Pages

Saturday, 2 March 2013

காதலியின் மனதை மாற்றியப் பெரியார்


''மக்கு எதிரியா இருந்தவங்க எல்லாம் ராசியா ஆகிட்டிருக்கிற நேரம்ஒங்க பங்குக்கு நீங்களும் ஒருத்தரை கூட்டிட்டு வந்துட்டீங்க''  என்று குழந்தைபோல் சிரித்தார் பெரியார்.

அது 1968-ம்  வருடம்அதற்கு முன் 1949-ல் பெரியாரிடமிருந்து பிரிந்து கசப்பான மோதுதல்களோடு இருந்த தி.மு..  1967 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றபின் அதே 1967 தேர்தலில் பல்லும் நகமும் தேயத் தங்களை எதிர்த்துத் தோற்கடிக்கப் பாடுபட்ட தங்கள் தலைவர் பெரியாரிடம் வந்துசேர்ந்து சில மாதங்களே ஆன நேரமது.

காங்கிரஸ்காரர்கள்- குறிப்பாய் தலைவர் பெரியாரின் சொந்த அண்ணன் மகன் மதிப்பிற்குரிய அண்ணன்.வெ.கி.சம்பத் (இன்றைய நடுவன் அமைச்சர் இளங்கோவனின் தந்தை) போன்றவர்களே இந்த உறவைக் குறைகூறி பேசியபோது அண்ணா சொன்ன வார்த்தை வரலாற்றுக் கனபரிபாணமும் இலக்கியச் செறிவும் மிக்கதாகும்அண்ணா சொன்னார், ''பிரிந்த தந்தையிடம் மகன் சேர்வது குணங்களில் ஒன்றே தவிர- குற்றங்களில் ஒன்றல்ல.''

அன்று விழுப்புரம் பயணியர் விடுதியில் தந்தை பெரியாரின் முன்னால் நான், பெரியாரிடமே 'நாணயமாணவன்' என்று பெயர் வாங்கிய அவருடைய நம்பிக்கைக்குரிய செயலாளர் ஈரோடு சுப்பையா, என் வாழ்வில் மறக்க முடியாத தொழிலதிபர் அடைக்கலம், பெரியாரின் டிரஸ்ட்டில் உறுப்பினராய் இருந்த மீனாட்சிசுந்தரம், பின்னர் என் வாழ்க்கை துணையாகிவிட்ட எனது பெண் நணபர் காதரின் எல்லோரும் நின்றோம்மதம் மறுப்பு, சாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணத்தை நாங்கள் இருவரும் விழுப்புரம் பொதுக்கூட்ட மேடையில் நடத்திக்கொள்ள பெரியாரிடம் சென்றோம்அவர் முன் நின்றோம்.

பெண் கிருத்துவர் நான் சட்டப்படி இந்து எனப்பட்ட பகுத்தறிவுவாதி.  சுயமரியாதைத் திருமணச் சட்டம் அப்போது அமலுக்கு வந்துவிட்டது என்றாலும் அது இரண்டு இந்துக்கள் இடையேதான் நடக்கவேண்டும்சட்டச் சிக்கல்.

ஒருமுறை ஒரு இந்துவுக்கும்-கிறித்துவருக்கும் பெரியார் தன் தலைமையில் திருமணம் முடித்து வைத்து அது சட்ட சிக்கலாகி பாதிரிமார்கள் பெரியாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கச் செய்துவிட்டார்கள் அதே எங்கள் திருச்சியில்இப்போது நான் இரண்டாவதுஅப்போது நான் தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்ட திருச்சி நகர திராவிடர் கழகத் தலைவர்என்னுடைய துணைவியார் மதப்படி கொள்கை ரீதியாய் பெரியார் இயக்கத்தின் எதிரி

ஆனால்
, இந்தக் காதலுக்கு விதை போட்டவரே ஒருவகையில் பெரியார் தான்எங்கள் காதல் பூங்காவில் பூக்கவில்லைபோராட்டக் களத்தில்தான் விதைக்கப்பட்டது.


தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போர், மாணவர்களால் துவக்கப்பட்ட போர்வேகமான புயலாய் உருவெடுத்ததுபல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவர்கள் இடையேயும் அவரவர் தலைமையில் கட்டுப்பாடுகளைத் தாண்டிய இந்தி எதிர்ப்புத் தீ பற்றிக் கொண்டதுகாவல்துறையால் கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமே வரவழைக்கப்பட்டு திருச்சியில் துப்பாக்கிச் சூடும் சாவுகளும் நிகழ்ந்தன

  மாணவர்கள் போராட்டத்தின் இந்த உக்கிரத்தை பின்னின்று இயக்குபவர் இன்றைய முதல்வர் கலைஞர் தான் என்று கலைஞரை முகத்துக்கு எதிரிலேயே அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டமன்றத்தில் குற்றம்சாட்டினார்அதன் விளைவாய் கலைஞர் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தில் இந்தி ஒழிக (தமிழ் வாழ்க அல்லஎன்ற முழக்கத்தின் காரணபூதரான தலைவர் பெரியார் 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்போரை ஆதரிக்கவில்லைமாறாக எதிர்த்தார் காரணம் 1938-39ல் எந்த ராசகோபாலாச்சாரி கட்டாய இந்தியை தமிழகத்தில் கொண்டுவந்து தாளமுத்து-நடராசன் இருவரின் சாவுக்குக் காரணமாய் இருந்தாரோ-அவர்தான்.  1965-ல் இந்தி எதிர்ப்புப் போருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த சுக்கிராச்சாரி.


அன்று 1965-களில்  தமிழகத்திலிருந்த காமராஜர் ஆட்சியை ஒழிக்க ராசகோபாலாச்சாரி கண்டுபிடித்த அரசியல் வியூகம்தான் 1965 இந்தி எதிர்ப்புப்போர் என்பது பெரியாரின் நிலைப்பாடுஇதை அப்படியே பேசவும் எழுதவும் செய்தார் பெரியார்இதனால்  அரசியலுக்கு அப்பாற்பட்ட மாணவர்களும் பெரியாரின் பேரில் கோபம் கொண்டார்கள். 


பெரியாரின் வேன் பழுதுபார்க்க (அவரில்லாமல்பழுதுபார்க்கக் கொண்டுசெல்லப் பட்டபோது யாரோ அதை கல்வீசித் தாக்கினார்கள்.
கதை எங்கோ போகிறதே திசைமாறி என்று எண்ணாதீர்கள்இந்த பின்னணியில் கட்டுரையின்  துவக்கத்திற்கு வாருங்கள்பெரியார் இந்தத் தாக்குதலை துணிவோடு எதிர்கொண்டார்கள்நாகை-நன்னிலம்-கரூர்  போன்ற இடங்களில் இது தி.மு., தி.க மோதலாய் வெடித்ததுபெரியார் இதுபற்றிய தனது நிலையை மாணவர் இடத்தில் தெளிவுபடுத்த எண்ணினார்பெரியார் மாபெரும் சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர்என்னுடைய எண்ணத்தில் அவர் இவைகள்  யாவற்றையும் தாண்டி ஒரு மக்கள் இயக்கத்தை கட்டக்கூடிய மாபெரும் அமைப்பாளர்.  (Organiser)

அன்றைக்குத் திருச்சியில் மூன்று ஆண்கள் கல்லூரிகள, இரண்டு பெண்கள் கல்லூரிகள்இரண்டு கல்லூரிகள் கிறிஸ்துவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளனஇரண்டு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனஒன்று இசுலாமியர்களுடையது.

வடகலை அய்யங்கார்கள் ஆதிக்கத்தில் இருந்த தேசியக் கல்லூரியின் பழைய மாணவன் நான் பெரியாரின் தொண்டரான மாபெரும் புரட்சி எழுத்தாளர் குத்தூசி குருசாமிஉலகப்புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர்ராமமூர்த்தி, கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் இக்கல்லூரியின் மாணவர்களே!

கல்லூரிக் காலத்திலேயே மாணவர் இயக்கத் தொடர்புடைய என்னை ஆண்-பெண் மாணவர்களைப் பெரியாரை சந்திக்க வைத்துப் பின்னர்  அவர்கள் மூலமே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யும் பொறுப்பை என்னிடம் தந்தார்கள்.
அன்றைக்கு மாணவ-மாணவிகள் , குழுகுழுவாய் சேர்ந்து அரட்டை அடிக்கும் இடங்கள் மேலரண் சாலை இருந்த இந்தியா காபி  அவுஸ்!  (இப்போது அது வணிகவளாகங்களாக கட்டப்பட்டு விட்டன) இன்னொன்று ஐம்பதாண்டுகளாய் மணமும் சுவையும் மாறாத 'மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம்' ஸ்டால்நானும் மாணவர்கள் குழுவோடும், மாணவிகள் குழுவோடும் அவர்களுடைய உறவினர்கள்- நண்பர்கள் சக மாணவர்களோடும் சில நாட்கள் பேசினேன்.

''உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்ற முழக்கம் மாணவர்களின் இதயத்துடிப்பாகிவிட்ட நேரம்இந்தி எதிர்ப்புப் போர் ராசகோபாலாச்சாரியின் சந்தர்ப்பவாதம் -என்ற எங்களுடைய அறிவுபூர்வமான வாதங்கள் எடுபடவில்லை.

''சாவிலும் தமிழ் படித்து சாகவேண்டும்

எங்கள் சாம்பலெல்லாம் தமிழ் மணந்து வேக வேண்டும்''

என்ற கவிதை வரிகள் மாணவர்கள்- தமிழ்  ஆர்வலர்கள் தங்கள் தாய்-தந்தையருக்கு எழுதும் கடிதங்களில்- ஏன் காதல் கடிதங்களில்கூட தலைப்பில் மிளிர்ந்த காலம், ஒளிர்ந்த நேரம்.



 
கல்லூரி மாணவர்களிடம் என்னுடைய அணுகுமுறையை அறவே மாற்றிக்கொண்டேன்மெல்லப் பொதுவான நட்பாக-பொதுச்செய்திகள்- அவர்களுக்கு விருப்பமான இலக்கியக் கலந்துரையாடல் என மாறியதுஇதற்கிடையில் பேரரிறிஞர் அண்ணா மாணவர்களுக்கு வைத்த வேண்டுகோள்- அரசின் அணுகுமுறையில் மாற்றம், இந்தி எதிர்ப்புப் போரில் வன்முறை வேகம் தணிந்ததுகடந்த இரண்டுமாத மாணவ- மாணவிகளுடனான மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் ஸ்டாலின் கலந்துரையாடலில் ஒருவர்தான் பின்னாளில் எனது மனைவியான காதரின் ஒருநாள் அவரையும் அவருடைய தோழிகளையும் வேறு ஒரிரு நண்பரகளையும் 'உங்கள் இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கும்- பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்குமான வேறுபாடுகள் பற்றி நேரில் பெரியாரையே கேளுங்களேன்'' என்று மீண்டும் என் வலைக்குள் இழுத்தேன்முதலில் யோசித்த- பயந்த அவர்கள் பெரியாரிடம் என்னுடன் வந்தார்கள்பெரியார் வழக்கப்படி ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும் போதும் அவர்கள் பெற்றோர், குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்தார் பரிவோடுபிறகு எல்லோரும் கேள்விகள் கேட்கக் கேட்க பெரியார் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்நீண்ட நேரத்திற்குப் பின் மாணவ- மாணவிகள் பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டார்கள்மாணவியர்நிலையில் முழுமையான மாற்றமில்லை.

பெரியார்
வழக்கப்படி அவர்கள் ஒவ்வொருவரையும் கையைப் பற்றிக்கொண்டு, ''மன்னிக்க வேண்டும்ஒங்க படிக்கிற நேரத்தை வீணாக்கிப் போட்டேன்ஏதோ... என் அறிவுக்கு சரியெனப்பட்டதச் செய்யறேன்தப்புன்னு நெனைச்சா மன்னிச்சுக்குங்க...  நான் ஒங்க அளவுக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கலே...  என்னைக்காவது என்னோட முடிவு தப்புன்னு தெரிஞ்சா  நிச்சயம் மாத்திக்கிறேன்''  என்றார் பணிவாகமாணவர்கள் நிலை குலைந்து போனார்கள்... 

...திருச்சி செல்வேந்திரன்..(தி.மு.க கழக வெளியீட்டாளர்) சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!.....நக்கீரன் வெளியீடு...பகுதி1 முற்று..

தொடரும் பகுதி ...2. இன் தலைப்பு; ''கலைஞரைக் கண்டவுடன்''

Wednesday, 3 October 2012

1948 இல் கலைஞரின் முரசொலி

 --------------------------------------------------------------------------------------


1948 இல் கலைஞரின் முரசொலி வார ஏடாக இப்படித்தான் வெளிவந்தது.

(முரசொலி வார ஏடு- பதின்மூன்றாம் இதழ்)

முரசு1 ஒலி 13

பெரியார் ஆண்டு 59

சித்திரை 2உ புதன்

(14-4-48)

விலை ஒன்னரை அணா

ஆண்டுத்தொகை ரூ 5

...தகவல் 'கலைஞரின் முரசொலி'..பி.எல்.ராஜேந்திரன் எம்.ஏ

Saturday, 18 August 2012

பாசியும் - தூசியும்

           கலைஞரின் சிந்தனையும் செயலும்-1
              ***************************************


உடன்பிறப்பே,

   அரசியல் என்றாலே நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதைப் போலவும் – அரசியல்வாதி என்றாலே அத்தன்மையினன்தான் என்று அனுமானித்துக் கொண்டும் – எழுதுவது, பேசுவது என்பது இன்றைய நிலையாகிவிட்டிருக்கிறது.  அப்படியொரு நிலையெடுப்பது அடிப்படையிலேயே பெருந்தவறுடையதாகும் என்பது என் கருத்து.  ஒருசில அல்லது பல என்றே தோராயமாகக் கணக்கிடப்படும் அரசியல்வாதிகளின் அறிவு, ஆற்றல், தொண்டு, சிந்தனை, செயல், எழுத்து, பேச்சு, உறுதி, ஒழுக்கம், தியாகம் ஆகியவற்றைக் கொண்டே ஒரு முடிவுக்கு வரவேண்டுமேயல்லாமல், பொதுவாகவே அரசியல் என்பதே பொல்லாங்கான ஒன்று என அவசரத் தீர்ப்பு வழங்கிடக் கூடாது.


      திருக்குறளில் பொருட்பால் முழுமையும் அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என வகுக்கப்பெற்று – இந்த ஏழு இயல்களிலும் இறைமாட்சி, கல்வி, கல்லாமை போன்ற 70 அதிகாரங்களும் இடம்பெற்று, அரசியல் எனும் பகுதி மட்டுமே 25 அதிகாரங்களைக் கொண்டதாக அமைந்து, அதனைத் தொடர்ந்து அடுத்து வருபவைகளும் ‘அமைச்சியல்’ எனத் தொடங்கி, ‘குடியியல்’ ஈறாக அரசியல் தொடர்புடைய அதிகராங்களாகவே இருப்பதையும் நோக்குமிடத்து, ‘அரசியல்’ என்பது நமது பண்புக்கு உகந்த ஒன்றல்ல என்றோ, பண்பாட்டுக்குரியதல்ல என்றோ அவசர முடிவுக்கு; எவராயினும் தம்மை ஆட்படுத்திக் கொள்வது அறிவுடைமையாகாது.

     ‘காதல்’ கைகூடாத காரணத்தினாலோ – அல்லது காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்தினாலோ – ‘காதல்’ என்பதே தீதான ஒன்று என வள்ளுவரும் வசைபாடவில்லை.
    மாறாக; ‘காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோய்’ என்றே செல்லமாகக் கடிந்து கொண்டு;
‘     ‘கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாயச்சொற்கள் என்ன பயனும் இல’ எனக் காதலுக்கு அங்கீகாரமே வழங்குகிறார்.

     ‘’காதல்! காதல்! காதல் போயிற் சாதல்! சாதல்!’’ எனப் பாரதி முழங்குகிறார்.

     ‘’காதலுக்கு வழிவகுத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்’’ என்கிறார் பாரதிதாசன்.

     காதலில் ஈடுபடுவோர் உறுதியற்றவர்களாகவோ – ஊசலாடும் மனம் படைத்தவராகவோ – அதனை கிளைக்குக் கிளை தாவும் வேடிக்கை விளையாட்டாக கருதுகிறராகவோ இருக்கலாம்.  அவர்களை கண்டுவிட்டு; காதல் என்பதே வெறுப்பதற்குரிய ஒன்று என எண்ணிவிடக் கூடாது அல்லவா?

     அப்படித்தான் காதலைப்  போலவே அரசியலையும் அதனைக் கையாள்வோர் செயலைக் கருதிக் குறைத்து மதிப்பிட்டு வெறுத்து விடக் கூடாது.

     காதலித்து ஏமாற்றும் பேர்வழியைப்போல அரசியல்வாதிகளில் சிலபேர் அல்லது பல பேர் கூட இருக்கலாம்.  காதலித்து ஏமாற்றுபவர்கள் – ஏமாற்றுவதற்காகவே காதலிப்பவர்கள்; இதெல்லாம் காதலின் குற்றமா?  காதலித்து கைவிட்டுத் துரோகம் செய்த காதலனை அல்லது காதலியைத் தான் வெறுக்கலாம்; அதற்காக ‘காதல்’ என்பதையே வெறுப்புக்குரியதாகக் கருதிட முடியாதல்லவா; அது போலவே அரசியலும்; சில அயோக்கியர்களின் புகலிடமாகி விடுகிறது என்பதற்காக – அத்தகைய ஆட்களை வெளியேற்ற வேண்டுமே தவிர; அரசியல் மீது வெறுப்புக் கொள்வதில் என்ன பயன் இருக்க முடியும்?

     காதலுக்கு நேர்மாறான ‘துறவு’ம் அப்படித்தான் – தூய்மையானது துறவு! நான் சொல்வது புறந்தூய்மையை அல்ல!  அது வேடமாகக் கூடப் பயன்படலாம்!  அகந்தூய்மை தான் துறவுக்கு இலக்கணம் – இதையும் அரசியலுக்கு எழுதிய அய்யன் வள்ளுவர்தான் கூறுகிறார்.

 ‘’புறந்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை
           வாய்மையால் காணப் படும்’’

 ‘’நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
           வாழ்வாரின் வன்கணார் இல்’’

 ‘’மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்
           பழித்தது ஒழித்து விடின்’’

     துறவி போல வேடமிட்டு வஞ்சனை செய்வோரைவிட இரக்கமற்றவர் எவருமில்லையென்கிறார்!

     துறவு என்று கூறிக் கொண்டு, துன்மார்க்கத்தில் ஈடுபடுவது போலவே அரசியல் அரங்கினையும் அநாகரிகக் கூடமாக – அராஜகக் களமாக ஆக்கிக் கொள்வோர் இருந்தனர் – இருக்கின்றனர் – எதிர்காலத்திலும் இருக்கக் கூடும்.

     அதற்காக ‘அரசியல்’ என்பது சாக்கடை என்றும் – வியாபாரம் என்றும் – பொதுவில் கூறிவிட முடியாது! கூறவும் கூடாது!

     சந்தனமாயினும் – புனுகு, சவ்வாது ஆயினும் – பூசிக் கொள்கிற அளவைப் பொறுத்து; பூசிக் கொள்கிறவர்களைப் பொறுத்துத்தானே இருக்கிறது!

     இதுபோலச் சிந்தனை செய்யாமல்; அரசியல் என்றாலே நிந்தனை செய்ய வேண்டிய ஒன்று எனும் முடிவுக்கு வந்து விடுபவர்களைப் பற்றி என்னதான் கூற முடியும்?

      இன்றைக்கு இந்தியத் திருநாட்டில் சில மாநிலங்களை ஆழ்ந்து நோக்குபவர்களுக்கு ‘அரசியல்’ மீது அருவெறுப்பு தோன்றுவதில் வியப்பில்லைதான்.

     நாட்டின் பாராளுமன்றமே ஒவ்வொரு நாளும் ஒத்தி வைப்பதற்காகவே கூடுகிறது.

     நமது மாநிலத்தின் சட்டமன்றமோ ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றுவதற்காகவே கூடுகிறது.

     இங்கே சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மட்டுமே பேச முடிகிறது; எதிர்க்கட்சிகள் தம்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்லக் கூட வாய் திறக்க முடியவில்லை.

     அங்கே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் ஆவேசத் தாண்டவம் – ஆளுங்கட்சி ஊமையாக்கப்படுகிறது.  ஒத்திவைப்பில் முடிகிறது.

     மக்கள் பிரச்சினைகளையோ; முக்கிய மசோதாக்களையோ – ஏறெடுத்துப் பார்த்திட எதிர்க்கட்சியினர் எவருமில்லை.

     இப்படி அரசியல; அழுக்குப்பட்டுக் கிடக்கிறது என்பதற்காக; அழுக்கான ஆடைதானே என்று கிழித்துவிட முடியுமா?  ‘ஜனநாயக’த்தில் தூய்மையாக்கிப் பயன்படுத்திட சலவை செய்யத்தானே வேண்டியிருக்கிறது!

     ‘ஜனநாயகம்’ என்பது நாட்டின் சகல மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிற சாசனம் அல்லவா?

     ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் சர்வரோக நிவாரணியாக இருப்பது அரசியல் என்பதை மறுக்க இயலுமா?  அதற்காக மருந்தை விஷமென்று வெறுத்து விட்டோ; விஷத்தை மருந்தென்று வேறுபாடு தெரியாமல் பயன்படுத்தி விட்டால் விளையும் ஆபத்து; எவ்வளவு வேதனை தரும் என்பதையும் விவேகிகள் சிந்திக்காமல் இருக்க முடியுமா?

     மக்களாட்சி என்பது மாடி வீட்டுக்கு – மாளிகைக்கு – மந்தகாச வாழ்வினருக்கு மட்டுமே – எழுதி வைக்கப்ப்ட்ட உயில் அல்ல!  உரிமை ஆவணமுமில்லை!  அது மாடு மேய்க்கும் மாயாண்டியும் – மண் குடிசை வாழ் மன்னாரும் – உரிமை கொண்டாடக் கூடிய சமத்துவப் பிரகடனம்!

     உரிமையுடையது என்பதற்காக நமக்காகப் பயன்படும் தண்ணீர்ப் பானையைத் தள்ளிவிட்டு உடைத்துவிட முடியுமா?

     அல்லது அந்தப் பானை ஒருவர்க்கு மட்டுமே உரியது என்று அதன் அருகே நின்று அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஆட்டம் போடத்தான் முடியுமா?

    எனவே, ‘காதல்’ – ‘துறவு’ – ‘அரசியல்’ – எல்லாமே பரிசுத்தமானவைதான்!

     அந்தப் பரிசுத்தம்;  அவற்றை அணிபவர்களைப் பொறுத்துத்தான் நீடிக்கும்!  அழுக்கின் ஆதிக்கத்திற்கேற்ப ஆடையின் தூய்மை அமையும்!

     ஜனநாயகம் எனும் மக்களாடசி மாண்பு அணிபவர்களைப்  பொறுத்துத்தான் நீடிக்கும்!  அழுக்கின் ஆதிக்கத்திற்கேற்ப ஆடையின் தூய்மை அமையும்!

    ஜனநாயகம் எனும் மக்களாட்சி மாண்பு வேர் இறங்கித் தழைத்து விளைந்திட;
     நிலம் செழிக்க ஏர் உழுதல், எரு இடுதல், நீர் பாய்ச்சுதல் போல களை நீக்குதல், காவல் காத்தல் தேவை என்கிறதே குறள்; அவற்றில் எல்லாவற்றையும் விட களை நீக்கும் ஏற்பாடு மிக முக்கியமாகும்.
     ஜனநாயகத்தை சீர்குலைக்கும் களைகளாக இருக்கும் இயக்கங்களையோ, நடக்கும் ஆட்சிகளையோ பயிரோடு இணைந்து வளர்வதற்கு இடம் தந்தால் ஏர் உழுதென்ன – எரு இட்டு என்ன – நீர் பாய்ச்சி என்ன பயன் ஏற்பட்டு விடும் – களைதான் வளரும்; நல்ல கதிர் வளராது!

     அரசியல்; நிலம் போன்றது! அது ஜனநாயகப் பயிர் வளர்க்கப் பயன்பட வேண்டும் – அந்தப் பயிர் மட்டுமே வளர்ந்தால் மனித வளம் – மதச்சார்பற்ற – மத நல்லிணக்க வளம் செழித்துக் குலுங்கும்!

     அரசியல் நிலத்தில் தன்னலம் வளர்க்க
     களைகளாய்த் தோன்றுவோர்;
    களையப்பட வேண்டியோரேயாவர்!
     அப்படிக் களைந்து விட்டால்; அரசியல் தூய்மையாகும்!

     ‘அறநெறி தானிய விளைச்சல்’ அமோகமாகப் பெருகும்!
     குளத்தில் படர்ந்துள்ள பாசியை அகற்றாமல்; குளத்தைப் பழிப்பது; பழிப்போரின் குற்றம் தானே?
     பாசியைக் கண்டுகொள்ள; முதலில் நம் கண்ணில் விழுந்துள்ள தூசியை அகற்றிக் கொள்வோம்.

…கலைஞர்  (27.04.2005)