Pages

Thursday, 14 July 2011

இந்தியப்பள்ளிகள் வரலாற்றில் முதல் முறையாக பாடங்களே இல்லாத பள்ளிகள் தமிழகத்தில்-உங்கள் பிள்ளைகளை சேர்க்கத் தவறாதீர்!

பாடங்களே! இல்லாத பள்ளிகள்!
குலக்கல்வி போற்றும் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை!
பேராசிரியர் சுப.வீ







....நன்றி! கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி!

Monday, 11 July 2011

குலக்கல்வி-சமச்சீர் கல்வி- ஓர் ஆய்வு

நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் -உச்சநீதிமன்றத் தீர்க்கமான தீர்ப்பையும் பெற்ற பின்னர் -சமச்சீர் கல்வித் திட்டத்தை சென்ற ஆண்டுதான் தி.மு.க அரசு செயல்படுத்தத் தொடங்கியது.

     ஆனால் அந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது புதிய அ.தி.மு.க அரசு முடிவு செய்தது.  அந்த முடிவுதான் அரியணை ஏறியதும் எடுத்த முதல் முடிவு.  அதிர்ந்து போனோம்.


     ஏனெனில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவைக்கவேண்டும் என்று எந்த இயக்கமும் கோரவில்லை.  ஆனால் துக்ளக் "சோ"தான் அந்தத் திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வந்தார்.  அனைத்து கல்வி முறையையும் கீழே இறக்கி சமன் செய்யும் சமத்தாழ்வு கல்வித்திட்டம் என்று அவர் சாடி வந்தார்.

     அவர் இன்னும் ஒருபடி மேலே சென்றார்.  ஒரு சிலர் உயர்க்கல்வி பெறுவதைத் தடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வித்திட்டம் என்றார்.  இதனை ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.  அவர் சொல்லும் ஒருசிலர் யார் எனபது தெரியும்.

     சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தப்படுகிறது என்ற தமிழக அரசின் அறிவிப்பை ஒரே ஒருவர்தான் ஆனந்தமாக வரவேற்றார்.  அவர்தான் இந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன்.

     சமஸ்கிருதத்தை மையப் பாடமாகக் கொண்டு ஓரியண்டல் பள்ளிகள் செயல்படுகின்றன.  அரசு உதவியோடு செயல்படும் அந்தப் பள்ளிகள் தமிழகத்தில் மொத்தமே 27-தான்.  அந்தப் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி வேண்டாம் என்று மாம்பலம் அகோபில மடம் ஓரியண்டல் பள்ளியின் செயலாளர் வாசுதேவாச்சாரியார் செல்வி ஜெயலலிதாவிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

     சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான ஒரு கருவி.  எனவே சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்றால் சமஸ்கிருதம் ஓரம்கட்டப்பட்டுவிடும்.   ஆகவே, அந்தக் கல்வித்திட்டம் கூடாது என்று வாசுதேவாச்சாரியார் மிகத்தெளிவாகக் கூறியிருக்கிறார்.

     ஆம்...துக்ளக் சோ, இராமகோபாலன், வாசுதேவாச்சாரியார் போன்றவர்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நஞ்சென வெறுக்கின்றனர். 

     எதனையும் வர்க்கக் கண்ணோட்டத்தோடு பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு இவர்கள் எதிர்ப்பதன் பின்னணி தெரியவில்லை. அய்யா...எதிர்ப்பவர்கள் வர்ணாஸ்ரம கண்ணோட்டத்தில் எதிர்க்கிறார்கள், இது சோலைக்குத் தெரியவில்லையா?  என்று ஒரு வாசகர் நமக்கு ஒரு குட்டு வைத்தார்.

     சமச்சீர் கல்வித் திட்ட எதிர்ப்பும் அன்று ராஜாஜி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வித் திட்டமும் ஒன்றுதான் என்று அவர் நமக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.  அதன்பின்னர்தான் நமது சிந்தனைச்சாளரம் திறந்தது.  'விடுதலையில் தோழர் மின்சாரம் தொகுத்துத் தந்துள்ள கருத்துக்கள் மண்டையில் உறைத்தன.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னணியில் இயங்குவது நியூ செஞ்சுரி புத்தக நிலையம்.  'உங்கள் நூலகம்' என்ற சஞ்சிகையை நடத்துகிறது.  சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் யார் என்று அந்த இதழ் (ஜூன் 2011) அம்பலப்படுத்தியிருக்கிறது.

     ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்.  சமச்சீர் பாடப்புத்தகங்களை நிபுணர் குழு வைத்து ஆராயப்போவதாக அறிவித்திருக்கிறார்.  அவர் நிறுத்தி வைத்துள்ளாரா?  குப்பைத் தொட்டியில் வீசிவிட்டாரா என்று தெரியவில்லை.  இதுபற்றி வெளிவந்திருக்கும் செய்திகளுக்கு இணையதளங்களில் பலர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.  அவற்றிலிருந்து பார்ப்பனீய கருத்து நிலையை ஊக்கமுடன் ஆதரிக்கும் சீரழிந்த நடுத்தர வர்க்கத்தினர் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகக் குதூகலிக்கின்றனர் என்று தெரிகிறது.    இவ்வாறு 'உங்கள் நூலகம் படம் பிடித்துக் காட்டுகிறது.  கிறித்துவ சமுதாய மக்களின் இதயநாதமாக வெளிவருவது, 'நம் வாழ்வு'.  சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று தமிழக அரசு எடுத்த முடிவுகளைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறது.

     அம்மாவின் மனுதர்ம பார்ப்பன சித்தாந்தம் அய்ந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல் படுத்தப்படும்.  முதல் அடியே முதல் கோணலானது.  நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும்.

     சமச்சீர் கல்வி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக்கல்வித் திணிப்பு போன்ற பார்ப்பன இனச்சதியின் நூற்றாண்டுகாலப் போராட்டத் தொடர்ச்சியாக இனம் காணலாம்.  

      -இவ்வாறு நல்லவர்களின் நாடித் துடிப்பாம் 'நம் வாழ்வு' விளக்கியிருக்கிறது.

      எந்தக் கருத்தையும் நெருப்புச் சொற்களால் விமர்சிக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் என்ன சொல்கிறார்கள்?

     "பறையனுக்கும் பார்ப்பானுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வியை இங்கே நடைமுறைப்படுத்திவிடக்கூடாது.  இதனை அழித்தே தீருவேன் என்ற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது" -என்கிறார் தொல்.திருமாவளவன்.  (தமிழ் மண் ஜூன் 2011)

     ஆனால் அதே சமயத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நீக்க முன்வந்த தமிழக முதல்வருக்கு சென்னையில் பாரட்டுவிழா நடைபெற்றது.  ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை, ஆனாலும், அந்த விழாவை சீரோடும் சிறப்போடும் நடத்தியவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள்தான்.

     அவர்கள் கல்வியை வியாபாரமாக நடத்துகிற நேற்றைய லட்சாதிபதிகள்.  நாளைய கோடீஸ்வரர்கள்.  அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்றால் அவர்களுடைய வியாபாரம் படுத்துவிடும்.  எனவே துக்ளக் சோ, இராம.கோபாலன், வாசுதேவாச்சாரியாரோடு இவர்களும் கரம் கோர்க்கிறார்கள்.  ஒரே லட்சியம், ஆனால் வெவ்வேறு பாதையில் அந்த எல்லையை நோக்கி நடைபோடுகிறார்கள்.

     அதே சமயத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் அரசின் முடிவை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?  அந்தக் கல்வித் திட்டத்தைக் கைவிடுவதை மக்கள் விரும்பவில்லை.  வேதனைப்படுகிறார்கள் என்பதனை லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது.  இவை முதல்வரின் கவனத்திற்குச் சென்றதா?  அநேகமாக எல்லா இயக்கங்களும், பொதுநல அமைப்புக்களும் சமச்சீர் கல்வித் திட்டத்தை வரவேற்கின்றன.  சர்வதேச தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்போடு இணைந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியாகும்.  மிகப்பெரிய இயக்கம்.  அதன் வழிகாட்டி ஈசுவரன் சர்வதேச அமைப்பின் துணைத்தலைவராக மீண்டும் தேர்வுப் பெற்றிருக்கிறார்.

     கட்சிகளுக்கு அப்பால் தமிழகத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகளில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தான் பெரிய அமைப்பாகும்.  சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டணி தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.  சமச்சீர் கல்வி ஏன் என்பதனை அந்தக் கூட்டணி அற்புதமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது.


     எல்லோரும் இந்நாட்டு மன்னர், எல்லோரும் ஓரு நிறை, எல்லோருக்கும் ஓர் விலை என்பதே மக்களாட்சியின் மாண்பு, மாபெரும் சிறப்பு.  அதனை அடியொற்றியே செல்வந்தருக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலையை தமிழ்நாட்டில் முற்றிலும் அகற்றி, அனைவருக்கும் ஒரே கல்வி முறை அது சமச்சீர் கல்வி முறை என்று கொண்டு வரப்பட்டது.  தமிழகத்து அனைத்து தரப்பு மக்களும் அதனை ஆமோதித்து ஏற்றுக்கொண்டனர்.  கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியில் ஒரு வரப் பிரசாதமாக சமச்சீர் கல்வியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.  உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்வியைத் தொடர்ந்து அமுல்படுத்திட உத்திரவிட்டுள்ளது -என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெளிவுப்படுத்தியிருக்கிறது.  பாடத்திட்டங்களில் மாறுதல் செய்யலாம்.  ஆனால் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

     இவ்வளவு சிறப்பான கல்வித் திட்டத்தை கைவிடுவது நிறுத்தி வைப்பது எனபது சரித்திரச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுகின்ற செயலாகும்.

     ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தையும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதையும் ஏன் ஒரே நிலையில் காண்கிறார்கள்?

     அப்பன் தொழிலை மகன் அரைநாள் கற்றுக் கொள்ள வேண்டும்.  மீதி அரைநாள் பள்ளிக்குப் படிக்க வர வேண்டும் எனபதுதான் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டமாகும்.

     விளங்கச் சொல்வதானால் செருப்புத் தொழிலாளியின் மகன் செருப்புத் தைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

     சலவைத் தொழிலாளியின் மகன் அரைநாள் துணி வெளுக்கப் போக வேண்டும்.  பின்னர் பள்ளியை எட்டிப்பார்க்கவேண்டும்.  இந்தக் குலக்கல்வித்திட்டம் ஜாதீய அமைப்புகளுக்கு உயிரூட்டவதாகும்.  பிறப்பால் கற்பிக்கப்பட்ட பேதத்திற்கு வலுவூட்டுவதாகும்.  வர்ணாசிரம தர்மத்தை நிலைநிறுத்துவதாகும்.  எனவே ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகமே கொந்தளித்தது.  அரியாசனத்திலிருந்து அவரும் இறங்கிச் சென்றார்.

     இதுவரை தமிழகத்தில் இருக்கும் கல்வியின் நிலை என்ன?  ஏழை, எளிய கிராமத்து மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் ஒரு பாடம்.

     நடுத்தர வர்க்கத்து வசதியான மாணவர்கள் படிக்க மெட்ரிகுலேஷன் கல்வி.  அதற்கு ஒரு பாடம்.  பெரிய தனக்காரர்களும் அரசியல் பெரிய வீட்டுப் பிள்ளைகளும் படிக்க சி.பி.எஸ்.இ. கல்வி.  அதற்கு மத்திய அரசின் பாடத்திட்டம்.  ஆனால் அந்தப் பாடத்திட்டம் இந்தியா முழுமைக்கும் பொதுவான  சமச்சீர் கல்வித் திட்டமாகும்.

     இப்படி வசதியும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப கல்வி நிலையங்கள்.  தனித்தனிப் பாடத்திட்டங்கள்.  துக்ளக் சோ கூறுவது போல ஒரு சிலர் உயர் கல்வி கற்பதற்கு மேல்நிலைக் கல்வி நிறுவனங்கள் அதற்குத் தனியாகப் பாடத்திட்டங்கள்.

     இதுவும் இன்னொரு கோணத்தில் நால்வருண தர்மம் தான்.  ஏழைகளுக்கு ஒரு கல்வி; சற்று தலை தூக்குகிறவர்களுக்கு இன்னொரு கல்வி என்று வசதிக்குத் தக்க கல்வி கற்கப்படும் அவல நிலை.  இது கூடாது.  கல்வியிலும் சமத்துவம் வேண்டும் என்றுதான் ஆன்றோரும் சான்றோரும் சமச்சீர் கல்வித் திட்டத்தை வலியுறுத்தினர்.  ஆனால் அதனை எதிர்ப்பவர்கள் என்ன கூறுகிறார்கள்?

     ஆதிவாசிப் பையனுக்கும் அக்கிரஹாரத்துப் பையனுக்கும் ஒரே பாடமா?  ஒரே கல்வியா?  இது அநியாயம் என்கிறார்கள்.  மேல்ஜாதி மாணவனுக்கு ஈடாக கீழ் ஜாதி மாணவன் மார்க் வாங்கினால் மேல் ஜாதியின் மகிமை கீர்த்திக்குப் பங்கம் வந்து விடாதா எனகிறார்கள்.  இது அவர்களுடைய குல தர்மம்.  இந்த நூற்றாண்டில் அந்த அதர்மங்களுக்கு இடமில்லை எனபதனை முரசறைந்து சொல்வது தான் சம்ச்சீர் கல்வித் திட்டமாகும்.

........சோலை...நக்கீரன்

*****************
பொது ஜனம்; என்னய்யா திராவிட ஆரியப்போர் தொடங்கிடுச்சு போல இருக்கே! மீண்டும் பெரியார் காலத்துக்கு திரும்பிகிட்டு இருக்குது! 


பொது ஜனம்; இதுங்களுக்கு பீதியில பேதியாவுது! அதனால இந்த திருட்டு வேலைகளை மீண்டும் ஆரம்பிக்குதுங்க!


பொது ஜனம்; ஆரிய மாயை எழுதிய அண்ணாவின் பெயரை வைச்சி பார்ப்பன மாயை தொடங்கிடுச்சி!


பொது ஜனம்; திருப்பி இதுங்களை ஓடவிடனுமா?


பொது ஜனம்; அதுக்கு என்ன? மொத்தமா ஓடவிட்டுட்டா போகுது!


பொது ஜனம்; யாரும் ஓடவிடவேத் தேவையில்லை! அதுங்களாவே ஓடிடும்!

Sunday, 10 July 2011

"நான் நில மோசடி பண்ணதை மட்டும் விட்டுட்டு மத்தவங்க பண்ணது எல்லாத்தையும் கேஸ் புக் பண்ணு ங்க போலீஸ்"-ஜெயலலிதா




நிலமோசடி: 3 நாட்களில் 30 பேர் புகார்

தமிழகத்தில் நிலம், வீடுகள் அபகரிப்பு மற்றும் மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடத்தி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பேரில் மாவட்டம் தோறும் நில மோசடி தொடர்பாக போலீசில் தனிபிரிவு தொடங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றபிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.

மாவட்டத்தில் நிலமோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.   அதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களில் நிலமோசடி, அபகரிப்பு தொடர்பாக 30 பேர் கடலூர் தனிப்பிரிவு போலீசில் உரிய ஆவணங்களுடன் புகார் செய்தனர். அந்த புகார் மனுக்களின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.....நக்கீரன் 09.07.2011
**********************
பொது ஜனம்; என்னய்யா! ஜெயலலிதா நில மோசடி பண்ணதை யார் கேஸ் புக் பண்ணுவா!

பொது ஜனம்; சிறுதாவூர் தலித் நிலத்தை அபகரிச்சதை பத்தியா! அதை சுப்ரிம் கோர்ட்ல புக் பண்ணுவாங்க! அதை பத்தி குரல் கொடுத்த கம்யூனிஸ்டுங்களே  இப்ப வாயை மூடிக்கிட்டு கூட்டணியில  குப்பை கொட்டறாங்களே!

பொது ஜனம்; அப்ப சுப்ரிம் கோர்ட்டுதான் டான்சி நிலத்தை புடுங்கி கொடுத்தா மாதிரி! இந்த சிறுதாவூரையும் இந்த பொம்பளை கிட்டேயிருந்து புடுங்கனுமா? இது நடுவுல திருடன சொத்தை வேற புடுங்கணும்! எதை பர்ஸ்ட்டுல புடுங்குவாங்க!
பொது ஜனம்; நாட்டில தினம் தினம் தங்கத்தை சவரன் சவரனா, நூற்றுக்கணக்குலே கொள்ளை அடிக்கிறாங்களே! லாக்கப் டெத் அசால்ட்டா நடக்குது. "பீப் பீ" வாசிக்கறவரைக் கூட விட்டு வைக்க மாட்டங்கறாங்களே! பப்ளிக்கா மர்டர் பன்றாங்களேய்யா! அந்த கொலை காரங்களையெல்லாம் போலீஸ் கேஸ் புக் பண்ணவே மாட்டேங்குது! எல்லாம் அதிமுக அள்ளக்கைங்களா!

பொது ஜனம்; அட போலீஸ்! தான் தைரியமா யூனிபார்ம் போட்டுகிட்டே தண்ணியிடிச்சுகிட்டு ரோட்டுலேயே கட்டி புரண்டு அடிச்சுக்குதே! கேஸ் கொடுக்கப் போன பொம்பளையை கற்பழிக்க பாயுதே! 

பொது ஜனம்; இந்தம்மா அரசியல் சூரப்புலி! திமுகவை ரப்பர் வைச்சு அழிக்க முயற்சி பன்றாங்க! பசங்க படிப்பை கெடுத்துட்டு! போய் கொடைக்கானல்ல போய் போத்திகிட்டு தூங்க சொல்லுய்யா! அங்க தான் கேட்டு போட்டு யாரையும் ரோட்டுல கூட விடறிதில்லையே! 

பொது ஜனம்; இது மட்டும் சுப்ரிம் கோர்ட் உத்தரவுப் போட்டாக் கூட ரோட்டை ஆக்கிரமிச்சுகிட்டு விதிமுறைக்கு மாறா கொடைக்கானல்லே பங்களா கட்டிகிட்டு கேட்டை மூடிவைச்சிகிட்டு இருக்கும். 

பொது ஜனம்; இதுக்கு ஒரு நியாயம் ஊருக்கொரு நியாயம்! தூ....!

Friday, 8 July 2011

நான் சட்டத்தை மதிக்கற ஆள் கிடையாது! சட்டத்தை காலில போட்டு மிதிக்கற ஆள்!- ஜெயலலிதா


வழக்கு நடக்கும் போதே பாட புத்தகங்கள் அச்சிடுவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்


சென்னை, : சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சடிப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகாதா? இது நீதிமன்றத்தை  கேலிக்கூத்தாக்காதா? என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், தமிழக அரசு வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்ற மூத்த

வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற வக்கீல் குரு.கிருஷ்ணகுமார் ஆகியோரும், மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் கே.பாலு, பிரசாத் ஆகியோரும் ஆஜராகினர்.உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் வருமாறு:மூத்த வக்கீல் பி.பி.ராவ்: சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தவறானது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின்

கட்டாயக் கல்வி சட்டம்தான் மூலச்சட்டம். இந்த சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது. இந்த மூலச்சட்டத்தை கவனத்தில் கொள்ளாமல், கடந்த அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை
கொண்டு வந்தது. தேசிய பாடத்திட்டம் வடிவமைப்பு விதி 2005ன்படி சமச்சீர் கல்வி தரமற்றது. இதுதவிர, சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது என்று கல்விக்கான தேசிய கவுன்சில் தமிழக அரசுக்கு கடந்த
2009ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கடிதம் எழுதியது. அதை கடந்த அரசு ஏற்கவில்லை.இதுதவிர, கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அரசுக்கு பல பரிந்துரைகள் செய்தது. அதாவது, சமச்சீர் கல்வி புத்தகம் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய  கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த அரசு அமல்படுத்தவில்லை. இதற்காக, மே மாதம் 15ம் தேதி
கெடு விதித்தது. அதை கடந்த அரசு மீறியுள்ளது. புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை, தனியார் பள்ளிகளுக்கு உள்ளது என்று மத்திய அரசின் மூலச்சட்டம் கூறுகிறது. இதை கடந்த அரசு மீறி
செயல்பட்டுள்ளது. மூலச்சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த முடியாது. சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு  கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், அந்த கமிட்டி 3 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி இரவு, பகலாக சமச்சீர் கல்வியை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது; இதை ஏற்க வேண்டும்.சமச்சீர் கல்வி என்பது மாணவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சமச்சீர் கல்வி மாணவர்கள் வளர்ச்சிக்கு தரமானதாக இல்லை. சமூக நீதி என்ற பெயரில் மனுதாரர்போல சிலர்  தரமில்லாத பாடதிட்டத்தை மாணவர்களுக்கு  திணிக்கிறார்கள். இது தவறானது. சமச்சீர் கல்வியை நாங்கள் முழுவதுமாக ரத்து செய்யவில்லை. அதை நிறுத்தி வைக்கத்தான் சட்டத்திருத்தம்  செய்துள்ளோம். அதை எப்போது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம்.
முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமார் கமிட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார்  கமிட்டி, ஒரு நிலைக்குழுவை ஏற்படுத்த வேண்டும என்று கூறியுள்ளது. ஆனால், கடந்த அரசு எந்த குழுவையும்

அமைக்கவில்லை. அந்த நிலைக்கு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கமிட்டி பரிந்துரை செய்தும் கடந்த அரசு அதை அமல்படுத்தவில்லை.
தமிழக அரசின் சட்டத்திருத்தம் அவசர முடிவு அல்ல. தீர ஆராய்ந்து பார்த்து எடுத்த முடிவுதான். மாணவர்கள் நலன் கருதி நிதானமாக எடுத்த முடிவுதான். சமச்சீர் கல்வி சட்டம் இந்திய அரசியல்

சட்டம் பிரிவு 14 மற்றும் 15க்கு எதிரானது. மத்திய அரசின் மூலச்சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி இருப்பதால் 1 கோடியே 35 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 200 கோடி ரூபாய் வீண்

செலவு என குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பள்ளிகள் தரப்பு வக்கீல்கள் சிலம்பண்ணன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி: பழைய பாடத்திட்டப்படி புத்தகங்கள் அரசு வெளியிடுவது நியாயமானது தான். இதை ரத்து செய்யக்கூடாது.
தலைமை நீதிபதி: இன்று வெளிவந்த ஒரு ஆங்கில பத்திரிகையில், பழைய பாடதிட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை. அப்படி

இருக்கும்போது எப்படி புத்தகங்கள் அச்சடிப்பீர்கள். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகாதா? தமிழக அரசு ஏன் இந்த நிலை எடுத்துள்ளது? இது வருந்தத்தக்கது.
வக்கீல் பி.பி.ராவ்: இதுபற்றி எனக்கு தெரியாது.
தலைமை நீதிபதி: தமிழக அரசு பற்றி உங்களுக்கு தெரியாது. தமிழக அரசின் இந்த நிலை நீதிமன்றத்தை கேலிகூத்தாக்குவதாக உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது.
வக்கீல் பி.பி.ராவ்: மாணவர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தகங்களை அச்சடித்து இருக்கலாம்.
தலைமை நீதிபதி: புத்தகங்கள் அச்சடிப்பதை ஒப்பு கொள்கிறீர்கள். இதை பதிவு செய்து கொள்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
அடுத்த கட்ட விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தள்ளிவைத்தனர்.

.....தினகரன் 08.07.2011

***********************

பொது ஜனம்; ஜெயலலிதா அரசுக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் விடுத்திருக்காரே! 

பொது ஜனம்;ஜெயலலிதாவுக்கு இப்படி கண்டனம் வரும்னு தெரியாதா? அது தான் சட்டத்தை எப்பவுமே மதிக்கிறது இல்லையே! நீதிமன்றத்தை பல முறை ஏமாத்தி! ஏமாத்தி! அதுக்கு பழக்கமாயிடுச்சு! உச்சநீதிமன்ற கட்டாயமா கொடநாடு எஸ்டேட் ரோட்டை பொது மக்களுக்கு திறந்து விடணும்னு கண்டிஷனா தீர்ப்பு இரண்டாவது முறையும் கூறியிருக்காங்க! திறந்து விட்டுச்சா!  

பொது ஜனம்; அதோட கோர்ட்டுல அதுதான் நீதிபதி! இந்த நீதிபதிகள் எல்லாம் அதுக்கு ஒரு கால் தூசு!

பொது ஜனம்; பிக்பாக்கெட் கேசுக்காறன் கூட நீதிமன்றத்துக்கு பயப்புடறானேய்யா! இது முதலமைச்சர் பதவியிலே இருந்துகிட்டு நீதிமன்றத்தை மதிக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்!

பொது ஜனம்; அதனால தான் தினம் கொலை கொள்ளை ஊருக்கு ஊர் நடக்குது! இது ஒரு கேடி லேடி! அதனால கேடி ரவுடிங்க தைரியமா திரியறாங்க!  கொலை கொள்ளையை அசால்ட்டா பண்ணிட்டு போயிகிட்டே இருக்காங்க!


பொது ஜனம்; ஆமாய்யா நேற்றுக்கூட ஒரு பொம்பளை மேல ரவுடிங்க ஆசிட் அடிச்சிட்டானுங்க!  டிரிட்மென்ட் பண்ணிகிட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பிட்டல இருந்த அந்த பொம்பளையை, அப்படியே ரவுடிங்க கடத்திகிட்டு போய் கேசை வாபஸ் வாங்குன்னு  மிரட்டுனாங்களாம்!


பொது ஜனம்; பின்னே! ஜெயலலிதாவே ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மேல (கூலிப்படை சுர்லாவை வைச்சி) ஆசிட் அடிச்ச பொம்பளை ரவுடி தானே! அதனால தான் இப்ப மக்கள் மூஞ்சிலேயும் ரவுடிங்க தைரியமா ஆசிட் அடிக்கிறாங்க!

பொது ஜனம்; எங்கய்யா போலீஸ்காரணுங்களே குடிச்சுட்டு பப்பளிக்கா ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறானுங்க!  புகார் கொடுக்கப் போற பொம்பளையை ரேப்! பண்ணப்பாக்குறானுங்க! ஏற்கனவே ரேப் பண்ணிகிட்டும் இருக்கானுங்க!



பொது ஜனம்; அப்ப! டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில வந்த செய்திதான் தலைமை நீதிபதியை கோபமாக்கிடுச்சி! 

பொது ஜனம்; ஏற்கனவே உச்சநீதிமன்றத்திலே பொது நல வழக்கு போட்டிருக்காங்க! இந்த ஆதாரத்தை அப்படியே அதுக்கு சேர்த்துக்கலாம்! அரசு தரப்பு வக்கீலும் பழையப் புத்தகம் அச்சடிக்கறதை ஒத்துக்கிட்டாரே! 

பொது ஜனம்; கிளினா இது கோர்ட்டு அவமதிப்பு! தெளிவாயிடுச்சு! உச்ச நீதிமன்றம் இந்த செயலுக்கு கடுமையான தண்டனை தரணும்! அப்ப தான் இனிமேல் எவனும் நீதிமன்றத்தை அவமதிக்க மாட்டான்!

பொது ஜனம்; நாலு தடவை கூடியே இவங்க இந்த புத்தகம் சரியில்லைன்னு சொல்றவங்க இன்னொரு நாலு நாளுள புதிய சமச்சீர் புத்தகத்தை உருவாக்கி அச்சடிக்க முடியாதா?

பொது ஜனம்; மக்கள் கேக்கறது என்ன? எல்லோருக்கும் ஒரே கல்வி!

பொது ஜனம்; அதானே! அப்ப ஜெயலலிதாவுக்கு சமச்சீர் கல்விமேல பயங்கற காண்டு! எங்க எல்லோரும் புத்திசாலியா ஆயிட்டானுங்கன்னா நம்மளை தூக்கி ஒரம் கடாசிடுவானுங்க! அதுவும் நம்ம ஜாதிக்காரப் பாப்பானுங்க எல்லாம் கீழேப்போயிடுவானுங்க என்ற பிதறல் இதுக்கும் வந்துடுச்சி!

பொது ஜனம்; பழையப் புத்தகத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அச்சடிக்கிறதுக்குப் பதிலா புதிய சமச்சீர் புத்தகத்தையே உருவாக்கி அச்சடித்து இருக்கலாமே! 

பொது ஜனம்; ஆமாம்! அப்புறம் எதுக்கு ஜெயலலிதா அள்ளக்கைங்க கோர்ட்டுல "நாங்க சமச்சீர்கல்வியை நிறுத்தலைன்னு புருடா விடுதுங்க!"

பொது ஜனம்; அது மட்டும் அவசரக் கோலமாகாதா?

பொது ஜனம்; நாலு நாளுளை அவசரக்கோலமா புத்தகத்தில இருக்கிற தப்பை கண்டுபிடிக்கிறவங்க! நாலு நாளுள அவசர!  அவசரமா! புதிய சமச்சீர் புத்தகத்தை உருவாக்கி  அச்சடிக்க முடியாதா?

பொது ஜனம்; அவங்க தான் தனியார் பள்ளிகள் கிட்டே கட்டிங் வாங்கிட்டாங்க! அதனால அவங்களுக்கு சாதகமா இந்த பொம்பளை செயல்படம்னு நினைக்குது! 

பொது ஜனம்;பல தனியார் பள்ளிக்கூடத்தில எதுக்கும் கவலைப்படாம பழைய பாடத்தை தனியார் புத்தகத்தின் மூலமா நடத்திகிட்டுதான் இருக்காங்க! அவங்களுக்கு ஜெயலலிதா எப்படியும் கோர்ட்டை ஏமாத்திப்புடும்னு அவ்வளவு உறுதியான நம்பிக்கை!

பொது ஜனம்; இந்த பொம்பளை ஆட்சியில எந்த நல்ல திட்டமும் வராது போல இருக்கே!


பொது ஜனம்; இருக்கறதை கெடுக்காம இருந்தா போதும்! இதுதான் இலவச பஸ் பாசையே இது அறிமுகப்படுத்தின மாதிரி தேவையில்லாமத் தொடங்கி வைச்சு பில்டப் கொடுக்குதே! 

பொது ஜனம்; அது கடந்த பல ஆண்டுகளா! அமலில் இருக்கும் கலைஞர் கொண்டு வந்த இலவச பஸ் பாஸ் திட்டம்! 

பொது ஜனம்; இது சரியான பெருமை பீயத்தக்களை!

பொது ஜனம்; கலைஞர் அரசில பள்ளி திறந்த ஒரே வாரத்தில மாணவர்களுக்கு பஸ் பாஸ் கொடுத்திட்டாங்க! இதுங்க ஒருமாசம் கிட்டே ஆகப்போகுது இன்னும் பஸ் பாசே கொடுக்கலை! 

பொது ஜனம்; இந்த திட்டமே பேருந்து கட்டணத்தை காரணம் காட்டி பசங்களை பள்ளிக்கூடம் அனுப்பாம பெத்தவங்க இருந்துடப்போறாங்க என்பதற்காகத்தான் இந்த இலவச பஸ்பாஸ் திட்டம். இதையே இன்னும்  மாணவர்களுக்கு பள்ளி திறந்து  25 நாளாகியும் கொடுக்கலை! ஆனா! அவசர அவசரமா நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னாடி பழையப் புத்தகத்தை பிரிண்ட் மட்டும் அடிக்குதுங்க!  இத்தனைக்கும் சமச்சீர் புத்தகம் ரெடியா இருக்கும் பொழுதே!

பொது ஜனம்; இந்த பொம்பளை மூஞ்சில பீச்சாங்கையைத்தான் வைக்கணும்! அதுவும் கழுவா! இது ஆட்சி நடத்துற லட்சணம் அந்தளவுல இருக்கு! ஓரே மாசத்துல அந்தளவுக்கு இளிக்குது!

பொது ஜனம்; இதுதான் திமுகவை ரப்பர் வைச்சு அழிக்கப்போகுதாம்! 

பொது ஜனம்; கிழிச்சது! இது கேசே இன்னும் முடியலை! இது எப்ப அழியப்போகுதுன்னு அதிமுகவில இருக்கறவங்களே காத்துகிட்டு இருக்கிறாங்க! 

பொது ஜனம்; இதுக்கு ஒட்டுப்போட்டவங்களே காத்துகிட்டு இருக்காங்க! முதல்ல ஒட்டுபோட்ட ஒட்டு போடாத மக்கள் என அனைவரையும் தன் பக்கமா இழுக்கறவன்தான் சிறந்த அரசியல் வாதி இது முன்றாம் தர, நான்காம் தர அரசியல் வாதி அதனால தான் இதால இதையெல்லாம் பத்தி சிந்திக்க முடியுது.


Tuesday, 5 July 2011

லாயக்கத்தக் குழு லாயக்கற்றதுன்னு அறிக்கை!





 தற்போதைய பாடத்திட்டம் லாயக்கற்றது: சமச்சீர் கல்வி கமிட்டி

சென்னை, ஜூலை 5: சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த கமிட்டி தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தற்போது இருக்கும் பாடத்திட்டங்கள், நடப்பு வருடத்துக்கு பயன்படத்தக்க வகையில் இல்லை என்றும், பாடத்திட்டங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்த வழக்கை 7ம் தேதிமுதல் தினமும் விசாரிக்கும் என்று தெரிகிறது.முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு ஜூன் 17-ம் தேதி நியமித்தது.அந்தக் குழுவினர் இதுவரை 4 முறை கூடி சமச்சீர் கல்வி முறையை ஆய்வு செய்தனர். 

அந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த அறிக்கையை தொடர்பாக உயர்நீதிமன்றம் 7-ம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்த உள்ளது.

1, 6 வகுப்புகள் தவிர மீதமுள்ள 8 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டில் அமல் ஆகுமா என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே ஏறத்தாழ ஒரு கோடி மாணவர்களுக்கு எந்தப் பாடப்புத்தகங்கள் என்பது தீர்மானிக்கப்படும். சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே தயாராக உள்ள நிலையில், பழையப் பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அச்சிடும் பணியும் இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.பத்தாம் வகுப்பு புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி புத்தகங்கள் அச்சிடப்படுவதாகவும், இதுவரை ஏறத்தாழ 20 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு முடியும் வரை 1, 6 வகுப்புகளுக்கு எந்தவித பாடத்திட்டத்தின் கீழும் பாடங்களை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறையில் அறிவியல், கணிதப் பாடங்களில் அடிப்படைகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிப்பாடங்களில் இலக்கண வகுப்புகளும் இப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், இந்தப் பாடப்புத்தகங்கள், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி, இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டத்தையே பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்தது.இதுதொடர்பாக, சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தத்தையும் அரசு கொண்டு வந்தது.ஆனால், இந்தத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்தத் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆராய தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், 1,6 வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையை அமலாக்குவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.1,6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறையையே இந்த ஆண்டு தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

.....தினமணி 05.07.2011
*************************

பொது ஜனம்; இந்த நிபுணர் கம்னாட்டிகள் கமிட்டி என்ற பெயரில் அமைக்கப்பட்ட லாயக்கத்தக் குழு வின் அறிக்கையின் மூலாமா  தினமணி தனது பார்ப்பன முகத்தை காட்டிக்கிச்சா!


பொது ஜனம்; அது என்ன பன்றது இனம் இனத்தோடத்தானே சேரும்! அதை பத்தி தெரியாதா?


பொது ஜனம்; அது எப்படி? பல மாதங்கள் பல கல்வியாளர்களால் ஒருங்கிணைந்து தயாரித்த புத்தகத்தை எப்படி?. இந்த லாயக்கத்தக் குழு மட்டும் அவசர கதியில்  இரண்டே வாரத்தில் அறிவிக்க முடிந்த்து?


பொது ஜனம்; இதுங்க மட்டும் அவசர அவசர அவசரமா சம்ச்சீர் கல்வி சரியில்லைன்னு அறிக்கையளிக்கலாம்!


பொது ஜனம்; உச்சநீதிமன்றம் இப்படியா அறிக்கை அளிக்க சொல்லுச்சு! சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில குறையைத்தானே சொல்ல சொல்லிச்சு! இவங்க மறுபடியும் சமச்சீர் கல்வியை நிறுத்தனும்னே அறிக்கை கொடுக்கறாங்களே! நீதிமன்றத்தை மதிக்கவே மாட்டாங்களா!
பொது ஜனம்; இல்லையப்பா! அவங்க அம்பேத்காரை விட பெரிய பெரிய படிப்பு படிச்சவங்க! அதுனால தான் இலக்கணப்பிழையெல்லாம்  கண்டுபிடிச்சிருக்காங்க! அவங்க உலகத்துக்கே பாடம் சொல்லிக்கொடுக்கறவங்க! அவங்க சொல்லிக்கொடுத்ததினால தான் பல பேர் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிச்சிருக்காங்க! 


பொது ஜனம்; ஓ...அப்படியா! இதுங்க அந்தளவுக்கு நிபுணர்னா ஏன்? மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்க முடியலை! ஏன்? ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி பாஸ் ஆக முடியல. இவ்வளவு குயிக்கா ஆராயராங்களே!



பொது ஜனம்; அப்ப இங்கிலாந்துக்கே இங்கிலீஷ் கத்துக்கொடுக்கறவனுங்கன்னு சொல்லு!


பொது ஜனம்; அது மட்டுமில்ல! தமிழ் நாட்டுக்கே தமிழ் சொல்லிக்கொடுக்கறவனுவங்களும் இவனுங்கதான்!


பொது ஜனம்; இலக்கணப்பிழையை 40  புத்தகத்திலேயும், அனைத்து பக்கத்திலேயும் கண்டுபிடிச்சிட்டாங்களா!? அப்ப 1 வது 6 வது புத்தகத்துலேயும் கண்டுபிடிச்சிட்டாங்களா!? அப்புறம் ஏன்? அதை மட்டும் உச்சநீதிமன்றம் அமல்படுத்திச்சு! இது நல்லா போங்கா இருக்குதே!

பொது ஜனம்; 40 புத்தகம்னா 8 வகுப்புக்கு தலா 5 பாடப் புத்தகம்! அதானே!
பொது ஜனம்; ஆமாம்!


பொது ஜனம்; இரண்டே வாரத்துல அத்தனையும் கரைச்சு குடிச்சிட்டானுங்களே! இப்ப அந்தப் புத்தகத்திலேயிருந்து எந்த கேள்வி கேட்டாலும் டான்! டான்னு! பதில் சொல்லுவானுங்க!
பொது ஜனம்; எந்த புக்குலேயா! இலக்கணப் பிழை இல்லை! இவனுங்க மெட்ரிக்குலேசன் புத்தகத்திலே நாட்டோட பெயரையெல்லாம் தப்புத் தப்பா போட்டிருக்குது. நாடுகளோட  கரன்சிகளின் பெயரையெல்லாம் தப்பு தப்பா அச்சடிக்கப்பட்டிருக்குது! அதையே பலமுறை சொல்லியும் திருத்தாம அப்படியே புள்ளைகளுக்கு சொல்லி கொடுத்துட்டு இருக்கானுங்க!

பொது ஜனம்; எல்லாப் பெரிய பெரிய புத்தகத்திலேயும் பிழைகள்னு, புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில் ஒதுக்கி குறிப்பிட்டு இருப்பாங்க! பிழையில்லாத புத்தகமே இல்லை! 

பொது ஜனம்; ஆமா! எராட்டான்னு புத்தகத்தின் கடைசிப்பக்கத்திலேஇருக்கும்!


பொது ஜனம்; ஆமாய்யா! மெட்ரிக்குலேசன்  புக்குகளை ஆளாளுக்கு, தனியார் அளுங்க ஒவ்வொருத்தனும் தப்பு தப்பா பிரிண்ட அடிச்சி ஒவ்வொரு பள்ளிக்கும் கமிஷனோட கொடுக்கறான்  அதை அப்படியே வைச்சு பசங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்குதுங்க! இந்த லட்சணத்துல இந்த புக்கை பத்தி இதுங்க குத்தம் சொல்லுதுங்க!


பொது ஜனம்; அப்புறம் ஏன்? போன வருஷமே! இந்த இலக்கணப் பிழைகளை இந்த லாயக்கத்தக் குழுவில இருந்த ஒருத்தனும் கண்டுபிடிக்கலை! அப்பவும் இதுங்க ஸ்கூல் நடத்திகிட்டு தானே இருந்ததுங்க!


பொது ஜனம்; பெத்தவங்களை வைறு எரிய செஞ்ச இந்த பொம்பளைக்கு நல்ல.....????????????


பொது ஜனம்; பொறு! பொறு! அப்படியே லேசுல விட்டுருமா! நீதிமன்றம்! கல்வியாளர்களும் பதில் மனு பக்காவா தாக்கல் செய்வாங்க! அப்ப பாக்கலாம்! நீதிமன்றமும் சும்மா விடாது! இந்த அறிக்கையிலேயே அப்பட்டமா எல்லாம் தெரியுதே!


பொது ஜனம்; இந்த லாயக்கத்தக் குழுதான் இந்த சமச்சீர் புத்தகங்கள் லாயக்கில்லைன்னு சொல்லுது!


பொது ஜனம்; குழந்தைகள் என்ன பாவம்யா பண்ணுச்சு!

Monday, 4 July 2011

குழந்தையை சுட்டுக் கொல்லும் இந்திய ராணுவம்! இந்திய, தமிழக அரசுகளின் மனிதவுரிமை மீறலுக்கு இங்கேயே தீர்மானம் போடுங்க!


ராணுவக் குடியிருப்பில் சிறுவன் சுடப்பட்டு சாவு: சாலைமறியல்

சென்னை, ஜூலை 3: சென்னை தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்பில் பழம் பறிப்பதற்காக நுழைந்த சிறுவன் தில்ஷான் (13) அங்குள்ள ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தான்.  இதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சிறுவனின் உறவினர்கள், பொதுமக்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


 இது குறித்த விவரம்: சென்னை தீவுத்திடல் பகுதி இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.  இவர்களின் 2-வது மகன் தில்ஷான். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.  ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் விழுந்து கிடக்கும் பாதாம் பழங்களை எடுக்கச் சென்றதாகக் கூறப்  படுகிறது.  

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ராணுவ வீரர் சிறுவன் தில்ஷானை துப்பாக்கியால் சுட்டாராம். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள், அவனது பெற்றோரிடம் தகவல் தெரி  வித்தனர்.  இதையடுத்து சிறுவனின் உறவினர்கள், அப்பகுதியினர் அனைவரும் ராணுவக் குடியிருப்பின் அருகே திரண்டனர். 


 ஆனால், அதற்குள்ளாக சிறுவனை அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்துவிட்டதாக அங்கிருந்த ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்திராநகர் பகுதியினர் சிலர் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றனர். 


ஆனால், சிறுவனை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையிலும் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.  போலீஸôர் தடியடி: சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸôர் ஈடுபட முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீஸôர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு சிறுவன் தரப்பினரும் போலீஸôரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போஸீஸôர் ஒருவர் காயமடைந்தார்.  


சிறுவன் பலி: இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தான். இதனால் சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், உதயகுமார் ஆகியோர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.  இது குறித்து சிறுவனின் உறவினர்கள் கூறியதாவது: ராணுவக்குடியிருப்புக்குள் அனுமதியில்லாமல் செல்வது தவறுதான். ஆனால் வளாகத்துக்குள் நுழைந்தவர்கள் தீவிரவாதிகள் அல்ல. பள்ளியில் படிக்கும்  சிறுவர்கள். 

 ஆனால், நாட்டை பாதுகாக்கும் பணியில் உள்ள ராணுவ வீரர் தீவிரவாதியை போல சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.  வடக்கு மண்டல இணை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

 ராணுவக் குடியிருப்புக்குள் பழங்களை எடுப்பதற்காக சென்ற சிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிறுவன் குடும்பத்துக்கு ரூ.5லட்சம்: இறந்த சிறுவன் தில்ஷான் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தினமணி 03.07.2011, தினகரன் 04.07.2011

********************** 

பொது ஜனம்; போயும் போயும் இந்திய ராணுவத்தினர் குழந்தையை கொல்லுவதற்குத்தான் துப்பாக்கி ஏந்தியிருக்குதா! அதை விட பெரியக்கொடுமை அநியாயத்துக்கா பொய் பேசுதே! பையன் மரத்துலேயிருந்து கீழே விழுந்து செத்துட்டான் என்று! பட்டாளம் பச்சையா பொய் பேசுவதிலும் கில்லாடி போலிருக்கிறது!

பொது ஜனம்; வாயால மிரட்டியிருக்கலாமே! இல்லை வானத்தை நோக்கி சுட்டிருக்கலாமே! இவன் விட்டிருந்தா மரத்தில ஏறின நான்கு குழந்தைகளையும் சுட்டு கொன்னிருப்பான்யா! நல்ல வேளையா! 3 குழந்தைங்க தப்பிச்சிடுச்சி! 

பொது ஜனம்; அந்த குவர்ட்டர்சுக்கு அடிக்கடி தண்ணி பிடிக்க வேறு மக்கள் போயிருக்காங்க! இந்த மாநில அரசு அதுங்க குடிதண்ணீர் பிரச்சினைக்கும் வழி பண்ணலை!

பொது ஜனம்; குழந்தையை கொன்னதுக்கு எதிர்த்து போராடினவங்க மேலே  போலீஸ் தடியடி வேற நடத்தி குழந்தையோட உறவுக்காரங்க மண்டையை உடைச்சிடுச்சி! 

பொது ஜனம்; அவங்க மட்டும் போலீஸ் காரங்க மண்டையை உடைக்கலாமா?


பொது ஜனம்; போலீஸ் மட்டும் கைது பண்ணாம ரொம்ப நேரமா வேடிக்கை காட்டிகிட்டு இருக்கலாமா? அதுவும் குண்டு துளைச்சு குழந்தையோட தலைக்கு அந்த பக்கமா குண்டு வந்திடுச்சி! குழந்தை மரத்தலேயிருந்து விழுந்த இடத்தோட ரத்தக்கரை தடயத்தை அழிக்கிற வரைக்கும் வேடிக்கைப் பார்த்து கிட்டு இருந்ததே! இப்ப ரொம்ப விவரமா போலீஸ் நாடகம் நடத்துறாங்களே! இதைத்தான் எல்லா ஆங்கில, தமிழ் சேனல்களிலே காட்டினாங்களே!

பொது ஜனம்; ஆமாய்யா! குழந்தையை சீக்கிரம் அடக்கம் பண்ண சொல்லி பெத்தவங்களை வேறு மிரட்டுதாங்களாம்! இந்த குண்டம்மா போலீஸ்!


பொது ஜனம்; ஜெயலலிதாவுக்கு இதையெல்லாம் பற்றி கவலைப்பட நேரம்! எங்க இருக்கப்போகுது! ஒட்டு மொத்த குழந்தைங்க படிப்பையும் கெடுத்துது. எந்த குழந்தைக்கும் இப்ப படிப்பில நாட்டமே இல்லை. சும்மா விளையாடிட்டு வருதுங்க! இந்த மாதிரி அநியாயம் யாருமே பண்ண மாட்டாங்கய்யா! அதுவும் சுதந்திர நாடு பீய்த்திக்கிற நாட்டில இப்படியெல்லாம் கூட நடக்குது!

பொது ஜனம்; பாக்கிஸ்தானில இருந்து தீவிரவாதிங்க  அசால்ட்டா வந்து பலரை போட்டுத்தள்ளிட்டு போயிட்டேயிருக்காங்க! இதுங்க நம்ம பணத்துல சம்பளம் வாங்கிட்டு நம்ம வீட்டு குழந்தைகளையே போட்டுத்தள்ளுதே!

பொது ஜனம்; இராணுவத்துக்கு கெட்டப் பெயர் வந்துறப்பொகுதுன்னு இந்த மாதிரி கீழே விழுந்து இறந்துட்டான்னு இந்த இந்திய ராணுவம் பொய் சொல்லுதுப்பா!

பொது ஜனம்; இவனுங்க கெட்டப் பெயர்ல நாய் நரி.....பேணுட்டுப்போக! 

பொது ஜனம்;எவன் செஞ்சா! என்னய்யா! இது அப்பட்டமான மனிதவுரிமை மீறல் அந்த சுட்ட ராணுவ  ஆள், உத்தரவு கொடுத்த "அப்பா டக்கர்" ராணுவ அதிகாரி எல்லோருக்கும் கடுமையான தண்டனை கொடுக்கனும்!

பொது ஜனம்;முதல்ல அவனுங்களை பதவியை விட்டு நீக்கணும். அவனுங்க நாட்டை பாதுகாத்து கிழிச்சது போதும்!

பொது ஜனம்; மக்கள் தூக்கிலேயே போடனும்னு குரல் கொடுக்கறாங்கப்பா!

பொது ஜனம்; இந்த லட்சணத்தில அடுத்த நாட்டு மனிதவுரிமை மீறலுக்கு இங்க சட்டமன்றத்துல தீர்மானம் போடுறானுங்க! முதல்ல உங்களுக்கே நீங்க தீர்மானம் போட்டுக்குங்க! தூ....!

பொது ஜனம்; அங்கேயாவது யுத்தம் நடந்தது! இங்கே என்னய்யா நடந்தது!

பொது ஜனம்; ராணுவத்தை கைது பண்ண முடியாதுய்யா! கைது பண்ணா உடனே ராணுவ கோர்ட்டுல ஒப்படைச்சுடனும்!

பொது ஜனம்; சிவிலியனை எச்சரிக்கை பண்ணாம சுடலாம் என்று மட்டும் சட்டம் இருக்குதா? குழந்தையை கொல்லவேக் கூடாது என்று ஐ.நா யுத்த விதியிலே இருக்குதய்யா! இது நேரிடையாவே இந்திய ராணுவ ஆளுங்க மீறியிருக்கானுங்களே!  இதை சர்வதேசம் வரைக்கும் கொண்டு போகலாம்!

பொது ஜனம்; சரி! கைது பண்ணி! சார்ஜ் ஷீட் பைல் பண்ணி கோர்ட்டுல ஒப்படைக்க சொல்லுங்க! அதுக்கப்புறம் நீதிமன்றத்தின் மூலமா தண்டனை கொடுக்கட்டும்! அதிகாரிக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கட்டும்! 

பொது ஜனம்;இவனுங்க கீழே விழுந்து இறந்துட்டானுங்க என்று பொய் சொல்றானுங்களே! கீழே விழுந்தவனுக்கு குண்டு எப்படி பாயும்? எவன் துப்பாக்கியிலேயிருந்து வந்த குண்டு! என்பது கூடவாத் தெரியாது! இல்லை போஸ்ட் மார்ட்டத்துல இதெல்லாம் வெளி வராதா?! 

பொது ஜனம்; இதையும் சங்கர சுப்பு கொலைக்கேஸ் மாதிரிதான் டீல் பண்ணுமா? 

பொது ஜனம்;ஏழைக்கு ஏதுய்யா வசதி! அதுங்களை அன்றாடக் காய்ச்சிங்க!  இப்படி ஏழைகளை! இந்த நாடு மோசம் பண்ணுதே!

பொது ஜனம்; அந்த ராணுவ ஆளோட குழந்தையை இது மாதிரி கொன்னிருந்தா! அதோட வலி தெரியும்! 

பொது ஜனம்; எந்த குழந்தையாயிருந்தாலும் கொல்லுவதை எப்படிய்யா ஏத்துக்கொள்ளமுடியும்!

பொது ஜனம்; கல்வியைத்தான், இந்த பொம்பளைக்காக "சமச்சீர்" என்ற காரணத்துக்காக நிறுத்திட்டானுங! குடும்பம், குழந்தை குட்டி இதை பத்தி தெரியாத ஒரு பொம்பளை பண்ணுச்சி! இப்ப குழந்தைகள் உயிருக்கும் பாதுகாப்பில்லை! 

பொது ஜனம்;ஏழைகளோட குழந்தைகள்னா சுத்தம்! நரபலி வரைக்கும் போகலாம்! போலீஸ்காரனுங்க கண்டுக்க மாட்டானுங்க! ஒன்னுமில்லாத "பிச்சை"க்கார அமைச்சருக்கு சி.பி.சி.ஐ.டி வைச்சி நோண்டிகிட்டு இருப்பானுங்க!

பொது ஜனம்; அதுக்குத்தான் 5 லட்சம் கொடுத்துடுச்சே! சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்குதே!  அந்த குடும்பம் சைலண்டாயிடும்! அந்த மாதிரி சூழ்நிலையில வாழறவங்க தான் அவங்களெல்லாம்! 

பொது ஜனம்; என்னத்துக்கு இப்ப விசாரணை! அரசு அறிக்கையே வந்துடுச்சு! ராணுவம் தான் சுட்டுதுன்னு!  போய் புடிச்சு போடாமா! 


பொது ஜனம்; மக்கள் மனிதவுரிமையை நாடணும்! கோர்ட்டு படிக்கட்டு ஏறணும்! போராட்டத்தின் மூலம் தீர்வு காணணும்! இது தான் தீர்வுக்கு வழி வகுக்கும்! இல்லைன்னா அப்படியே கேசை மூடிடுவானுங்க!

பொது ஜனம்;மக்கள் சும்மா விடக்கூடாது! நீதிமன்றம் சும்மா விடக்கூடாது! அரசியல் கட்சிகளும் சும்மா விடக்கூடாது!

பொது ஜனம்; குழந்தைகள் உதவி மையம் என்ன பண்ணுது! வேடிக்கை பார்க்குதா? போன் பண்ணா 24 மணிநேரமும் உதவி பண்ணும்னு சொல்லுது குழந்தையை சுட்டு தெருவில வீசி இருக்கானுங்க! பார்த்துட்டு இந்த போலீஸ் கம்முனு இருக்குதே!


பொது ஜனம்; சுட்டது யார்னு தெரியும்? கொன்ற கொலைகாரனும் அங்கேயேத்தான் இருக்கான்! ஆனா! நோ! கைது! நோ தண்டனை! இதுக்கு ஒரு தனி விசாரணை.....??????????

Thursday, 30 June 2011

திருடர்கள்! அமைத்த விசாரணை கமிஷன்!



புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக
திட்டமிட்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர்
கருணாநிதி அறிக்கை



சென்னை, ஜுன்.30-

புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக திட்டமிட்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய தலைமைச் செயலகம்

"புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து எழுந்துள்ள புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது'' என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து இதுவரை யாரும் புகார்கள் கொடுத்ததாக எந்தச் செய்தியும் ஏடுகளிலே வரவில்லை. தமிழக அரசினரே தங்களுக்குத் தாங்களே புகார் வந்ததாக செயற்கையாகக் கூறிக் கொண்டு, அந்தப் புகார்களை விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்த புதிய தலைமைச் செயலகத்தில் வந்து குடிபுகாமல் இருப்பதற்காக - தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட அந்த மாளிகையைப் பயன்படுத்தாமல் இருப்பதால் தன்னை பொதுமக்கள் இழித்துரைக்கக் கூடும் என்பதை நன்குணர்ந்த ஜெயலலிதா; அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் திட்டமிட்டு இப்படியொரு விசாரணை கமிஷனை அமைத்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்வார்கள்.

முதல்-அமைச்சர் தங்கும் அறை

விசாரணைக்கான வரையறைகளாக கட்டுமானத் தரத்தில் குறைகள் - கட்டுமானப் பணியை முடிக்கத் தேவையில்லாத கால தாமதம் - கட்டுமானத்தின் போது பல முறைகேடுகள் - தேவையில்லாத செலவினங்கள் என்றெல்லாம் இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ளன. தேவையில்லாத செலவினங்கள் என்று விசாரணையாம்!

முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்குச் சென்று ஒரு நாள் பிரதமரை மரியாதைக்காக சந்திக்கச் சென்றார் என்பதற்காக முதல்- அமைச்சர் தங்கும் அறையே மாற்றம் செய்யப்பட்டது, சாலையே புதிதாக போடப்பட்டது; இதற்காக தனியாகச் செலவழிக்கப்பட்டது எவ்வளவு?

தி.மு.கழக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மறுத்து; மீண்டும் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கே சட்டமன்றப் பேரவையை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து செயல்படுவதற்காக செய்யப்பட்ட செலவுகள் எவ்வளவு? சாதாரண பயணிகள் செல்லும் விமானத்தைப் பயன்படுத்தாமல் தனியார் விமானத்தை முதல்-அமைச்சர் கையாளுவதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு? இந்த வீண் செலவுகளைப் பற்றியெல்லாம் விசாரணைகள் வேண்டாமா?

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

...தினத்தந்தி 30.06.2011

*********************

பொது ஜனம்; ஜெயலலிதாவின் ஊழலுக்கு துணை போன "கேடி"யரசன் எப்படி? "நீதியரசரா" மாறி இந்த விஷயத்தை விசாரிக்க முடியும். 


பொது ஜனம்; இது கேசுக்கூடவே தங்கியிருக்குதே! இந்த தங்கமான "தங்கு" ராஜா! இது முறைகேடாயிற்றே! 


பொது ஜனம்; குத்தவாளிகளை நீதிபதி தனியா பார்க்குறதே தப்பு! அவர்களோட சேர்ந்து வேறே தங்கியிருக்குது! இதுக்கு பேசாம கேடியாவே இருந்திருக்கலாம்! எதுக்கு மக்களின் கடைசி நம்பிக்கையான இந்த புனிதமான "நீதிபதி" பதவியை தேர்ந்தெடுக்கணும்! பிழைக்கறதுக்கு தொழிலா இல்லை!


பொது ஜனம்; இந்தக் "கேடி"க்கு இந்த "லேடி" துணைக் கேக்குதா!


பொது ஜனம்; இது மாதிரி குத்தவாளிங்க கூட தங்கினதுனாலே இதுக்கு "தங்க"ராஜ் என்று பெயர் வந்திருக்கும்!

பொது ஜனம்; இந்த ஆளு எல்லாம் சுப்ரிம் கோர்ட்டுக்கு ஜட்ஜா போயிருந்தா என்ன ஆகியிருக்கும்! கீழ் கோர்ட்டிலேயே எல்லாத்தையும் முடிச்சிக்க வேண்டியது தான்! மேல் முறையீட்டுக்கெல்லாம் யாரும் போகமாட்டாங்க!


பொது ஜனம்; நீதிமன்றத்துல வழக்குல நீதிபதி  சார்பு நிலை கொண்டிருந்தாலே, அதாவது வழக்குக்கு சம்பந்தப்பட்டவரான வாதி, பிரதிவாதி இரண்டு பேருல யாருக்காவது உறவினராக!, நண்பராக! இருந்தது தெரிந்ததுன்னாலே அந்த வழக்கை விசாரிக்கிற நீதிபதி தானாகவே  விலகிடுவாங்களே! நீதிமன்ற வழக்கமாயிற்றே!


பொது ஜனம்; குற்றவாளியே குற்றத்தை விசாரிக்கிற முறை தான் ஜெயலலிதா பின்பற்றுவது.  திருடனே திருட்டை விசாரிப்பது  கொலைகாரனே கொலையைப் பற்றி விசாரிப்பது எல்லாம் ஜெயலலிதாவின் பாணி. ஏன்னா ஜெயலலிதாவே டான்சி நிலைத்தை திருடிய திருட்டு ஆள் தான் குற்றத்துக்கு குற்றம் மேட்சாயிடும்.


பொது ஜனம்; இது நன்றி மறவாமையப்பா! ஜெயலலிதாவை டான்சிலேயிருந்து விடுவிச்சதுக்கு நன்றி மறக்காம இந்த பொம்பளை செஞ்சுது! இப்ப விசாரிக்கப்போறதுக்கும் சேர்த்து நன்றி மறக்காம இந்த பொம்பளை கவனிக்கவேண்டிய விதத்துல கவனிச்சிடும்! அதுல மட்டும் தன் கெட்டிக்காரத்தனைத்தை பயன்படுத்தும்! வேற ஒன்னுத்துக்கும் பயன்படுத்தாது! இருந்தா தானே!


 பொது ஜனம்; செலவீனங்கள் குறைத்து, ஆடம்பரமில்லாமல் இந்த அராஜக அதிமுக அரசு செயல்படும் என்று இந்த "அராஜக பொம்பளை" பேட்டி கொடுத்துதே! இதுவே எக்கச்சக்கமா செலவு பண்ணுதே! தனி விமானம்! தனி ரோடு! கலக்குது போ!


பொது ஜனம்; இந்தியப் பிரதமர் கூட இந்தளவுக்கு பயன்படுத்த மாட்டார் போலிருக்குதே!


பொது ஜனம்; இதுக்குப் பெயர் தான் முள்ளை மூள்ளால் எடுத்தல் டெக்னிக்! குற்றவாளியை வைத்தே குற்றவாளியை வைத்தே கண்டுபிடிப்பது!........................? இதை இப்ப அரசியல் சட்டத்துல சேர்த்திருக்காங்க!


பொது ஜனம்; ஓ அப்படியா! மொத்தத்தில இது திருடர்கள் கூட்டமைப்பு அமைத்த விசாரணைக் கமிஷன்!