Pages

Tuesday, 5 July 2011

லாயக்கத்தக் குழு லாயக்கற்றதுன்னு அறிக்கை!





 தற்போதைய பாடத்திட்டம் லாயக்கற்றது: சமச்சீர் கல்வி கமிட்டி

சென்னை, ஜூலை 5: சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த கமிட்டி தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தற்போது இருக்கும் பாடத்திட்டங்கள், நடப்பு வருடத்துக்கு பயன்படத்தக்க வகையில் இல்லை என்றும், பாடத்திட்டங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்த வழக்கை 7ம் தேதிமுதல் தினமும் விசாரிக்கும் என்று தெரிகிறது.முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு ஜூன் 17-ம் தேதி நியமித்தது.அந்தக் குழுவினர் இதுவரை 4 முறை கூடி சமச்சீர் கல்வி முறையை ஆய்வு செய்தனர். 

அந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த அறிக்கையை தொடர்பாக உயர்நீதிமன்றம் 7-ம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்த உள்ளது.

1, 6 வகுப்புகள் தவிர மீதமுள்ள 8 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டில் அமல் ஆகுமா என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே ஏறத்தாழ ஒரு கோடி மாணவர்களுக்கு எந்தப் பாடப்புத்தகங்கள் என்பது தீர்மானிக்கப்படும். சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே தயாராக உள்ள நிலையில், பழையப் பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அச்சிடும் பணியும் இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.பத்தாம் வகுப்பு புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி புத்தகங்கள் அச்சிடப்படுவதாகவும், இதுவரை ஏறத்தாழ 20 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு முடியும் வரை 1, 6 வகுப்புகளுக்கு எந்தவித பாடத்திட்டத்தின் கீழும் பாடங்களை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறையில் அறிவியல், கணிதப் பாடங்களில் அடிப்படைகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிப்பாடங்களில் இலக்கண வகுப்புகளும் இப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், இந்தப் பாடப்புத்தகங்கள், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி, இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டத்தையே பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்தது.இதுதொடர்பாக, சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தத்தையும் அரசு கொண்டு வந்தது.ஆனால், இந்தத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்தத் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆராய தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், 1,6 வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையை அமலாக்குவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.1,6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறையையே இந்த ஆண்டு தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

.....தினமணி 05.07.2011
*************************

பொது ஜனம்; இந்த நிபுணர் கம்னாட்டிகள் கமிட்டி என்ற பெயரில் அமைக்கப்பட்ட லாயக்கத்தக் குழு வின் அறிக்கையின் மூலாமா  தினமணி தனது பார்ப்பன முகத்தை காட்டிக்கிச்சா!


பொது ஜனம்; அது என்ன பன்றது இனம் இனத்தோடத்தானே சேரும்! அதை பத்தி தெரியாதா?


பொது ஜனம்; அது எப்படி? பல மாதங்கள் பல கல்வியாளர்களால் ஒருங்கிணைந்து தயாரித்த புத்தகத்தை எப்படி?. இந்த லாயக்கத்தக் குழு மட்டும் அவசர கதியில்  இரண்டே வாரத்தில் அறிவிக்க முடிந்த்து?


பொது ஜனம்; இதுங்க மட்டும் அவசர அவசர அவசரமா சம்ச்சீர் கல்வி சரியில்லைன்னு அறிக்கையளிக்கலாம்!


பொது ஜனம்; உச்சநீதிமன்றம் இப்படியா அறிக்கை அளிக்க சொல்லுச்சு! சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில குறையைத்தானே சொல்ல சொல்லிச்சு! இவங்க மறுபடியும் சமச்சீர் கல்வியை நிறுத்தனும்னே அறிக்கை கொடுக்கறாங்களே! நீதிமன்றத்தை மதிக்கவே மாட்டாங்களா!
பொது ஜனம்; இல்லையப்பா! அவங்க அம்பேத்காரை விட பெரிய பெரிய படிப்பு படிச்சவங்க! அதுனால தான் இலக்கணப்பிழையெல்லாம்  கண்டுபிடிச்சிருக்காங்க! அவங்க உலகத்துக்கே பாடம் சொல்லிக்கொடுக்கறவங்க! அவங்க சொல்லிக்கொடுத்ததினால தான் பல பேர் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிச்சிருக்காங்க! 


பொது ஜனம்; ஓ...அப்படியா! இதுங்க அந்தளவுக்கு நிபுணர்னா ஏன்? மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்க முடியலை! ஏன்? ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி பாஸ் ஆக முடியல. இவ்வளவு குயிக்கா ஆராயராங்களே!



பொது ஜனம்; அப்ப இங்கிலாந்துக்கே இங்கிலீஷ் கத்துக்கொடுக்கறவனுங்கன்னு சொல்லு!


பொது ஜனம்; அது மட்டுமில்ல! தமிழ் நாட்டுக்கே தமிழ் சொல்லிக்கொடுக்கறவனுவங்களும் இவனுங்கதான்!


பொது ஜனம்; இலக்கணப்பிழையை 40  புத்தகத்திலேயும், அனைத்து பக்கத்திலேயும் கண்டுபிடிச்சிட்டாங்களா!? அப்ப 1 வது 6 வது புத்தகத்துலேயும் கண்டுபிடிச்சிட்டாங்களா!? அப்புறம் ஏன்? அதை மட்டும் உச்சநீதிமன்றம் அமல்படுத்திச்சு! இது நல்லா போங்கா இருக்குதே!

பொது ஜனம்; 40 புத்தகம்னா 8 வகுப்புக்கு தலா 5 பாடப் புத்தகம்! அதானே!
பொது ஜனம்; ஆமாம்!


பொது ஜனம்; இரண்டே வாரத்துல அத்தனையும் கரைச்சு குடிச்சிட்டானுங்களே! இப்ப அந்தப் புத்தகத்திலேயிருந்து எந்த கேள்வி கேட்டாலும் டான்! டான்னு! பதில் சொல்லுவானுங்க!
பொது ஜனம்; எந்த புக்குலேயா! இலக்கணப் பிழை இல்லை! இவனுங்க மெட்ரிக்குலேசன் புத்தகத்திலே நாட்டோட பெயரையெல்லாம் தப்புத் தப்பா போட்டிருக்குது. நாடுகளோட  கரன்சிகளின் பெயரையெல்லாம் தப்பு தப்பா அச்சடிக்கப்பட்டிருக்குது! அதையே பலமுறை சொல்லியும் திருத்தாம அப்படியே புள்ளைகளுக்கு சொல்லி கொடுத்துட்டு இருக்கானுங்க!

பொது ஜனம்; எல்லாப் பெரிய பெரிய புத்தகத்திலேயும் பிழைகள்னு, புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில் ஒதுக்கி குறிப்பிட்டு இருப்பாங்க! பிழையில்லாத புத்தகமே இல்லை! 

பொது ஜனம்; ஆமா! எராட்டான்னு புத்தகத்தின் கடைசிப்பக்கத்திலேஇருக்கும்!


பொது ஜனம்; ஆமாய்யா! மெட்ரிக்குலேசன்  புக்குகளை ஆளாளுக்கு, தனியார் அளுங்க ஒவ்வொருத்தனும் தப்பு தப்பா பிரிண்ட அடிச்சி ஒவ்வொரு பள்ளிக்கும் கமிஷனோட கொடுக்கறான்  அதை அப்படியே வைச்சு பசங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்குதுங்க! இந்த லட்சணத்துல இந்த புக்கை பத்தி இதுங்க குத்தம் சொல்லுதுங்க!


பொது ஜனம்; அப்புறம் ஏன்? போன வருஷமே! இந்த இலக்கணப் பிழைகளை இந்த லாயக்கத்தக் குழுவில இருந்த ஒருத்தனும் கண்டுபிடிக்கலை! அப்பவும் இதுங்க ஸ்கூல் நடத்திகிட்டு தானே இருந்ததுங்க!


பொது ஜனம்; பெத்தவங்களை வைறு எரிய செஞ்ச இந்த பொம்பளைக்கு நல்ல.....????????????


பொது ஜனம்; பொறு! பொறு! அப்படியே லேசுல விட்டுருமா! நீதிமன்றம்! கல்வியாளர்களும் பதில் மனு பக்காவா தாக்கல் செய்வாங்க! அப்ப பாக்கலாம்! நீதிமன்றமும் சும்மா விடாது! இந்த அறிக்கையிலேயே அப்பட்டமா எல்லாம் தெரியுதே!


பொது ஜனம்; இந்த லாயக்கத்தக் குழுதான் இந்த சமச்சீர் புத்தகங்கள் லாயக்கில்லைன்னு சொல்லுது!


பொது ஜனம்; குழந்தைகள் என்ன பாவம்யா பண்ணுச்சு!

Monday, 4 July 2011

குழந்தையை சுட்டுக் கொல்லும் இந்திய ராணுவம்! இந்திய, தமிழக அரசுகளின் மனிதவுரிமை மீறலுக்கு இங்கேயே தீர்மானம் போடுங்க!


ராணுவக் குடியிருப்பில் சிறுவன் சுடப்பட்டு சாவு: சாலைமறியல்

சென்னை, ஜூலை 3: சென்னை தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்பில் பழம் பறிப்பதற்காக நுழைந்த சிறுவன் தில்ஷான் (13) அங்குள்ள ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தான்.  இதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சிறுவனின் உறவினர்கள், பொதுமக்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


 இது குறித்த விவரம்: சென்னை தீவுத்திடல் பகுதி இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.  இவர்களின் 2-வது மகன் தில்ஷான். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.  ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் விழுந்து கிடக்கும் பாதாம் பழங்களை எடுக்கச் சென்றதாகக் கூறப்  படுகிறது.  

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ராணுவ வீரர் சிறுவன் தில்ஷானை துப்பாக்கியால் சுட்டாராம். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள், அவனது பெற்றோரிடம் தகவல் தெரி  வித்தனர்.  இதையடுத்து சிறுவனின் உறவினர்கள், அப்பகுதியினர் அனைவரும் ராணுவக் குடியிருப்பின் அருகே திரண்டனர். 


 ஆனால், அதற்குள்ளாக சிறுவனை அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்துவிட்டதாக அங்கிருந்த ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்திராநகர் பகுதியினர் சிலர் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றனர். 


ஆனால், சிறுவனை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையிலும் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.  போலீஸôர் தடியடி: சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸôர் ஈடுபட முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீஸôர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு சிறுவன் தரப்பினரும் போலீஸôரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போஸீஸôர் ஒருவர் காயமடைந்தார்.  


சிறுவன் பலி: இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தான். இதனால் சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், உதயகுமார் ஆகியோர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.  இது குறித்து சிறுவனின் உறவினர்கள் கூறியதாவது: ராணுவக்குடியிருப்புக்குள் அனுமதியில்லாமல் செல்வது தவறுதான். ஆனால் வளாகத்துக்குள் நுழைந்தவர்கள் தீவிரவாதிகள் அல்ல. பள்ளியில் படிக்கும்  சிறுவர்கள். 

 ஆனால், நாட்டை பாதுகாக்கும் பணியில் உள்ள ராணுவ வீரர் தீவிரவாதியை போல சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.  வடக்கு மண்டல இணை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

 ராணுவக் குடியிருப்புக்குள் பழங்களை எடுப்பதற்காக சென்ற சிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிறுவன் குடும்பத்துக்கு ரூ.5லட்சம்: இறந்த சிறுவன் தில்ஷான் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தினமணி 03.07.2011, தினகரன் 04.07.2011

********************** 

பொது ஜனம்; போயும் போயும் இந்திய ராணுவத்தினர் குழந்தையை கொல்லுவதற்குத்தான் துப்பாக்கி ஏந்தியிருக்குதா! அதை விட பெரியக்கொடுமை அநியாயத்துக்கா பொய் பேசுதே! பையன் மரத்துலேயிருந்து கீழே விழுந்து செத்துட்டான் என்று! பட்டாளம் பச்சையா பொய் பேசுவதிலும் கில்லாடி போலிருக்கிறது!

பொது ஜனம்; வாயால மிரட்டியிருக்கலாமே! இல்லை வானத்தை நோக்கி சுட்டிருக்கலாமே! இவன் விட்டிருந்தா மரத்தில ஏறின நான்கு குழந்தைகளையும் சுட்டு கொன்னிருப்பான்யா! நல்ல வேளையா! 3 குழந்தைங்க தப்பிச்சிடுச்சி! 

பொது ஜனம்; அந்த குவர்ட்டர்சுக்கு அடிக்கடி தண்ணி பிடிக்க வேறு மக்கள் போயிருக்காங்க! இந்த மாநில அரசு அதுங்க குடிதண்ணீர் பிரச்சினைக்கும் வழி பண்ணலை!

பொது ஜனம்; குழந்தையை கொன்னதுக்கு எதிர்த்து போராடினவங்க மேலே  போலீஸ் தடியடி வேற நடத்தி குழந்தையோட உறவுக்காரங்க மண்டையை உடைச்சிடுச்சி! 

பொது ஜனம்; அவங்க மட்டும் போலீஸ் காரங்க மண்டையை உடைக்கலாமா?


பொது ஜனம்; போலீஸ் மட்டும் கைது பண்ணாம ரொம்ப நேரமா வேடிக்கை காட்டிகிட்டு இருக்கலாமா? அதுவும் குண்டு துளைச்சு குழந்தையோட தலைக்கு அந்த பக்கமா குண்டு வந்திடுச்சி! குழந்தை மரத்தலேயிருந்து விழுந்த இடத்தோட ரத்தக்கரை தடயத்தை அழிக்கிற வரைக்கும் வேடிக்கைப் பார்த்து கிட்டு இருந்ததே! இப்ப ரொம்ப விவரமா போலீஸ் நாடகம் நடத்துறாங்களே! இதைத்தான் எல்லா ஆங்கில, தமிழ் சேனல்களிலே காட்டினாங்களே!

பொது ஜனம்; ஆமாய்யா! குழந்தையை சீக்கிரம் அடக்கம் பண்ண சொல்லி பெத்தவங்களை வேறு மிரட்டுதாங்களாம்! இந்த குண்டம்மா போலீஸ்!


பொது ஜனம்; ஜெயலலிதாவுக்கு இதையெல்லாம் பற்றி கவலைப்பட நேரம்! எங்க இருக்கப்போகுது! ஒட்டு மொத்த குழந்தைங்க படிப்பையும் கெடுத்துது. எந்த குழந்தைக்கும் இப்ப படிப்பில நாட்டமே இல்லை. சும்மா விளையாடிட்டு வருதுங்க! இந்த மாதிரி அநியாயம் யாருமே பண்ண மாட்டாங்கய்யா! அதுவும் சுதந்திர நாடு பீய்த்திக்கிற நாட்டில இப்படியெல்லாம் கூட நடக்குது!

பொது ஜனம்; பாக்கிஸ்தானில இருந்து தீவிரவாதிங்க  அசால்ட்டா வந்து பலரை போட்டுத்தள்ளிட்டு போயிட்டேயிருக்காங்க! இதுங்க நம்ம பணத்துல சம்பளம் வாங்கிட்டு நம்ம வீட்டு குழந்தைகளையே போட்டுத்தள்ளுதே!

பொது ஜனம்; இராணுவத்துக்கு கெட்டப் பெயர் வந்துறப்பொகுதுன்னு இந்த மாதிரி கீழே விழுந்து இறந்துட்டான்னு இந்த இந்திய ராணுவம் பொய் சொல்லுதுப்பா!

பொது ஜனம்; இவனுங்க கெட்டப் பெயர்ல நாய் நரி.....பேணுட்டுப்போக! 

பொது ஜனம்;எவன் செஞ்சா! என்னய்யா! இது அப்பட்டமான மனிதவுரிமை மீறல் அந்த சுட்ட ராணுவ  ஆள், உத்தரவு கொடுத்த "அப்பா டக்கர்" ராணுவ அதிகாரி எல்லோருக்கும் கடுமையான தண்டனை கொடுக்கனும்!

பொது ஜனம்;முதல்ல அவனுங்களை பதவியை விட்டு நீக்கணும். அவனுங்க நாட்டை பாதுகாத்து கிழிச்சது போதும்!

பொது ஜனம்; மக்கள் தூக்கிலேயே போடனும்னு குரல் கொடுக்கறாங்கப்பா!

பொது ஜனம்; இந்த லட்சணத்தில அடுத்த நாட்டு மனிதவுரிமை மீறலுக்கு இங்க சட்டமன்றத்துல தீர்மானம் போடுறானுங்க! முதல்ல உங்களுக்கே நீங்க தீர்மானம் போட்டுக்குங்க! தூ....!

பொது ஜனம்; அங்கேயாவது யுத்தம் நடந்தது! இங்கே என்னய்யா நடந்தது!

பொது ஜனம்; ராணுவத்தை கைது பண்ண முடியாதுய்யா! கைது பண்ணா உடனே ராணுவ கோர்ட்டுல ஒப்படைச்சுடனும்!

பொது ஜனம்; சிவிலியனை எச்சரிக்கை பண்ணாம சுடலாம் என்று மட்டும் சட்டம் இருக்குதா? குழந்தையை கொல்லவேக் கூடாது என்று ஐ.நா யுத்த விதியிலே இருக்குதய்யா! இது நேரிடையாவே இந்திய ராணுவ ஆளுங்க மீறியிருக்கானுங்களே!  இதை சர்வதேசம் வரைக்கும் கொண்டு போகலாம்!

பொது ஜனம்; சரி! கைது பண்ணி! சார்ஜ் ஷீட் பைல் பண்ணி கோர்ட்டுல ஒப்படைக்க சொல்லுங்க! அதுக்கப்புறம் நீதிமன்றத்தின் மூலமா தண்டனை கொடுக்கட்டும்! அதிகாரிக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கட்டும்! 

பொது ஜனம்;இவனுங்க கீழே விழுந்து இறந்துட்டானுங்க என்று பொய் சொல்றானுங்களே! கீழே விழுந்தவனுக்கு குண்டு எப்படி பாயும்? எவன் துப்பாக்கியிலேயிருந்து வந்த குண்டு! என்பது கூடவாத் தெரியாது! இல்லை போஸ்ட் மார்ட்டத்துல இதெல்லாம் வெளி வராதா?! 

பொது ஜனம்; இதையும் சங்கர சுப்பு கொலைக்கேஸ் மாதிரிதான் டீல் பண்ணுமா? 

பொது ஜனம்;ஏழைக்கு ஏதுய்யா வசதி! அதுங்களை அன்றாடக் காய்ச்சிங்க!  இப்படி ஏழைகளை! இந்த நாடு மோசம் பண்ணுதே!

பொது ஜனம்; அந்த ராணுவ ஆளோட குழந்தையை இது மாதிரி கொன்னிருந்தா! அதோட வலி தெரியும்! 

பொது ஜனம்; எந்த குழந்தையாயிருந்தாலும் கொல்லுவதை எப்படிய்யா ஏத்துக்கொள்ளமுடியும்!

பொது ஜனம்; கல்வியைத்தான், இந்த பொம்பளைக்காக "சமச்சீர்" என்ற காரணத்துக்காக நிறுத்திட்டானுங! குடும்பம், குழந்தை குட்டி இதை பத்தி தெரியாத ஒரு பொம்பளை பண்ணுச்சி! இப்ப குழந்தைகள் உயிருக்கும் பாதுகாப்பில்லை! 

பொது ஜனம்;ஏழைகளோட குழந்தைகள்னா சுத்தம்! நரபலி வரைக்கும் போகலாம்! போலீஸ்காரனுங்க கண்டுக்க மாட்டானுங்க! ஒன்னுமில்லாத "பிச்சை"க்கார அமைச்சருக்கு சி.பி.சி.ஐ.டி வைச்சி நோண்டிகிட்டு இருப்பானுங்க!

பொது ஜனம்; அதுக்குத்தான் 5 லட்சம் கொடுத்துடுச்சே! சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்குதே!  அந்த குடும்பம் சைலண்டாயிடும்! அந்த மாதிரி சூழ்நிலையில வாழறவங்க தான் அவங்களெல்லாம்! 

பொது ஜனம்; என்னத்துக்கு இப்ப விசாரணை! அரசு அறிக்கையே வந்துடுச்சு! ராணுவம் தான் சுட்டுதுன்னு!  போய் புடிச்சு போடாமா! 


பொது ஜனம்; மக்கள் மனிதவுரிமையை நாடணும்! கோர்ட்டு படிக்கட்டு ஏறணும்! போராட்டத்தின் மூலம் தீர்வு காணணும்! இது தான் தீர்வுக்கு வழி வகுக்கும்! இல்லைன்னா அப்படியே கேசை மூடிடுவானுங்க!

பொது ஜனம்;மக்கள் சும்மா விடக்கூடாது! நீதிமன்றம் சும்மா விடக்கூடாது! அரசியல் கட்சிகளும் சும்மா விடக்கூடாது!

பொது ஜனம்; குழந்தைகள் உதவி மையம் என்ன பண்ணுது! வேடிக்கை பார்க்குதா? போன் பண்ணா 24 மணிநேரமும் உதவி பண்ணும்னு சொல்லுது குழந்தையை சுட்டு தெருவில வீசி இருக்கானுங்க! பார்த்துட்டு இந்த போலீஸ் கம்முனு இருக்குதே!


பொது ஜனம்; சுட்டது யார்னு தெரியும்? கொன்ற கொலைகாரனும் அங்கேயேத்தான் இருக்கான்! ஆனா! நோ! கைது! நோ தண்டனை! இதுக்கு ஒரு தனி விசாரணை.....??????????

Thursday, 30 June 2011

திருடர்கள்! அமைத்த விசாரணை கமிஷன்!



புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக
திட்டமிட்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர்
கருணாநிதி அறிக்கை



சென்னை, ஜுன்.30-

புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக திட்டமிட்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய தலைமைச் செயலகம்

"புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து எழுந்துள்ள புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது'' என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து இதுவரை யாரும் புகார்கள் கொடுத்ததாக எந்தச் செய்தியும் ஏடுகளிலே வரவில்லை. தமிழக அரசினரே தங்களுக்குத் தாங்களே புகார் வந்ததாக செயற்கையாகக் கூறிக் கொண்டு, அந்தப் புகார்களை விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்த புதிய தலைமைச் செயலகத்தில் வந்து குடிபுகாமல் இருப்பதற்காக - தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட அந்த மாளிகையைப் பயன்படுத்தாமல் இருப்பதால் தன்னை பொதுமக்கள் இழித்துரைக்கக் கூடும் என்பதை நன்குணர்ந்த ஜெயலலிதா; அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் திட்டமிட்டு இப்படியொரு விசாரணை கமிஷனை அமைத்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்வார்கள்.

முதல்-அமைச்சர் தங்கும் அறை

விசாரணைக்கான வரையறைகளாக கட்டுமானத் தரத்தில் குறைகள் - கட்டுமானப் பணியை முடிக்கத் தேவையில்லாத கால தாமதம் - கட்டுமானத்தின் போது பல முறைகேடுகள் - தேவையில்லாத செலவினங்கள் என்றெல்லாம் இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ளன. தேவையில்லாத செலவினங்கள் என்று விசாரணையாம்!

முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்குச் சென்று ஒரு நாள் பிரதமரை மரியாதைக்காக சந்திக்கச் சென்றார் என்பதற்காக முதல்- அமைச்சர் தங்கும் அறையே மாற்றம் செய்யப்பட்டது, சாலையே புதிதாக போடப்பட்டது; இதற்காக தனியாகச் செலவழிக்கப்பட்டது எவ்வளவு?

தி.மு.கழக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மறுத்து; மீண்டும் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கே சட்டமன்றப் பேரவையை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து செயல்படுவதற்காக செய்யப்பட்ட செலவுகள் எவ்வளவு? சாதாரண பயணிகள் செல்லும் விமானத்தைப் பயன்படுத்தாமல் தனியார் விமானத்தை முதல்-அமைச்சர் கையாளுவதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு? இந்த வீண் செலவுகளைப் பற்றியெல்லாம் விசாரணைகள் வேண்டாமா?

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

...தினத்தந்தி 30.06.2011

*********************

பொது ஜனம்; ஜெயலலிதாவின் ஊழலுக்கு துணை போன "கேடி"யரசன் எப்படி? "நீதியரசரா" மாறி இந்த விஷயத்தை விசாரிக்க முடியும். 


பொது ஜனம்; இது கேசுக்கூடவே தங்கியிருக்குதே! இந்த தங்கமான "தங்கு" ராஜா! இது முறைகேடாயிற்றே! 


பொது ஜனம்; குத்தவாளிகளை நீதிபதி தனியா பார்க்குறதே தப்பு! அவர்களோட சேர்ந்து வேறே தங்கியிருக்குது! இதுக்கு பேசாம கேடியாவே இருந்திருக்கலாம்! எதுக்கு மக்களின் கடைசி நம்பிக்கையான இந்த புனிதமான "நீதிபதி" பதவியை தேர்ந்தெடுக்கணும்! பிழைக்கறதுக்கு தொழிலா இல்லை!


பொது ஜனம்; இந்தக் "கேடி"க்கு இந்த "லேடி" துணைக் கேக்குதா!


பொது ஜனம்; இது மாதிரி குத்தவாளிங்க கூட தங்கினதுனாலே இதுக்கு "தங்க"ராஜ் என்று பெயர் வந்திருக்கும்!

பொது ஜனம்; இந்த ஆளு எல்லாம் சுப்ரிம் கோர்ட்டுக்கு ஜட்ஜா போயிருந்தா என்ன ஆகியிருக்கும்! கீழ் கோர்ட்டிலேயே எல்லாத்தையும் முடிச்சிக்க வேண்டியது தான்! மேல் முறையீட்டுக்கெல்லாம் யாரும் போகமாட்டாங்க!


பொது ஜனம்; நீதிமன்றத்துல வழக்குல நீதிபதி  சார்பு நிலை கொண்டிருந்தாலே, அதாவது வழக்குக்கு சம்பந்தப்பட்டவரான வாதி, பிரதிவாதி இரண்டு பேருல யாருக்காவது உறவினராக!, நண்பராக! இருந்தது தெரிந்ததுன்னாலே அந்த வழக்கை விசாரிக்கிற நீதிபதி தானாகவே  விலகிடுவாங்களே! நீதிமன்ற வழக்கமாயிற்றே!


பொது ஜனம்; குற்றவாளியே குற்றத்தை விசாரிக்கிற முறை தான் ஜெயலலிதா பின்பற்றுவது.  திருடனே திருட்டை விசாரிப்பது  கொலைகாரனே கொலையைப் பற்றி விசாரிப்பது எல்லாம் ஜெயலலிதாவின் பாணி. ஏன்னா ஜெயலலிதாவே டான்சி நிலைத்தை திருடிய திருட்டு ஆள் தான் குற்றத்துக்கு குற்றம் மேட்சாயிடும்.


பொது ஜனம்; இது நன்றி மறவாமையப்பா! ஜெயலலிதாவை டான்சிலேயிருந்து விடுவிச்சதுக்கு நன்றி மறக்காம இந்த பொம்பளை செஞ்சுது! இப்ப விசாரிக்கப்போறதுக்கும் சேர்த்து நன்றி மறக்காம இந்த பொம்பளை கவனிக்கவேண்டிய விதத்துல கவனிச்சிடும்! அதுல மட்டும் தன் கெட்டிக்காரத்தனைத்தை பயன்படுத்தும்! வேற ஒன்னுத்துக்கும் பயன்படுத்தாது! இருந்தா தானே!


 பொது ஜனம்; செலவீனங்கள் குறைத்து, ஆடம்பரமில்லாமல் இந்த அராஜக அதிமுக அரசு செயல்படும் என்று இந்த "அராஜக பொம்பளை" பேட்டி கொடுத்துதே! இதுவே எக்கச்சக்கமா செலவு பண்ணுதே! தனி விமானம்! தனி ரோடு! கலக்குது போ!


பொது ஜனம்; இந்தியப் பிரதமர் கூட இந்தளவுக்கு பயன்படுத்த மாட்டார் போலிருக்குதே!


பொது ஜனம்; இதுக்குப் பெயர் தான் முள்ளை மூள்ளால் எடுத்தல் டெக்னிக்! குற்றவாளியை வைத்தே குற்றவாளியை வைத்தே கண்டுபிடிப்பது!........................? இதை இப்ப அரசியல் சட்டத்துல சேர்த்திருக்காங்க!


பொது ஜனம்; ஓ அப்படியா! மொத்தத்தில இது திருடர்கள் கூட்டமைப்பு அமைத்த விசாரணைக் கமிஷன்!

Wednesday, 29 June 2011

ஜெ. அரசின் லஞ்ச வேட்டை ஆரம்பம்...பம்..பம்..பம்..!




 27 கோடி வசூல்
 
"தி.மு.க. ஆட்சியில் தொழில் நசிந்து போனது என்ற கருத்து பரப்பப்பட்டது.  ஆனல் இப்போதைய 'ஜெ' ஆட்சியில் தொழிலே நடத்த முடியாது போல ஆகிவிட்டது.  இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் வலுக்கட்டாயமாக எங்களை குறிவைத்து கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டுவது போல 'இவ்வளவு கொடு' என நெருக்கி விட்டார்கள்.  இப்படி தமிழகம் முழுக்க உள்ள கிரஷர் (கல்குவாரி) உரிமையாளர்கள் குமுறும் செய்தி நமக்கு எட்ட நிஜத்தைத் தோண்டினோம்."


     தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான கல்குவாரிகள் 27 மாவட்டங்களில் உள்ளன.  சில மாவட்டங்களில் இருபது முப்பது குவாரிகளும், பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கிலும் இவை நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு குவாரிக்கும் பத்து வருடம் கல் உடைக்க மட்டுமே அனுமதி... மீண்டும் தேவையென்றால் அவர்களுன் லைசென்ஸ்ஐ நீடிக்க வேண்டும்.  அப்போது அதிகாரிகளுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொழில் நடத்த அனுமதி கிடைக்கும்.  அதேபோல் ஒவ்வொரு மாதமும் லாரிகளுக்கு பர்மிட் வாங்கவேண்டும்.  ஜல்லி, கிரஷர் கற்களை லாரிகளில் விற்பனைக்கு அனுப்ப பர்மிட் அவசியம்.  இதை ஒவ்வொரு மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் என்ற அதிகாரிதான் வழங்குவார்.  இது தான் இத்தொழிலின் நடைமுறை.  இந்த மாதம் பர்மிட் வாங்கப் போன கிரஷர் உரிமையாளர்களிடம் ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும் 'அமைச்சரைப் போய் பார்த்துவிட்டு வாங்க அப்புறம்தான் பர்மிட் வழங்கப்படும்' என கூற, அந்த சூட்சுமம் பிறகுதான் வெளிப்பட்டுள்ளது.

     இனி நடந்தவற்றை நாம் சந்தித்த பல்வேறு கிரஷர் உரிமையாளர்கள், அசோசியேஷன் நிர்வாகிகள் 'பெயர்', புகைப்படம் எதுவும் வேண்டாம்.  உண்மை இதுதான்' என விரவாகக் கூறினார்கள்.

     "அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருப்பவர் உடுமலைப்பேட்டை சண்முகவேல்.  நல்ல மனிதர் எளிமையானவர் என்ற பெயரெல்லாம் இவருக்கு உண்டு.  அப்படித்தான் நாங்களும் நம்பினோம்.  ஆனால் அவரைச் சந்தித்தபோது மிக கறாராகவும் மிரட்டும் தொனியிலும் நடந்துகொண்டார்.  'கிரஷர், குவாரி தொழிலைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்.  ஏன்னா நானே மடத்துக்குளத்தில் குவாரி வைச்சு 
20 X 10 மிஷின் போட்டுள்ளேன்.  என்ன வருமானம் என்பது எனக்கு நல்லா தெரியும்.  ஒவ்வொரு மாவட்டத்திலேயும் கிரஷர் உரிமையாளர் அசோசியஷன் வெச்சிருக்கீங்க.  நீங்களே வசூல் செஞ்சு ஒரு மாவட்டத்துக்கு இரண்டு கோடி கொடுத்துடுங்க.  நீங்களும் பொழைக்கணும் நாங்களும் பொழைக்கணும்' என ஒரே பேச்சில் முடித்துக்கொண்டார்.
     
     'ரொம்ப அதிகமா கேட்கறீங்க, அவ்வளவு முடியாதுங்க' என நாங்க கெஞ்சிக்கேட்டபிறகு, இறுதியாக ஒரு கோடி என தலா ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முடிவானது.  குவாரிகள் அதிகம் உள்ள இருபத்தி ஏழு மாவட்டத்திற்கும் இருபத்தி ஏழுகோடி. 'பணம் தரமுடியாது என கூறும் கிரஷர் உருமையாளர்களின் பர்மிட்டை ரத்து செய்யச் சொன்னதாக' அமைச்சர் கூறியதை மாவட்ட அதிகாரிகளும் எங்களிடம் கூறிவிட்டனர்.  எங்க தொழிலை பொறுத்தவரை நூறு சதவீதம் சரியா செய்யமுடியாது.  பாறைகளை உடைக்க வெடிமருந்து பயன்படுத்த வேண்டும்.  அதிகாரிகள் பார்த்து தடை செய்யப்பட்ட அல்லது அனுமதி பெறாமல் வெடிமருந்து வைத்துள்ளதாக எங்களை கைது செய்யவும் முடியும்.  லாரிகளுக்கு பர்மிட் பொறுத்தவரை நூறு லோடு, இருநூறு லோடு என பர்மிட் வாங்குவோம்.  ஆனால் தொள்ளாயிரம் லோடு, ஆயிரம் லோடு அனுப்புவோம்.  இதுவெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்தான்.  பரமிட் இல்லையென்று ஆர்.டி.ஓ, தாசில்தாரை விட்டு லாரியை பிடித்துக் கொண்டு போவார்கள்.  இப்படி பல பிரச்சினைகள் இத்தொழில் உள்ளன.  இதனால் தான் அமைச்சரின் உத்தரவுக்கு நாங்கள் அடிபணிய வேண்டியுள்ளது.

     சரி, ஒருமுறைதான் கேட்கிறார் என நாங்கள் நினைத்தோம்.  தென்மாவட்டத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் அமைச்சரை சந்தித்தபோது, பத்து வருடம் லைசென்ஸ் எனபதை இருபது வருடமாக நீடித்து தாருங்கள் என கேட்டுள்ளனர்.  'அதையெல்லாம் அம்மாவிடம் பேசி நான் முடித்து தாரேன்.  நீங்கள் இப்போது போல ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாவட்டத்திற்கு 'ஒன் சி' கொடுத்து விடுங்கள்' என கூறியுள்ளார்.  இனி ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு மாவட்டமும் ஒரு கோடி கொடுக்க வேண்டுமாம்" -என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக கூறினார்கள் கிரஷர் உரிமையாளர்கள், அசோசியேஷன் நிருவாகிகளாக உள்ள அ.தி.மு.க. ர.ர. மற்றும் தி.மு.க. உ.பி.க்கள்.



     சின்ன சின்ன அளவில் குவாரி நடத்தும் கிரஷர் உருமையாளர்கள் முதல் பெரிய அதிபர்கள் வரை தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கனிம வளத்துறை அதிகாரியே ஒரு நிறுவனம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு கொடுத்துள்ளார்.  அதன்படி சிறு கிரஷர் நிறுவனங்கள் 35 ஆயிரம், அடுத்து 50 ஆயிரம், தொடர்ந்து 1 லட்சம்... பெரிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று, நான்கு லட்சங்கள் என பங்குத்தொகை போல பிரித்து ஒரு மாவட்டத்திற்கும் ஒரு கோடிக்கும் குறையாமல் வசூல் செய்யும் கொறுப்பை அந்தந்த மாவட்ட அசோசியேஷன் நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளார் கனிமவள அதிகாரி.

     கடந்த ஒருவாரமாக தமிழ்நாடு முழுக்க கிரஷர் நிறுவனங்களிடம் வசூல் மிக தீவிரமாக நடந்து வருகிறது.  சில மாவட்டங்களில் அமைச்சரிடம் செட்டில் மெண்ட் முடிந்து விட்டது.  இம்மாத இறுதியில் 30-ந்தேதிக்குள் எல்லாம் ஒப்படைத்துவிடவேண்டும் என கெடு வைத்துள்ளனர்.  தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சண்முகவேல் அலுவலகத்தில் ஒருவாரமாகவே கிரஷர் உரிமையாளர்கள் கூட்டமாக உள்ளது.  27-ந்தேதி வரை இருபது மாவட்டங்கள் தங்கள் கணக்குகளை ஒப்படைத்து விட்டனர்.

     இவ்வளவு கஷ்டப்பட்டு 'உழைத்த' தொழில் அமைச்சர் சண்முகவேலு திங்களன்று ஊரகத் தொழில் அமைச்சராக மாற்றப்பட்டு விட்டார்.  கணக்கில் குளருபடியோ ?

...ஜீவா தங்கவேல்
.............நக்கீரன் 2011-6-29--7-01
****************

பொது ஜனம்; வேலூர்ல மணல் மாபியா கலைகட்டுது இங்கே இது வேறையா! சக்கை போடு போடறாங்க போல இருக்குது!

பொது ஜனம்; அந்தம்மாதான் சொல்லுச்சே தன்னுடைய அல்லக்கைகள் எள்ளுன்னா எண்ணையா இருப்பாங்க என்று பேட்டியில சொல்லுச்சே! அதான் ஒரு கை பார்க்கிறாங்க! அதான் முன்பே தெரியுமே கொள்ளையர்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் ஜெயலலிதா தான்! அவர் இருக்கிறவரை பணம் மானாவாரியா புரளும்! பஞ்சமும் மானாவாரியா புரளும்!

பொது ஜனம் பஞ்சம்  மக்கள் கிட்டே புரளும், 'பணம்' இந்த மாதிரி மாபியா கேங்குங்க கிட்டே, இந்த மாதிரி அல்லக்கைங்க கிட்டே புரளும். 

பொது ஜனம்;ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலே, ரேஷன் கடைகளிலே புகுந்து ஊழியர்களை அடிக்கிற அளவுக்கு அல்லக்கைங்க  போயிட்டாங்களே! பொம்பளை ஊழியர்களை பச்சை பச்சையா திட்ட ஆரம்பிச்சுட்டானுங்களே! 

பொது ஜனம்; எல்லா கடத்தல்களும் இந்த அல்லக்கைங்களே பண்ணுது! தலைவி வழியை அல்லக்கைங்களும் பின்பற்றுது. பாரேன்! ஒரு மாசம் கூட ஆவலை அமைச்சர் அம்மாவுக்காக என்ன மாதிரி சூப்பரா  டீல் பண்ணியிருக்குது!

பொது ஜனம்; ஜெயலலிதா வந்தாலே அரசங்கத்துக்கு, மக்களுக்கு என ஒரே மொத்தமான ஆப்புதான்!

.பொது ஜனம்; இந்த ரேஞ்சுக்கு வசூல் பண்ணா என்னாவரது! அதுக்குத்தான்  லோக்பால் மசோதாவில பிரதமரை சேர்க்க கூடாது என்று சொல்லுச்சா!





பொது ஜனம்; ஒன்னும் ஆகாது! தி.மு.க அரசு வைச்சுட்டுப்போன கடனுக்காக வசூல் பண்ணேன் என்று சொன்னாலும் சொல்லும்! நம்பறதுக்குத்தான் மக்கள் இருக்காங்களே!


மக்களை கழட்டி விட்டாலும் விடுவேன்! தனியார் பள்ளிகளை ஒருபோதும் கழட்டி விடமாட்டேன்-ஜெயலலிதா





 'சமச்சீர் கல்வி' தரமற்றது! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல்!

சென்னை சமச்சீர் கல்வி தரமற்றது. இதுகுறித்து ஆராய்ந்த கமிட்டி ஒரு வாரத்தில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை தியாகராயர் நகரை சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தனர். 


இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு கல்வித்துறை செயலாளர் சபீதா சார்பில் அரசு சிறப்பு வக்கீல் சம்பத் உயர் நீதிமன்றத்தில் நேற்று பதில் மனுத் தாக்கல் செய்தார். 

அதில் கூறியிருப்பதாவது் சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தவறானது.


மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டம்தான் மூலச்சட்டம் இந்த சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது. இந்த மூலச்சட்டத்தை கவனத்தில் கொள்ளாமல் கடந்த அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. ஈசெ?ஈசெ?தேசிய பாடத் திட்டம் வடிவமைப்பு விதி 2005ன்படி சமச்சீர் கல்வி தரமற்றது. 

இதுதவிர சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது என்று கல்விக்கான தேசிய கவுன்சில் தமிழக அரசுக்கு கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி கடிதம் எழுதியது. அதை கடந்த அரசு ஏற்கவில்லை. இதுதவிரஇ கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அரசுக்கு பல பரிந்துரைகள் செய்தது. 

அதாவது சமச்சீர் கல்வி புத்தகம் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த அரசு அமல்படுத்தவில்லை. இதற்காகஇ மே மாதம் 15ம் தேதி கெடு விதித்தது. அதை கடந்த அரசு மீறியுள்ளது. புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை தனியார் பள்ளிகளுக்கு உள்ளது என்று மத்திய அரசின் மூலச்சட்டம் கூறுகிறது. இதை கடந்த அரசு மீறி செயல்பட்டுள்ளது. 

மூலச்சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஈசெ?ஈசெ?சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும்இ அந்த கமிட்டி 3 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.; அதன்படிதமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி இரவுஇ பகலாக சமச்சீர் கல்வியை ஆய்வு செய்து வருகிறது. வரும் 5ம் தேதிக்குள் (ஒரு வாரத்துக்குள்) உயர் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்யும். எனவே மனுதாரரின் குற்றச்சாட்டு ஏற்புடையதாகாது. 

சமச்சீர் கல்வி என்பது மாணவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சமச்சீர் கல்வி மாணவர்கள் வளர்ச்சிக்கு தரமானதாக இல்லை. சமச்சீர் கல்வியை நாங்கள் முழுவதுமாக ரத்து செய்யவில்லை. அதை நிறுத்தி வைக்கத்தான் சட்டத்திருத்தம் செய்துள்ளோம். அதை எப்பொழுது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம்.

மத்திய அரசின் மூலச்சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி இருப்பதால் 1 கோடியே 35 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 200 கோடி ரூபாய் வீண் செலவு என குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது

.....தினகரன் 29.06.2011
****************************

பொது ஜனம்; என்னய்யா நிபுணர் குழு அறிக்கையே இன்னும் தாக்கல் ஆகவில்லை அதுக்குள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டை கோர்ட்டுல தெரிவிச்சிடுச்சே! அப்ப உச்ச நீதிமன்ற தீர்ப்பு அம்போ தானா?


பொது ஜனம்;நிபுணர் அறிக்கை எப்படி? இருக்கும்ணு! ஜெயலலிதா முன்னாடி கோர்ட்டுக்கு நேரிடையாவே தெரிவிச்சிடுச்சி! இதுவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு!


பொது ஜனம்; நிபுணர் அறிக்கையே அடுத்த வாரம்தானே! தாக்கல் ஆகப்போகுது! அதுக்குள்ள எப்படி சமச்சீர் கல்விச்  சட்டம் தவறானது! என்று மீண்டும் மீண்டும் கூறமுடியும்?



பொது ஜனம்; கோர்ட்டு இது குறித்து அறிக்கை கேட்கவில்லையே! சமச்சீர் கல்வி சரி என்று தீர்ப்பு கூறியாச்சே! சமச்சீர் கல்வி தீர்வு செய்யப்பட்ட சமாச்சாரம்!  



பொது ஜனம்; சமச்சீர் கல்வி சட்டம் தவறானது என்றும் சொல்லுது. சமச்சீர் கல்வியை எதிர்க்கலேன்னும் சொல்லுது! அப்ப சமச்சீர் கல்வி எனபது என்ன?



பொது ஜனம்; மூலச்சட்டத்துக்கு எதிரானது! என்று ஜெயலலிதா கூறியிருக்குதே! மூலச்சட்டத்துல சமச்சீர் கல்வி வேணான்னு சொல்லப்பட்டிருக்குதா!  இல்லை சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவது தவறு! என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறதா! இருந்தா காட்ட சொல்லுமே பார்ப்போம்!



பொது ஜனம்; கட்டாயக் கல்விச்சட்டத்தையே தமிழக அரசு இன்னும் தமிழகத்தில் அமல் படுத்தாம இருக்கே! அது வந்து ஆறுமாசமா ஆச்சு!  அதுக்கே வழக்குப் போட்டுத்தான் கேக்க வேண்டியிருக்குது! வந்துவுடன் அதுக்கு சட்டம் போட்டிருந்தா இது அக்கறையுடன் செயல்படுது என்று சொல்லலாம்! இது இருக்கறதையும் நாசமாக்கிறதுக்கு வந்திருக்குது!



பொது ஜனம்; தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக நடப்பது! அவங்களை கொள்ளையடிக்க விடுவது! மக்களை கட்டண சுமையில் தள்ளுவது! இது தான் அதோட அகராதியில சமச்சீர் கல்வியாக இருக்கும்!


பொது ஜனம்; இதுக்கா! இரவுப் பகலா ஆய்வு செய்தாங்களாம்!


பொது ஜனம்; அதுல உள்ள குறைகளைத்தானே சுட்டிக்காட்ட சொன்னாங்க! இவங்க எப்படி? சமச்சீர் கல்வியே தவறு! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா  கூறமுடியும்! 



பொது ஜனம்; மே 16 ந்தேதி அதிமுக அமைச்சரவையில 1 மணிநேரத்துல ஆய்வு செஞ்சு அறிவிச்சதைத்தான் திருப்பி அப்படியே இப்பொழுதும் தெரிவிக்கிறாங்க! இதுக்கு இரவுப் பகல் எல்லாம் ஒன்றும் தேவையே இல்லை! அதே 1 மணிநேரத்துல டிஸ்கஷன் பண்ணது தான்! அதனால தான் அறிக்கைக்கு முன்னாடியே அரசு தரப்பு முடிவை கோர்ட்டுல மீண்டும் தாக்கல் பண்ணிட்டாங்க! 



பொது ஜனம்; அதாவது  கோர்ட்டு எத்தனை தடவை சொன்னாலும் நான் மீண்டும்! மீண்டும்! சட்டத்தை மீறித்தான் செயல்படுவேன்! என்னை யார்? என்ன செய்யமுடியும்? என்ற மமதை! 



பொது ஜனம்; இதனால் தான் இது லோக்பால் மசோதாவில பிரதமரை சேர்க்கக்கூடாதுன்னு ரொம்ப அக்கறையா சொல்லுது. இந்த மாதிரி மமதையாக நடக்க அந்த மசோதாஅனுமதிக்காது.



பொது ஜனம்; அப்ப ஏனைய மாநிலங்கள் எல்லாம் பொதுப்பாடத்திட்டத்தை, ஒரே மாதிரியா அமல் படுத்தியிருக்குதே! அவங்க எல்லாம் முட்டாள்களா? இது ஒண்டிதான் புத்திசாலியா?



பொது ஜனம்; ஏதோ! நீதிமன்றத்தால நல்லா வாங்கி கட்டிக்கப்போகுதுன்னு நினைக்கிறேன்! 



பொது ஜனம்; அப்ப இன்னும் மிகப்பெரிய போராட்டம் இருக்குதுன்னு சொல்லு! தமிழக மக்கள் இன்னும் அதிகமாக அவதிப்படணும்!



பொது ஜனம்; இந்த சட்டம் அமலுக்கு வரும்பொழுது இது இந்த மாதிரியெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஒரு முறைக் கூட சொல்ல்லியே! இப்ப எதுக்கு இது மாதிரி சொல்லுது! 



பொது ஜனம்; அப்பவேதான் தனியார் பள்ளிகள் வழக்குப் போட்டாங்களே! அப்பவே உச்சநீதிமன்றத்திலே தள்ளுபடி ஆயிடுச்சே! இது சொல்ற அத்தனையும் தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளைத்தான் தன்னுடைய அராஜக அரசின் கொள்கையாக கோர்ட்டுல வெளிப்படுத்துது. கோர்ட்டு இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. 



பொது ஜனம்; முதலில் உச்ச நீதிமன்றமே இதற்கான நிபுணர் குழுவின் உறுப்பினர்களை நடுநிலையாக நியமிச்சிருக்கணும்! சமச்சீர் கல்வியை எதிர்க்கிற அதிமுக அரசிடமே, நிபுணர் அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை கொடுத்து இருக்க கூடாது. 


பொது ஜனம்; நீதிமன்றமும் இவங்க! எந்த நிலையில் இருக்கிறாங்க! என்பதை தெரிஞ்சுக்கறதுக்காக இந்த வாய்ப்பை தெரிஞ்சே கொடுத்து இருக்கும்! இந்த அறிக்கையைப் பார்த்தாலே இதுங்க பவுசு தெரிஞ்சுடுமே!



பொது ஜனம்; இந்த விஷயத்துல எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடணும் லேசுல விட்டுரக்கூடாது! நீதிமன்றம் இதன் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்கணும்! இதை உருவாக்கிய  கல்வியாளர்களும் கோர்ட்டில் வாதாடணும்! அப்பத்தான் மக்களுக்கான நீதி கிடைக்கும்! இந்த அரசின் அராஜகப் போக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!



பொது ஜனம்; இனி மக்கள் புரட்சி தான்! பார்த்துக்கலாம்! எவ்வளவு தூரம் போகுதோ போகட்டுமே!  எங்கே போயிடப்போகுது!..............!!!!

Tuesday, 28 June 2011

பிரதமர், முதல்வர்கள் எல்லாம் எந்திரன்களா? -மாநில முதல்வரே ஊழல் பண்ணும் பொழுது! பிரதமர் மட்டும் எப்படி ஊழல் பண்ணாம இருப்பார்.....!


நிழல் அரசாங்கம் உருவாக வழிவகுத்து விடும்:
லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது
ஜெயலலிதா பேட்டி


சென்னை, ஜுன்.28-

லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது, அப்படி சேர்ப்பது, நிழல் அரசாங்கம் உருவாக வழிவகுத்து விடும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

லோக்பால்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை நிலவுகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை சி.பி.ஐ. விசாரிக்க முடியும்.

இந்த நிலையில், லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை சேர்த்தால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், பிரதமரின் அதிகாரம் வலுவிழந்து விடும்.

வெளிநாடுகளால் ஆபத்து

அரசாங்கத்துக்கு நிகராக, நிழல் அரசாங்கம் உருவாக இது வழிவகுத்து விடும். பிரதமர் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டால் கூட, அவரது பதவியின் அதிகாரம் வலுவிழந்து விடும். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி, வெளிநாடுகள் இந்தியாவை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது.

இந்த விஷயத்தில், நான் தனிநபரை ஆதரிக்கும் நோக்கத்தில் இக்கருத்தை சொல்லவில்லை. பிரதமர் பதவி என்ற அமைப்புக்கு ஆதரவாகவே சொல்கிறேன். பிரதமராக இருப்பவர், முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. பிரதமரின் அதிகாரத்தை எதுவும் வலுவிழக்க செய்துவிடக்கூடாது.

இருப்பினும், இந்த விவகாரத்தில், இறுதியான லோக்பால் வரைவு மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்.

காங்கிரசுக்கு ஆதரவு

கேள்வி:- காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக கடந்த ஆண்டு அறிவித்தீர்களே?

பதில்:- அது அந்த சமயத்துக்கு மட்டும் தெரிவித்த ஆதரவு. மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறினால், மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொன்னேன். கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் அந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகுகூட, தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

சோனியாவுடன் சந்திப்பு

கேள்வி:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பீர்களா?

பதில்:- சோனியாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும்போது, அப்படி செய்வது முறையல்ல.

கேள்வி:- காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? ராகுல் காந்தி, பிரதமர் ஆக வாய்ப்புள்ளதா?

பதில்:- அந்த சூழ்நிலை வரும்போது, அதுபற்றி சொல்கிறேன். மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.

தேசிய அரசியல்

கேள்வி:- தேசிய அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்:- அத்தகைய விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன். வாழ்க்கையை அது வரும் வகையிலேயே ஏற்றுக்கொள்வேன். அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் எண்ணியது இல்லை. ஆனால் எப்படியோ ஆகிவிட்டேன்.

கேள்வி:- உங்கள் லட்சியம் என்ன?

பதில்:- இந்தியா, `சூப்பர் பவர்' ஆக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்கான செயல்திறன் நமக்கு உள்ளது. அதற்காக, வலிமையான, தேசபக்தி கொண்ட தலைவர் நமக்கு வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

..........தினத்தந்தி 27.06.2011
**********************
பொது ஜனம்; என்னய்யா ஜெயலலிதா தன்னை முன்னிருத்தி எஸ்கேப் ஆவருதுக்காக பிரதமரை சேர்க்க கூடாதுன்னு சொல்லுதே! 


பொது ஜனம்; இது எப்படியெல்லாம் சட்டத்தை ஏமாத்துது! எத்தனை தடவை உய்ர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் ஏமாத்துச்சு!. என்னைக்காவது சட்டத்துக்குட்பட்டு நடக்கணும்னு நினைச்சு இருக்குதா? இல்லை நீதிமன்றத்துக்கு தவறாம ஆஜராகனும்னு நினைத்து  இருக்குதா? கர்நாடகாவில ஒரு தடவையாவது ஆஜராகி இருக்குதா?



பொது ஜனம்; ஆமாம், இது பதவியில இருந்தா பதவியை வைச்சு கேசுல இருந்து எப்படி  தப்பிப்பது என்பதை பற்றியே யோசிக்கும். பதவியில இல்லைன்னா கொடைக்கானல் பங்களாவில ரெஸ்ட் எடுத்துகிட்டு கோர்ட்டுக்கு வாய்தாவை எப்படியெல்லாம் இழுத்தடித்து வாங்குவது என்பதை பற்றி யோசிக்கும்! இதைத்தானே இவ்வளவு நாளும் பண்ணிகிட்டு வருது.  




பொது ஜனம்; கரெக்ட்! இதுவே இந்தளவுக்கு! பண்ணும்பொழுது, பிரதமரின் கீழே இருக்கும் சிபிஐ எப்படி? பிரதமரை சுதந்திரமா விசாரிக்கும். ரொம்ப புத்திசாலித்தனமா  ஐடியா சொல்றதா நினைச்சு தன்னுடைய பதவிக்கு வரும் ஆபத்தை தவிர்க்க பார்க்குது. இந்த டகால்டி வேலை எல்லாம் இங்கே ஒத்துவராது.



பொது ஜனம்; ஆமாய்யா! முன்னால் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ரிட்டயர் ஆனதும் எலக்சன்ல காங்கிரஸ் சார்பில காந்திநகர்ல நின்னு தோத்தாரு! அப்புறம் என்ன? நேர்மை! 

பொது ஜனம்; ஆமாய்யா! அவர் தேர்தல் ஆணையரா பொறுப்புல இருந்தப்ப தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக கட்சிகள் மேல் எடுத்த நடவடிக்கை எல்லாம் பாராபட்சமானதா  தான் எடுத்துக்கணும்!.



பொது ஜனம்; ஆமா! இப்பக்கூட முன்னால் தேர்தல் ஆணையர் எம.எஸ் கில் காங்கிரஸ் அமைச்சரவையில விளையாட்டுத்துறை அமைச்சரா இருக்காரு! இவங்க எல்லாம் தன்னாட்சி அமைப்பில வேலை பார்த்தவங்க தான்! அப்ப வேலை பார்க்கும்போதே காங்கிரஸ் ஆதரவாத்தான் வேலை பார்த்து இருப்பாங்க! அதை வேலையை விட்டதும் கன்பார்ம் பண்ணிட்டாங்க! என்ன சரியா?




பொது ஜனம்; தமிழக தேர்தல் ஆணையரா இருந்த மலைச்சாமி. ஜெயலலிதாக் கூட முட்டி மோதிக்கிட்டும் இருந்தாரு! அப்புறம் அதிமுக எம்.பி யா இருக்கலையா! இவங்கெல்லாம் எப்படி ஆட்சியாளருக்கு எதிரா செயல்படுவாங்க?


பொது ஜனம்; இன்னும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தான் கட்சியில சேரல! இன்னும் கூடிய சீக்கிரம் அவங்களும் கட்சியில சேர்ந்துருவாங்க! 

பொது ஜனம்;பதவி வேணும்னா போய் கட்சியில சேர்ந்துக்குங்க! இந்த மாதிரி மக்களுக்கான அரசின் நடுநிலையான பொறுப்புக்கு வராதீங்க! இதுல ஒரு கால் அதுல ஒரு கால்னு இருக்காதீங்கய்யா!ஏதாவது ஒன்னுத்துக்கு ஆசைபடுங்கய்யா!


பொது ஜனம்; சிபிஐ இயக்குநரை நியமிப்பது பிரதமரின் அலுவலகம்.  அது தன்னாட்சி பெற்ற அலுவலகம்  தான்! ஆனால் அதன்  இயக்குநரை நியமிப்பது யார்?  பிதரமர் அலுவலகம் தானே! அப்புறம் எப்படி அவரே பிரதமரை விசாரிப்பார். சும்மா ஒப்புக்கு வேணுன்னா விசாரிப்பார். 

பொது ஜனம்; யோவ்! பிரதமரா? இருந்தா என்ன? முதலமைச்சரா இருந்தா என்ன? உச்சநீதிமன்ற நீதிபதியா இருந்தா என்ன? தேர்தல் ஆணையரா? இருந்தா என்ன? சிபிஐ இயக்குநரா இருந்தா என்ன? எல்லோருமே மனிதர்கள் தான் இயந்திரங்கள் அல்ல. இயந்திர மனிதர்கள் அல்ல. 


பொது ஜனம்; ஆமாம்! இயந்திரங்கள் என்றால் எல்லாம் ஒரே மாதிரியான சரியான புரோகிராம் பண்ணி ஓரே சீராக இயங்கும்! ஆனால், இந்த மனதர்கள், அவரவர் எண்ணத்திற்கேற்ப, அரசியல் சூழ்நிலைக்கேற்ப செயல்படுபவர்கள், ஆட்சி, கட்சி செல்வாக்கு, பதவி என்பவைகள் இவர்களின் செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன. ஆகையால் தவறுவது நிச்சயம்! 100 சதவீதம் நிச்சயம்! இவர்களின் தவறுகளினால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது! அதற்குத் தான் இந்த லோக்பால் மசோதா!


பொது ஜனம்; அந்நிய நாடுகளிடம் வலுவிழந்துவிடும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்குதே! முழு அதிகாரத்தோட செயல்படமுடியாதுன்னு சொல்லியிருக்குதேய்யா!


பொது ஜனம்; எப்பா! என்னா அக்கறை! இங்கே பிள்ளைங்களோட கல்வியை குப்பையில போட்டு, தமிழக மாணவர்கள் திக்கற்று நிற்கிற மிக உன்னதமான காரியத்தை, முழு அதிகாரத்தோடு பண்ணி, இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல்,  உலக நாடுகளே காரிமுழியிற வேலையை பண்ணிட்டு, அக்கறை படறதப் பார்! இதுக்குப் பேர் தான் முதலைக்கண்ணீர்.! 


பொது ஜனம்; மக்கள் என்ன படிக்கணும்னு முடிவு பன்றது கூட நான் தான் முடிவு பண்ணுவேன்! என்று மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு இதைப்பற்றிக் கூற என்ன யோக்கியதை இருக்குது!


பொது ஜனம்;அந்நிய நாடுகளிடம் வலு இழக்கட்டும்! வலு இழந்துடும்னு  பயம் இருக்கணும்யா! அதுக்குத்தான்யா லோக்பால்! படிக்கலைன்னா பரிட்சைல பெயில் ஆயிடுவே!  என்ற பயமிருந்தா படி! பாஸ் ஆவு! இல்லைன்னா பெயில் தான் ஆவனும்! பெயில் ஆகி தண்டனையை அனுபவி! மீண்டும் நல்லா படி!  பாஸ் ஆகு! மக்கள் ஆகிய நாங்கள் தானேய்யா உங்களை பிரதமராக்கினோம். எங்களுக்கு ஒரு நீதி உனக்கு ஒரு நீதியா!? நல்லா போங்கா இருக்குதே!


பொது ஜனம்; ஆமாய்யா! திருடினா போலீஸ் பிடிக்கும், தண்டனை என்ற பயம் இருந்தா தான் திருட்டு நடக்காம இருக்கும்! ஒரளவுக்காவது குறையும்! இல்லைன்னா கொள்ளைக்காரி ஆட்சிடா! யாரு வேணுன்னா கொள்ளயடிக்களாம்னு கிளம்பிடுவாங்க! கொலை பண்ண கிளம்பிடுவானுங்க! இப்ப அது தானே நாட்டில நடந்துகிட்டு இருக்குது! ஒரே மாசத்துல 137 கொலை தமிழ்நாட்டுல.....என்ன நான்ஞ் சொல்றது!

பொது ஜனம்; போலீசே திருடினா! லஞ்சம் வாங்கினா? கொலை, கொள்ளை செஞ்சா?

பொது ஜனம்;அவங்களை தண்டிக்க இன்னொரு பெரிய போலீஸ் பிடிக்கணும்! (விஜிலன்ஸ்) இப்படித்தான் உருவாக்கி கட்டுப்படுத்தணும்! அவங்களும் (விஜிலன்ஸ்) பண்ணா அவங்களுக்கும் மேல...அப்படியே வுட்டுக்கணே போகணும்! வேற வழி!


பொது ஜனம்; ஆமாய்யா! இந்த பொம்பளை எதுக்கோ திருக்குசு வேலை பன்றதுக்காக இந்த ஐடியாவை கொடுக்குதுய்யா! கர்நாடகாவில இழு இழு இழுத்துகிட்டு இருக்குது. போதாக்குறைக்கு பிரண்டு ச்சிகலாவுக்கும் சேர்த்து 15 வருஷமா இழுக்குது! இது கொடுக்குற ஐடியா! இதை காப்பாத்திக்கிறதுக்குத்தான்! இது ஏதோ புரளி வித்தைக் காட்டுது! ஏமாந்திரப்புடாது!


பொது ஜனம்; ஆமாய்யா! முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதிக் கூட, சொத்துக் கணக்கை அனைத்து நீதிபதிகளும் வெளியிடணும்கிறதுக்கு, இப்படித்தான் நான் வெளியிடமாட்டேன்னு ஒட்டாரம்பண்ணாரு! நீதிபதிகள் தகலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரமாட்டாங்கன்னாரு! நாங்கள் எல்லாம்  விசாரணைக்கு அப்பாற்பட்டவங்க! அப்புறம் மக்கள் எதிர்த்த உடனே அடங்கிப்போயிட்டாரு! 


பொது ஜனம்; இவங்களே எப்படி? ஆட்டமேட்டிக்கா இவங்களை உயர்த்திக்கிறாங்க! இவங்களுக்கு இந்த உயர்வை கொடுத்தது மக்கள்! மத்தபடி இவங்களும் மக்களில் ஒருவர் தானே! மக்களின் சட்டதிட்டங்கள் அனைவருக்கும் ஒன்று தான்! இது தான் மக்களாட்சி தத்துவம்!

பொது ஜனம்; ஆமாம்! இந்தியாவில் குடியரசுத்தலைவர் பெயரால், அதாவது இந்தியாவின் முதல் குடிமகன் பெயரால் நடைபெறும் ஆட்சி தானே!

பொது ஜனம்; அப்படின்னா வீம்புக்குன்னா பிரதமரை இழுப்பாங்களேய்யா! 

பொது ஜனம்; இப்ப மட்டும் இழுக்கலையா! அதுக்கு வரையைரை வைக்கணுமே தவிர லோக்பாலுக்குள்ள வராம பன்றது நல்லதல்ல! 


பொது ஜனம்;அமாய்யா! ஆதாரம் காட்டி கொண்டுவரணும். அதுக்கு பல நபர்கள் கொண்ட மக்கள் குழு அமைக்கணும் அந்த குழுவில அனைத்து தரப்பினரும் இடம்பெறணும். அந்தக் குழுவில் ஆதாரங்களை பரிசீலனை செய்தபின் பிரதமர் விசாரணக்குட்படுத்தப்படுவார் என்ற விதியை வேணுன்னா ஏற்படுத்தலாம்.


பொது ஜனம்; யோவ்! லோக்பால் குழுவே அந்த மாதிரி அமைப்புத் தானே!

பொது ஜனம்; இதற்கு மட்டும் மேல் குழு என்ற சிறப்புக் குழு வைத்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். இல்லை அந்தக் குழுவிலேயே பிரதமரை விசாரிக்கும் உயர்மட்டக் குழு என்று ஒரு பிரிவை ஏற்படுத்தலாம்.


பொது ஜனம்; அப்ப பிரதமர் ஒன்றும் எந்திரன்! அல்ல! அவரையும் இதுல கண்டிப்பா கொண்டுவரனும்கற!

பொது ஜனம்; பிரதமர் வந்துட்டா! ..........முதல்வரும் இதுல வந்துருமில்லே!

Sunday, 26 June 2011

மம்தா மக்களை மதிக்குது.....ஜெயலலிதா மக்களை மிதிக்குது...




மேற்கு வங்காளத்தில் சமையல் கியாஸ் விலை ரூ.16 குறைந்தது
செஸ் வரியை வாபஸ் பெற்றார், மம்தா

கொல்கத்தா, ஜுன்.26-
மேற்கு வங்காளத்தில் சமையல் கியாஸ் மீதான செஸ் வரியை மம்தா பானர்ஜி வாபஸ் பெற்றுள்ளதால், அங்கு கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.16 குறைந்தது.

ஆதரிக்க மாட்டோம்

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை, கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு எனக்கு பெரிதும் வேதனை அளிக்கிறது. இதற்கு என்னுடைய எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். இதுபோன்ற நடவடிக்கையை எனது கட்சி ஒருபோதும் ஆதரிக்காது.

வரி வாபஸ்

இந்த விலை உயர்வை மத்திய அரசு அறிவித்தவுடன், எனது அரசின் நிதி மந்திரி அமித் மித்ராவுடன் ஆலோசனை நடத்தினேன். அதில், மேற்கு வங்காளத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் மீது வசூலிக்கப்பட்டு வரும் செஸ் வரி, 16 ரூபாயை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்தேன். இந்த முடிவு, உடனடியாக அமலுக்கு வருகிறது. அந்த செஸ் வரியை எனது அரசு வசூலிக்காது.

எனவே, மேற்கு வங்காளத்தில் கியாஸ் விலை உயர்வு, 50 ரூபாய்க்கு பதிலாக 34 ரூபாயாக இருக்கும். இதனால், மாநில மக்களுக்கு சிலிண்டருக்கு 16 ரூபாய் மிச்சம் ஆகிறது. இதன்மூலம் அவர்களின் சுமை குறையும் என்று நம்புகிறேன். இதுதொடர்பான அறிவிக்கை, 27-ந் தேதி வெளியிடப்படும்.

செஸ் வரி வாபஸ் மூலம், அரசுக்கு ரூ.75 கோடி இழப்பு ஏற்படும். இருப்பினும், வேறு வருவாய் ஆதாரங்கள் மூலம் இந்த இழப்பை சரிக்கட்டி விடுவோம்.

கம்ïயூனிஸ்டுகள் மீது தாக்கு

மேற்கு வங்காளத்தில், கம்ïனிஸ்டுகள் ஆட்சியில் இருந்தபோது, சமையல் கியாஸ் மீதான செஸ் வரியை குறைக்க சொன்னபோது, அவர்கள் குறைக்கவில்லை. அவர்கள் இதை வைத்து அரசியல் செய்யவே விரும்பினர். ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. ஆனால் எங்களால் அப்படி இருக்க முடியாது.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

...தினத்தந்தி 26.06.2011
*************
பொது ஜனம்; ஆமாய்யா மேற்கு வங்க முதல்வர் மம்தா மக்கள் வேதனையை புரிஞ்சிகிட்டு தன்னுடைய மாநில வரியைக் குறைச்சுகிட்டு கேஸ் விலையை குறைச்சு ஒரளவுக்கு மக்கள் வேதனையை தற்காலிகமா போக்கியிருக்குது. இங்கேயும் ஜெயலலிதான்னு ஒன்னு இருக்குது, குறைக்கவே மாட்டேன்னு ஒரேயடியா குரைக்குது. 



பொது ஜனம்; ஆனா அது மட்டும் மக்கள் வரிப்பணத்தை பாழாக்குது! இது வீணாக்குற பணத்துலை இந்த கேஸ் விலைக்கான, டீசல், மண்ணெண்ணெய்க்கான வரியைக் குறைப்பதுஅவ்வளவு கடினமான விஷயமா?

பொது ஜனம்; அதானே! முதல்ல மக்களுக்கு வேண்டியதை செய்! அப்பறமா இதோட அக்கப்போறை வைச்சுக்க வேண்டியது தானே!


பொது ஜனம்; இந்த நல்லெண்ணம் இருந்தா எப்படிய்யா அக்கப்போர் பண்ணமுடியும்? அதுக்கு எங்க நேரம் இருக்குது.? இது மக்களை துன்பப்படுத்தி வேடிக்கை பார்க்கற கும்பலை சேர்ந்தது.



பொது ஜனம்; இது என்னய்யா விலை ஏத்துனா ஒருபா, இரண்டு ரூபான்னு ஏத்த மாட்டாங்களா? 50,100 ன்னுதான் விலை ஏத்துவாங்களா?


பொது ஜனம்; ஒருபா, இரண்டு ரூபா எல்லாம் செல்லாத நோட்டா ஆக்கிட்டாங்களா! ஆனா தொழிலாளர்களோட வருமானம் மட்டும் 5 வருஷம் பத்து வருஷம்னு அப்படியே ஒரே மாதிரி இருக்கும். இன்னும் பல பேர் மாத வருமானம் ரூபா 600 லதான் காலத்தை ஒட்டறாங்க! 

பொது ஜனம்; அவங்க யாரும் வெளியில வந்து போராட மாட்டாங்க! போராடுறவுங்க இப்ப 40000, 50000 சம்பளக்காரங்க மட்டும் தான்!


பொது ஜனம்; இந்த அன்றாடக் காய்ச்சிகளுக்காவது மாநில வரியைக்குறைக்கணும்!.


பொது ஜனம்; இதுக்கு முன்னாடி கலைஞர் கூட இரண்டு முறை குறைத்து இருக்காரேய்யா! இப்ப இவ்வளவு விலை உயர்வு கேஸ் சிலிண்டருக்கு உயர்த்தியிருக்காங்க! அதுவும் பலருக்கு இலவச கேஸ் அடுப்பு வேற கொடுத்து இருக்காங்க! அவங்களுக்கு மண்ணெண்ணையையும் கேன்சல் ஆயிட்டு இருக்கும்! இதெல்லாம் இதுக்கு தெரியுமா இல்லையா!?


பொது ஜனம்; இது சமையலறைக்குத்தான் போகலை, ஏழைங்க வீட்டுல எப்படி? அடுப்பெறியும் என்பது கூடவா தெரியாது!. 


பொது ஜனம்; இலவச அரிசி கொடுத்துட்டு பொங்கி துன்றதுக்கான கேஸ் சிலிண்டரை வாங்கிறதுக்கு கால் வாசி வருமானத்தை காலி பன்ற மாதிரி விலை இருந்தா எப்படிய்யா சமாளிப்பாங்க!? 


பொது ஜனம்; தாலிக்கு தங்கம் தரும்பொழுது வருமான வரம்பை ரூபாய் 2000 ம்னு குறிப்பிட்டு ஏதோ வேண்டா வெறுப்பா கொடுத்துட்டு இருக்குதே! அப்ப  இதுக்கு தெரியவேணாமா?  மக்களோட வருமானம் என்னென்னு!?


பொது ஜனம்; அப்ப எப்படி? ஆடு மாடெல்லாம் தரப்போகுது!?  லேப்டாப், பேன், மிக்சி, கிரைண்டர், மினரல் வாட்டர் வேற தறேன்னு சொல்லியிருக்குது! எப்படி கொடுக்கும்!? 

பொது ஜனம்; அதுல தானேய்யா இதுங்களுக்கு ஒரு "கட்டிங்" வரும்! இதுல என்னத்தை வரும்?, அரசாங்கத்துக்கு வேற வருவாய் இழப்பு!


பொது ஜனம்; பணம் ஒரு பொருட்டே இல்லைன்னு உயர்நீதிமன்றத்தில சம்ச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களை குப்பையில போடறத்துக்கு சொல்லுச்சே! ஜெயலலிதா அரசு! ஏன்? இந்த மதிப்புக் கூட்டு வரியை குறைச்சு பணம் ஒரு பொருட்டே இல்லைன்னு நிருபிக்கலாமே!


பொது ஜனம்; அது தன்னோடத் திருட்டுகோட்டுத் தனத்துக்காக கோர்ட்டுல தெரிவிச்சது.  அது என்னைக்கு பேசின மாதிரி நடந்து இருக்குது.!

பொது ஜனம்; முதல்ல பசங்க படிக்கிற ஸ்கூலுக்கு மினரல் வாட்டரை சப்ளை பண்ண சொல்லு! இப்ப இருக்கிற தண்ணீர் பற்றாக்குறைக்கு எல்லோருக்குமே  வாட்டர் சப்ளை பண்ணனும்!. அப்புறமா மினரல் வாட்டர் சப்ளை பண்ணலாம்! 


பொது ஜனம்;அதெல்லாம் இது பண்ணுமா? எனபது சந்தேகமே! சும்மா கண்துடைப்புக்கு அதிமுக ஆளுங்களுக்கு தந்துவிட்டு மத்தவங்களுக்கு டாட்டா காட்டிடும்!


பொது ஜனம்; மத்த மாநிலங்களை பாத்தாவது இது திருந்தாதா? 


பொது ஜனம்; மேற்கு வங்க மம்தா பானர்ஜி மக்களை மதிக்குது அதனால தான் ஒவ்வொரு அரசு அலுவலகத்துக்கும் நடந்து சென்று ஆய்வு நடத்துது. பந்தா பண்ணாம இருக்குது!.  இது (ஜெயலலிதா) மக்களை காலில போட்டு மிதிக்குது. வீம்புக்குன்னா மக்கள் நலத்திட்டங்களை முடக்குது.   இதுக்கும் அதுக்கும் உள்ள வித்தியாசம் அது தான். 



பொது ஜனம்; இது எதிர்க்கட்சியா இருந்து என்ன? பண்ணுச்சு கொடைக்கானலிலே ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தது.  அது பன்றதை தான் பண்ணிகிட்டு இருக்கும்!