Pages

Saturday, 2 March 2013

கலைஞரைக் கண்டவுடன்


பெரியாரின் பேச்சில் நிலைகுலைந்து போனார்கள்.  இரண்டுமாத விவாதங்கள் சாதிக்காததை பெரியாரின் பணிவான- ஆனால் உறுதியான வேண்டுகோள் தகர்த்துவிட்டது.  சாகின்றவரை அதில் மாற்றமே இல்லை.  பின்னர் 1965-ல் அரசியல் எதிரிகளால் துவங்கிய எங்கள் உறவு நட்பாகி - காதலாகி- 1968-ல் பெரியாரின் தலைமையில் கணவன்-மனைவியாகி - நாற்பதாண்டுகள் எத்தனையோ துன்பங்கள்- ஓராண்டு 'மிசா' சிறைவாசப் பிரிவு- எதிலும் சலனமில்லாமல்  கடந்த ஜூன் 2008 வரை தொடர்ந்தது.

சமயக்கொள்கையில் மாறானவராயும் அரசியல்  கொள்கையில் எதிரானவராயும் இருந்தவளை என் மனைவியாக்கிக்கொள்ளப் பெரியாரிடம் போனபோதுதான் பெரியார், கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன வரிகளைச் சொன்னார்.  காரணம் 1968-ல் தி.மு.க. வும் பெரியாருடன் மீண்டும் நட்பாகிவிட்டது.

பெரியார் எனது இயக்கத் தலைவராய் மட்டுமில்லாமல் குடும்ப ஆலோசகராகவும் இருந்தார்.  என்னுடைய துணைவியார் பி.எஸ்.ஸி., பி.எட். பட்டதாரி எனக்கு வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை.  பெரியார் என்னைக் கோபித்துக்கொண்டு கட்டாயமாய் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியில் சேரச்செய்தார்.

பின்னர் 1975 இறுதியில் 'மிசா' மேகம் தமிழகத்தைக் கவ்வியது.  நானெல்லாம் தனிமைப் படுத்தப்பட்டு 366 நாட்கள் மிசா சிறையிலிருந்தேன்.  சோதனை மேல் சோதனை.  கர்நாடகா இப்போது போலவே அப்போது கபினி, ஹேமாவதி ந்திகளில் அணைகட்டி காவிரியைக் காயப் போட்டது.  

நெல்லை இருப்பு வைத்திருந்த என் போன்ற நில உடமையாளர்கள் குடும்பங்கள் ரேஷன் கடைகளில் அரசி வாங்கிச் சாப்பிடும் சூழ்நிலை.  கடன் நிவாரணச் சட்டங்களால் என் உரக்கடைத் தொழில் அடியோடு நசிந்துவிட்டது.  குறைவான மாதச்சம்பளம் தான் என் மனைவியையும், குழந்தைகளையும் பசியின்றிக் காப்பாற்றியது.  அப்போது பெரியார் உயிரோடு இல்லை.

ஆனாலும் பெரியாரை நினைத்துக் கொண்டேன்.  அவர் மட்டும் என்னைக் கடிந்து கொண்டு என் மனைவியை வேலைக்கு அனுப்பியிராவிட்டால்?  மறக்க முடியுமா? பெரியார் என் குடும்பத்திற்குச் செய்த அந்த உதவியை?

'மிசா' சிறையிலிருந்த ஏராளமான தி.மு.க. தோழர்கள் குடும்பங்களுக்கு கலைஞர் மாதந்தோறும் உதவித்தொகை அனுப்பிக் கொண்டிருந்தார்.  அதில் சில திராவிடக் கழகத் தொண்டர்களும் மாத உதவித் தொகை பெற்று வந்தார்கள்.

நான் 1967-க்கு முன்னே பெரியார் ஆணைப்படி தி.மு.க வை மிகக் கடுமையாய் மேடைகளில் எதிர்த்துப் பேசியுள்ளேன்.  என்னுடைய பெண் நண்பர்- பின்னர் துணைவி 1965-ல் துவங்கிய நட்பு 1968-ல் திருமணமாகி கடைசிவரையிலும் அவர் தீவிர தி.மு.க. வேடிக்கையான நட்புப் பேச்சு- அரசியல் பக்கம் திரும்பி சண்டையில் முடியும்.

''மூன்று மாதங்களுக்கு முன்னால்…  என் துணைவியார் இறப்பதற்கு முன்னர் மருத்துவமனையில் அவளைப் பார்க்க வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம் ''கலைஞரை அடிக்கடி பார்ப்பீர்களா… அவர் எப்படி இருக்கிறார்'' என்றாள், தான் சாகப்போகிறோம் விரைவில் என்று தெரியாமல்.


''இறைவன் இணைத்து வைத்ததை மனிதன் பிரிக்காமல் இருப்பானாக'' என்கிறது பைபிள்.  ''இயக்கம் இணைத்து வைத்ததை இயற்கை பிரித்துவிட்டது''  என்னைப் பொறுத்தவரையில் உயிர் இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறது.  இதனைத் தாங்கிக்கொண்டிருந்த உடல் மண்ணோடு மண்ணாக… சாம்பலோடு சாம்பலாக…

முதலமைச்சராய் இருந்த தலைவர் கலைஞர் என் வீட்டிற்கு வந்தார்.  மிகவும் உடைந்து போயிருக்கிறேன் என அறிந்து ஆறுதல் சொல்ல… குறுகிய சாலை…  உயரமான படிக்கட்டுகள்… அதில் ஏறிவரும் வயதா…? உடல் நிலையா…? வந்தார்.

'எதற்கும் கலங்கமாட்டோம்.  உணர்வுகளைக் காட்டியதில்லை.  பெரியார் உட்பட யார் காலிலும் விழுந்ததில்லை இந்த எழுபது வயதில்' என்ற என்னுடைய கம்பீரம் தகர்ந்துபோனது.  அவரைப் பார்த்தவுடன் எல்லோர் முன்னிலையிலும் உடைந்து அவர் காலில் விழுந்துவிட்டேன்.  தலைவரும் கண்கலங்கிவிட்டார்.  தட்டிக்கொடுத்து… ஆறுதல் சொன்னார்.  ''உங்களுக்கு எல்லாம் தெரியும்… நான் என்ன சொல்ல'' என்றார்..

கடைக்கோடி தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவனைத் தேற்றுகின்ற- ஆற்றுப்படுத்துகின்ற இருபெருந்தலைவர்களோடு வாழ்ந்திருக்கிறேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

தொண்டனை வெறும் உறுப்பினராய் நினைக்காமல் தன் உறுப்பாய் கருதும் தலைமுறையில் கடைசித் தலைவர் கலைஞர் ' சென்னைக்கு வா' என்று சொல்லி விடைபெறுகிறார்.
 
'திருவாருரில் பிறந்தார் எல்லார்க்கும் அடியேன்' என்ற தேவாரம் காதில் ஒலிக்கிறது.

...திருச்சி செல்வேந்திரன்..(தி.மு.கழக வெளியீட்டுச் செயலாளர்) சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!.....நக்கீரன் வெளியீடு...பகுதி 3 ல் தொடரும்

காதலியின் மனதை மாற்றியப் பெரியார்


''மக்கு எதிரியா இருந்தவங்க எல்லாம் ராசியா ஆகிட்டிருக்கிற நேரம்ஒங்க பங்குக்கு நீங்களும் ஒருத்தரை கூட்டிட்டு வந்துட்டீங்க''  என்று குழந்தைபோல் சிரித்தார் பெரியார்.

அது 1968-ம்  வருடம்அதற்கு முன் 1949-ல் பெரியாரிடமிருந்து பிரிந்து கசப்பான மோதுதல்களோடு இருந்த தி.மு..  1967 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றபின் அதே 1967 தேர்தலில் பல்லும் நகமும் தேயத் தங்களை எதிர்த்துத் தோற்கடிக்கப் பாடுபட்ட தங்கள் தலைவர் பெரியாரிடம் வந்துசேர்ந்து சில மாதங்களே ஆன நேரமது.

காங்கிரஸ்காரர்கள்- குறிப்பாய் தலைவர் பெரியாரின் சொந்த அண்ணன் மகன் மதிப்பிற்குரிய அண்ணன்.வெ.கி.சம்பத் (இன்றைய நடுவன் அமைச்சர் இளங்கோவனின் தந்தை) போன்றவர்களே இந்த உறவைக் குறைகூறி பேசியபோது அண்ணா சொன்ன வார்த்தை வரலாற்றுக் கனபரிபாணமும் இலக்கியச் செறிவும் மிக்கதாகும்அண்ணா சொன்னார், ''பிரிந்த தந்தையிடம் மகன் சேர்வது குணங்களில் ஒன்றே தவிர- குற்றங்களில் ஒன்றல்ல.''

அன்று விழுப்புரம் பயணியர் விடுதியில் தந்தை பெரியாரின் முன்னால் நான், பெரியாரிடமே 'நாணயமாணவன்' என்று பெயர் வாங்கிய அவருடைய நம்பிக்கைக்குரிய செயலாளர் ஈரோடு சுப்பையா, என் வாழ்வில் மறக்க முடியாத தொழிலதிபர் அடைக்கலம், பெரியாரின் டிரஸ்ட்டில் உறுப்பினராய் இருந்த மீனாட்சிசுந்தரம், பின்னர் என் வாழ்க்கை துணையாகிவிட்ட எனது பெண் நணபர் காதரின் எல்லோரும் நின்றோம்மதம் மறுப்பு, சாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணத்தை நாங்கள் இருவரும் விழுப்புரம் பொதுக்கூட்ட மேடையில் நடத்திக்கொள்ள பெரியாரிடம் சென்றோம்அவர் முன் நின்றோம்.

பெண் கிருத்துவர் நான் சட்டப்படி இந்து எனப்பட்ட பகுத்தறிவுவாதி.  சுயமரியாதைத் திருமணச் சட்டம் அப்போது அமலுக்கு வந்துவிட்டது என்றாலும் அது இரண்டு இந்துக்கள் இடையேதான் நடக்கவேண்டும்சட்டச் சிக்கல்.

ஒருமுறை ஒரு இந்துவுக்கும்-கிறித்துவருக்கும் பெரியார் தன் தலைமையில் திருமணம் முடித்து வைத்து அது சட்ட சிக்கலாகி பாதிரிமார்கள் பெரியாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கச் செய்துவிட்டார்கள் அதே எங்கள் திருச்சியில்இப்போது நான் இரண்டாவதுஅப்போது நான் தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்ட திருச்சி நகர திராவிடர் கழகத் தலைவர்என்னுடைய துணைவியார் மதப்படி கொள்கை ரீதியாய் பெரியார் இயக்கத்தின் எதிரி

ஆனால்
, இந்தக் காதலுக்கு விதை போட்டவரே ஒருவகையில் பெரியார் தான்எங்கள் காதல் பூங்காவில் பூக்கவில்லைபோராட்டக் களத்தில்தான் விதைக்கப்பட்டது.


தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போர், மாணவர்களால் துவக்கப்பட்ட போர்வேகமான புயலாய் உருவெடுத்ததுபல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவர்கள் இடையேயும் அவரவர் தலைமையில் கட்டுப்பாடுகளைத் தாண்டிய இந்தி எதிர்ப்புத் தீ பற்றிக் கொண்டதுகாவல்துறையால் கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமே வரவழைக்கப்பட்டு திருச்சியில் துப்பாக்கிச் சூடும் சாவுகளும் நிகழ்ந்தன

  மாணவர்கள் போராட்டத்தின் இந்த உக்கிரத்தை பின்னின்று இயக்குபவர் இன்றைய முதல்வர் கலைஞர் தான் என்று கலைஞரை முகத்துக்கு எதிரிலேயே அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டமன்றத்தில் குற்றம்சாட்டினார்அதன் விளைவாய் கலைஞர் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தில் இந்தி ஒழிக (தமிழ் வாழ்க அல்லஎன்ற முழக்கத்தின் காரணபூதரான தலைவர் பெரியார் 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்போரை ஆதரிக்கவில்லைமாறாக எதிர்த்தார் காரணம் 1938-39ல் எந்த ராசகோபாலாச்சாரி கட்டாய இந்தியை தமிழகத்தில் கொண்டுவந்து தாளமுத்து-நடராசன் இருவரின் சாவுக்குக் காரணமாய் இருந்தாரோ-அவர்தான்.  1965-ல் இந்தி எதிர்ப்புப் போருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த சுக்கிராச்சாரி.


அன்று 1965-களில்  தமிழகத்திலிருந்த காமராஜர் ஆட்சியை ஒழிக்க ராசகோபாலாச்சாரி கண்டுபிடித்த அரசியல் வியூகம்தான் 1965 இந்தி எதிர்ப்புப்போர் என்பது பெரியாரின் நிலைப்பாடுஇதை அப்படியே பேசவும் எழுதவும் செய்தார் பெரியார்இதனால்  அரசியலுக்கு அப்பாற்பட்ட மாணவர்களும் பெரியாரின் பேரில் கோபம் கொண்டார்கள். 


பெரியாரின் வேன் பழுதுபார்க்க (அவரில்லாமல்பழுதுபார்க்கக் கொண்டுசெல்லப் பட்டபோது யாரோ அதை கல்வீசித் தாக்கினார்கள்.
கதை எங்கோ போகிறதே திசைமாறி என்று எண்ணாதீர்கள்இந்த பின்னணியில் கட்டுரையின்  துவக்கத்திற்கு வாருங்கள்பெரியார் இந்தத் தாக்குதலை துணிவோடு எதிர்கொண்டார்கள்நாகை-நன்னிலம்-கரூர்  போன்ற இடங்களில் இது தி.மு., தி.க மோதலாய் வெடித்ததுபெரியார் இதுபற்றிய தனது நிலையை மாணவர் இடத்தில் தெளிவுபடுத்த எண்ணினார்பெரியார் மாபெரும் சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர்என்னுடைய எண்ணத்தில் அவர் இவைகள்  யாவற்றையும் தாண்டி ஒரு மக்கள் இயக்கத்தை கட்டக்கூடிய மாபெரும் அமைப்பாளர்.  (Organiser)

அன்றைக்குத் திருச்சியில் மூன்று ஆண்கள் கல்லூரிகள, இரண்டு பெண்கள் கல்லூரிகள்இரண்டு கல்லூரிகள் கிறிஸ்துவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளனஇரண்டு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனஒன்று இசுலாமியர்களுடையது.

வடகலை அய்யங்கார்கள் ஆதிக்கத்தில் இருந்த தேசியக் கல்லூரியின் பழைய மாணவன் நான் பெரியாரின் தொண்டரான மாபெரும் புரட்சி எழுத்தாளர் குத்தூசி குருசாமிஉலகப்புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர்ராமமூர்த்தி, கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் இக்கல்லூரியின் மாணவர்களே!

கல்லூரிக் காலத்திலேயே மாணவர் இயக்கத் தொடர்புடைய என்னை ஆண்-பெண் மாணவர்களைப் பெரியாரை சந்திக்க வைத்துப் பின்னர்  அவர்கள் மூலமே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யும் பொறுப்பை என்னிடம் தந்தார்கள்.
அன்றைக்கு மாணவ-மாணவிகள் , குழுகுழுவாய் சேர்ந்து அரட்டை அடிக்கும் இடங்கள் மேலரண் சாலை இருந்த இந்தியா காபி  அவுஸ்!  (இப்போது அது வணிகவளாகங்களாக கட்டப்பட்டு விட்டன) இன்னொன்று ஐம்பதாண்டுகளாய் மணமும் சுவையும் மாறாத 'மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம்' ஸ்டால்நானும் மாணவர்கள் குழுவோடும், மாணவிகள் குழுவோடும் அவர்களுடைய உறவினர்கள்- நண்பர்கள் சக மாணவர்களோடும் சில நாட்கள் பேசினேன்.

''உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்ற முழக்கம் மாணவர்களின் இதயத்துடிப்பாகிவிட்ட நேரம்இந்தி எதிர்ப்புப் போர் ராசகோபாலாச்சாரியின் சந்தர்ப்பவாதம் -என்ற எங்களுடைய அறிவுபூர்வமான வாதங்கள் எடுபடவில்லை.

''சாவிலும் தமிழ் படித்து சாகவேண்டும்

எங்கள் சாம்பலெல்லாம் தமிழ் மணந்து வேக வேண்டும்''

என்ற கவிதை வரிகள் மாணவர்கள்- தமிழ்  ஆர்வலர்கள் தங்கள் தாய்-தந்தையருக்கு எழுதும் கடிதங்களில்- ஏன் காதல் கடிதங்களில்கூட தலைப்பில் மிளிர்ந்த காலம், ஒளிர்ந்த நேரம்.



 
கல்லூரி மாணவர்களிடம் என்னுடைய அணுகுமுறையை அறவே மாற்றிக்கொண்டேன்மெல்லப் பொதுவான நட்பாக-பொதுச்செய்திகள்- அவர்களுக்கு விருப்பமான இலக்கியக் கலந்துரையாடல் என மாறியதுஇதற்கிடையில் பேரரிறிஞர் அண்ணா மாணவர்களுக்கு வைத்த வேண்டுகோள்- அரசின் அணுகுமுறையில் மாற்றம், இந்தி எதிர்ப்புப் போரில் வன்முறை வேகம் தணிந்ததுகடந்த இரண்டுமாத மாணவ- மாணவிகளுடனான மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் ஸ்டாலின் கலந்துரையாடலில் ஒருவர்தான் பின்னாளில் எனது மனைவியான காதரின் ஒருநாள் அவரையும் அவருடைய தோழிகளையும் வேறு ஒரிரு நண்பரகளையும் 'உங்கள் இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கும்- பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்குமான வேறுபாடுகள் பற்றி நேரில் பெரியாரையே கேளுங்களேன்'' என்று மீண்டும் என் வலைக்குள் இழுத்தேன்முதலில் யோசித்த- பயந்த அவர்கள் பெரியாரிடம் என்னுடன் வந்தார்கள்பெரியார் வழக்கப்படி ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும் போதும் அவர்கள் பெற்றோர், குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்தார் பரிவோடுபிறகு எல்லோரும் கேள்விகள் கேட்கக் கேட்க பெரியார் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்நீண்ட நேரத்திற்குப் பின் மாணவ- மாணவிகள் பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டார்கள்மாணவியர்நிலையில் முழுமையான மாற்றமில்லை.

பெரியார்
வழக்கப்படி அவர்கள் ஒவ்வொருவரையும் கையைப் பற்றிக்கொண்டு, ''மன்னிக்க வேண்டும்ஒங்க படிக்கிற நேரத்தை வீணாக்கிப் போட்டேன்ஏதோ... என் அறிவுக்கு சரியெனப்பட்டதச் செய்யறேன்தப்புன்னு நெனைச்சா மன்னிச்சுக்குங்க...  நான் ஒங்க அளவுக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கலே...  என்னைக்காவது என்னோட முடிவு தப்புன்னு தெரிஞ்சா  நிச்சயம் மாத்திக்கிறேன்''  என்றார் பணிவாகமாணவர்கள் நிலை குலைந்து போனார்கள்... 

...திருச்சி செல்வேந்திரன்..(தி.மு.க கழக வெளியீட்டாளர்) சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!.....நக்கீரன் வெளியீடு...பகுதி1 முற்று..

தொடரும் பகுதி ...2. இன் தலைப்பு; ''கலைஞரைக் கண்டவுடன்''

Wednesday, 3 October 2012

1948 இல் கலைஞரின் முரசொலி

 --------------------------------------------------------------------------------------


1948 இல் கலைஞரின் முரசொலி வார ஏடாக இப்படித்தான் வெளிவந்தது.

(முரசொலி வார ஏடு- பதின்மூன்றாம் இதழ்)

முரசு1 ஒலி 13

பெரியார் ஆண்டு 59

சித்திரை 2உ புதன்

(14-4-48)

விலை ஒன்னரை அணா

ஆண்டுத்தொகை ரூ 5

...தகவல் 'கலைஞரின் முரசொலி'..பி.எல்.ராஜேந்திரன் எம்.ஏ