Pages

Saturday, 7 May 2011

ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்...பகுதி-2




 ஜிகாத்...JIHAT-2


மத்திய கிழக்கு நாடுகளின் எந்த அரசாங்கமும் கவிழ்க்கப்படவில்லை. பின்லேடனின் திட்டம் மீண்டும் அவரை ஆப்கானிஸ்தானுக்கே கொண்டுபோய் சேர்த்தது. அவர் ஜர்தலாபாத் (Jalalabad-ஜலாலாபாத்)
அருகில் இருக்கும் ஒரு நகருக்குப் போய் சேர்ந்தார். 1996 இல் ஆப்கானிஸ்தானிற்குள் ஒரு உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ரஷ்யா பின்வாங்கியப்பிறகு அங்கு அமைதி திரும்பவில்லை. அதற்குப் பதிலாக ஆறு ஆண்டுகள் நீடித்த குழப்ப நிலையால் எதிர் எதிராக இருந்த கலகக்காரர்கள் அதிகாரத்தை கைப்பற்றப் போராடிக்கொண்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தானுடைய தலைநகராகிய காபூல் (Kabul) பெரும் சிதிலங்களாகவும், இடிபாடுகளாகவும் மாறியது. இப்போது புதிய அணியாக கறுப்பு வெள்ளை தலைப்பாகையுடன் தாலிபான்களும் இந்த சண்டையில் கலந்து கொண்டனர். தாலிபான்கள் தங்கள் உறுப்பினர்களை மார்க்கப் பள்ளிகளிலிருந்து இழுத்தார்கள். அவர்களில் பலர் சவுதி அரசாங்கத்திடமிருந்து ஊதியம் பெற்றவர்கள்.

தாலிபான்களுடை சட்டம் ஒழுங்கு ஆட்சி என்றால் அது நேரடியான அல்லது பிடிவாதமான இஸ்லாம் ஷரியத் சட்டம் என்று அர்த்தம். ஒசாம பின்லேடனுக்கு அந்த இடம் மிகவும் பொருத்தமானதாவும் இருந்ததாக உணர்ந்தார்.
************
ஒசாமா...

""நான் இஸ்லாமியர்களை இந்த நாட்டை ஆதரிக்கணும்னு கேட்டுக்கறேன். ஏன்னா ஒரு நாடு இஸ்லாமிய சிந்தனையோட எழுச்சியடையும் எனபது கடவுளோட சித்தம்.""

தாலிபான்களின் டாங்குகளால் மறைவிடங்களில் பாதுகாக்கப்பட்ட ஒசாமா பின்லேடனின் இருப்பிடம், அல்கொய்தா கேமரா மேன் படமெடுத்திருக்கிறார்.

பின்லேடன் கோடைக்காலத்தில் தனது பதினாறு பக்க பத்வாவை (Fatwa-இஸ்லாமிய சட்டம் உலமாக்களால் (islamic scholar) உருவாக்கப்படுபவை) உருவாக்குவதில் கழித்திருக்கிறார். இது மிகப்பெரிய யுக்தி மாற்றத்தை குறிக்கிறது. அல்கொய்தா மத்தியக் கிழக்கு நாடுகளை தாக்குதலிருந்து விலக்கிக்கொள்ளவேண்டும் என்று விவாதிக்கிறது.

ஆனால் புதிய இலக்கு இந்த நாடுகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளான மேற்கத்திய சக்திகள்...குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

ஓசமா...

“”நமக்கு மிகப்பெரிய எதிரிகள் யார்னா?  அமெரிக்க யூதர்கள் கூட்டணி தான். அவங்கதான், நம்ம நாடானா. சமுதாயமான நம்ம உம்மாவுக்கு எதிரியா நிக்கிற ஈட்டிமுனை. அதனால மத்த எதிரிகளைத்தாக்கி நேரத்தை விரயம் பண்ணாதிங்க.””


அய்மன் ஜவாஹிரி மீண்டும் பின்லேடனுடன் சேர்ந்து கொண்டார். எகிப்தியை அரசாங்கத்தை வீழ்த்த, பயங்கரவாதத்தின் மூலம் நிகழ்த்திய முயற்சி தோல்வியடைந்ததின் விளைவாக அவர் அல்கொய்தாவுடன் இணைந்து அதன் யுக்திகளை ஏற்றுக்கொண்டார்.



மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை ஜவாஹரிதான் உண்மையான அச்சுருத்தல் என்று இருந்து வந்தது. அவர்தான் உண்மையிலேயே அல்கொய்தாவில காய்களை நகர்த்துறவராவும், பின்லேடன் அவருடைய கருத்துக்களை வெளிப்படுத்தறவராவும் இருந்தார். 

ஆனா அவர் எகிப்துல இருந்து ஆட்சியை கவிழ்க்க முடியாம வந்ததும், அவரோட பிரதான இலக்கு பின்லேடனோட ஒத்துப்போரதும் நம் அன்னிய எதிரிகளான் அமெரிக்கர்களைத் தான் நாம முதல்ல தாக்கணும்னு பின்லேடன் சொன்னதுக்கு, ஒத்துக்கொள்வேண்டியாடிச்சி. 

அதாவது அய்மன் அல் ஜவாஹரியோட ரொம்ப புத்திசாலியான மாற்றம்ணு நான் நினைக்கிறேன். அந்த மாற்றத்தின் படி ஜவாஹிரி துணைத்தளபதி, பின்லேடன் தளபதி.



ஆனால் ஜவாஹிரி தன் அரசியல் திறன்கள் எதையும் இழக்கவில்லை. 1996 பாத்வாவில் (Fatwa)
தான் வழங்கிய செய்தியை, பின்லேடன் இன்னமும் பட்டைத் தீட்டி கூறாக்குவார் என்று அவர் நம்பினார்.



ஒவ்வொரு அமெரிக்கரும், ஒவ்வொரு யூதரும் தங்களது தாக்குதலுக்கு இலக்குகள்  எது? என பின்லேடனை அறிக்கை வெளியிட்டு அது பிரசுரமாகிற மாதிரி ஒத்துக்கொள்ளவைக்கிறதுல ஜவாஹிரி வெற்றியடைஞ்சார்.



பின்லேடனும், ஜவாஹிரியும் பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் நடத்தி, அதில் பாத்வா (Fatwa) பற்றியும் அமெரிக்கர்கள் மற்றும் யூதர்களை கொல்வதாகவும் அச்சுருத்தலை வெளியிட்டனர்.


அமெரிக்கா ஒரு கௌபாய் (cowboy) போல நடந்துக்கும்ணு, அல்கொய்தா நினைச்சுது. அதாவது அது ஒரு குறிப்பிட்ட வகையில அந்த நாட்டை சீண்டிவிடுவதின் மூலமா.



கென்யாவிலும் (Kenya), தான்சானாவிலும் (Tanzania) உள்ள அமெரிக்க தூதரகங்களின் மேல் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல் அல்கொய்தா எதிர்பார்த்த விளைவுகளை தந்தது.



தூதரகங்களிலே இருந்த ஒரு சில அமெரிக்கர்களை கொல்றதுல, பின்லேடனுக்கு ஆர்வம் இல்லை. அதுக்கான பதிலை அவரு, கிளின்டன் கிட்டயிருந்து எதிர்பார்த்தாரு!. அதாவது இந்த கௌபாய் மாதிரியான நடத்தைய!

*******************
13 நாட்களுக்குப் பிறகு, கிளின்டன் நாட்டுக்கு ஒரு உரை நிகழ்த்தினார்....

””குட் ஆப்டர் நூன், இன்னிக்கு நான் நம்ம ராணுவத்தை பயங்கரவாதிங்க இருக்கற ஆப்கானிஸ்தான், சூடான் பகுதிகளைத் தாக்க உத்தரவு கொடுத்துருக்கேன்! ஏன்னா! நம்மை நாட்டு பாதுகாப்புக்கு இருக்கற! தவிர்க்க முடியாத! அச்சுருத்தல்காக!.நம்ம நோக்கம் தெளிவா இருக்கு!, ஒசாமா பின்லேடனோட இணைஞ்சூம் அவரால நிதியுதவியடையற தீவிரவாதக் குழுக்களை வேரறுக்கணும்!. அவர் ஒரு வேளை இன்றைய உலகத்துல இருக்கற சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கு, நிதியுதவி செய்யறதோட, அவங்க எல்லாருக்கும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கலாம்! ””

********************

ராணுவ ரீதியாக ஏவுகணைத்தாக்குதல்கள் தோல்வியடைந்தன. சூடானில் நடந்த ஏவுகணைத்தாக்குதல், தாக்கப்பட்ட ரசாயணத் தொழிற்சாலை, ஈவுபுரோபைன் மற்றும் விலங்குகளுக்கான மருந்துகளும் தயாரிக்கப்பட்ட இடமேத் தவிர அங்கு விஷவாயுத் தயாரிக்கப்படவில்லை.



ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் அல்கொய்தாவின் 21 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் பின்லேடனும், ஜவாஹரியும் 480 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தனர்.



அது அமெரிக்கர்களுக்காக பின்லேடன் எழுதுன திரைக்கதை போல தோணுது! அவங்க அந்த திரைக்கதைப்படி அப்படியே நடந்துக்கவும் செஞ்சாங்க! முஸ்லிம் நாடுகளுக்கு எதிரா அமெரிக்கர்களை கோபப்படுத்தி, இந்த மாதிரி செயல்கள்ல இறங்க வைக்க அவர் விரும்பனாரு!.



1998 ல நடந்த கென்யா மற்றும் தான்சானியா குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, பல பழமைவாதிகள் உறவுக்கராங்களோட இஸ்லாமியர்களுக்கு நடுவுல நின்னது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு! இந்த தூதரகங்கள்ல இருந்த 200 சாமான்யர்களை கொல்றது, என்ன ஞாயம்கிறது அவங்க கோரிக்கை! கிளிண்டன் மேடையில ஏறி பின்லேட்னதான் எதிரி!ன்னு அறிவுப்பு பண்ணதும், அந்த சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது.



சவுதி அரேபியாவில இருந்த உளவுத்துறையில இருந்த அதிகாரிகள் 11,000 த்துக்கும் குறையாத மக்கள் 1998 குண்டு வெடிப்புக்கும் செப்டம்பர் 11 குண்டு வெடிப்புக்கும் இடைப்பட்ட நேரத்துல, பின்லேடன்கிட்ட சேர்ந்திருக்கறதா! எனக்கு சொன்னாங்க! இது எல்லாமே! எதனாலன்னா அமெரிக்கர்களோட பி ஆர் சேவையோட (பப்ளிக் ரிலேஷன்) வெற்றியால தான்!



தனது மகனின் திருமணத்தின்போது ஜிகாதைப் பற்றி பின்லேடன் கவிதை ஒன்றை வாசித்தார். அந்த நிகழ்ச்சி அல்கொய்தாவின் மகத்தான் யுக்தியின் இன்னொரு துளியை நமக்கு காட்டக்கூடியதாக அமைந்தது.



பின்லேடனுடைய மகன் முகம்மத் அல்கொய்தா ராணுவ பிரதான யுத்த கலை நிபுணரான அபு அவுசின் மகளை மணந்து கொண்டார். அந்த திருமணத்தின் போது அபபு அவுஸ் எப்படி? அல்கொய்தா! அமெரிக்காவை ஒரு இஸ்லாமிய யுத்தத்திற்கு இழுக்கும் என்றும் ஒரு அராபிய பத்திரிகையாளருக்கு பேட்டிக்கொடுத்தார்.



அடுத்த 5 வருஷத்தில என்ன? நடக்கப்போகுதுன்னு என்னிடம் விளக்கமா சொன்னாரு! அதுமட்டுமில்லாம இங்க பாருங்க! அமெரிக்கர்களோட போராட உலக்த்தில இரண்டு மூணு  இடங்கள் வசதியா இருக்கும்! ஆப்கினிஸ்தான், ஈராக் அப்புறம் சோமாளியான்னாரு!



நாங்க! அமெரிக்க ஆப்கானிஸ்தானுக்குள்ள நுழையும்னு எதிர்பார்த்திட்டிருக்கோம், அதோட அதுக்கு தயாராவும் இருக்கோம்! அவங்க! ஆப்கானிஸ்தானுக்குள்ள வரணும்கறது தான் எங்க விருப்ப்ம் ன்னாரு!



அமெரிக்கா.....

இஸ்லாமிய நாடுகளோட மண்ணுல, நாங்க வந்து யுத்தத்தில ஈடுபடணும்ணு, அவங்க விரும்பினாங்களா? நிச்சயமா! அதே தான்! அதாவது அந்த நோக்கத்துல ஒரு பகுதி என்னென்னா? அமெரிக்கா இஸ்லாமிய மண்ணுல துரோகம் செய்ய வந்ததா! நிச்சயப்படுத்தி நம்பவைக்கணுங்கிறதுக்காகத்தான்.

பின்லேடன் தனது அல்கொய்தாவின் ஊடகக் குழுவுக்கு அதன் மிக திரித்து கூறப்பட்ட செய்தியை தயாரித்துக் காட்டும்படி உத்தரவிட்டிருந்தார். அதில் அல்கொய்தா பயிற்சி முகாம்களின் காட்சிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. அது மத்திய கிழக்கு மற்றும் அதை தாண்டியுமிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மத்தியில் பரவலாக விநியோகிக்கப்பட்டது. பின்லேடனின் வளர்ந்து வரும் பிராபல்யத்தால் வசீகரிக்கப்பட்டு, ஈர்க்கப்பட்டு வந்த தீவிரவாதிகளில் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் இருந்து பயணம் செய்து வந்த 4 இளைஞருகளும் அடங்குவர். அவர்களுக்கு ஆங்கிலம் பேசத்தெரிந்திருந்ததுடன், மேற்கத்திய பாணி வாழ்க்கைக்கும் நன்கு பழகியிருந்தார்கள். அந்த அணியின் தலைவரான முகம்மது ஹேட்டா எனும் எகிப்பதியனுக்கு மட்டும் தான், தாங்கள் இதில் சேர்ந்து மேற்கொள்ளப்போகும் பணியின் முகாந்திரம் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு அது அமெரிக்காவை குறிவைத்து நடத்தப்படவிருக்கும், மதத்துக்கான கொள்கைப் போர் பணி என்றும், அவர்களின் முதல் கட்மை அவர்களின் விமானப்பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து கொள்ள வேண்டியது எனவும், அறிவுறுத்தப்பட்டிருந்தது.



2001 ஆம் ஆண்டு கோடைக்கால தாக்கத்தில் ஒரு அபாரமான தாக்குதல் நடத்த காத்திருந்தது என்று வெளிப்படையாகவே குறிப்புகளை காட்டியது.



எங்களுக்கு பின்லேடன் கூட பேட்டி ஒன்னுக்கு அழைப்பு வந்தது! எது? எப்படியோ? நிர்வாகம் இந்த பேட்டிக்கு ஒப்புதல் தந்ததோட அவங்களை இந்த பேட்டியை எடுக்கும்படி எங்களை கேட்டுக்குச்சி!



அவர் அங்கு போய்ச் சேர்ந்ததும் பின்லேடனும், ஜவாஹிரியும் புகைப்படம் எடுக்க அனுமதித்துடன் செய்தி தலைப்பையும் கொடுத்தார்கள்.

****************
ஜவாஹிரி, பின்லேடன்....

“”நாங்க உங்களுக்கு செய்திகள் கொடுக்கப்போறோம், அடுத்த சில வாரங்கள்ல மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நடக்கப்போகுது. நாங்க அமெரிக்காவில ஒரு காரியத்தை செயல்படுத்த முயற்சி பண்ணப்போறோம். நாங்க எல்லார் கிட்டேயும் இது மிகப் பெரிசா இருக்கப்போகுது என்று தெரியப்படுத்திட்டு வர்றோம்””

 *******************************
2001 செப்டம்பர்,11 ந்தேதி நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தும், அந்த பயங்கரத்தில் இருந்தும், இன்னமும் அமெரிக்க நாடு மீண்டு வரவில்லை. கனமான புகையும், சதி பற்றிய வதந்திகளும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் என்ன? நடந்தது என்பது பற்றிய உண்மையை தெளிவற்றதாக்கிவிட்டது.



இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு நடந்து 1 மாதத்திற்குள் இந்த ஒரளவு தெளிவில்லாத, தேர்ச்சியற்றவரால் எடுக்கப்பட்ட வீடியோ டேப்பில் பதிவான படத்தில், பின்லேடன் அந்த செப்டம்பர்,11 சம்பவத்தை பற்றி, பெருமை பேசுவது காட்சி அளிக்கிறது.


ஒசாமா...



“” இந்த தாக்குதலை நடத்திய சகோதரர்களுக்கு, இது ஒரு மகத்தான கொள்கைப் போர் பணி என்பது மட்டும் தான் தெரியும்.””



“”இவங்க விமானத்துல ஏறறுத்துக்கு முன்னால வரைக்கும் இந்த திட்டத்தை, நாங்க அவங்களுக்கு வெளிப்படுத்தல””


அந்த விமானங்கள் கோபுரங்களில் மோதுவதால் ஏற்படும் விளைவுகளை கூட பின்லேடன் தன் கைகளினால் செய்து காட்டுகிறார். ஆனால் பல இஸ்லாமியர்கள், இந்தப் பதிவு கூட அமெரிக்கர்களால் தயாரிக்கப்பட்ட போலி என்று, நம்பத் தயாராக இருக்கிறார்கள்.


ஜார்ஜ் புஷ்....



“” குட் ஆப்டர்நூன்..எனது உத்தரவின் பேரில், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ராணுவம், ஆப்கானிஸ்தானில், தாலிபான் ஆட்சியில் இருக்கும் அல்கொய்தாவின் தீவிரவாத பயிற்சி முகாம்களின் மீதும், ராணுவ அமைப்புகளின் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கிறது.””


அக்டோபர்,7 ந்தேதி அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியது. பின்லேடன் அமெரிக்கத் தாக்குதல் நடக்குமென்று நீண்டகாலத்துக்கு முன்பே எதிர்பார்த்திருந்ந்தார்.



1997 லிருந்தே அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் மண்ணுல காலடி எடுத்து வைக்க விரும்பராங்க! அவங்களுக்கு நாங்க ரஷ்யர்களுக்கு கத்து கொடுத்த, அதே பாடத்தை கத்துக் கொடுப்போம்னு ரொம்ப வெளிப்படையாவே சொல்லிக்கிட்டிருந்தார்.



ஒசாமா...

“”அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும், ரஷ்ய ராணுவ வீரர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு!. அமெரிக்க ராணுவ வீரர்கள் மனோதத்துவ ரீதியா, காலிப்பெட்டி மாதிரி. அவங்க காகிதப்புலிகள், கையாலாகதவங்க!.””



ஆனால் ஆப்கானிஸ்தான யுத்தம் பின்லேடன் எதிர்பார்த்தது போல அமையவில்லை.



அமெரிக்க விசேஷ ராணுவ அணியானது, தரையில் ஆயிரக்கணக்கான முஜாகிதின் துருப்புகளால் ஆதரவளிக்கப்பட்டதுடன், வான்வெளியில் பி 52 விமானங்களால் பாதுகாக்கப்பட்டது.



பெரும்பாலான ஆப்கானியர்கள், தாலிபான்களுக்கோ அல்லது அல்கொய்தாவுக்கோ உண்மையிலேயே ஆதரவளிக்கவில்லை. அவர்கள் அந்த ஆப்கான அராபியர்களை சந்தேக கண்ணோட்டத்தோடு நீண்ட காலமாக பார்த்து வந்திருக்கிறார்கள்.



அல்கெய்தா மீது சுருக்கு இறுகியவுடன், அதன் தலைவர்கள் கிழுக்கு திசை நோக்கி ஒடி ஒளிந்தார்கள்.



2001 ஆம் ஆண்டு, நவம்பர் 14 ம் தேதி, பின்லேடன் தான் டோரா போரா மலை பகுதிக்குப் போய்ச்சேர்ந்தார். டிசம்பர் துவக்கத்தில் அமெரிக்கர்கள் கடுமையான குண்டு வீச்சை ஆரம்பித்த பொழுது, ஜவாஹிரி அவருடன் கூடவே இருந்திருக்கிறார்.



டிசம்பர் மாசத்தோட முதல் 3 நாள்ல நாங்க நிறைய குண்டுகளை பின்லேடன் பதுங்கியிருந்த இடத்துங்கள்ல வீசினோம். எங்களுக்கு எதிரா சாகும் வரை போராட சொல்லி, நிறைய வீரர்களை அனுப்பி வைச்சிட்டு, சந்தடியில பின்லேடன் தப்பிக்கறத் திட்டத்தை நிறைவேத்திக்க முடிஞ்சது. அவங்களால எங்க வேகம் குறைஞ்சிடுச்சி.



அவங்கள்ல நிறையப் பேர் சாகற வரைக்கும் சண்டைப் போட்டாங்க!



 அவரு அதைத்தான் தெற்கு திசையில பாக்கிஸ்தானை நோக்கி, தப்பிச்சிப் போக பயன்படுத்தியிருக்கணும். அதோட அவர் வரக்கூடியப் பாதைகள், எல்லாத்தையும் மூடக்கூடிய சாத்தியமோ! பாக்கிஸ்தானியர்களுக்கு இல்லைங்கிறது! உண்மை!



உலகிலேயே அதிகமாகத் தேட்ப்படும் நபர் தப்பிச் சென்று பாக்கிஸ்தானுடைய வடமேற்கு எல்லையில் இருக்கும், சட்டங்கள் எதுவும் இல்லாத பழங்குடி இனத்தவர் இருக்கும் காட்டுப்பகுதிக்குச் சென்று விட்டார்.



2002 ஆம் ஆண்டில், அமெரிக்க ராணுவம், ஒரு செயல் வாய்ந்த யுத்தம் செய்யும் படையாக இருந்தால், அல்கொய்தாவின் முதுகெலும்பை முறித்துவிட்டிருக்கலாம் என்பது போலத் தோன்றியது.



ஆனால் அமெரிக்கர்கள் எதிர்வந்த ஈராக்கியர்கள்,  ஆக்கிரமிப்பை பற்றி அறிவிப்பு செய்தவுடன், எல்லாமே, தலைகீழாக மாறிவிட்டன.


அமெரிக்காவில்....

“”எந்த தவறும் நடக்கக்கூடாது, ஜனாதிபதி போ! ன்னு உத்தரவு கொடுத்தவுடனே! அது தான் தாக்கவேண்டிய நேரம்ணு புறிஞ்சிக்கணும்.!””


2003 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் ஈராக்கிய படையெடுப்பும், ஆக்கிரமிப்பும் முடிஞ்சதுக்கப்புறம், அது அல்கொய்தாவோட மறுப்பிறப்பாவே இருந்தது. அது ஒரு புது அல்கொய்தா! அது அல்கொய்தாவுக்கு புத்துயிர் கொடுத்தது. அதோட! எப்படிப் பட்ட புத்துயிர்!?



அந்த ஈராக் படையெடுப்பின் எதிர்பாராத பரிசு! சாத்தியம்னு எப்போதும் பின்லேடன் எதிர்பார்த்து கன்வு கண்டதை விட அதிகமாக அமைந்தது.



தாலிபான் அதிபரை பதவியிலிருந்து கவிழ்ப்பதில் வெற்றி கிடைத்திருந்தாலும் கூட கயமைத்தனம் நிறைந்த நாடு, ஏதேனும் ஒட்டு மொத்த பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களை அல்கொய்தாவிடம் கொடுக்கலாம் என்று அதிபர் புஷ் தொடர்ந்து பயந்து கொண்டிருந்தார்.



புஷ்.....


“”உளவுத்துறை மூலமாக கிடைத்த.................................

..தொடரும்...பகுதி...3

,,நன்றி டிஸ்கவரி சேனல். தமிழில்.ஒளிபரப்பியது..02.05.2011  குறிப்பு ஒசாமா பின்லேடன் அமெரிக்க உளவுப்படையால் கொல்லப்பட்டதும் அன்றுதான் ...அதிகாலை பாகிஸதான்...அப்போதாபாத் நகரில்.


Friday, 6 May 2011

ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்...பகுதி-1




ஜிகாத்...JIHAT

1980 ஆம் ஆண்டில் ஒசமா பின் லேடன் (Osama bin Mohammed bin Awad bin Laden) தனது சக இஸ்லாமியரை ஜிகாத்தில் சேர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ரஷ்யாவைச் சேர்ந்த துரோகிகளை ஆப்கானிஸ்தானை விட்டு துரத்தியாகவேண்டும். 1986 இல்
ஆக்கிரமைப்பை எதிர்த்து அந்த இளம் தலைவர் இன்று அவர் துணைவராக இருக்கும் பயங்கரவாத வெறியரான அய்மன் அல் ஜவாஹரியின் (Ayman Muhammad Rabaie al-Zawahiri) தாக்கத்திற்கு ஆளானார்.

அய்மன் அல் ஜவஹரி....

“”நாங்க இந்த ஒழுங்கான நாட்டையும், முறையான சமுதாயத்தையும் உருவாக்க எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணோம்””

“”லாஹி லாஹா இல்ஹல்லா........””

இந்த மனிதர்கள் ஒரு சமூகத்தின் சாதாரண யுத்தமாக இருந்த இஸ்லாமிய கேட்பாட்டை மேற்கத்திய உலகுக்கு எதிரான பயங்கரவாத யுத்தமாக மாற்றினார்கள்.

அத்துடன் தாங்கள் ஜிகாத் என்று கூறிக்கொள்ளும் ஒரு மரணகளத்தை சுயநலத்திற்காக நியாயப்படுத்த அமைதியும், மகிமையும் வாய்ந்த மதமான இஸ்லாத்தை அல் கொய்தாவால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது.

அல்கொய்தா உருவாக்கப்பட்ட அதே ஆண்டு, ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து ஒவ்வொரு கட்டமாக பின்வாங்கிச் செல்லத் துவங்கின..

15000 ரஷ்ய ராணுவ வீரர்கள் இறந்திருந்திருந்தனர். அது சோவியத் யூனியனுக்கு இன்னொரு வியட்நாம் ஆகியது.

இது இஸ்லாமிய சமூகத்தில் இருந்த இளம் தலைமுறையினருக்கு மகத்தான் கிளரச்சியை கொடுத்த தருணம். ஏன்னா? இஸ்லாமியர்கள் ஈடுபடற ஒவ்வொரு யுத்தத்திலேயும் அவங்க தோல்வியடையத் தேவையில்லைன்னு இது நிருபிச்சது.

அதனால் ஜிகாத்தை தங்கள் நாடுகளுக்கும் பரப்பத் திட்டமிட்டார்கள்.

பலபேர் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி போனதுமில்லாம, அவங்க சொந்தமா பல கலவரங்களுக்குத் தலைமைத் தாங்கி நடத்த ஆரம்பிச்சதோட சொந்த பயங்கரவாத அமைப்புகளையும் உருவாக்கிக்கிட்டாங்க...அவங்க அல்ஜிரியாவில இருந்தாங்க, எகிப்துல இருந்தாங்க, நீங்க அவங்கல சவுதி அரேபியாவுல கூட பார்த்திருக்கலாம். அதான் பெரிய பிரச்சினையா மாறிடிச்சி.

அந்த புதிய ஜிகாத்திய வாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் கடவுளுக்கு எதிரான அரசாங்கங்களாக கருதியவற்றின் மீது தாக்குதல் நடத்தும் அச்சுருத்தலை அறிவித்தார்கள். அருகிலிருக்கும் எதிரி மீது அறிவிக்கப்பட்ட யுக்தி அது. அதன் தலைமை ஆதரவாளர்களில் ஒருவர் அய்மன் அல் ஜவாஹரி


“”எப்படி? அரபு அரசுகள் குரானை பின்பற்றுவது இல்லைன்னும்,  ஜிகாத்தை பற்றியும் பின்லேடனுக்கு ஜவாஹைரி போதித்தார்””

“”அதற்கு பதிலாக, அந்த அரசுகள் (அரபு அரசுகள்) உலகம் பூரா உள்ள யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு, அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ளவர்களின் நலன்களுக்கு உதவி புரிவதாக கற்பித்தார்”” (ஜவாஹைரி) “” அதனாலதான் நாம அவங்களுக்கு எதிராக புரட்சி பண்ண வேண்டும்’’”

“”யூதர்களை விட கிருத்துவர்கள் அளவுக்கதிகமான சக்திவாய்ந்தவர்களாக இருக்காங்க....அவங்க கிட்ட இராணுவ பலம் இருக்கு, பணம் இருக்கு, மேலும், மேற்கத்திய நாடுகளோட தொடர்பு இருக்கு, அதனால் எல்லாவிதத்திலேயும் பணத்தை எதிர்த்து நடத்துகிற இந்த புரட்சி, எல்லாவகையான வன்முறைகளையும் நியாயப்படுத்துது.””




ஒசாமா...

“”இந்த வகையான குறிப்பிடத்தகுந்த தீவிரவாதிகள் அவங்களை தாக்குவாங்க...””

பின்லேடன்...1989 இல் சவுதி அரேபியாவுக்கு திரும்பினார். அதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்கள், அது அவருடயை சொந்த நாட்டுக்கே எதிராக திரும்பினதுமில்லாமல், அமெரிக்காவுக்கு எதிரான துவேஷ உணர்வு கொண்ட எதிரியாகவும் மாற்றியது.

மலைப்பகுதிகள்ல கஷ்டங்களோட  ஒரு மாவீரனாக தன்னுடைய வாழ்க்கையை கழித்த ஒரு மனிதரான அவருக்கு, பண்ணவேண்டிய வேலை நிறைய இருந்தது.

திடீரென, கட்டிடங்கள், கட்டுமான பணி, கணக்கு வழக்குகள், பண பத்தியெல்லாம் அக்கறை காட்ட ஆரம்பிச்சார். இது எல்லாமே அவருக்கு ரொம்ப அலுப்பா இருந்தது.

அதனால சதாம் உசேன் தீடீரென குவைத்தை ஆக்கிரமிச்சப்போ, ஒரு புனித வீரரா? தன்னை வெளிப்படுத்திக்க ஒரு அருமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்விதமாக அது அமைஞ்சிது......

1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சதாம் உசேனின் டாங்குகள் பாலைவனத்தை கடந்து குவைத்துக்குள் நுழைந்தன..................................சவுதி அரேபியாவிற்கு நேர்ந்த அந்த அச்சுறுத்தலால் எச்சரிக்கையடைந்து  எண்ணை பாதுகாப்பு செயலர் ''டிக் ஜெயனி'' அமெரிக்க பிரதிநிதிக்குழுவை ஜெடாவிற்கு வரவழைத்தார்.

நாங்க சொன்னது என்னென்னா? நாங்க பெரிய படையோடு வருவோம்...ஒரூ வேலையை முடிக்கறதுக்கு வருவோம். அந்த வேலை முடியறவரைக்கும் அங்குதான் இருப்போம். ஆனால் வேலை முடிஞ்சதும் திரும்ப போயிடுவோம்.

அரசர் பாட் ((King)Fahd), தான் அதிபர் புஷ்ஷை நம்புவதாகவும் உடனடியாக ராணுவத்தை சவுதிக்கு அனுப்பசொல்லும்படியும், இந்த பிரச்சினை முடிந்தவுடன் தாங்கள் திரும்பிவிடுவோம் என்று கூறியதை நம்புவதாகவும் தூதரிடம் கூறி புஷ்ஷிடம் தெரிவிக்கச்செய்தார்.
....................................
........................................

ஒசமா பின்லேடன் தனக்கொரு சந்தர்ப்பம் இருப்பதை கண்டுகொண்டார். அவர் தன் சொந்த ராணுவமான அல்கொய்தாவை உருவாக்கி கொண்டிருந்தார். அதோட அதை பயன்படுத்தவும் தன் தாய்நாட்டை காப்பாற்றவும் ஒரு சந்தர்ப்பமாக அமைஞ்சதை நினைச்சார். பின்லேடனோட முஜாகிதினும் சேர்ந்து ஆயிரக்கணக்கான வேலையற்ற, இளைம் சவுதி அரேபிய வீரர்களும் ஒருங்கிணைஞ்சி நல்ல முறையான ராணுவப் போர்ப்பயிர்ச்சி ராணுவத்தையும், உலகத்திலேயே மிகப்பெரிய டாங்க் படையை கொண்டிருக்கிற நாடுகளில் ஒன்றான ஈராக்கை எதிர்த்து போராடுவாங்க என்பது அவரது யோசனையாக இருந்தது.

தன்னோட இந்த யோசனையை, ராணுவ அமைச்சர்கிட்டேயும், டர்க்கி இளவரசர் கிட்டேயும்  ஒரு ஆதாயநோக்கத்துடனும், ரொம்ப ஆர்வத்துடன் பேசப்போனார்.

ஆனா அவருக்கு பதிலா கிடைச்சது என்னென்னா?

உங்க! யோசனைக்கு ரொம்ப நன்றி!

ஆனா! நீங்களே வரவேண்டா! நாங்களே உங்களை வேணுண்ணா கூப்பிடறோம்.! என்று சொல்லி அனுப்பிட்டாங்க.

ஈராக்கியர்களை அங்கிருந்து விரட்டுவதறக்கான பின்லேடனோட யோசனை அடிப்படையில பயனற்றது என எடுத்துக்கப்பட்டது.

ஒசாமா....
""சவுதி அரசுக்கு நன்றி தெரிவிச்சே ஆகணும்.....அதுவும் அவங்க மேற்கத்திய நாடுகளுக்கு அடிமையாகி, குறிப்பா அமெரிக்காவுக்கு அடிமையாகி, இந்த நாட்டோட மண்ணின் மைந்தர்களை, தங்களோட தாய் நாட்டை காப்பாத்த விடாம தடுத்ததற்காக.""

""ஆனா, அதுக்கு பதிலா இறை நம்பிக்கை இல்லாத அமெரிக்கர்களை இவங்க காப்பாத்த நியமிக்கிறாங்களாம்""

அரேபிய தீபகற்பத்துக்குள்ள அமெரிக்கர்களை உள்ளே விடற.. மன்னர் எடுத்த முடிவுதான். ஒசாமாவுக்கும் சவுதிஅரேபியாவுக்கும் ஒரு முடிவு ஏற்படற முக்கிய கட்டமாக அமைஞ்சிது.

மறைநம்பிக்கையில்லாதவர்கள் இந்த தீபகற்பத்தில் இருக்கக்கூடாதுன்னு முகம்மது நபி சொன்னது என்று எல்லா முஸ்லீம்களுக்கும் தெரியும். அதனால இது ஒசாம பின்லேடனுக்கு மட்டுமில்ல  இஸ்லாமியர்களுக்கோ ஒரு உந்துதலை தர்ற அம்சாம இருக்குது.

ஒசாமா....

""கிருஸ்துவ மற்றும் யூதப் பெண் ராணுவ வீராங்கனைகள் எங்களை பாதுகாக்கிறதை பார்க்க விரும்பல....அவங்களை ஒரு சில மாதங்கள் மட்டும் தான் தங்கவைக்கறதுக்கு மட்டும்தான் வரவேற்பு கொடுத்து தங்கவைச்சிருக்கிறதா, நம்ம தலைவர்கள் நம்மகிட்ட பொய்சொல்றாங்க!""


முதல் வளைகுடா யுத்தம் நடைபெற்று சதாம் உசேனுடைய ராணுவம் ஈராக்கிற்கு திருப்பி விரட்டப்பட்டது. ஆனால் அமெரிக்க ,ராணுவம் நேரடையாக திரும்பிச்செல்லவில்லை.

எப்ப அதைப் பத்தி பேச்சு வந்தாலும், பின்லேடன் அவங்க திரும்பி போகாம இங்க கழிச்ச காலத்தை சரியா கணக்கு காட்டுவாரு. அவங்க அமெரிக்கர்களை ஒரு வருஷத்துக்கு உள்ளே விட்டாங்க! அவங்க இன்னமும் இங்க தான் இருக்காங்க1 வருஷம் 96, 97 ஆகியும், ஏன்? 98 ம் ஆகிடுச்சிங்கிறாரு...

அரச குடும்பத்துடன் கருத்துவேறுபாடு வந்தவுடன் பின்லேடனுக்கு அவருடைய சொந்தநாட்டில் ஆதரவோ! அல்லது வரவேற்போ! இல்லை. 1992 இல் அவர் ஜெடாவை (Jeddah or Jidda-Saudi Arabian city) விட்டு புறப்பட்டார். அடுத்த சில ஆண்டுகள் சூடான் நாட்டின் தலைநகரான் கார்டொம் (Khartoum-Sudan capital)  தான் பின்லேடனுடைய
 கொள்கைப் பரப்பு களமாக விளங்கியது.

 சூடான் தான் இஸ்லாமிய விழிப்புணர்ச்சி எழுந்து ஒரு அரசமைக்கும் அளவுக்கு வெற்றிகரமாக அமைந்த முதல் சன்னிப்பிரிவு நாடாகும். சூடானின் புரட்சிக்கு காரணமான சிற்பி பேரிசில் கல்விபயின்ற அசான் அல் டுராபி (Hassan- al- Turabi) என்ற ஒரு இஸ்லாமியவாதி. நைல் நதிக்கு அருகில் அமைந்த ஒரு மக்கள் மாளிகையில் தான் டுராபி மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இஸ்லாமியவாதிகளுக்கான மாநாடுகளை நடத்தினார்.


கார்டொம் இது மாதிரி எல்லா இனத்தாருக்கும் ஒரு மையமாக ஆக்கணும் என்று டுராபி விரும்பினார். அதோட யார்? யாருக்கெல்லாம்? ஜிகாதிய கொள்கையில புரட்சிக்கான நோக்கம் இருக்கோ, அவங்க எல்லோருக்கும் சூடானுக்குள்ள வந்து முகாம் அமைச்சுகிட்டு தங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த கதவுகளுக்கு பின்புறம் மறைவாக தீவிரவாதக் குழுக்கள் சூடானுக்குள் வந்து 30 க்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். இப்பொழுது போல, டுராபிக்கு ஏற்படும் தர்மசங்கடமான கேள்விகளை ஒரு புன்னகையுடன் ஒருபுறமாக ஒதுக்கித்தள்ளிவிடுவார்.

அவங்க எதுக்காக இந்த மாதிரி சொல்லப்படுற முகாம்களை உருவாக்கனாங்க? அவங்க இந்த முகாம்கள்ல ஒன்னா வசிக்கும் பொழுது, அவங்க யாரும் கலாச்சார வாதங்களிலோ, பேச்சு வார்த்தைகளிலோ இல்லை கல்வியிலோ ஈடுபடமாட்டாங்க. அதாவது அவங்க வாழ்க்கையோட அர்த்தம் அது அல்ல. அவங்க வெளியிலேயிருந்து வந்து ஒன்னா வாழுறவங்க. அவங்க இங்க வந்தது எல்லாமே ஜிகாத்தை நிலைநிறுத்த பயிற்சி எடுத்துக்கவும் அதை பற்றி சிந்திக்கவும் தான்.

இந்த இடத்தில் இருந்தவரை இந்த கட்டத்தில் ஜிகாத்தை அப்படியே ஒதுக்கி வைத்தது போல் தான் பின்லேடன் இருந்தார். அவருடைய அளப்பறிய தனிப்பட்ட சொத்து மதிப்பு சூடானின் மிக்ச்சிறந்த புள்ளியாக்கியது. மிகப்பெரிய கட்டுமானப்பணிகளை மேற்கொண்டார்.

அவர் ஒரு விமானநிலையத்தையும், அதுக்கு போய்ட்டுவரக்கூடிய சாலையையும் உருவாக்கினாரு. அதோடு மிருக வளர்ச்சி ஆராய்ச்சிலேயும் , விவசாயத்திலேயும் முதலீடு பண்ணார்.

ஆனால் பின்லேடன் ஒரேயடியாக ஜிகாத்தை விட்டு விலகிவிடவில்லை. கார்டொமின் நவநாகரிகமான மாவட்டத்தில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த 2 மாளிகைக்கு  பலத்த காவல் போடப்பட்டு இருந்தது. அதுபோல அவருக்கு ஆயுதம் தாங்கிய மெய்க்காப்பாளர்கள் வழங்கியிருந்தது வேறுயாருமல்ல, அது ஐமன் அல்ஜவஹரி தான்.

எகிப்து எதிரான யுத்த ஆயுதங்களுக்கு சூடான் ஒரு சரியான தளமாக பயன்பட்டது. அதோடு எல்லைகள் ஊடுருவ வசதியாகவும் விரிவாகவும் இருந்தது. அவரால் பழங்கால வர்த்தக பாதைகள் மூலமா சுலபமா ஆயுதங்களை கடத்த முடிந்தது. அங்கிருந்து தான் ஜவஹரியோடக் குழு தங்களோட நாசவேலைகளை ஆரம்பிச்சது.

கடந்த பதினெட்டு மாதங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தற்கொலைப் படையினராலும், குண்டு வைப்புகளினாலும் சுமார் நானுறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர் கெய்ரொவில படுகொலை முயற்சிகளோட தன் வேலையை ஆரம்பிச்சாரு. அதோட சூடானியர்களும் அந்த முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்தாங்க. அவங்க முபாரக் (Muhammad Hosni Sayyid Mubarak) ஆட்சிக்கு எதிராக இருந்தாங்க. அவரால சூடான்ல உருவாக்கப்பட்ட இஸ்லாமிய புரட்சி  இயற்கையாகவே எகிப்துல பரவி அந்த ஒட்டுமொத்த பகுதியை ஆக்கிரமிக்கற நாளை ரொம்ப ஆவலா எதிர்ப்பார்த்திருந்தாங்க. அதனால் சூடானியர்கள் ஜவஹரியோட கைகோர்த்துகிட்டு வேலை செஞ்சாங்க.

இஸ்லாத்தின் பெயரால் சகமுஸ்லிம்களை கொலைசெய்வதை ஏற்றுக்கொள்ளப்படுவதாக தக்பிர் (Takfir=disbeleif-இஸ்லாமிய நம்பிக்கையில்லாதவர் or kafir (காபீர்) or atheiest-நாத்திகவாதி) அறிவிக்கிறது. முதலில் ஜவஹரியும் அதற்கு பின் ஒசமா பின்லேடனும் தக்பிர் செயல்படுத்தியபொழுது, முதல்முறையாக பல அப்பாவி முஸ்லிம்கள் அந்த கொடுஞ்செயல்களுக்கு தங்கள் உயிரை விலையாக கொடுக்கவேண்டிவந்தது.

பின்லேடன் சவுதிஅரேபிய அரசாங்கத்தை பத்தி குத்தம் சொன்னது மட்டுமில்ல, அந்த அராசங்கத்தையே தூக்கியெறியணும்னு அறைகூவல் விடுத்தார். அவரு வரம்பு மீறிப்போனதாக கருதப்பட்டதினால, அவரோட குடியுரிமையும் பரிக்கப்பட்டது.

“”ஆண்டவராகிய கர்த்தர் நமது பாவங்களை மன்னித்து நம் அனைவருக்கும் மீட்பையும் நிரந்தர வாழ்வையும் வழங்குவராக!””

சவுதியரேபியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவம் தான் இன்னமும் பிரச்சினையாக இருந்தது.

“”நாங்கள் அனைவரும் உம்மை விசுவாசிப்போமாக””....

அதன்பின்னர் 1995 நவம்பர் 13 ந்தேதியன்று அமெரிக்க ராணுவக் கட்டிடங்களுக்கு வெளியே முதலாவதாக இரண்டு கார் குண்டுகள் வெடித்து ஏழு பேர் இறந்தார்கள்.

ஒசாமா...
காலங்கடப்பதற்கு முன்னதாக வந்திருந்த அமெரிக்கப்படையினர் திரும்பிச் செல்லவேண்டும் என்பதை அறிவிக்கும் அடையாளங்களாக ரியாத்திலும், கோபரிலும் வெடித்த குண்டுகள் தெளிவு படுத்தின.


இதை செய்த குற்றவாளிகள் பிடிப்பட்டாங்க.....இதன் பின்னணியில பின்லேடன் தான் இருக்காருங்கற ஆதாரம் ஆணித்தரமாக கிடைச்சது.

அந்த குண்டுகளை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களின் பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் தலைகள் துண்டிக்கப்படுவதற்கு முன்பாக சவுதி தொலைக்காட்சி முன்பாக ஒளிபரப்பியது.

மத்தவங்க மாதிரியே தாங்களும் பின்லேடனால் ஈர்க்கப்பட்டதாக அவங்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்காங்க.

வெர்ஜினியாவில் உள்ள லேன்ட்லீ சிஐஏ தலைமையகத்தில் பணக்கார வர்த்தகராக கருதப்பட்ட பின்லேடனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.

ஆனால் 1995 ஆம் வருஷம் ரியாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்புக்கப்புறம், பின்லேடன் மேல ரொம்பத் தீவிரமா, கூடுதலா கவனம் செலுத்த ஆரம்பிச்சோம். அது ஏன்னா? அவருடைய பேரு எல்லா இடத்துகல்லேயிருந்தும் உளவுத்துறையில அடிபட ஆரம்பிச்சது. நாங்க பின்லேடனே கண்காணிக்க ஒரு அணியையே அமைச்சோம். அது 1996 ஆம் வருஷம் பணியில இறங்கியது.

யாரெல்லாம் தவிர்க்கவியலாத வகையில பயங்கரவாதிகளா இருந்தாங்களோ, அவங்க எல்லாருக்கும், இவர் தான் போஷகராகவும், ஆதரவாளராகவும் இருந்தாருங்கறது தெளிவா தெரிஞ்சது.

1996 ஆம் ஆண்டு இறுதியில நாங்க அல்கொய்தாவோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்தவர்கள், ஏறக்குறைய 25 லிருந்து 30 நாடுகள் வரைக்கும் இருக்கும் எனபதை கண்டுபிடிச்சொம். ஆனா எங்களுக்கு தகவல் தந்துகிட்டு இருந்த சில நாடுகள் அல்கொய்தாவோடத் தொடர்பு அதைவிட இருமடங்காக இருக்கலாம் என்பதை குறிப்பிட்டாங்க.

பின்லேடன் ஏதோ ஒரு வகையில, இந்த எல்லா நபர்களோட சம்பந்தபட்டிருக்கிறதோட, அவங்களுக்கு பொருளாதார ரீதியான ஆதரவையிம் கொடுத்துட்டு வந்திருக்காரு.

நாங்க சூடானியர்களை அவங்களை அடக்கணும்னு, நாட்டை விட்டே துரத்தணும்ணு வற்புறுத்த ஆரம்பிச்சோம்.
**********
ஒசாமா...

“”இந்த எல்லாவிதமான நெருக்கடிகளினாலேயும், சூடான் நாட்டு அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் நிறுத்த சொல்லி எனக்கு உத்தரவு போட்டிருக்காந்தாங்க.””

*********

ஆகவே பின்லேடன் சூடானை விட்டு வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டார். எதிரியின் அருகியிருத்தல் என்ற யுக்தி அதனால் தோல்வியடைந்தது......................
...தொடரும்...பகுதி...2

,,நன்றி டிஸ்கவரி சேனல். தமிழில்.ஒளிபரப்பியது..02.05.2011  குறிப்பு ஒசாமா பின்லேடன் அமெரிக்க உளவுப்படையால் கொல்லப்பட்டதும் அன்றுதான் ...அதிகாலை பாகிஸதான்...அப்போதாபாத் நகரில்.

Sunday, 27 March 2011

மதம் ஒரு தேவையா...?.




விவேகானந்தர்...
 
      குருட்டு நம்பிக்கை என்ற பொருளில் எந்த நம்பிக்கையும் உண்மையான மதத்தில் கிடையாது. 
 எந்தப் பெரிய போதகரும் அப்படிப் போதித்ததில்லை. 

சீரழிவின் காரணமாகத்தான் இது நிகழ்கிறது. 

மூடர்கள் தாங்கள் யாராவது ஒரு பெரிய மகானின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவர்களுக்கு அதற்குரிய அதிகாரம் இல்லாவிட்டாலும்கூடக் கொள்கைகளை அப்படியே நம்பும்படி மக்களுக்கு உபதேசிக்கிறார்கள். 

எதை நம்புவது? கண்மூடித்தனமாக நம்புவது மனிதனைக் கீழ்நிலைக்கே கொண்டு செல்லும்.  

வேண்டுமானால், நாத்திகர்களாக இருங்கள்,
ஆனால், கேள்வி கேட்காமல் எதையும் நம்பாதீர்கள். 

ஏன் உங்களை மிருக நிலைக்கு இழிவு படுத்த வேண்டும்?

அதனால் நீங்கள் உங்களை மட்டும் கெடுத்துக் கொள்ளவில்லை, சமுதாயத்தையும் கெடுக்கிறீர்கள், உங்கள் பின்னால் வரப்போகிறவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

     
எழுந்து நில்லுங்கள், பகுத்தறிவுடன் பாருங்கள், கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள், நம்புவதல்ல மதம். 

மதம் என்பது இருப்பதும் ஆவதும். அதுதான் மதம். அந்த நிலையை அடைந்தால் தான் உங்களுக்கு மதவுணர்வு இருக்கிறது என்பது பொருள். அதற்கு முன்பு நீங்கள் மிருகங்களை விட உயர்ந்தவர்கள் அல்ல. 

புத்தர் பெருமான் கூறியது போல், நீங்கள் கேட்டதை நம்பாதீர்கள்,  

தலைமுறை தலைமுறையாக உங்களிடம் வந்த கொள்கைகள் என்பதற்காக நம்பாதீர்கள்,  

பலர் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள்,  

யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக நம்பாதீர்கள், 

 பழக்கத்தால் உங்களுக்கு பிடித்துப்போனவை என்பதற்காக நம்பாதீர்கள்,  

உங்கள் ஆச்சாரியர்களும் பெரியவர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள்.

  சிந்தித்து பாருங்கள் சீர்தூக்கிப் பாருங்கள், அதனால் வருகின்ற முடிவு பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருக்குமானால், அது எல்லோருக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அதன்படிச் செல்லுங்கள்.

விவேகானந்தர் நியுயார்க்கில் 1896 இல் ஜனவரி 5 ஆம் நாள் அன்று கிளைம்ஸ் ஆப் ரிலிஜியன் (The claims of Religion) என்ற பெயரில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி ...தகவல் திரட்டு ஸ்ரீ ராமகிருஷண மடம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அச்சகம், மைலாப்பூர், சென்னை-4

பெரியார் அறிவுச்சுவடி!





றிவின் வழியே அறவழி யாகும்
லயம் தொழுவது சாலவும் தீது
றைவன் என்பது இயற்கையே யாகும்
சன் என்பவன் நீசனே யாவான்
ன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை
ழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே
ல்லாம் உன் செயல் என்பதே நீ அறி
ழை என்பவன் கோழையே ஆவான்
துங்கி நில் என்றால் ஒட்டி நீ நிற்பாய்
துவோரெல்லாம் உயர்ந்தோர் ஆகார்.

டவுள் என்பது கயவர்கள் கற்பனை
கா சிக்குப் போவது காசுக்கு நட்டமே
கி ளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை.
கீ தை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்
கு ட்டக் குட்டக் குனிபவன் முட்டாள்
கூ டி ஒற்றுமை கொள்கையில் காண்பாய்
கெ ட்டாலும் மானம் விட்டுக் கெடாதே
கே ள்வி ஞானமே கேடிலா ஞானம்
கை ம்பெண்ணாயினும் கட்டு தாலியை
கொ டுப்பவன் எல்லாம் கொடை வள்ளல் ஆகான்
கோ யில் இல்லா ஊரில் நீ குடி இரு.

ரித்திரம் அறிந்தவன் சாத்திரம் பேசான்
சா தி ஒழியாமல் சமதர்மம்  இல்லை
சி ந்தனைச் செல்வமே சிறந்த செல்வம்
சீ வனை விட்டபின் சிரார்த்தம் எதற்கு?
சு கமென்று எதுவும் சொர்க்கத்தில் இல்லை
சூ ட்சுமம் என்பது சூழ்ச்சியே யாகும்
செ த்தும் விடுவான் மருத்துவன்;
           செத்தாலும் விடான் புரோகிதன்
சே க்கிழார் செய்ததே சிவனார் லீலைகள்
சொ ர்க்கம் என்பது சுரண்டி வாழ்வதற்கே
சோ திடம் சொல்வது சோற்றுக்கு என்று அறி

ஞா னி என்பான் ஞானமே இல்லான்
டா வும் டீ யும் டவாலியர்க்கே

ன்மானம் இலாதவன் தமிழன் ஆகான்
தா ழ்வு மனப்பான்மை தனை நீ தவிர்ப்பாய்
தி ராவிடர்க் கில்லை திதியும் திவசமும்
தீ ண்டாமை என்பது வேண்டாமை யாகும்
து ணிந்தோர்கி கில்லை துன்பமும் துயரமும்
தூ ய்மை என்பதே வாய்மையில் காண்பாய்
தெ ய்வத்தை நம்பித் தெருவில் நிற்காதே
தே வரின் பேரால் திருடரே பெருகினர்
தொ ட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே
தோ ல்வி எதிலும் துணிந்தோர்க் கில்லை


யம்பட உரைப்பவன் நயவஞ் சகனே
நா யா யிருந்து நீ நரிக்கு இடங் கொடேல்
நி யாயத்துக்கென்று ஒரு நிலையென்றும் இல்லை
நீ தியின் கதையும் நிலையான தன்று
நு னிப் புல் மேய்ப்பவன் நுட்பத்தை அறியான்
நூ லோர் எல்லாம் மேலோர் அல்லர்
நெ ற்றிக்கு வேண்டாம் நீறும் நாமமும்
நே ர்மைக்கு என்றும் நெஞ்சில் இடம்கொடு
நொ ந்தவன் சொன்னால் நோகத்தான் செய்யும்
நோ காமால் தின்பவன் நோன்பெலாம் உனக்கேன்?

குத்தறிவாளர் பஞ்சாங்கம் பாரார்
பா ம்புக்கு நஞ்சு பல்லில்;
           பார்ப்பனனுக்கு நஞ்சு நெஞ்சில்
பி றப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை
பீ டை என்பது பிராமணீயமே
பு துமையை விரும்பிப் பழமையை மறப்பாய்
பூ ணூலை அணிந்தவன் புனிதன் ஆகான்
பெ ருமை பெற நில்
பே தமை அகற்று
பொ றுத்தார் ஆளும் பூமி மயானமே
போ ர்த்திறன் போற்றி வாழ்

னிதனைக் கெடுத்தது தமெனும் மாயை
மா னம் போகும் மக்கள் மிகப் பெறின்
மி ச்சம் பிடித்து வாழ்; மீளாக் கடன் இரா
மீ சை வைக்க ஆசைகொள் மிழா!
மு க்தியால் வளர்வது மூடத்தனமே
மூ ர்க்கனே மேல் முட்டாளைக் காட்டிலும்!
மெ ன்மையின் பேரால் பெண்மை
                இழந்தது வன்மையே ஆகும்
மே ட்டுக் குடியெலாம் மேற்குடி ஆகா
மொ ட்டையும் கொட்டையும்
                மோட்சத்தைக் காட்டா!
மோ ட்சத்தைப் போலொரு மோசடி இல்லை

க்ஞமும் யாகமும் யாசகம் எடுக்கவே
யா தும் ஊரென வாழ்ந்தது போதும்
யு க்தி என்பது குயுக்தியே யாகும்
யூ கங்கெளெல்லாம் உண்மைகள் ஆகா

சாபாசத்துக்கே ராமனும் ருமனும்
ரா வண காவியம் ரசித்துப் படிப்பாய்

ம்புக்கு அஞ்சி வறுமையில் வாடேல்
வா தம் புரிவதில் வல்லமை பெறுவாய்
வி ரக்திக்கு அடிப்படை விதியே யாகும்
வீ ழ்ச்சி என்பது வீரனுக்கு இல்லை
வெ ற்றி நிச்சயம் விடாமல் முயன்றால்
வே தத்தால் வளர்வது விதண்டா வாதமே
வை யகம் வாழ வைதீகம் வேண்டாம்.

நன்றி...பகுத்தறிவாளர் விந்தன்...
வெளியீடு:பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் .