் எழுதும் இம்மாதிரி தளங்களை என்னவென்று சொல்ல.....மாற்றானை மண்டியிடவைக்கும் எழுத்துக்களாலேயே ஒருவரை கவரமுடியும், ஒரு சமூகத்தை மாற்ற முடியும். அருவருக்கத்தக்க எழுத்துக்களாலும், அய்ய இப்படியுமா? என்று எழுதும் இம்மாதிரி தளங்கள் ''தமிழ்''  ''தமிழர்கள் '' என்ற போர்வையில் தமிழர்களை தவறான பாதையில் திசை திருப்ப முயல்வது வெட்கக்கேடானது.

இந்த தளங்கள்  தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் பணியினை செய்கிறதா? அல்லது இப்படியெல்லாம் செய்தால் கண்டிப்பாக ஈழம் கிடைத்துவிடும் என்ற கனவா? எங்கே எத்தனை பேர் இந்த எழுத்துக்களால் கவரப்பட்டு பின்னாடியே வந்து விட்டார்கள்.  எழுத்தே நம்மை பார்த்து காரி உமிழும் அளவுக்கு எழுதும் அநாகரிக போக்கை இந்த தளங்கள் கைவாடாது.

இப்படிப்பட்ட பொது தளங்களில் பங்கெடுக்காமல் இருப்பதே நல்லது...உழைப்பையும் வீணடிக்காமல் சொந்த வலைத்தளங்களிலேயே நாகரிகமாக எழுதலாம்....இந்தமாதிரி பொது தளங்களினால் பாதிக்கப்பட்டால், கருத்துக்கள் முறையற்ற வகையில், சட்டத்திற்கு விரோதமாக வெளியிட்டால் அந்தந்த நாட்டு இணையக் குற்றப்பிரிவு அல்லது இந்திய சைபர் குற்றப்பிரிவுக்கு அந்த தளங்களை தடை செய்ய புகார் அளிக்கவும் தயங்கக்கூடாது. 

ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒன்று சேர்த்து  நடத்தினாலே அது பொதுவாகிவிடுகிறது....ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது....அதற்கான கட்டுப்பாடுகளும் பொதுவானதாக எவரொருவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படாததாக அனைத்து நாட்டினருக்கும் உகந்ததாகத்தான் இருக்கவேண்டும் . அப்படியில்லாதவைகளை தைரியமாக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லலாம். வலைப்பதிவிலேயே நாகரிகமாக பலர் எழுதும்பொழுது இந்த பொது தளங்கள் எதற்கு? என்றே தெரியவில்லை.

இப்படியே விட்டதினால், இது எல்லைமீறிப்போய் இப்போது என்ன ஆகிவிட்டது என்றால் அவர்களுக்கு எதிராக யாராவது  கருத்து தெரிவித்து விட்டால் பொறுக்க மாட்டாமல் மின்னஞ்சல்களின் மூலம்  செல்பேசியின்  எண்ணை எப்படியாவது கண்டுபிடித்து நேரிடையாக கொலை மிரட்டல் செய்வது எதிர்ப்பு தெரிவித்தவரின் குடும்ப பெண்களிடம்  கொலை மிரட்டல் விடுவது என்பது  தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர். இதனால் பயந்த பலர் மனவுளைச்சலால் தற்கொலையும் புரிந்து கொள்வதாக செயதிகள் வருகின்றன. இதை இந்தியத் தலைமை நீதிபதியும் இதுபற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாதிரி தமிழ் என்ற அடைமொழியுடன்  இயங்கும் பொதுத்தளமாக இயங்கும் தீவிரவாத தளங்களை இளையத்தலை முறையினர் நெருங்காமல் இருந்தாலே அதிக பாதுகாப்பு. இம்மாதிரி தளங்களை அரசிடம் முறையிட்டு தடை செய்ய மக்களும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். இதை முறையிடத் தயங்க கூடாது. இதனால் இனிவரும் நபர்களும் சந்ததியினரும் எச்சரிக்கையுடன் இருக்க வழிவகுக்கும். யார் கண்டது உறவுகளில் பலபேர் இதுபோல் இணையத்தளங்களில் மாட்டிக்கொண்டு அவதிப்படலாம்.

இதை நிர்வகிப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டினர், (தமிழகத்தில் இருந்து ஒருவரும் இது மாதிரி இணையத்தளங்களை துவங்கவில்லை போலும், துவங்கினால் இது மாதிரி தாக்கமுடியாது என்ற காரணமும் இருக்கலாம்) இதை வெளிநாட்டினர் அங்கிருந்து கொண்டு  நிர்வகிப்பதால் எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என்ற மனப்பான்மையுடனும்...நம்மை யார்? கண்டுபிடிக்க போகிறார்கள் என்ற நினைப்புடனே இதை அவர்கள் அவர்களின் சுயபாதுகாப்புடன், சுயநலத்துடன் இயக்க ஆரம்பித்துள்ளனர்.

சில விதிகள் என்று ஒப்புக்குச்சப்பாக அந்த தளங்களில் வைத்திருப்பது  வெறும் கண்துடைப்புக்காத் அவர்களுக்கு சாதாகமாக வைக்கப்பட்டுரக்கும். அந்த விதிகளை அந்த தளத்தை நிர்வகிப்பவர்களே  பின்பற்றுவதில்லை. அவர்களும் பக்கசார்புடன் எழுதுபவர்கள் தானே. அந்த எண்ணத்தில் துவக்கப்பட்டது தான் இந்த தளங்கள்...ஏதாவது நடுநிலை அமைப்பா? இவர்களை தேர்ந்தெடுத்து அமர்த்துகிறது. அது மாதிரி எதுவும் இல்லை....இவர்கள் பார்வையில் எது  எது எல்லாம் சரி எனப்படுகிறதோஅதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவார்கள். 

உழைப்பை திருட அவர்கள்  சில சாதுர்யங்களை வேண்டுமானால் பயன்படுத்தலாம். (முகவரிகளை அறிந்து கொள்ள தனிமடல் என்று தொடர்பு என்று ஆசை வார்த்தை காட்டுவார்கள்...வாயார புகழ்வார்கள்..எதையும் நம்பிவிடாமல்....)ஆகையால் அதிக எச்சரிக்கை மனப்பான்மையுடனே இந்த தளங்களை அணுகவேண்டும்.

அதாவது அவர்கள் பாதுகாப்பு ஏற்கனவே உறுதி (வெளிநாடு) செய்யப்பட்டிருக்கிறது  (அப்படி ஒரு நினைப்புடன்). இதில் தெரியாமல் அப்பாவித்தனமாக பங்குப் பெறுபவர்களின் பாதுகாப்பு அந்தந்த நிலப்பரப்பையும், அதன் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப இருப்பதால் தெரியாமல் பங்கு பெறுபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. 

இந்த அறியாமையை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சகட்டுமேனிக்கு எவரொருவரையும் (அவர்களுக்கு பிடிக்காதவர்களை) வெளுத்து வாங்குகின்றனர். அதாவது இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள், இந்தியாவின் பிரதமர், குடியரசுத்தலைவர் என அனைத்து நாட்டின், இந்திய நாட்டின் மதிப்புமிக்கவர்களை தாக்குதல் எண்ணத்துடன் கொலைகாரர்கள் என பெயரிட்டு எழுதுகின்றனர். தமிழக மக்களை கொச்சைப்படுத்தியும் எழுதுவது வாடிக்கையாகி விட்டது.

இதற்கு இப்படி வைத்துக்கொள்ளலாம் பிடிக்காதவர்களை தாக்கும் பொது மன்றம், தமிழ் தளம்...வருகிறவர்கள் எல்லாம் வந்து ஆளாளுக்கு எவ்வளவு முடியுமோ? அவ்வளவு பச்சை பச்சையாக தமிழில் எழுதினால் போதுமானது...அதாவது ஆபாசத்தளங்கள் போல.....அப்படி எழுதினால் குடும்பம் சீறும் சிறப்புமாக இருக்கும். அனைவரும் நம்மளை தெய்வமாக மதித்து பின்னாடியே வந்து விடுவார்கள் என்பது எல்லாம் என்ன மாதிரியான மனப்பான்மை....எனபது தெரியவில்லை....

இம்மாதிரி தீவிரவாதிகளின் அமைப்பாக செயல்படும் பொது தளங்களை உடனே கண்டறிந்து அரசும் உடனடியாக தடைசெய்யவேண்டும்.  இதில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள்....அனைவரும் அப்பாவி இளைஞர்கள்....இந்த பொது தமிழ் தளங்களின் நிர்வாகிகளும் இந்த தீவிரவாத அமைப்பில் உள்ளவர்களே....இதனால் தவறுதலான வழிகாட்டுதலுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் எனபது நிதர்சனம். இதுமாதிரி எழுதும் தளங்களை கண்டறிந்தால் உடனடியாக அரசிடம் புகார் அளியுங்கள். அதை சட்டம் வலியுறுத்துகிறது.

மாட்டிக்கொள்ளாதீர்கள்...சட்டமே மக்களின் பாதுகாப்பு.... நாடு வகுத்துள்ள சட்டதிட்டத்தின்படி எழுதினாலே போதுமானது. 
(இம்மாதிரி தள்ங்கள் அது மாதிரி ஒழுக்கமாக எழுத விடாது.(இதுமாதிரி சட்டவிரோதமாக செயல்படும் பொது தமிழ் தளங்களை அரசும் கண்காணித்து கொண்டுதான் வருகிறது...சட்டவிரோதம் என்று தெரிந்தபிறகு அதில் ஈடுபடாமல் தவிர்ப்பது  தான் நாட்டின் பாதுகாப்பிற்கும், நமது பாதுகாப்பிற்கும் நல்லது...ஏதாவது அசாம்பாவிதம் என்றால் அனைவருமே விசாரணைக்குள் வருவது நிச்சயம்...அது வெளியில் தெரியாது)

(இந்த தளங்களின் பட்டியலை அவ்வப்பொழுது பல தளங்களில் வெளியிடப்படுகிறது...இங்கும் .......தகவல் கிடைத்தவுடன்...)

இந்திய அளவில் புகார் அளிக்கும்....மின்னஞ்சல் முகவரிகள்.....இந்திய சைபர் புலனாய்வுப் பிரிவு....

(இவ்வளவு கஷடப்படவேண்டுமா? அதற்கு வலைத்தளத்திலேயே...நமது முழு சுதந்திரத்துடன், அளவுடன், நாகரிகமாக எழுதலாம்.) இதுவும் சரியான வழிமுறைதான்.... அங்கு (பொது தளங்களில்) பங்குபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே...(எப்படிபட்டவர்கள் எந்நெந்த நாட்டில் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளவேண்டாமா? என்பவர்கள்) இங்கும் வலைப்பதிவில் ஒரு நகல் எழுதி வைத்துக்கொள்ளலாம் அந்த தளம் சரியான சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கவில்லை என்றால் வலைப்பதிவில் பதிவிட்டுக்கொள்ளலாம்.)
...........தகவலுக்காக...

Thursday, 11 November 2010

டுமீல்!..டுமீல்!...டுமீல்!...டுமீல்!...டுமீல்!

''சட்டத்தை கையில் எடுத்து குற்றவாளிகளை போலீஸ் சுட்டுத்தள்ளுவது மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் என்ற சமூக ஆர்வலர்களின் குரலில் என்ன நியாயம் இருக்கிறதோ...


''சபாஷ் கோவை போலீஸ்! விரைவு நீதிமன்றம் வெச்சு அதிக பட்ச தண்டனையை மிகச்சீக்கிரம் வாங்கிக்கொடுப்போம்னு சொன்ன வார்த்தையை மிகச்சீக்கிரம் காப்பாத்திட்டாங்க போலீஸின் விரைவு நீதிமன்றம் கொடுத்த என்கவுன்டர் தீர்ப்பு நூற்றுக்கு நூறு சரி’’ என்று கொதிப்பு தணிந்தவர்களாக கோவை மக்கள் பெருமூச்சு விடுவதும் மறுக்க முடியாத உண்மை.

கடந்த சனிக்கிழமை மோகன் (எ) ராஜ் (எ) மோகன கிருஷ்ணனையும் அவனுடைய கொலைகார கூட்டாளி மனோகரனையும் ஆண்மை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கூப்பிட்டு வந்தபோதே, அவர்களைத் தாக்கித் தள்ளும் ஆவேசத்தோடு திரண்டு இருந்தார்கள் மக்கள். ‘’உன்பாடு என்பாடு’ என்றுதான் அவர்களை மீட்டுச்சென்றது போலீஸ். அடையாள அணிவகுப்பின்போது குழந்தைகள் முஸ்கன் மற்றும் ரித்திக் ஆகியோரின் பாட்டி மிகச்சரியாக மோகன கிருஷ்ணனை ‘இவன்தான் வண்டி ஓட்டிவந்தவன்’ என்று அடையாளம் காட்டிவிட, அப்போதே போலீஸ் ஒரு ‘முடிவு’ எடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.


கோர்ட் அனுமதியுடன் விசாரணைக்கு கூட்டி வந்திருந்த குற்றவாளிகளை வெரைட்டி ஹால் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிப்பதாகத்தான் திட்டம் என்ன நடந்ததோ?...’’ குற்றம் நடந்த இடங்களையும் பாதையையும் உறுதிப்படுத்துவதற்காக மோகன கிருஷ்ணனை பொள்ளாச்சி நோக்கி வேனில் கொண்டு சென்றது போலஸ். செவ்வாயன்று அதிகலை சுமார் ஐந்தரை மணி அளவில், ஓடும் வண்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு...முரண்டு பிடித்து...எஸ.ஐ முத்துமாலையின் இடுப்பில் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவரையும் மற்றொரு எஸ்ஐ-யான் ஜோதியையும் சுட்டு, தப்பிச் செல்லப் பார்த்தான் அவன். உடனிருந்த போலீஸார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டார்கள்’’ என்று என்கவுன்டர்’ பற்றி விவரிக்கப்படுகிறது.

கோவையில் இருந்து பொள்ளாச்சி போகும் வழியில் உள்வாங்கியிருக்கும் போத்தனூர் குப்பைக் கிடங்கு ஏரியாவில் இதெல்லாம் அரங்கேறியதாகவும் கூறுகிறார்கள். ‘’சுடப்பட்ட ‘சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கையிலும் வயிற்றிலுமாக காயம் பட்டதாகச் சொல்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

செத்தவனின் உடலைப்பார்ப்பதற்காக ஆஸ்பத்திரி மார்ச்சுவரி நோக்கி கூட்டம் திரள ஆரம்பித்தது. ஆர்வத்தோடு சடலத்தை மொபைலில் படம் பிடித்துக்க்கொண்டார்கள் பலர். மேகனகிருஷ்ணனின் வலது கண்ணை துளைத்துக்கொண்டு ஒரு தோட்டாவும், அதற்கு மேல் நெற்றியை பொத்தல் போட்டு மற்றொரு தோட்டாவும் சீறியிருந்தன. கால்களிலும் ரத்த காயத்தை நம்மால் பார்க்க முடிந்தது.

‘மற்றொரு குற்றவாளியான மனோகரன் இன்னொரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் எங்கள் பாதுகாப்பில்தான் இருக்கிறான் என்று கோவை கமிஷனர் சைலேந்திரபாபு தகவல் வெளியிட ‘’அவனையும் விசாரணைக்குத்தானே சிறையிலிருந்து கூட்டிட்டு வந்தாங்க? போலீஸ் துப்பாக்கியை பறிச்சு அவனும் தப்பிக்கப்பார்க்கலையா? என்று பொதுஜனம் பேசிக்கொண்டபோது...இவர்கள் குரலில் ஏக்கம், கோபம், கிண்டல் எல்லாமே சரிவிகிதமாக இருந்தது.

டெயில் பீஸ்;இத்தனைக்கும் நடுவே ‘மோகன்ராஜ் கதை இத்தனை சீக்கிரத்தில் முடிந்து போனதற்குப் பின்னால், வேறு சில பர்சனல் ரகசியங்களும் அமுங்கிப் போனதா?’ என்ற கேள்வியும் காவல்துறை வட்டாரத்தில் கிசுகிசுப்பாக எழுகிறது.

...எஸ்.சக்தி
....14.11.2010 வரை செய்திக்கான ஜூனியர் விகடன்....

Tuesday, 13 April 2010

பெரியார் வழியில் அடுத்த தமிழ் எழுத்துச் சீரமைப்பு



(தமிழ் எழுத்துச் சீரமைப்பு பற்றி முனைவர் வா.செ குழந்தைசாமி அவர்கள் தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தில் காணொளி காட்சி மூலம் தெளிவு படுத்தியவைகளை.......இங்கே பதியப்பட்டுள்ளது.)





தமிழ் எழுத்துச் சீரமைப்பு






தமிழர்கள் ஒரு மொழியினர் பல நாட்டினர் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர் தங்கள் அடையளத்தை காக்கவேண்டும்.



சிறுபான்மை மக்கள் தங்கள் அடையாளத்தை காக்கவேண்டும். தமிழர்களுக்கு நாடு அடையாளம் அன்று, மதம் அடையாளம் அன்று, அவர்கட்கு இருக்கும் ஒரே அடையாளம் தமிழ் மொழிதான். அவர்கள் தங்கள் அடையாளத்தைக் காக்கத் தமிழ் கற்கவேண்டும்.



தமிழ் மொழியின் 247 எழுத்துக்களைக் கற்க 107 குறியீடுகள் தற்பொழுது தேவைப்படுகின்றன.



ஆனால் ஒரு எழுத்துக்கூட குறையாது 247 எழுத்துகளையும் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும்.



இந்த மாற்றம் தான் தந்தை பெரியார் அவர்கள் முன் வைக்கும் தமிழ் எழுத்துச் சீரமைப்பின் குறிக்கோள்.



பெரியார் அவர்கள் முன்வைத்த தமிழ் எழுத்துச் சீரமைப்பு முழுவடிவம் பெற அடுத்த கட்டம், தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த படியாக வரவேண்டிய சீரமைப்பு. நாம் வாழ்வது கல்வியுகம் கல்வியறிவுதான் இன்றைய வளம்.



பண்டைகாலத்தில் நூற்றுக்கு இரண்டொருவரே கல்விகற்றனர். இன்று அனைவருக்கும் கல்வியென்பது, கல்வி கற்பது முக்கியமான குறிக்கோளாகும்.



பண்டைக்காலத்தில் கல்வியென்பதே மொழிக்கல்வியாகத்தான் இருந்தது. கல்வியென்பது பெரும்பாலும் மொழிக்கல்வியாக இருந்ததாலும் மிக மிகச் சிலரே கல்வி கற்றதாலும், மொழியைக்கற்பது அதிக நேரத்தைச் செலவிடுவது மொத்தத்தில் அன்று பெரிய சமுதாய இழப்பாக இருக்கவில்லை. இன்று பல துறைகளை கற்பதற்கு கல்வி ஒரு கருவி. நாம் நம் முன்னோர்கள் போன்று மொழியை கற்பதற்கு மட்டும் அதிக நேரத்தை செலவிடமுடியாது. எனவே மொழியைக்கற்பது எளிதாக்கப்படவேண்டும். இது ஒரு சமுதாயத் தேவை.



கல்வியின் முதற் கட்டம் எழுதப்படிக்கத் தெரியவேண்டும். முதலில் எழுத்துகளை கற்கவேண்டும். எழுத்துகள் எளிதாக இருப்பது கற்பதை ஊக்குவிக்கும். படிக்கத் தெரிந்தால் கல்வியில் ஆர்வம் எழும்.



தமிழர்கள் இன்று உலகம் தழுவி வாழும் மக்கள். தமிழ் நாட்டின் எல்லைகள் முன்பு வடவேங்கடம், தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் என்ற நிலையில் இருந்தன. இன்று இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லைகள் கடந்து பூமிப்பந்திடை அமைந்த நாடு பலவினும், அதாவது 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம் எந்தவொரு இடத்திற்கும் ஒரு அடையளம் வேண்டும்.



தமிழர்களுக்கு மதம் அடையாளமல்ல, சாதி ஓர் அடையாளமல்ல நாடும் அடையாளமல்ல. தமிழர்களுக்கு தமிழ் மொழி ஒன்றுதான் அடையாளம். தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்கள அடையாளத்தை காத்துக்கொள்ள தமிழ் கற்க வேண்டும்.



தமிழகத்தில் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். உலகத் தமிழ் குடும்பங்களும் தமிழ் கற்கவேண்டும்.



தமிழச்சாதிக்கு ஒரு வேண்டுகோள் தமிழர்களின் 20 சதவிகிதம் பேர் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். 75 மில்லியன் தமிழர்களில் ஏறத்தாழ 15 மில்லியன் தமிழர்கள் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். தமிழர்கள் பலநாட்டினர், பல மதத்தினர், ஆனால் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர்.



இன்றையத் தகவல் தொழில்நுடப உலகில் பெரும்பான்மையினரின் ஆக்கம் ஒரு சக்திவாய்ந்த திரவம் போன்றது. அதில் சிறுபான்மையினர் கரைந்து, கலந்து தமது அடையாளத்தை இழந்துவிடக்கூடிய பேராபத்து இருக்கிறது. தமிழர்கள் தங்கள் தனித்தன்மையைக் காக்க, அடையாளத்தை நிலைப்படுத்த தமிழர்க்கு இருக்கும் ஒரேக்கவசம் தமிழ் மொழிதான்.



உலகத்தமிழினம் தமிழ் மரபோடு, தமிழ் பாரம்பரியத்தோடு தொடர்பு அராது வாழவேண்டும். தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ் கற்க வேண்டும். அவர்கள் தமிழில் பரிச்சயம் வேண்டும். நாம் இதுவரை கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டுமானால் உலகத் தமிழினம் தமிழ் கற்பது இன்றியமையாதது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகள் தவிர, மற்ற நாடுகளில் தமிழ் கற்பது ஒரு பொருளாதார தேவையல்ல., அரசியல் தேவையுமல்ல. நாம் கூறியிருப்பது போல் தமிழை கற்பது கடினமாக இருந்தால் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் இளந்தலைமுறையினர் தமிழ் கற்க முன்வரமாட்டார்கள்.  

150 முதல் ஏறத்தாழ் 200 ஆண்டுகட்குள் பிஜி, பிரையோனியா, மொரிஷியஸ் போன்ற பலநாடுகட்கு சென்ற தமிழர்கள் தமிழை மறந்துவிட்டார்கள். இப்பொழுது இளந்தலைமுறைக்கு தமிழ் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்டிரேலியா போன்று அண்மைத் தலைமுறைகள் குடியேறிய நாடுகளில் அடுத்த தலைமுறை தமிழை இழந்து வருகிறது. இவர்கள் தமிழ் கற்க தமிழர்களாய் வாழ தமிழ் கற்பதை இயன்றவரை எளிதாக்க வேண்டும். அதற்கு முதற்படியாக தமிழ் எழுத்துகள் கற்பதை எளிதாக்கவேண்டும்.



தமிழகத்தில் ஆண்டுதோறும் பதினைந்து இலட்சம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதற் கட்டமாக தமிழ் எழுத்துகளை கற்கவேண்டும். எனவே பதினைந்து இலட்சம் குழந்தைகள் தமிழ் எழுத்துகளை கற்பதை எளிதாக்குவது மாபெறும் கல்விப்பணியாகும். மாபெறும் சமூதாயச் சேவையாகும். தமிழிலுள்ள 247 எழுத்துகளை கற்பதற்கு இன்று குழந்தைகள் 107 குறியீடுகளை கற்கிறார்கள். 247 எழுத்துகளை ஒரெழுத்துகூட குறையாமல் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும். இதைச் செய்வது பெரியார் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அவசியமான கட்டம். இங்கு நாம் பரிந்துரைப்பது தமிழ் வரிவடிவத்தில் சீர்மையை, விரைமையை, கற்பதில் விரைவை ஏற்படுத்தும் மாற்றமாகும். உண்மையிலேயே மிகச்சிறிய மாற்றம். நாம் இந்த கருத்துரையை பரிந்துரைப்பது தமிழில் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை குறிப்பிட வரிவடிவம் அல்லது எழுத்து அல்லது குறியீடு, ஆகிய சொற்களில் ஏதாவது ஒன்றை வேறுபாடின்றி ஒரு பொருள் பல சொல் என்ற வகையில் பயன்படுத்துகிறோம்.



‘’மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை’’ இது டார்வினின் தத்துவம். காலத்துக்கேற்ப எளிமை, சீர்மை, விரைவு கருதி மாற்றங்கள் நாம் விரிம்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்வில் இடம்பெற்றுவருகின்றன. ஒருமொழிக்கு ஒலி நிரந்தரமானது. எழுத்துகள் எனபவை ஒலிகளுக்கு நாம் உருவாக்கும் குறியீடுகள் மாறக்கூடியவை.



கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் வரிவடிவம் அதாவது எழுத்துகள் மாறியே வந்திருக்கின்றன.



தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஒலி எழுத்துகளை இரு பெரும் பிரிவுகளாகப்பார்க்கலாம்.

1, முதன்மை எழுத்துகள்

2. சார்பு எழுத்துகள்



அவை பின்வருமாறு



முதன்மை எழுத்துகள்

உயிர் எழுத்துகள் 12

மெய் எழுத்துகள் 18

ஆய்த எழுத்துகள் 1

---------------------

மொத்த முதன்மை எ.ழுத்துகள் 31

---------------------



சார்பு எழுத்துகள்



உயிர் மெய் எழுத்துகள் 216





மொத்த தமிழ் ஒலி எழுத்துகள் 247 (முதன்மை எழுத்துகள் + உயிர்மெய் எழுத்துகள்)



ஐரோப்பிய மொழிகளிலும், இந்திய ஆசிய மொழிகளிலும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமே உள்ளன. இந்திய மொழிகளில் மட்டும் தான் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமின்றி உயிர்மெய் எழுத்துகள் என்ற தனி வரிவடிவம் கொண்ட எ.ழுத்துகள் இருக்கிறது. அதனால் எழுத்துகளின் எண்ணிக்கை அதிமாகிவிட்டது.



தமிழில் உள்ள 216 உயிர் மெய் எழுத்துகள் எளிமை, சீர்மை, விரைவு என்ற மூன்று நிலைகளிலும் பயணம் செய்து எவ்வாறு இனிவரும் காலத்திற்கு ஏற்ப அமைப்பை பெறலாம் என்பதை எடுத்துக்கூறுவதே நாம் பரிந்துரைக்கும் எழுத்துச் சீர்மையின் நோக்கமாகும்.



தமிழ் எழுத்துகளை கற்பதற்கு இப்பொழுது தேவைப்படும் குறியீடுகள் 107 அவை பின்வருமாறு.....



முதன்மை எழுத்துகள்



உயிர் எழுத்துகள்

அ முதல் ஔ வரையுள்ள உயிர் எழுத்துகள். இவற்றில் ஔ கூட்டெழுத்து எனவே பனிரெண்டு ஒலிகளுக்கு தேவைப்படும் குறியீடுகள் பதினொன்று.



மெய் எழுத்துகள்

க முதல் ன வரை பதினெட்டு இவற்றுடன் ஒரு புள்ளி . ஆக 19 குறியீடுகள். ஆயுத எழுத்து ஒன்று. மொத்த குறியீடுகள் முப்பத்தி ஒன்று.



சார்பு எழுத்துகள்

அதாவது உயிர் மெய் எழுத்துகள் தமிழில் உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவத்தில் ஒரு சீர்மை இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் உள்ளது.



தமிழில் அகரமெய் தவிர்த்த ஏழு வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன. இந்த எட்டு வரிசைக்குத் தேவைப்படும் புதியக்குறியீடுகள்...

ஆகாரக் குறியீடு (‘’கால் எழுத்து’’)

எகரக்குறியீடு (‘’ஒற்றைக்கொம்பு’’)

ஏகாரக்குறியீடு (‘’இரட்டைக் கொம்பு’’)

ஐகாரக்குறியீடு (‘’இரட்டை சுழி’’)



ஆக நான்கு மட்டுமே!

தமிழில் அகர மெய்தவிர்த்த ஏழு வரிசைகளுக்கு தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன.



அகரம் ‘க’ முதல் ‘ன’ வரை

ஆகாரம் ‘கா’ முதல் ‘னா’ வரை (ஆகாரக் குறியீடு கால் எழுத்து)

எகரம் ‘கெ’ முதல் ‘னெ’ வரை (எகரக் குறியீடு ஒற்றைக் கொம்பு)

ஏகாரம் ‘கே’ முதல் ‘னே’ வரை (ஏகாரக் குறியீடு இரட்டைக்கொம்பு)

ஐகாரம் ‘கை’ முதல் ‘னை’ வரை (ஜகாரக்குறியீடு)

ஒகரம் ‘கொ’ முதல் ‘னொ’ ஒரை (ஒகரக் குறியீடு (எகரக்குறியீடு + ஆகாரக் குறியீடு))

ஓகாரம் ‘கோ’ முதல் ‘னோ’ வரை (ஓகாரக்குறியீடு (ஏகாரக்குறியீடு+ஆகாரக்குறியீடு))

ஔகாரம் ‘கௌ’ முதல் ‘னௌ’ வரை (ஔகாரக்குறியீடு (எகரக்குறியீடு+ வரிவடிவம்)

ஆக எட்டுவரிசைகளான 147 எழுத்துகளுக்கு நான்கு குறியீடுகள் போதும். (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஜகாரம்)



தனித்தனி வரிவடிவம் தமிழ் எழுத்துகளுக்கு இருப்பதெல்லாம் நான்கு வரிசைகளுக்கு மட்டும் தான் அது..

இகரம் ‘கி’ முதல் ‘னி’ வரை

ஈகாரம் ‘கீ’ முதல் ‘னீ’ வரை

உகாரம் ‘கு’ முதல் ‘னு’ வரை

ஊகாரம் ‘கூ’ முதல் ‘னூ’ வரை



ஆக இந்த நான்கு வரிசைகளுக்கு தேவைப்படும் எழுத்துகள் 72

இநனோடு சேர்த்து மொத்த குறியீடுகள் 107.



தற்பொழுது உள்ள வழக்கில் 247 தமிழ் எழுத்துக்கள் கற்பதற்கு 107 வரிவடிவங்கள் தேவைப்படுகின்றது..



தமிழில் உயிர் மெய் எழுத்துகள் 216



அதில் உயிர் மெய் இகர, ஈகார, உகர, ஊகார நான்கு வரிசைகள் தவிர மீதமுள்ள 8 வரிசைகளில் உள்ள 144 எழுத்துகளுக்குத் தேவைப்படும் குறியீடுகள் 4. (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஐகாரம்)



இதைப்போலவே இகர, ஈகார, உகர, ஊகார உயிர் மெய் வரிசைகட்கு உயிர்மைக்குறியீடுகளைப் பயன்படுத்தினால் 4 உயிர்மெய்குறியூடுகள் போதும். இதனால் 68 வரிவடிவங்கள் குறையும்.

எடுத்து வைத்த உத்தியைச்செய்லபடுத்த 4 புதிதாக நான்கு உயிர் மெய் குறியீடுகள் தேவை. நாம் பயன்படுத்தக்கவைகளாக ஒரு பரவலான கருத்துக்கணிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இவற்றின் உயிர் மெய்குறியீடுகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.





இதனால்,

உயிர் எழுத்திற்கும் ஆயுதத்திறகும் 12 குறியீடுகள்

உயிர் மெய் அகரத்திற்கு 18 குறியீடுகள் மற்றும்

உயிர்மெய் குறியீடுகள் ஒரு புள்ளியுடன் சேர்த்து 9 ஆக மொத்தம் 39 குறியீடுகள் மட்டும் போதும்.



நாம் விளக்கும் இந்த மாற்றங்கள் ஏற்றுகொள்ளப்பட்டால்

30 முதன்மை எழுத்துகள் 9 உயிர் மெய் குறியீடுகள் ஆக 39 வரிவடிவங்களை கற்றாலே போதுமானது. இவற்றில் 4 நான்கு உயிர் மெய் குறியீடுகள் மட்டும் தான் புதியவை.. இவற்றை கற்பது மிகவும் எளிது.



நாம் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு குறியீடுகள் ஒரு கருத்துகணிப்பின் மூலம் உருவாக்கப்பட்டவை. இவை தமிழ் வடிவத்தோடு இயைந்து வருவதோடு தேவைப்பட்டால் வேண்டிய அளவு மாற்றப்படலாம். கொடுத்திருப்பது முடிந்த முடிவு அல்ல. முக்கியமாகத் தேவைப்படுவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகட்கும் மற்ற வரிசைகளைப்போலவே (ஆகார, எகர,ஏகார, ஐகார குறியீடுகளை பயன்படுத்தும்) குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்ற கொள்கையினை ஏற்பது தான்.



தமிழில் உள்ள 247 எழுத்துக்களை எழுதுவதற்கு ஒரு எழுத்துக்கூட குறையாமல் எழுதுவதற்கு இந்த 30 குறியீடுகள் போதும். நாம் முன்வைத்த சீர்திருத்தத்தை ஏற்று 39 எழுத்துகளை கற்றபின் தமிழ் கணக்கை குழந்தைகள் எழுதுவது எவ்வளவு எளிது என்பதை படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது....





தமிழ் வரிவடிவத்தை கற்பதும் தொடர்ந்து தமிழ் மொழியைகற்பதும் எளிதாக்கப்படும், ஊக்குவிக்கப்படும்.....

உலகத் தமிழர்கள் தமிழ் மொழியோடு, தமிழ் இலக்கிய உலகோடு தொடர்பறாது வாழ பெரிதும் உதவும்.



ஒரு மொழிக்கு உண்மையான வலிமை என்பது இலக்கணம், இலக்கியம் என்பதை விட பேசும் மக்களின் எண்ணிக்கை தான். அந்த எண்ணிக்கையை காப்பதற்கு முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம், எந்த விலையும் கொடுக்கலாம்.



பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம் எளியது, சிறியது, இயற்கையானது. மண்ணில் இருக்கும் தமிழ் வானில் பறக்க இறக்கை கொடுப்பது போன்றது. நாம் எடுத்து வைத்த ஒரு எளிய, சிறிய மாற்றத்தின் மூலம் குழந்தைகள் கற்க வேண்டிய எழுத்து வடிவங்கள் அதாவது குறியீடுகள் 107 இலிருந்து 39 தாக குறைகின்றன.



இது போன்ற மாற்றம் தமிழ் மொழிக்கு புதியது அல்ல. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் மாறியே வந்திருக்கிறது. ஒலி நிரந்தரமானது. வரிவடிவம் மாறக்கூடியது.



18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் செய்த மாற்றங்கள் எகரத்திறகும் ஒகரத்திற்கும் இருந்த புள்ளிகளை நீக்கிவிட்டு எகரத்தில் ஒரு சிறு கோடு சேர்ப்பதன் மூலம் ஏகாரமாகவும், ஒகரத்திற்கு சுழிப்பதின் மூலம் ஒகாரமாகவும் அவர் உருவாக்கினார். பனை ஏடுகளில் புள்ளி வைக்கும் சிரமத்தை தவிர்க்க அவர் இவ்வாறு செய்திருக்கலாம்.



சென்ற நூற்றாண்டில் பெரியார் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு (படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல்) உயிர் மெய் ஆகார வரிசைகளில் மூன்று எழுத்துகளையும், உயிர் மெய் ஐகார வரிசைகளில் நான்கு எழுத்துகளையும் சீர்மையை கொண்டு வந்தது. இந்த மாற்றங்களினால் தமிழ் வரிவடிவம் ஒழுங்கு பெற்றதேயன்றி தமிழுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. நாம் பரிந்துரைக்கும் சீரமைப்பில் உயிர் மெய் இகர, ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர, ஊகார வரிசைகளிலும் தனித்தனி எழுத்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயிர் மெய் இகர ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர ஊகார வரிசைகளிலும் மற்ற உயிர் மெய் வரிசைகளைப்போலவே உயிர் குறியீடுகளை பயன்படுத்துவதை பரிந்துரைத்திருக்கிறோம் இதனால் இந்த நான்கு வரிசைகளிலும் ஒரு சீர்மை யூனிபார்மட்டி வருகிறது. 72 வரிவடிவங்களை கற்பதற்கு பதிலாக நான்கு குறியீடுகளை கற்கவேண்டியிருப்பதால் கற்பது எளிதாகிறது. கற்பதில் விரைவு இடம் பெறுகிறது. 


இப்படிபற்ற மாற்றத்தை நாம் தான் முதன் முதலில் செய்ய சொல்லுகிறோம் என்பதில்லை. நமது முன்னோர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் சான்றுகள் பின்வருமாறு....

நமது முன்னோர்கள் உயிர் மெய் இகரத்திற்கு குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை படத்திலுள்ள வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.



உயிர்மெய் ஊகாரத்திறக்கும் குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.



உயிர்மெய் ஐகாரத்திற்கு குறியீட்டை தமிழக அரசு செய்த சீர்திருத்திற்கு முன்பே நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை பள்ளன் கோவில் செப்பேட்டில் காணலாம்.



உயிர்மெய் எழுத்துகளன்றி உயிர் எழுத்துக்கு கூட உயிர் குறியீட்டை பயன் படுத்தியிருப்பதை காணலாம்.



கிரந்த எழுத்துக்களுக்கும் இது போன்ற உயிர் மெய்க் குறியீடுகளை பயன்படுத்துகிறோம்.



இகர, உகர வரிசைகளில் உயிர் மெய் எழுத்துகளுக்கு உயிர் மெய் குறியீடுகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை செப்பேடுகளில் கண்டோம். என்வே எவ்வித தயக்கமுமின்றி இந்த நான்கு வரிசைகட்கும் சீரமைக்க உயிர் மெய்குறியீடுகளை பயன்படுத்தலாம் என்பது இயல்பாகவே தோன்றும் சீரமைப்பாகும்.



இதில் புரட்சிகரமான அம்சம் ஏதுமில்லை. இதனால் ஏற்படும் நன்மை தான் புரட்சிகரமானது. இதில் கற்பனை செய்யப்படும் அளவில் தமிழுக்கு ஏற்படும் இ.ழப்பு என்று ஏதுமில்லை.



டார்வினின் தத்துவம் வலியது வெல்லும் என்பதன்று. சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் உயிர் வெல்லும் மாற மறுப்பது மறையும் என்பது தான்.



நாம் இங்கு எடுத்து வைத்திருக்கும் மாற்றம் நடைமுறைப்படுத்தபட்டால் பெரியார் அவர்கள் எடுத்துவைத்த தமிழ் எழுத்து சீரமைப்பு முழுமை பெறும்.



நாம் கூறும் மாற்றம் மிகவும் எளியது. அளவில் சிறியது ஆலின் விதை போன்றது. அதன் பயன் உண்மையிலேயே ஆல் போன்றது.



தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம்



யாதும் ஊரே யாவரும் கேளிர்  
என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பாடிய கவிஞன் கணியன் பூங்குன்றன் ஒரு தீர்க்கதரிசி. இன்று நாம் குளோபல் வில்லேஜ் அதாவது குவலயக்கிராமம் என்று பேசுகிறோம். உலகு தழுவி வாழும் தமிழினம் இன்று அந்த குவலயக்கிராமத்தில்... குவலயக்குடும்பமாக... குளோபல் பேமிலியாக உருவாகியிருக்கிறது. தமிழர்களை உலகம் இன்று ஒரு மாகாணத்தில் வாழும் மக்களாக பார்க்கவில்லை. பொதுவாக உலகுத் தழுவி வாழும் மக்களாக, குறிப்பாக தெற்கு ஆசிய மக்களாக பார்க்கிறார்கள்.



இந்திய மொழிகளில் வங்கமும் உருதும் அணைடை நாடுகளில் ஆட்சி மொழிகள். அவற்றை விடுத்து மற்ற மொழிகளை மட்டும் நாம் இந்திய மொழிகள் என்று குறிப்பிடுவோம்.



சீன வானொலி 42 மொழிகளில் ஒளிபரப்புகிறது. அவற்றுள் இந்திய மொழிகள் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மட்டும் தான். காரணம் தமிழ் தெற்கு ஆசிய மொழி. சௌத் ஏசியன் லேங்குவேஜ் என கருதப்படுகிறது. உண்மையில் இன்று அது உலக குடிமக்களின் மொழி.

பிபிசி வானொலி உலகு அறிந்தது. அது 32 மொழிகளில் ஒளிபரப்புகிறது. பிபிசி வானொலியும் இந்தாய மொழிகளில் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் தான் ஒளிபரப்பு செய்கிறது. முதலில் கூறிய அதே காரணங்களுக்காகத்தான்.



அண்மைக்காலம் வரை யூனஸ்கோ நிறுவனம் கூரியர் என்ற மாத இதழை 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட்டு வந்தது. அதில் இடம் பெற்ற இந்திய மொழிகள் இந்தியும் தமிழும் தான்.



இன்று தமிழகத்தில் சில தொலைக்காட்சிகள் உங்கத் தமிழர் செய்திகள் என்ற செய்தி ஒளிபரப்புச் செய்கின்றன. சில தினசரி பத்திரகைகள் வாரம் ஒருமுறையாவது உலகத் தமிழர் செய்திகள் என்று வாரம் ஒருமுறையாவது செய்திகள் வெளியிடுகின்றன. இவையனைத்தும் தொடர வேண்டுமானால், வலிமைப்படவேண்டுமானால், விரிவடைய வேண்டுமானால், உலகத் தமிழ் மக்கள் தமிழோடு, தமிழ் மரபோடு தொடர்பு உடையவர்களாக வாழ.வேண்டும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் உலகத் தமிழர்கள் தமிழ் கற்க உதவுகிறது. எழுத்து சீர்திருத்தம் தமிழ் கற்க பெரியளவில் எளிதாக்கும். குறிப்பாக உலகத்தமிழர்கள் தமிழ் கற்பதை எளிதாக்கும். அவர்கள் தமிழ் கற்பது தமிழ் இனத்தின் எதிர்காலத்திறகு வளம் சேர்க்கும், வலிமை சேர்க்கும்.



சங்க்காலக் கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடினான். தற்காலத் தமிழர் புவனமும் மானுடர்க்கு பொது என்று வாழ்கிறார்கள்.



தமிழர்கள்

ஒரு மொழியினர்,

பல நாட்டினர்,

எல்லா நட்டிலும் சிறுபான்மையர்.

தமிழர்கட்கு தாங்கள் இன்று பன்னாட்டுச் சிறுபான்மையர் என்ற பார்வை வேண்டும். விழிப்புணர்வு வேண்டும்.



புவனமும் மானுடர்க்கு பொதுவெனும் தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம்.



ஒரு மொழிக்கு உண்மையான வலிமை

இலக்கணம் இலக்கியம் என்பதை விட

பேசும் மக்களின் எண்ணிக்கைதான்.

அந்த எண்ணிக்கையை காப்பதற்கு

முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம்.

எந்த விலையும் கொடுக்கலாம்.



பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம்

எளியது, சிறியது, இயற்கையானது.

மண்ணில் நடக்கும் தமிழ் வானில் பறக்க

இறக்கை கொடுப்பது போன்றது.


.........முனைவர் வா.செ.குழந்தைசாமி

Thursday, 1 April 2010

பெண்ணுரிமைச் சட்டங்கள்-2











இயல்புப் பாதுகாவலர்;

இந்து மதத்தைச் சேர்ந்த இளவருக்கே, அல்லது அவருடைய சொத்துக்கோ, இயல்புப் பாதுகாவலர் என்பவர்.

திருமணமாகாத பெண்ணாக இருந்தால், தந்தை இயல்புப் பாதுகாவலர் ஆவார்.

ஐந்து வயது நிறைவடையாத பெண் இளவரைப் பொறுத்த வரை சாதாரணமாக, தாயின் பொறுப்பில்தான் அத்தகைய பெண் இளவர் இருந்தாக வேண்டும்.

முறைதவறிப் பிறந்த திருமணமாகாத பெண்ணாக இருந்தால், அவருடைய கணவர் இயல்புப் பாதுகாவலராவர்.

தந்தை உயிரோடு இருக்கும்போது, தாயார் இயல்புப் பாதுகாவலராக இயங்க முடியுமா?

இளவரையும் இளவரின் சொத்துக்களையும் பாதுகாப்பதில் அக்கறைக் கொள்ளாது இருந்தால், இளவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தந்தை முற்றிலும் பாராமுகமாக இருந்தால், தாய், தந்தையர் இடையே ஏற்படும் உடன்பாடு காரணமாக, தாயாரின்  முழுப்பொறுப்பில் இளவர் விடப்படுவாரானால்,
1. தாயாரும் இளவரும் வசிக்கும் இடத்தைவிட்டு  தந்நை சொலைவில் இருப்பதன் காரணமாகவோ, அல்லது
2. உடல் ரீதியாகவோ, அல்லது மன ரீதியாகவோ, தகுதியிழந்து விட்டதின் காரணமாகவோ,
3. தந்தை இளவர் நலத்தில் அக்கறை கொள்ள இயலாதிருப்பாரானால்,

மேற்கண்ட சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி (AIR 1999 SC 1149) தந்தை உயிருடன் இருக்கும்போதே, தாயார் இயல்புப் பாதுகாவலராக இயங்க முடியும்.

இச்சட்டம்-
சமயத்தால் இந்துவாக இருப்போருக்கப் பொருந்தும், வீரசைவர், லிங்காயத் அல்லது ஆரிய சமாஜம், பிரார்த்தனா, சமாஜம், பிரம்மோ சமாஜத்தை பின்பற்றுகிறவர் உள்ளடங்கலாக, இந்து சமயத்தச் சார்ந்தவர்களுக்குப் பொருந்தும், புத்த மதத்தையோ, அல்லது சீக்கிய மதத்தையோ சார்ந்தவர்கள் மற்றும், முஸ்லீம், கிருத்துவ, பார்சி மற்றும் யூத மதத்தைச் சாராதவர், இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் குடியிருந்தால், அத்தகையவருக்கும் பொருந்தும்.


இயல்புப் பாதுவாலருடைய அதிகாரங்கள்;
1. இந்து மதத்தைச் சார்ந்த இளவருடைய இயல்புப் பாதுகாவலர், அந்த இளவரின் நன்மைக்காக அவசிநமான, நியாயமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் பெற்றிருப்பார். இளவரின் சொத்தைப் பெற்றுத்தருவதற்கும், பாதுகாப்பதற்கும், அதே போன்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார். ஆனால், இளவரைக் கட்டுப்படுத்தும் வகையில் உடன்பாடு எதுவும் செய்ய அதிகாரம் பெற்றிருக்கமாட்டார்.

2. இயல்புப் பாதுகாவலர், நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி, இளவருக்குரிய சொத்தை அடைமானம் வைக்கவோ, விற்கவோ, தானம் செந்நவோ, உரிமை மாற்றம் செய்யவோ கூடாது. 5 வருட காலத்திற்கு அதிகமாக சொத்தை குத்தகைக்கு விடுதல் கூடாது. கெண் இளவர், 18 வயது பூர்த்தியடைந்த பின்பு, மேலும் ஒரு வருடத்திற்கும் கூடுதலாக குத்தகைக்கு விடுதல் ஆகாது.

3. மேற்கூறிய உட்பிரிவு (1) மற்றும் (2)க்கு முரணாக ஏதேனும் அசையாச்சொத்தை இயல்புப் பாதுகாவலர் விற்றால், அந்த விற்பனையை செல்லத்தகாததாக ஆக்கலலாம், பெண் இளவரோ, அல்லது அவரின்கீழ் உரிமை உரிமை கோருபவரோ, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

4. பெண் இளவருக்கு அவசியம் என்றாலொழிய, பயனளிக்ககூடியதென எளிதில் தெரிந்தாலொழிய, நீதிமன்றம், உட்பிரிவு (2)ல் கூறப்பட்ட காரியங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.

உயில் வழிப் பாதுகாவலர் மற்றும் அவருடைய அதிகாரங்கள்;
 ஒரு இந்து சமயத்தைச் சார்ந்த தந்தை, தன்னுடைய சட்டப்பூர்வமான பெண் இளவர் குழந்தைகளுக்கு, அல்லது அவர்களது சொத்துக்களுக்கு உயிலின் மூலம் ஒரு பாதுகாவலரை நியமிக்க முடியும். அப்பாதுகாவலர், உயில் வழிப் பாதுகாவலர் எனப்படுவார்.தந்தை இறந்து, தாய் உயிருடன் இருந்தால், உயில்வழிப்பாதுகாவலர் நியமனம் செல்லாது. ஏனெனில் தாய் இரண்டாவது இயல்பு பாதுகாவலர் ஆவார். தந்தை எந்த உயில் சாசனமும் எழுதாமல் இறந்துவிடாடல், தாய் உயில் மூலம் பாதுகாவலரை நியமிக்க முடியும். தாயும் உயில்வழிப்பாதுகாவலரை நியமிக்காமல் இறந்துவிட்டால் தந்தை எழுதிவைத்த உயில்வழிப் பாதுகாவலர் நியமனம், இயக்கம் பெறும்.

இயல் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்து விதவைப்பெண் ஒருவள் இளவருக்காகவோ, அல்லது அவரின் சொத்துக்களுக்காகவோ அல்லது இரண்டிற்காகவோ, பாதுகாவலரை நியமிக்க முடியும். அதே போன்று, இயல்புப் பாதுகாவலராக இயங்க, தந்தை தகுதி இழந்தவராயின், இயல்புப் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்துத் தாய் ஒருவள், மேற்கண்ட நோக்கங்களுக்கு, உயில் வழிப் பாதுகாவலரை இயல்புப் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்து தாய் ஒருவள் மேற்கண்ட நோக்கங்களுக்கு உயில்வழிப் பாதுகாவலரை நியமிக்க முடியும். முறைதவறிப்பிறந்த இளவர் குழந்தைகளுக்கு, இயல்புப் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்துப் பெண் ஒருவள், இந்த இளவர்களுக்கோ, அல்லது அவரின் சோத்துக்கோ, அல்லது இரண்டுக்குமோ, உயில் வழிப் பாதுகாவலரை நியமிக்கமுடியும்.

அவ்வாறு உயில் சாசனம் மூலம் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், இளவரின் தந்தையோ, அல்லது தாயோ இறந்தபிறகு, இளவர் குழந்தைகளுக்குச் சட்டப்படியான பாதுகாவலராக, உயில் மற்றும் சட்டப்படியான அனைத்து அதிகாரங்களையும் பெற்று இயங்க முடியும்.

அவ்வாறு உயில் சாசனம் மூலம் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், இளவரின் தந்தையோ, அல்லது தாயோ இறந்தபிறகு இளவர் குழந்தைகளுக்குச் சட்டப்படியான பாதுகாவலராக, உயில் வழி மற்றும் சட்டப்படியான அனைத்து அதிகாரங்களையும் பெற்று இயங்க முடியும்.

அந்த இளவர் பெண்ணின் பாதுகாவலருடைய அதிகாரங்கள், அப்பெண்ணுக்குத் திருமணம் ஆனதும் அற்றுப்போகும்.
ஒரு இளவர் மற்றொரு இளவருக்கோ, அல்லது அவருடைய சொத்திற்கோ, பாதுகாவலராக இருக்க முடியாது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, எவரும் நடைமுறையில் மெய்யான பாதுகாவலர் என்ற அடிப்படையில், இந்து இளவருடைய சொத்திற்கோ, அல்லது இளவலருக்கோ, பாதுகாவலராக இயங்க இயலாது.


நீதிமன்றத்தின் அதிகாரங்கள்;

கூட்டு குடும்பச் சொத்தில் இந்து இளவருக்குப் பங்கு இருந்து, அக்கூட்டுக் குடும்பச் சொத்தை, அக்கூட்டுக் குடும்பத்தின் தலைவர் பாரமரித்து வரும் பட்சத்தில், அக்கூட்டுக் குடும்பச் சொத்தில்  இளவருக்கு உண்டான பிரிவினையாகாத பங்கின்மூதி, இளவலின் பாதுகாவலர் எந்தவித உரிமையும் கொண்டாட முடியாது. ஆனால் உயர்நீதிமன்றம், அத்தகைய பிரிவினையாகாத பங்கிற்குக் கூட பாதுகாவலரை நியமிக்கும் அதிகாரம் பெற்றிருக்கும்.

நீதிமன்றும், ஒரு நபரை, இந்து இளவருடைய பாதுகாவலர், என்று அறிவிக்க, அல்லது நியமிக்க வேண்டுமெனில், அந்த இளவரின் நலன் மட்டுமே அதற்கு அடிப்படையாக இருக்கவேண்டும்.

இளவர் ஒருவரைப் பொறுத்து செய்யப்படும் பாதுகாவலர் நியமனம், அந்த இளவரின் நலனுக்கு உக்ந்ததல்ல, என்று நீதிமன்றம் கருதினால், சட்டத்தின் வகைமுறைகளின்படி, தானே பாதுகாவலராக இருக்க வேண்டும், என்று யாரும் உரிமை கோர முடியாது.


......தொடரும்.....பெண்ணுரிமைச் சட்டங்கள்-3

Tuesday, 30 March 2010

பெண்ணுரிமைச் சட்டங்கள்-1





மக்களுக்கு தேவையான சட்டங்கள் பற்றி மக்கள் பலர் அறிந்து கொள்ளாமல் இருப்பதால் பலர் அறியாமையினால் பல இன்னல்களுக்கு ஆளாவதும் தொடர்வதும் வாடிக்கையாகி உள்ளதை நாம் அறியாமல் இல்லை. பெண்களுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன பாதுகாப்புகள் உள்ளது என்பது பெண்கள் பலருக்கும் தெரிவதில்லை. சட்டம் படித்தவர்களுக்கு மட்டும் தான் எல்லாமும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. சட்டங்கள் முதன் முதலில் ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்டது தான். காலப்போக்கில் அந்தந்த நிலப்பரப்பில் வாழும் குழுக்களால் சீர்செய்யப்பட்டு சட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் படியே சட்டக்கல்வியும் மனித சமூகத்தால் சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான்.

அனைவரும் நமக்கு என்னென்ன சட்டங்கள் நமக்கு பாதுகாப்பாக உள்ளன் என்பதை அறிந்தாலே நமக்கு ஒரு கூடுதல் பலம் கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்படும். நம்மை எதிர்கொள்கின்றவர்களும் சிறிது அச்சத்துடனே எதிர்கொள்வர். ஏன் காவல் நிலையங்களை அணுகுவதற்கு கூட சில அத்தியாவச சட்டங்கள் தெரிந்திருக்குமேயானல் அவை நமக்கு கூடுதல் பலம். (பலருக்கு காவல் நிலையத்தில் எப்படி புகார் மனு எழுத வேண்டும், என்பதெல்லாம் தெரியாது, இது எதிராளிக்கு சாதகமாக போய்விடும்) 

சட்டங்கள் நமக்கு பாதுகாப்பு அரண்களாக இருக்கின்றன என்பதை அறியாமலே பலர் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படி இன்னல்களுக்கு ஆளாகிறவர்கள் கூட சட்டங்களை அறியாததினால் நமக்கு விதித்தது அவ்வளவு தான் என்று விதியின் பேரில் வாழ்க்கை நடத்துவபவர்களும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

மனிதன் எப்போழுதும் நிம்மதியான வாழ்க்கை வாழவே ஆசைப்படுவான். ஒரு சிறு இடர்பாடுகளை கூட மனித மனம் விரும்புவதில்லை. ஆனால் அது சாத்தியமில்லை எந்த கட்டத்திலும் அவனை இடர்பாடுகள்  தொடர்ந்து சந்திக்க முயற்சி செய்து கொண்டே இருக்கும். அப்பொழுது நமக்கு இந்த சட்ட அறிவு சமயத்தில் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வழக்குரைஞரை சந்திக்கும் பொழுது கூட நமக்கு சட்டங்கள் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது. தவிர ஒரு நபரின், சாமான்யரின், நடுநிலையான, விருப்பு வெறுப்பற்ற (பக்க சார்பற்ற) கருத்துக்கள், பேச்சுக்களே சட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளதை கண்டு நம்மை  நாமே உணர்ந்து கொள்ளலாம், நம்மை இன்னும் மேன்மை படுத்திக்கொள்ளலாம்.

தவிர சட்டங்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவே வகுக்கப்பட்டுள்ளன ஆகையால் அவற்றை தெரிந்து கொள்வதில் நமக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் என்ற நோக்கோடு இந்த பெண்களுக்கான சட்டத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் என்பது நாம் அறியாமலில்லை, பெண் கேலி வதையிலிருந்து (ஈவ் டீஸ்), திருமணம், மாமியார், மாமானார், மருமகள், கணவன், மாமனார், நாத்தனார்...போன்றவர்களால் ஏற்படும் இன்னல்கள், வரதட்சணையால் ஏற்படும் கொடுமைகள், ....அதனால் வெடிக்கும் ஸ்டவ்கள்...தற்கொலைகள், பாலியல் கொடுமைகள்...இன்னும் சமூகத்தில் இவையெல்லாம் மலிவாகத் தொடர்வது தான்.


ஆணுக்கும் இது தேவையான ஒன்று தான். பெண் என்ற பாலினத்தோடு ஆணும் சம்பந்தப்பட்டிருப்பதால், நம் தந்தை ஆண் தானே.  நம் உடன் பிறந்த  சகோதரன் ஆண் தானே. பெண் பாதிக்கப்படும்பொழுது பல நேரங்களில் ஆண் பாலினமான தந்தைக்கே (உடன்பிறப்புக்கும்) பல விஷயங்கள் தெரியாமல் திண்டாடுவதையும் கண்டிருக்கிறோம். ''வேண்டாம்மா விட்டு விடு நமக்கேன் வம்பு'' என்று  வலிய வருகின்ற இன்னல்களையும் தாங்கி கொண்டு செல்கின்ற அப்பாக்களையும், உடன் பிறப்புக்களையும் காணமலில்லை. 

கணவனும் ஆண்தான் அவரும் இதை போன்றதோரு நிலையை சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றிருப்பார். மனைவி வேலை பார்க்கின்ற அலுலகங்களில் உயர் அதிகாரிகளால் ஏற்படும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அனைத்தையும் தெரிந்தும் வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதற்காக பொறுத்துக் கொள்ளச் சொல்லுகின்ற கணவன்மார்களும் உண்டு. ஆகையால் இது அனைவருக்கும் பொதுவானதொரு சட்டத்தொடர் தான். இப்படி இன்னல்கள் தொடர்வதால் பெண்கள் இனி பொறுத்து கொள்ளத்தேவையில்லை ''இதோ இருக்கிறது சட்டம்''  ''துணிந்து எழுங்கள்'' என்று சொல்லுவது தான் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள். இந்திய பெண்ணுரிமைச்சட்டங்கள். அதை அறிந்து கொள்வதில் பெருமை கொள்வோம்......

குழந்தை திருமணத் தடைச் சட்டம்

ஒரு குழந்தை எனபது என்றால் 18 வயது முடிவடையாத ஒரு பெண்ணைக் குறிக்கும். திருமணம் செய்து கொள்ளும் இரு தரப்பினரில் ஒருவர் குழந்தையாக இருந்தால் அதாவது பெண் என்றால் 18 வயது முடிவடையாதவராக இருந்தால், அது குழந்தைத் திருமணம் என்று பொருள்படும்.


ஆணுக்கென்ன தண்டனை?

18 வயதிற்கு மேற்பட்டு 21 வயதிற்குட்பட்ட ஒர் ஆண், குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அவருக்குப் பதினைந்து நாட்கள் வரை நீட்டிக்கக் கூடிய வெறுங்காவல் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் நீட்டிக்கக் கூடிய அபராதமோ அல்லது இரண்டையுமோ நீதிமன்றம் தண்டனையாக விதித்தாக வேண்டும்.

21 வயதிற்கு மேற்பட்ட ஒர் ஆண் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு 3 மாதம் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டணையும் மற்றும் அபராதமும் வித்தித்உ தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கும் தண்டனை உண்டு. குழந்தைத் திருமணத்தை நடத்துபவருக்கும், செயல்படுத்துவபவருக்கும், இயக்குபவருக்கும் தண்டனை உண்டு. 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும், மற்றும் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணம் அல்ல என்று தான் நம்புவதற்குக் காரணம் இருந்தது, என்று மெய்ப்பித்தால் தான், இந்த தண்டனையிலிருந்து தப்ப முடியும்.

இளையர் ஒருவர் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அந்த இளையரின் பெற்றோர்களோ, அல்லது சட்டப்படியோ, அல்லது சட்டத்துக்கு முரணாகவோ, அந்த இளையரை பொறுப்பில் வைத்திருக்கும் காப்பாளரோ, அந்த செயலில் ஈடுபட்டிருந்தாலோ, அல்லது அத்தகைய திருமணம் நடப்பத்ற்கு அனுமதித்திருந்தாலோ அல்லது அசட்டை காரணமாக திருமணம் நடப்பதை தடுக்க தவறியிருந்தாலோ, அந்த நபர் 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

ஆனால் பெண் எவருக்கும் சிறைத்ண்டனை விதிக்கப்படக்கூடாது. இந்த சட்டப்பிரிவின் நோக்கங்களைப் பொறுத்தமட்டில், ஒரு இளையர் குழந்தை திருமணம் செய்து கொண்டால், அந்த இளையரை (மைனர்) பொறுப்பில் வைத்திருக்கும் நபர் அதற்கு மாறான நிலை மெய்ப்பிக்கப்படும் வரை, தம் அசடைட காரணமாக, திருமணம் நடைபெறுவதைத் தடுக்கத் தவறிவிட்டார் என்றுதான் அனுமானிக்கவேண்டும்.

குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் பிடி ஆணையின்றி கைது செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

சட்ட விளக்கம்; 1973 ஆம் ஆண்டின்  குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, அந்தச் சட்டத்தின் 42 வது பிரிவு மற்றும் பிடி ஆணையின்றி கைது செய்தல் போன்றவைகளைத் தவிர்த்து, இதர பொருள்களின் நோக்கங்களுக்காகவும், மற்றும் அந்த  குற்றங்களை புலன் விசாரணை செய்வதற்கும், பிடி ஆணையின்றி (வித்தவுட் வாரண்ட்) கைது செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

நீதிமன்ற ஆள்வரை (ஜூரிக்ஸ்டிக்சன்)

பெருநகர நடுவர் நீதிமன்றம் அல்லது நீதித்துறை முதல் வகுப்பு நடுவர் நீதிமன்றம், ஆகியவைதாம் குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதனையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும், விசாரணை செய்யவும் அதிகாரம் பெற்றவை அகும்.

எந்த நீதிமன்றமும், குழந்தை திருமணச் சட்டத்தில் குறிப்பிட்ட குற்றம் எதுவும், அந்தக் குற்றம் புரியப்பட்ட நாளிலிருந்து ஒராண்டு முடிந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாகாது.

 குழந்தைத் திருமணம் நடக்க இருப்பதைத் தடை செய்ய வழி என்ன?
குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் பிரிவுகளுக்குப் புறம்பாக, குழந்தைத் திருமடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்லது நடைபெற உள்ளது., என்பதை ஒரு நீதிமன்றம் ஒரு முறையீட்டின் பேரிலோ, அல்லது அதன்முன் வைக்கப்பட்ட தகவல் அடிப்படையிலோ, அதற்கு திருப்தியளிக்கும் வகையில் முடிவிற்கு வருமானால், அந்த குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளை பிறப்பிக்க வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை தடை செய்து ஏவுகட்டளை  (இன்ஜங்ஷன்) பிறப்பிக்கும் முன், எதிர்தரப்பினருக்கு அறிவிப்புக் கொடுத்து, ஏவுகட்டளை ஏன் பிறப்பிக்க கூடாது, என்பதற்கு தகுந்த காரணம் காட்ட சந்தர்ப்பம் ஒன்று அளிக்கப்பட்டாக வேண்டும்.


அந்த ஏவுகட்டளை உத்தரவை, நீதிமன்றம், தானாகவோ, அல்லது பாதிக்கப்பட்ட நபரின் முறையீட்டின்பேரிலோ, நீக்கி விடலாம், அல்லது மாற்றலாம்.


குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளைப் பிறப்பிக்கப்பட்ட நபர், அந்த நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்ப்படியாது செயல்பட்டால், 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தண்டனை, அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம், அல்லது இரண்டாலும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார். ஆனால் பெண் எவருக்கும் தண்டனை விதித்துத் தண்டிக்கப்படலாகாது.


குழந்தைத் திருமணத் தடைச்சட்டத்தில் உள்ள குற்றங்களுக்கான தண்டனையில் குற்றம் செய்தவர் பெண் என்றால், அவருக்கு தனிச் சலுகை உள்ளது.

குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பிரிவு (3) மற்றும் (4)ன் கீழ் குழந்தைத் திருமணம் செய்து கொள்ளும் 18 வயதுக்கு மற்றும் 21 வயதுக்கு மற்றும் மேற்பட்ட ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்படுகிறது.


குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பிரிவு (6) கீழ், இளையர் ஒருவருக்கு குழந்தைத் திருமணம் செய்பவர், அவர் பெற்றோராக இருந்தாலும், பாதுகாவலராக இருந்தாலும், தண்டனை விதிக்கப்படுகிறது. அந்தத் தண்டையில், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கும் சிறைத் தண்டணையும் உண்டு. ஆனால், அந்தப் பிரிவில், குற்றம் புரிந்த ஒரு பெண்ணை, சிறைத் தணைடனை விதித்துத் தண்டிக்க முடியாது.

குழந்தைத்திருமணத் தடைச்சட்டம் பிரிவு (12)ன்  கீழ், நிதிமன்றம் பிறப்பித்த ஏவுகட்டளைக்குப் பணியாமல் செயல்பட்டவருக்கு, 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தடண்டணையும் விதிக்கப்படலாம். ஆனால், அத்தகைய குற்றம் புரிந்தவர் பெண் என்றால், அவருக்குச் சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளிக்க முடியாது.


18 வயது நிறைவடையாத பெண் இளவர் (மைனர்) ஆவார்.

18 வயது பூர்த்தியடையாத பெண் இளவரையோ, அல்லது அவருடைய சொத்தையோ, அல்லது இரண்டையுமோ, தன் பாதுகாப்பில் கொண்டிருப்பவர் பாதுகாவலர் ஆவார். பாதுகாவலர்களில், இயல்புப் பாதுகாவலர், இளையவருடைய தாயோ, தந்தையோ எழுதி வைத்த உயில் சாசனப்படி நியமிக்கப்பட்டவர், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர், சட்டப்படி அதிகாரம் கொண்ட எந்த நபரும், பாதுகாவலர் என்ற சொற்றொடரில் அடங்குவர். 

....தொடரும்....பெண்ணுரிமைச் சட்டங்கள்-2

Monday, 29 March 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-17






தமிழ்த் திருமணம் இணைப்பு (7)


குழந்தை பிறந்த வீடு தூய்மைசெய் நிகச்சி


1. கிழக்கு நோக்கி, முன்னவனார், கலசம் அமைக்க, பழம் முதலியவை படைக்க.
2. திருமணத்துக்குரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடுக. தேங்காய் உடைத்து, ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
3. தாயும் சேயும் விழுந்து வணங்குக/மங்கை விழுந்து வணங்குக.
4. அவர்கள் மீது கலச நீர் தெளிக்க, பருக அளிக்க, திருநீறு குங்குமம் அளிக்க.
5. வீடு முழுவதும் கலச நீர் தெளிக்க.


தூய்மைசெய் நிகழ்ச்சி முற்றிற்று

குற்றம்


(இறுதியாக சுயமாரியாதை திருமணத்தைப்பற்றியும், திருமணங்களில் நடைபெறுகின்ற குற்றங்களை பற்றியும் பெரியார் கூறியவற்றில் சில....பேராசிரியர் நன்னன்)

குடும்ப கட்டுப்பாடு என்னும் கருத்தைப் பெரியார் எடுத்துரைத்த காலத்தில் எல்லாரும் நாணிக் கூசி, அஞ்சி, முகஞ்சுளித்தனர்.ஆனால், பின் எல்லாரும் விரும்பி, ஏற்று, மகிழும் திட்டமாக அது மாறிவிடவில்லையா? அவர் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முன் சென்று சிந்திப்பவர். ஆதலால், அவரைத் தொடரந்து சென்று சிந்திப்பது பலருக்கும் அரியதாக இருக்க கூடும்.

திருமணம், மனைவி, கணவன், மக்கள் என்று சிலவற்றை உண்டாக்கி கொண்டுவிட்டால் அவற்றின் எதிர்கால வாழ்வுக்காக சொத்து சேர்க்கவேண்டும் என்னும் வேட்கை வளர்ந்து எதை செய்தேனும் அதை செய்வது என்னும் நிலைக்கு பலர் வந்து சேரந்து விடுகின்றனர். அந்நிலை அது இது என்றில்லாமல் எல்லா ஒழுக்க கேடுகளையும் தோற்றுவித்துவிடுகிறது. வறிநவன், பொருள் குறைவாக உடையவன் மட்டும்தான் இந்நிலைக்கு வருகிறான் என்றில்லாமல் பெருஞ்செல்வர்களும், அரசர் போன்ற வாழ்வுடையோரும் இந்திலைக்கே வருகின்றனர். இப்படிப்பட்ட அமைப்பை வைத்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் பொது நலன் நாட்டு நலன், உலக நலன் என்பன பற்றிய உண்மையான வேட்கையும், எண்ணமும், முயற்சிகளும் நிலைக்கும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கமுடியும்? பொது உணர்ச்சி எப்படித் தோன்றும்? எப்படி வாழும்? எப்படி வாரும்? அவரவரும் தத்தம் குடும்ப நலனைத்தானே இயல்பாகவும், சிறப்பாகவும் நாட வேண்டிவர்களாக இருப்பார்கள்? இப்போது நிலவும் பொது நலன்கூட அங்குமிங்குமாக ஒரு சிலர் பொது நல நாட்டமுடையோராய் விதி விலக்காக இருப்பதாற்றான் என்றறிய வேண்டும்.

எப்படி மனிதன், மனிதனை அடிமை கொள்ளுவதை தவறு, சட்டப்படி குற்றமான பாரியம் என்று ஆக்கியிருக்கின்றோமோ அதே போல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கி கொள்வதை சட்டப்படியான குற்றம் என்று செய்யவேண்டும்.

திருமணம் என்னும் முறையும் அதன் வழிப்பட்ட குடும்பம், சொத்து ஆகியவையும் மனித சமுதாயத்தின் உரிமை, வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு ஆகியவற்றுக்கு தடைகளாக உள்ளன என்பதை பொதுவாக எடுத்துக் கூறுவதோடு சிறப்பாக பெண் விடுதலை, சமத்துவம், உரிமை ஆகியவற்றுக்கு திருமண மறுப்பு இன்றியமையாததென்றும் எடுத்தியம்பியுள்ளார்.

மண்ணின் அழுத்தத்தாலும் கால முதிர்ச்சியாலும் விளையும் பொன் போன்ற கனிப் பொருள்களைப் போல் பகுத்தறிவு தந்தை பெரியாரின் முக்கால் நூற்றாண்டு கால அறிவு, ஆராய்யச்சி, கனிவான சிந்தனை போன்றவற்றின் விளைவாக தம் முற்றி முதிர்ந்த பருவத்தில் தோன்றிய இந்தப் புரட்சி அறிவுக் கனியைப் பக்குவப்பட்ட அறிஞர்கள் மேலும் தொடர்ந்து எண்ணிப் பார்க்க கடமைப்பட்டவர்கள் எனக் கூறி ஈற்றுப் பகுதியாம் இதனை நிறைவு செய்வதன் வாயிலாக இந்நூலையும் முடிக்கிறோம்.


இதுவரை தமிழர் திருமணங்கள் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் மற்றும் தமிழர் இல்லங்களில் பல்வேறு சடங்குகளுக்கான தமிழ் மந்திரங்களையும் அதை தமிழர்களை வடமொழி கலக்காமல் பார்ப்பன புரோகிதம் என்ற பெயரில் ஆபாசங்கள் இல்லாமல் நடத்த நம்மாள் முடியும் என்பதனையும். இச்சடங்குகளே வேண்டாம் என்பவர்கள் பெரியார் கண்டறிந்த சுயமரியாதை திருமணங்களை கொண்டு தாமே அவரவர் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்பதனையும் அறிந்தோம். மேலும் சுயமரியாதை திருமணங்கள் மிகவும் சிக்கனமானது. சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டது. இதனால் திருமணத்தின் மூலம் செய்யப்படும் பணவிரயம், காலவிரயம் தடுக்கப்படுகிறது.

இதில் எது சிறந்ததோ (தமிழ் மந்திரத் திருமணங்கள் அல்லது சுயமரியாதை திருமணங்கள்) அதையே தமிழர்கள் பினபற்றி கொள்ளலாம் என்பது தெளிவாகிறது. இதற்கு புரோகிதர் தேவையில்லை தவிர அத்தனை மந்திரங்களும் நமக்கு புரிகின்றது. இல்லறத்தின் மேன்மையும் விளங்குகிறது.மணமகனின் கண்முன்னேயே, அவன் மணமுடிக்கப்போகும் மணமகளை ஆபாசமாக வர்ணிக்கும் பார்ப்பன புரோகிதர்களின் எண்ணம் தவிடு பொடியாகிறது. அந்த எண்ண்ம் முற்றிலும் தடுக்கப்படுகிறது.


தமிழர்களின் எல்லா இல்லச் சடங்குகளையும் தமிழிலேயே நடத்திக்கொள்ளலாம். மந்திரம் என்பது ஒரு வாழ்த்து தான். (எந்த மாயாஜாலமும் உருவாவதில்லை.)

இதனால் தேவையற்ற மணமுறிவுகள் நீதிமன்றத்தின் மூலம் முடித்துக் கொள்வது தடுக்கப்படுகிறது. இவையனைத்தும் புரிதலினால் மட்டுமே சாத்தியம். எதையும் தெளிந்து செய்வது மனிதனின் இயல்பாக இருக்கவேண்டும். இது தமிழர்கள் எப்போதும் பின்பற்றி வந்த ஒன்று தன். இடையில் ஆரியப்பார்ப்பனர்களின் தலையீட்டால் வஞ்சகமாக இந்த சமஸ்கிருத மந்திரங்கள் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கோடு புகுத்தப்பட்டது. அவற்றைக் களைவோம் தமிழர்களாக வாழ்வோம். திராவிட கலாச்சாரத்தை காப்போம். இதுவரை பலத் தளங்களிலும் விவாதிக்கப்பட்டாலும் இதை பார்ப்பனர்கள் எதிர்த்தே வந்திருக்கின்றனர். ஆனால் ஒருவரும் சமஸ்கிருதங்களில் ஆபாசமில்லை என்று அரிதியிட்டு அவர்களால் கூறமுடியவில்லை. மாறாக சமஸ்கிருதம் மேன்மையானது அதை போன்ற ஒலி வேறெதிலும் வருவதில்லை  என்று பூசிமழுகின்றனர். அவர்களுக்கே பொருள் தொரியவில்லை நமக்கெதற்கு? அவர்களுக்கு தெரிந்தாலும் நமக்குத் தேவையில்லை? நமக்குத் தான் அதன் பொருள் தெரிந்துவிட்டதே!  

எமது தாய் மொழித் தமிழைவிடவா? சமஸ்கிருதம் மேன்மையானது. ஆயிரம் இருந்தாலும் என் தாய் மொழியே எமக்கு உயர்ந்தது என்று கூறும் தமிழர்களிடம் இவர்கள் பாச்சா பலிக்கவில்லை.  அவரவர்களுக்கு அவர்கள் தாய்மொழி உயர்ந்தது. 

இதுகாரும் பார்ப்பன புரோகிதர்களால் சொல்லப்பட்டு வந்த சமஸ்கிருத ஆபாச மந்திரங்கள் வேண்டாம் என்று இன்று வரை ஒரு பார்ப்பனரும் மறுத்து கூறவேயில்லை. மாறாக சமஸ்கிருதத்தின் தொன்மையை பற்றி அளந்து கொண்டிருக்கின்றனர். (அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.)  இந்த இணையக்காலத்திலும் அவர்கள் இந்த ஆரிய வெறியுடனேயே வாழ்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.  ஆரியத்தை எதிர்ப்போம் திராவிடத்தை காப்போம்.

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும் தொடர் முற்றும்