Pages

Monday 14 February, 2011

பெண்களின் மாதவிடாய் ஒரு தீட்டா.....?



சமீபத்தில் இணையத்தில் பார்த்தது...பெண்கள் தீட்டு.....ஒரு அசுத்தம் என்ற கருத்து வைக்கப்பட்டிருக்கிறது...அதனடிப்படையில்.......எழுந்தவைகளாக...

இது அசுத்தம் இல்லை....சுத்தம் தான்....முதலில் மனிதனே அசுத்தம் தான்...தினம் தினம் இவன் உடம்பு அசுத்தத்தை சுமந்து கொண்டு தான் அனைத்து இடங்களுக்கும் செல்கிறது....கோயில் கருவறைக்குள்ளும் செல்லுகிறது...வேறு புனிதமானதாக சொல்லப்படும் இடங்களுக்கெல்லாம் இந்த அசுத்தத்தோடு தான் செல்கிறது. இதில் பெண்களுக்கு வரும் மாதவிடாய் மட்டும் எப்படி அசுத்தமாகும்...? இது ஆணாதிக்க மனப்பான்மையினால் ஆரியத்தினால் திராவிடர்களும் பின்பற்றும் வகையில் புகுத்தப்பட்ட மூடநம்பிக்கை.....

நாம் தினம் தினம் அந்தக் திட, திரவக் கழிவை வெளியேற்றுகிறோம்...திரவக் கழிவை அடிக்கடி வெளியேற்றுகிறோம்....அதை தன் உடலுறுப்பை (கை) கொண்டே சுத்தம் செய்கிறோம்...மீதமுள்ள திட திரவக் கழிவுகள் நம்உடலிலேயே தங்கியும் விடுகிறது...இதில் மனிதனே அசுத்தம் தான்...அவனே ஒரு தீட்டு தான்...

இதில் தனியாக இயற்கையின் வரையறையாக பெண்களின் உடலில் இருந்து இரத்தமாக வெளியேறும்..... பெண்களின் கருமுட்டை வெளியேற்றம்...மட்டும் எப்படி தீட்டாகும்....? இப்படியெல்லாம் சொல்லி பெண்ணை ஒதுக்கி அடிமைப்படுத்தும் எண்ணம் கொண்ட ஆணாதிக்க மனப்பான்மை......தான் இப்படி பரப்புரை செய்துகொண்டிருக்கிறது.

இந்த அசுத்தத்துடன் இருக்கும் தன்னிலையை மறந்த பார்ப்பனன் தான் பார்ப்பனரல்லோதரை கோயிலில் அர்ச்சனை செய்வதற்கும் நுழையவிடாமல் இருப்பவன்....அவனும் அசுத்தமானவன்...மலக்கழிவையும், திரவக்கழிவையும் சுமந்து கொண்டு தானே...கோயிலில் பூஜை செய்கிறான்....இது எல்லோருக்கும் இருக்கும் இயற்கை விதகள் தானே...எல்லோருடைய உடல் கழிவுகளும் நாற்றமெடுத்தவைகள் தானே.....இதில் மற்றவர்கள் செய்தால் தீட்டு, பார்ப்பனர்கள் செய்தால் மணக்கும என்று ஓதுக்குவது என்பது வர்க்கபேதத்தை தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்...?...இது தான் பார்ப்பனீயம்....(இது ஒழிக்கப்படவேண்டியவைகள் சீக்கிரமே ஒழிந்து விடும்....அது பற்றி பிரச்சினையில்லை)

இப்பொழுது இது தான்....தாய்க்குலத்தின் அசுத்தம் என கூறும் இவனே அந்த அசுத்தத்தின் வழியாக பிறப்பெடுத்து அவனே தாய்க்குலத்தின் இயற்கை உபாதைகளை அசுத்தம் என சொல்வது...முட்டாள் தனமானது...தாய்க்குலத்தை அவமதிப்பது....அது அசுத்தம் அந்த அசுத்தத்தின் வழியாக பிறப்பெடுத்த எல்லோரும் அசுத்தம் தான்... அனைவருமே தீட்டுடையவர்கள் தான்.

காட்டில் வாழும் தாவரத்தை உண்ணும் விலங்குகளான மான், காட்டாடு, காட்டெருமை..... மற்றும் வீட்டில் வளர்க்கும் தாவரத்தை உண்ணும் விலங்குகளான ஆடு, பசு மாடுகள், எருமை, ...இன்னும் அனைத்துண்ணிகளான நாய்.... (இறைச்சி உண்ணிகளும் அடங்கும்) போன்ற விலங்குகள் எல்லாம்....குட்டிகளை ஈனும்பொழுது அதன் உடலோடு சேர்ந்து வரும் ஜவ்வு போன்ற தசை படலத்தையும், ரத்தத்தையும் தானே (தாய்) உண்டுவிடும்...இது குட்டிகளை இறைச்சி உண்ணும் விலங்குகளிடமிருந்து தன் குட்டிகளை பாதுகாக்க இந்த தாவரத்தை உண்ணும் விலங்குகள் அம்மாதிரி தற்காப்புக்காக உண்ணுகின்றன..இந்த பகுத்தறிவு அதற்கு இயற்கையிலேயே ஏற்பட்டுவிடுகிறது....(ஆதாரம் டிஸ்கவரி சேனல்) 

இவைகளுக்கெல்லாம் (விலங்குகளுக்கெல்லாம்) அசுத்தம் எது? சுத்தம் எது? என்று தெரியாதா என்ன?....இந்த விலங்குகள் தன் மலத்தை உண்கிறதா? என்ன? ...அப்படி உண்ணுவதில்லை...ஆனால் தன் ரத்தத்தை, இறைச்சியை உண்ணுகிறது. 

விலங்குகள் குட்டிகளை ஈனும்போது வரும் ரத்தம் மற்றும் ஜவ்வுகளினால் ஏற்படும் வாடை வீச்சத்தினால் இறைச்சி உண்ணும் விலங்குகள் வெகு தொலைவில் இருந்தாலும் நுகர்வினால் கவரப்பட்டுவிடும். இந்த இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கெல்லாம் குட்டிகளே சிறந்த உணவுகள்....இறைச்சி மிருதுவாகவும்...எதிர்ப்பின்றி இறையை எடுத்துக்கொள்வதற்கு ஏதுவாக. இருப்பதால்..குட்டிகளை ஈணப்போகும் விலங்குகளையே இந்த விலங்குகள் குறிவைக்கும்.....இதை தடுக்கும் பொருட்டே இவைகள் இந்த புனிதமான காரியத்தில் ஈடுபடுகின்றன. ஆனால் அவைகள் புனிதங்களாக மனிதர்களால் கருதப்படுகின்றன, வணங்கவும் படுகின்றன.

ஆனால் சகமனுஷியான பெண்ணிற்கு மட்டும் மாதத்தில் தொடர்ந்து வரும் இயற்கையான உபாதைகளை அசுத்தம் என்று ஆன்மீகத்திற்கும் பெண்கள் செல்வதற்குத் தடை (சபரிமலைக்கு செல்வதற்கு தடை)...வீட்டிற்குள்ளும் தடை...எனபது மனிதன் விலங்குகளை விட பகுத்தறிவற்றவன் என்பதையே காட்டுகிறது....தாய்க்குலத்தை இது போன்று பிரிவுப்படுத்தி எந்த வகையில் அசுத்தப்படுத்தினாலும் அவன் மனித நேயமற்றவனே.... என்ன தான் படித்தவனாயிருந்தாலும் அவனை விட முழு மூடன் உலகத்தில் இல்லை என்பதற்கு இம்மாதிரி ஆணாதிக்க பார்வைகளே சாட்சி....

அதே போன்று பயிர்ப்பு என்பதற்கும்...இப்படியான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.

.//கணவன் இல்லாத மற்றொரு ஆடவன் தொட்டால் வரும் அருவருப்பு. அதாவது கணவன் அல்லாது மற்ற எந்த ஆடவனும் (தவறான நோக்கோடு) தொட்டாலும் அருவருப்பு அடைய வேண்டும் - என்பதையே இது குறிக்கிறது.''//
.

கணவனைத்தவிர...இந்த ''தொட்டால்'' எதைக்குறிக்கிறது...? புறத்தோலின் மேல் தொடுவதையா...? அப்படியென்றால் ''அப்பா'' ''அண்ணன், தம்பி''தொட்டால் கூடவா....இல்லை இந்த தொடுதல் என்பது ''கலப்பு, கலவி'' பற்றியது...அப்படியென்றால் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கலவித் தொட்டால் ''அருவருப்பு'' வரவேண்டுமே அதை மட்டும் பெண்களுக்கு மட்டும் தாரை வார்த்து கொடுத்து விட்டு இவன் மட்டும் ''உயிர் கொல்லி'' ''எய்ட்ஸ்'' நோயையும் இந்த சமூகத்துக்கு தருவானேன்.. பெண்ணிற்கான இலக்கணத்தையும் ஆணே வகுக்கிறான்.

ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் கணவனாக இருந்தாலும் தொட்டாலும் தவறான நோக்கமே அகும்....அது இந்திய தண்டனைச் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமுமாகும். ஆகையால் தவறான நோக்கம் என்பது பொதுவான ஒன்று தான் கணவனுக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்ட விதிவிலக்கு என்பதெல்லாம் கிடையாது.

.இந்த தவற்றை எல்லாம் செய்வது ஆண் தானே..தன்னை விரும்பாத பெண்ணை கனவிலும் நினைத்தாலும் அருவருப்பு வரவேண்டுமே.....! மாற்றான் துணை என்று தெரிந்தவுடனே அருவருப்பு வரவேண்டுமே.....!ஏன் வருவதில்லை...?..தனக்கு சாதகமான எதையும், தமிழ் வார்த்தைகள் உள்பட ஆண் ஏற்றுக்கொள்வான்...பாதகமான வார்த்தைகளை பெண்ணிற்கு தள்ளிவிடுவான்...இது தான் ஆண்...இதைத்தான் ''ஆணாதிக்கம்'' என்ற ஆரிய வர்க்கத்தினரிடமிருந்து இருந்து இது அப்படியே திராவிடரிடையேயும் புகுந்தவைகள்...

இம்மாதிரி ஆணாதிக்க தமிழ் சொற்களை...உடனடியாக ஒழிக்க வேண்டும்

நம்மை சுற்றியே அனேக அசுத்தங்கள்...இதையே நாம் புரிந்துகொள்ளவில்லை....இம்மாதிரி சொற்களைக் கொண்டும் நாம் இனபேதங்களை வளர்க்கிறோம் எனபது மட்டும் உண்மை....நம்மை ஈன்றெடுத்த தாய்க்குலத்தையே மாற்று பார்வையில் பார்க்கும் மனப்பான்மை ஒழிக....
....தகவலுக்காக.........