Pages

Monday 4 March, 2013

பெரியாரின் அன்பர் மகாசன்னிதானம் குன்றக்குடி அடிகளார்

 இனப்பற்றாளர் இறைத்தொண்டர் - பெரியாரின் அன்பர் மகாசன்னிதானம் குன்றக்குடி அடிகளார்




மிழகத்தைப் பொருத்தவரை நாத்திகம் என்பது கீழ்ச்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் ஆகிவிட்டதை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது.'' என்ற புதிய சித்தாந்தத்தைச் சொன்ன புரட்சித் துறவிதான் திருவண்ணாமலை ஆதீன கர்த்தர் குன்றக்குடி மகாசன்னிதானம் புகழுடம்பு எய்திவிட்ட மகாசன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்த ரெங்கநாதன் தருமபுரம் ஆதீனம் கட்டளைத் தம்பிரானாகத் தொடங்கிச் சமயப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பின்னர்க் குன்றக்குடி சன்னிதானமாய்ப் பரிணாமம் பெற்றவர்.

சன்னிதானத்தின் கல்வி என்பது சமய நூல்கள் அதிலும் அதிகமாய்ச் சைவ நூல்கள்- அது குறித்த ஆய்வு- பதவுரை பொழிப்புரை- என்பதோடு முடித்துவிடுவதுதான் வழக்கம்.

குன்றக்குடி அடிகளின் கல்வியும் பணியும் அதற்கு முன்னும் பின்னும் இருந்த ஆதீனங்களின் எல்லை தாண்டியது விரிவானது, விசாலமானது, ஆழமானது. துணிச்சல் மிக்கது அதனால் கடும் கண்டனத்துக்கு ஆளானது.  அரசின் குற்றவியல் சட்டப்படி தண்டமே விதிக்கப்பட்டது.


தமிழ்நாட்டின் சமய நிறுவனங்கள் என்பவை 

சைவம் - வைணவம் - அதில் வடகலை - தென் கலை இன்னும் பல்வேறு நம்பிக்கையுடன் மடங்கள், நிறுவனங்கள் எனப் பல இருந்தன, இருக்கின்றன.

அவை கடந்த நூற்றாண்டில் இந்து சமய ஆட்சித்துறை என்ற அரசின் கட்டுப்பாட்டிற்குள் வேறு பல நல்ல நோக்கங்களுக்காகக் கொண்டுவரப் பட்டன.   காலப் போக்கில் ''கறையான் புற்றெடுக்கக் கருநாகம் புகுந்த கதையாகிவிட்டது.''  கடந்த 1947 க்குப் பின்னர் மெல்ல மலைப் பாம்பு இரையை வளைப்பது போல் காஞ்சி சங்கரமடம் தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனைத்து இந்து சமய நிறுவனங்களையும் தன் குடைக்கீழ் இந்து மதம் என்ற பெயரால் கொண்டுவரத் தொடங்கியது.  அந்தக் கைங்கர்யம் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனவுடன் பரிபூரணத்துவம் பெற்றுவிட்டது.  இந்து மதம் என்றால் காஞ்சி சங்கரமடம், அதன் தலைமை, சங்கராச்சாரியார்களே.  இந்து மதத்தின் போப்பாண்டவர்கள் சங்கரர்களே என்ற நிலைப்பாட்டை எவ்வளவு வலிமையானதாக்க முடியுமோ அவ்வளவு வலிமையாக்கினார்கள்.

இந்தியத் தலைமை அமைச்சர் முதல் மாநில முதல்வர்கள்- நடுவணரசு அமைச்சர்கள்- பெரிய பெரிய அரசு அதிகாரிகள்- கவர்னர்கள் யாவரும் தமிழ்நாட்டிற்கு வந்தால் காந்தி நினைவிடத்திற்குப் போகிறார்களோ இல்லையோ காஞ்சி மடத்திற்குச் செல்வதும் - முக்கால் நிர்வாணமாய்ச் சங்கர மடத்தலைவரிடம் போய்க் கைகட்டி நிற்பதும்- முக்காலே மூணுவீசம் நிர்வாணமாய் நின்று சங்கராச்சாரி ஆசீர்வாதம் செய்வதும் - அரசாங்க விழாக்களில் தேசிய கீதம் பாடுவது போல் தவிர்க்க இயலாத நிகழ்ச்சி நிரல் ஆகிப்போனது.

இந்த நிறுவனம் அந்த 1950 களிலேயே பல்வேறு சட்ட - சம்பிரதாய விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தது என்பது சுவையான செய்தி.

மேற்சொன்ன இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் தான் குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் குன்றக்குடி மடத்தலைவராகிறார்.  இயல்பாகவே நல்ல பேச்சாற்றலும்-செழுமையான சொல்வளமும் - மிக்க குன்றக்குடி அடிகளாருடைய சொற்பொழிவுகள் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்தனபெருங்கூட்டத்தை ஈர்த்தன.

ஆன்மீகம் - ஆத்திகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் போல் பேணப்பட்ட உருவாக்கப்பட்ட தத்துவம் என்பதை அடிகளார் சொன்னதைக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியிருக்கிறோம்ஆனால், இதை அடிகளாரே உணர்ந்து கொள்ள அவருக்கே கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டதுதான் கொடுமை.





கௌதம புத்தனுக்கு ஞானம் போதி மரத்தடியில் பிறந்தது போல் அடிகளாருக்கு இது புரிந்தது திருச்சி பொன்மலையில்.  புத்தனுக்குப் பகுத்தறிவில்லாத மரத்தினடிஅடிகளாருக்குப் பகுத்தறிவு இயக்கத் தலைவர் தந்தைபெரியாரின் அண்மை!

ஆன்மீகம் உண்மையென்றால் ஆன்மிக நூல்களுக்கு விளக்கவுரை சொல்வது தானே!      

அதற்குமேல் இறைவனுக்கு ஏற்பட்ட வேலையே எதிரிகளை அழிப்பதும் வேண்டியவர்களை வாழவைப்பதும் தானே.  இன்றைய வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டியே இறைவன்தான் போலிருக்கிறது.  ஆன்மிகமும் - ஆன்மிக உரைகளும் நல்லவர்களை வாழ்த்தியதோ இல்லையோ எதிரிகளை தாக்கியதுஅழித்ததுசிலரை அழிக்க முயன்று தோற்றது.

அடிகளாரும் இந்த வழக்கமான ஆன்மிக மேடை உரைகளிலிருந்து தொடக்கத்தில் விலகி விடவில்லைபெரியாரும் - பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும் அடிகளாரின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாயின.  ஓரிரு இடங்களில் பெரியாரின் திராவிடர் கழகத்தினரும் இதற்குப் பதிலடி கொடுத்தனர்.

அந்த நேரத்தில்தான் பெரியாரும் மகா சன்னிதானமும் கலந்து கொள்ளும் பொன்மலை நிகழ்ச்சி அமைந்ததுஅதுதான் சன்னிதானத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாயும், சமய உலகிற்கு ஒரு ஆச்சரியமாகவும் சனாதன (பார்ப்பனர்) உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியாகவும் அமைந்ததுபொன்மலை நிகழ்ச்சிக்குப் பின்னர் அடுத்தடுத்துப் பெரியாரும் - அடிகளாரும் கலந்து கொண்ட பலநிகழ்ச்சிகள் தொடர ஆரம்பித்தனதமிழர்கள் இடையில் இது மாபெரும் வரவேற்பைப் பெற்றதுஅதே சமயம் அடிகளார் உருவாக்கிய அருள் நெறித்திருக்கூட்டம் தெய்விகப் பேரவை போன்ற அமைப்புகளுக்கு அடிகளார் பேரில் கடும் கோபம் ஏற்பட்டு, சிலர் கண்டனமும் செய்யத் தொடங்கினர்.

ஏற்கனவே இது போன்ற மக்கள் அமைப்புகளைச் சமய மடத்தின் சுவர்களைத் தாண்டி எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் அடிகளார் பெற்று வந்த புகழையும்- செல்வாக்கையும் காஞ்சி மடமும் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்த பார்ப்பனர்களும் அவர்களுடைய அமைப்புகளும் அவர்களின் பத்திரிகைகளும் மேலும் ஊதிவிட்டு அடிகளாரையும் - அவருடைய அமைப்புகளையும் ஒரே கல்லில் அடித்துப் பல காய்களை வீழ்த்தும் உத்தியைக் கையாண்டனர்.

இதில் மறைமுகமாகச் சைவை சமய அமைப்பினரும் கலந்து கொண்டு ஒத்து ஊதினார்கள்அடிகளார் அடங்கிவிடுவார் என்று கற்பனை செய்தார்கள்விளைவு வேறுவிதமாக மாறிவிட்டது.

ன்னைவிட பாதி வயதே உடையவரும் - மாற்றுக் கருத்துக் கொண்டவருமான குன்றக்குடி அடிகளாரிடம் பெரியார் காட்டிய பண்பாடும் - அடிகளார் கலந்து கொள்ளும் மேடைகளில் பெரியார் தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கைகளைச் சொல்வதில் காட்டிய அணுகுமுறையும்பெரியாரின் திராவிடர் கழகத்து மாவட்ட அளவிலான தோழர்களின் பணிவும் அடிகளாரை நெகிழச் செய்துவிட்டன.  அடிகளாரின் அன்பர்களும் அந்தந்த ஊர்களில் இதே விதமாகப் பெரியார் தொண்டர்களால் நடத்தப் பட்டார்கள்அடிகளார்- பெரியாருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று முன்னிலும் அதிக உறுதி காட்டினார்கள்.

பெரியாரின் வழியில் பிரச்சினைகளை அணுகும் முறை அரசியலிலும் அடிகளாரிடமும் எதிரொலித்ததுகாமராசரின் இலவசக் கல்வித் திட்டத்தையும் பெரியாரின் வழியில் அடிகளார் ஆதரித்தார் இது அன்றைய தமிழகக் காவல் துறை அமைச்சராய் இருந்து பின்னர் முதலமைச்சராகவும் ஆகிவிட்ட பக்தவச்சலத்துக்கு மிகுந்த எரிச்சலூட்டியது.  காங்கிரசார் என்ற வேடத்திலிருந்து காமராசர் எதிர்ப்பாளர்கள் வேறு சிலருக்கும் இது பிடிக்கவில்லை.

இயல்பாகவே மொழிப்பற்றும் - இனப்பற்றும் மிக்க அடிகளாரை 1965 நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டமும் அதனை ஒட்டித் தமிழகத்தில் நடைபெற்ற காவல் துறை அடக்குமுறைகளும் உலுக்கியதில் வியப்பில்லைபெரிய கல்லூரிப் பட்டமோ, மொழிப்புலமையோ இல்லாத தி.மு.கழகத்தின் எளிய தொண்டர்கள் மொழிப்போரில் தங்களை மாய்த்துக் கொண்டது தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உலுக்கியது.  போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களைப் பக்தவச்சலம் அரசினர் வரைமுறையின்றித் தாக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்ஆன்றைய ஆளும் கட்சியினரும் நடைமுறைகளால் இன்று போலவே உள்ளூர்க்காரர்களை எரிச்சலூட்டினர்குன்றக்குடியில் நடைபெற்ற மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் உணர்வு மேலிடக் குன்றக்குடி ஆதீனம் காவி உடையுடனே வந்து கலந்து கொண்டது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுகாவல் துறையினர் அடிகளாரைத் தனிமைப்படுத்தினார்கள்நீதிமன்றத்தில் அடிகளாருக்குப் பல நூறு ரூபாய்கள் தண்டம் விதிக்கப்பட்டது.

பெரியார் 1938-39 போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்ஆனால் 1965 இல் நடைபெற்ற அந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் அதில் முக்கிய பங்கு கொண்ட அனைவரையும் கடுமையாகச் சாடி வந்த நேரமிதுகாரணம் 1938-39 இல் கட்டாய இந்தியைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்த ராசகோபாலச்சாரி (ராஜாஜி) 1965 இந்தி எதிர்ப்புப் போரில் முக்கிய நாயகராய் நின்றதைப் பெரியார் அய்யத்தோடு பார்த்தார்இது தமிழகத்தில் காமராசரின் அரசை வீழ்த்த இராசகோபாலர் கையாளும் அரசியல் சூழ்ச்சி என்றார்.







ஆனாலும், அதே பெரியார் - அதே இந்தி எதிர்ப்புப் போரில் குன்றக்குடி சன்னிதானத்தைக் கைது செய்ததற்காகவும் இவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததற்காகவும் மிகக் கடுமையாய் பக்தவச்சலம் அரசைக் கண்டித்தார்.  பெரியாரின் இந்த இரட்டை நிலை பலருக்குப் பேராச்சிரியத்தை ஏற்படுத்தியதுகுன்றக்குடி ஆதீனகர்த்தர் பேரில் அய்யாவுக்கு இருந்த பேரன்பைப் பலரும் மேலும் போற்றினார்கள்.

பின்னர் 1967 இல் ஆட்சியமைத்த பேரரிஞர் அண்ணா அடிகளாருக்கு தமிழக அரசு தண்டல் செய்த தொகையை மீண்டும் அவரிடமே திருப்பித் தரச் செய்தார்.  குன்றக்குடி அடிகளார் பேரவையில் உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார்இந்தியாவிலேயே சட்டப்படியான ஒரு ஆதீனகர்த்தர் முதன் முறையாக மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டது நாத்திகர்கள் அரசு எனச் சைவ சமய அறிஞரான கிருபானந்தவாரி சுவாமிகளாலேயே வர்ணிக்கப்பட்ட தி.மு.க அரசால் தான்.  இது வருங்காலச் சமய உலகின் வரலாற்று ரீதியான ஆய்விற்குரிய ஒன்றாகும்.

தி.மு.க அரசு அமைந்த பின்னர்த் திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் கல்வி நிறுவனங்களில் பெரியாரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது தந்தை பெரியார் அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார் நான் (செல்வேந்திரன்) யாவரும் கலந்து கொண்டோம்.

அந்த ஆண்டு பெரியார் தமது பிறந்த நாள் செய்தியாக- அவருக்கு அவருடைய மனைவியுடன் குடும்ப அளவில் இருந்த மனச்சங்கடங்களை மறைமுகமாகச் சொல்லி ''நான் துறவியாகிவடலாமா என்று பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்இது பல்வேறு முனைகளில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது அப்போது பேரறிஞர் அண்ணா அமெரிக்காவில் இருந்தார்அறுவை சிகிச்சைத் துன்பத்திற்கு இடையிலேயும் தன் ஆசான் பெரியாருக்கு ஒரு ஆறுதல் கடிதம் எழுதியிருந்தார்.






மகா சன்னிதானம் குன்றக்குடி அடிகளார்தாம் அன்றைய விழாத் தலைவர்பெரியாரின் மேற்கண்ட துறவு பூணுதல் செய்தியைக் குறிப்பிட்டு ''அப்படித் துறவு மேற்கொள்வதானால் குன்றக்குடி மடத்துக்கு வாருங்கள்''  என்று அன்பழைப்பு விடுத்துப் பேசிப் பார்வையாளர்களின் இடையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர்ப்பேசிய நான் (செல்வேந்திரன்) ''பெரியார் குன்றக்குடி மடத்திற்குப் போய்விட்டால் திராவிடர் கழகத் தலைமையை யார் மேற்கொண்டு இந்தப் பணியைச் செய்வதுஓர் இடமாற்றம் செய்து கொள்வோம்மகா சன்னிதானம் திராவிடர் கழகத் தலைமையை ஏற்கட்டும்பெரியார் குன்றக்குடி மடத்தலைவராகட்டும்மகா சன்னிதானம் அதற்காகச் செய்யும் அறிவிப்புப் பெரியாருக்கு மிகச் சிறப்பான பிறந்த நாள் பரிசாக அமையும்'' என்று பேச பார்வையாளர் இடையில் மிக உற்சாகமான கரவொலி, வரவேற்புஅரங்கம் மேலும் பரபரப்பானதுநாவலர் நெடுஞ்செழியன் என்னைப் பார்த்துக் கிண்டலாக ''என்ன அடிகளாருடனேயே பட்டிமன்றமா'' என்றார்ஏனென்றால் பட்டிமன்றம் என்றதொரு அமைப்பை- சிறப்பாயும் - ஆக்க பூர்வமாயும் எளிய மக்களும் உணரும் வண்ணம் எடுத்துச் சென்ற முன்னோடி அடிகளார்தாம்.

தந்தை பெரியார் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர பதிலொன்றும் சொல்லவில்லை.  அடிகளாரின் முடிவுரையை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களிடம் அடிகளார் ''பெரியாரே இது பற்றி ஏதும் சொல்லாததால் நான் செல்வேந்திரன் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்'' என்று பட்டிமன்ற பாணியில் பதில் சொல்லி அரங்கிற்கு கலகலப்பு ஊட்டினார்.

பெரியார் அன்று உரையைத் தொடங்குமுன்புதான் என் நெஞ்சில் ஓடி, ஊனில் ஓடி, உயிரில் கலந்த அந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றதுஅடிகளார் பெரியாருக்கு ஒரு பொன்னாடையை அணிவிக்கத் தன் இருக்கையிலிருந்து எழுந்து போய் அணிவிக்க முயன்றார்சாதரணமாய்ப் பெரியாரால் பிறர் துணையின்றி எழ முடியாதுஇருந்தாலும் பெரியார் அன்று தானே முயன்று எழுந்து கால்கள் நடுங்க நின்றார்அடிகளார் பெரியாருக்குப் பொன்னாடையை அணிவித்து வணக்கம் தெரிவிக்க பெரியார் கால்கள் நடுங்க - நடுங்கக் குனிந்து மகா சன்னிதானத்தின் கால்களைத் தொட்டு வணங்கினார்இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.  வந்திருந்தோரில் பெரும்பகுதி திராவிடர் கழகத்தினார்மற்றவர்கள் பெரியார் பற்றாளர்களான அரசு அலுவலர்கள் - வணிகர்கள் - தொழில் அதிபர்கள்இதைப் பார்த்தவுடன் நிலவிய மயான அமைதி யாருமே இதனை ஏற்கவில்லை என்பதைக் காட்டிவிட்டதுமுதலில் இதனை எதிர்பாராத அடிகளார் அடுத்த விநாடியே சமாளித்துத் தடுக்க முயன்றார்ஆனால் அதற்குள் யாவும் முடிந்துவிட்டன.

மறுநாள் காலை திருச்சி பெரியார் மாளிகையில் கழக முன்னணியினர் யாவரும் கூடி நின்றனர் பெரியாரைச் சுற்றியாருமே முதல் நாள் நிகழ்ச்சியை விரும்பவில்லை என்றாலும் பெரியாரிடம் அதைச் சொல்லும் துணிவு யாருக்கும் இல்லை.

பெரியாரே பேச்சைத் தொடங்கினார்''என்னநேத்து எல்லோரும் விழாவுக்கு வந்தீங்களாகடைசிவரை இருந்தீங்களாபேச்செல்லாம் எப்படி?''  என்றார்.

ஒரே ஒரு விநாடி அமைதிஇருந்தவர்களில் நான்தான் வயதில் மிகச்சிறியவன்ஆனால் அய்யாவின் செல்லப்பிள்ளை''அய்யா…  எல்லாம் நல்லா போய்க்கிட்டு தான் இருந்திச்சு…  கடைசிலே அய்யா செஞ்ச அந்தக் காரியம் தான் யாருக்குமே பிடிக்கலை…  எனக்கெல்லாம் இராத்திரி தூக்கமே இல்லை…''  என்றேன்.

அய்யா நிமிர்ந்து பார்த்தார்எதைக் குறிப்பிடுகிறேன் என்று புரிந்துகொண்டார்''எல்லோருமா…?''  என்றார்சுற்றி இருந்தவர்கள் மவுனத்தின் மூலமே ஆமோதித்தார்கள்.

பெரியாரே தொடங்கினார், ''என்னங்க செல்வேந்திரன் உங்களை நான் ரொம்ப புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேனே…''  என்றார் கேலியாக.

சர்.சி.பி.இராமசாமி அய்யரைத் தெரியுமா உங்களுக்குஎருமை நாக்கை விரும்பிச் சாப்பிடுகிற பார்ப்பனத் தலைவர்  உலகமெல்லாம் சுத்தி வந்து பெரியப் பதவியிலெல்லாம் இருந்தவர்அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி கால்லே உழுவுறாரு…  ஏன்…  தான் மரியாதை பண்ணினாத்தான் தன்னோட சாதி நிறுவனம் பெருமைப்படுனுமின்னுஅதைத்தான் நானும் செஞ்சேன்.  சூத்திரசாதி மடத்தை நானும் பெருமைப்படுத்தோணுமின்னு செஞ்சேன்  எனக்கு என் மரியாதை முக்கியமல்ல…  என் இனத்தோட மரியாதைதான் முக்கியம்  பகுத்தறிவு எல்லா எழவையும் அப்புறம் பாத்துக்கலாம்''  என்றார்.

எங்களுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லைபெரியார் எவ்வளவு பெரிய தொலைநோக்காளர்இதை மற்றவர்கள் எவ்வளவு உணர்ந்தார்களோ இல்லையோ…  மகா சன்னிதானம் புரிந்திருந்தார்…  உணர்ந்திருந்தார்.

பெரியாரின் மறைவிற்குப் பின் பெரியாரின் நிறுவனத்துடன் அடிகளாரின் உறவு முன்போல் இல்லைபுதிய தலைமை தன்னையும் பெரியாராகவே எல்லோரும் ஏற்க வேண்டுமென விரும்பியதை அடிகளார் ஏற்கவில்லை.  என்னைப் போன்ற சிலரிடம் மகாசன்னிதானம், அதை வெளிக்காட்டிக் கொள்ளவும் தயங்கவில்லை.  பல நிகழ்ச்சிகளுக்குப் பெரியார் இயக்கத்தின் புதிய தலைவர்கள் அழைத்தபோது தவிர்க்கவும் செய்தார்.

சைவ சமயத்தின் நாயன்மார்களும் - வைணவ சமய ஆழ்வார்களும்கூடச் சென்று நிற்க முடியாத இடத்தில் அடிகளார் நின்றார்.

சமயக் குரவர்கள் - ஆழ்வார்களின் காலத்தில் மாறுபட்ட கொள்கை உடைய சகோதர சமயங்களான சமண, பவுத்தங்களுடன் இணக்கமாய் இல்லாதது மட்டுமல்ல, மோதுதல், சண்டை என்று தொடங்கிக் கொலை வரை நீடித்ததுதிருஞான சம்பந்தர் காலத்தில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்வது என்ற எல்லைவரை ''அன்பே சிவம்''  என்ற சைவம் ''அம்பே சிவம் - கத்தியே கடவுள்''  என்று போய் நின்றது.

சைவ சமயத்தைத் தொண்டு சமயமாக்க முயன்றவர் அப்பரடிகள்மன்னவன் தவறு செய்தபோது அதையும் எதிர்த்து, கடலில் வீசப்பட்டாலும் அஞ்சேன் என்று நின்றவர்அரசின் தண்டனையை ஏற்றவர்அப்பரடிகளுக்குப் பிறகு அதேபோல் சமயத்தைச் சாமான்ய மக்களிடம் எடுத்துச் சென்றவர் குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் மட்டும் தான்!

சைவச் சமய சின்னங்களை அணிந்தபடியே பெரியார் கூட்டிய நாத்திகர் அவைகளிலும் - கிறித்துவ இசுலாமியச் சமய அமைப்புக் கூட்டங்களிலும் துணிவோடு சென்று கலந்து கொண்டவர்களில் முதல் சமயத் தொண்டர் குன்றக்குடி அடிகளார்தாம்கடந்த ஆயிரம் ஆண்டு சைவ, சமய வரலாற்றில் வேறெந்த ஒரு சமயத் தொண்டருக்கும் இவருக்கு முன் இந்தத் துணிவுமில்லை, வரவேற்புமில்லை.

பெரிய புராணத்திற்கு - புதிய பொழிப்புரை - திருவிளையாடற் புராணத்திற்குப் புதுப்பதிப்பு என்று தன் மொழிப் பணியை இலக்கியப் பணியை நிறுத்திக்கொள்ளாமல் விஞ்ஞானத் தமிழுக்கு வித்திட்டவர் - நூல்கள் எழுதியவர் - இதழ்கள் நடத்தியவர் குன்றக்குடி அடிகளார் மட்டுமேஅதற்காகத் தமிழுலகம் அவருக்கு மிகவும் கடன்பட்டுள்ளது.

அடிகளார் அரசு அறிவித்த ஏழைகளுக்கு வழங்கும் இலவசத் திட்டங்களை எதிர்ப்பவராய் இருந்தார்தமிழீழப் பிரச்சினையில் மறைந்த குன்றக்குடி அடிகளாரிற் நிலைப்பாடு என் போன்ற அவருடைய அன்பர்களுக்கே உடன்பாடானதாயில்லைஅதற்காக நான் அவரோடு பட்டிமன்ற - வழக்காடு மன்ற மேடையில் உண்மையிலே மோதிக்கொள்ளும் சூழ்நிலைகள் இரண்டு மூன்று முறை ஏற்பட்டன.





ஆனால், இவை எல்லாம் தாண்டி என் பேரிலும் என் குடும்பத்தார் பேரிலும் தனிப்பட்ட அன்பு செலுத்தி வந்தார்.   நான் சமுதாய விடுதலை இயக்கமான பெரியாரின் திராவிடர் கழகத்தைவிட்டு தி.மு..வில் இணைந்ததைத் தனிப்பட்டமுறையிலும் - இரண்டுக்கு மேற்பட்ட முறைகள் மேடையிலுமே ''சரியான முடிவல்ல''  என்று சுட்டிக் காட்டினார்மகா சன்னிதானம் என்ற நிலையையும் தாண்டி என்னிடம் அன்புக் கொண்டிருந்தார்.  அவர் மறைந்த அன்று - பெரியார் மறைந்தபோது எப்படியொரு ழப்பை தனிமையை உணர்ந்தேனோ அதுபோல் உணர்ந்தேன்அடிகளார் இறைப்பற்றுமிக்க சமயத் தலைவர்நான் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகத் தொண்டன்இந்த உறவை என்னவென்று சொல்வது?

 ...திருச்சி செல்வேந்திரன்..(தற்போதைய தி.மு.கழக வெளியீட்டுச் செயலாளர் முன்னாள் திருச்சி திராவிடர் கழகத் தலைவர்).இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா...நாம் தமிழர் பதிப்பகம்...(பக்கம் 171-184)
 இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா?

அய்யாவைப் பற்றி அம்மையார்

ர்வலம் பெரியார் மாளிகையை அடைந்தது.  மாணவர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்.  பெரியார் வெளியே வந்தார். 

அன்று மாணவர்களிடையே பெரியார் ஆற்றிய உரை ஜூலியஸ் சீசர் கொலைக்குப் பின் மார்க் ஆண்டனி ஆற்றிய உரையையும் மிஞ்சியது.

''அன்புக்குரிய வாலிப ஜீவ ரத்தினங்களே!'' என்று துவங்கிய பெரியார் ''உங்கள் அன்பான ஆதரவைக் கண்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழும் உரம் பெற்றுவிட்டேன்.  நம் எதிரிகள் என் சிலையை செருப்பால் அடித்தாலும் -என்னையே செருப்பால் அடித்தாலும் அந்தக் கோபத்தையெல்லாம் இந்தத் தேர்தலில் அவர்களை அடியோடு தோற்கடிப்பதில் காட்டுங்கள்''  என்றார்.  பெரியார் சொன்னது நடந்தது.  பத்து நாட்கள் முன்னர் மாணவர்களால் வழி மறிக்கப்பட்ட அண்ணன் அன்பில், பின்னர் மாணவர்கள் அணிவகுத்து முன்செல்ல வாக்கு கேட்டுக் கொண்டு வந்தார்!
 
மாணவர்களிடம் உரையாற்றி முடித்து உள்ளே போய் அமர்ந்த பெரியாரிடம் -தினமும் அவரைப் பார்க்கப் போகும் நான் பத்து நாட்கள் 'தலைமறைவிற்கு'ப் பின் பார்த்தேன்.

''செல்வேந்திரன் -டர்னிங் பாயிண்ட் ஏற்படுத்திப் போட்டீங்க- டர்னிங் பாயிண்ட் ஏற்படுத்திப் போட்டீங்க…'' என்றார் பெரியார், என் கைகள் இரண்டையும் பிடித்து முத்தமிட்டுக் கொண்டே. எனக்கு அவர் தான் எல்லாம்!  அவரில்லாமல் நானில்லை.  இந்தப் பாராட்டுகளுக்கு ஆயிரம் பொன் மகுடங்கள் நிகராகுமா?
 
நான் மெய்சிலிர்த்துப் போனேன்.  இந்த நிகழ்ச்சி மூன்று நாட்கள் கூட நீடிக்கவில்லை.  ஊடகங்கள் பெரும் புயலைக் கிளப்பின.  வழக்கம் போல் கள ஆய்வுகள் -கருத்துக் கணிப்புகள்.  தி.மு.க. தோற்கப் போகிறது -சட்டமன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எழுபது இடங்கள் கூட கிடைக்காது என்று பெரும் வதந்தி.  காவல்துறை -வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் தி.மு.க. அன்றைக்கு ஆளும் கட்சியாய் இருந்தாலும் எதிர்ப்புக் காட்ட ஆரம்பித்தார்கள்.

பெரியாரே ஒரு கட்டத்தில் கலக்கமடைந்தார்.  காரணம் பெரியாரின் சேலம் மாநாடுதான் இத்தனைக்கும் காரணம் என்றொரு பிரச்சாரம்.  கலைஞர் வருத்தமடைந்திருந்த பெரியாரிடம் வழக்கம்போல் துணிச்சலாக ''வருவது வரட்டும் -தோல்வியே வந்தாலும் சேர்ந்தே எதிர்கொள்வோம்.  நான் அதற்குத் தயார்'' என்றார்.

எனக்கோ நெருக்கடி அதிகமானது.  ''திருச்சி சம்பவங்களுக்குக் காரணமும் சேலத்தில் ராமரை நீ செருப்பால் அடித்தது தான்.  அதனால் பயங்கரமான குற்றப்பிரிவுகளில் உன் பேரில் வழக்குத் தொடருவேன்.  ஏழாண்டுகள் வெளிவரமுடியாது'' என திருச்சி பெரிய காவல்துறை அதிகாரி என்னை மிரட்டினார்.  அவர் 'ஆனஸ்ட்' தான், ஆனால் திராவிட இயக்க எதிர்ப்பாளர்.  பின்னாளில் உளவுத்துறையில் பெரும் பொறுப்பில் தமிழகத்தில் இருந்த அதிகாரி ஒருவரின் தந்தை.  என்னை அறியாமல் எனக்குள் ஒரு கலக்கம்.  அதிவேகம் அதி உற்சாகம் காட்டிவிட்டோமோ - 'அய்யா' என்ன சொல்லி விடுவாரோ என்று பயந்து போய் மீண்டும் ஓரிரு நாள் பெரியாரை பார்க்காமல் 'தலைமறைவு'.

பெரியாரின் நம்பிக்கைக்கு உரிய, கழகப் பொறுப்பாளர் அல்லாத அண்ணன் அடைக்கலத்திற்கு தொலைபேசியில் சொல்லி 'ஒரு மணி நேரத்தில் செல்வேந்திரனை அழைத்து வா' என்றாராம் பெரியார்.


பெரியார்முன் போய் பயத்தோடு நின்றேன்.  காவல்துறை அதிகாரி சொன்னது உள்பட யாவற்றையும் சொன்னேன்.  கண்கலங்கிவிட்டேன்.  பெரியார் என்னை அன்போடு பார்த்தார்.

''பைத்தியம்…  ஏன் பயப்படறீங்க…''  என்றார்.  ''நான் போலீசுக்குப் பயப்படலே…  அய்யாவுக்குத்தான்…''  என்றேன். பெரியார் என் தலையின் பின்முடியைப் பிடித்து செல்லமாய் உலுக்கினார்.

''எனக்காகத்தானே எல்லாம் செஞ்சீங்க…  உங்களுக்குத் தொல்லை வந்தால் நான் உட்டுடு வேனா…  பார்ப்போம்…  பார்ப்போம்…''  என்றார்.

மறுநாளே மாபெரும் சேலம் தீர்மான விளக்கத்  -தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசினார்.

'சேலத்தில் ''ராமன் சிலையை நான்தான் செருப்பால் அடிச்சேன்.  அப்படித்தானே படம் போட்டிருக்கே.  சிலையே கோவிச்சுக்கலே…  உனக்கென்ன கோவம்?''  என்று 'துக்ளக்' கார்ட்டூனை சுட்டிக்காட்டிப் பேசினார்.  'துக்ளக்' இதழ் ராமன் சிலையை பெரியார் வடிப்பதுபோல் 2 லட்சம் சுவரொட்டிகள் வெளியிட்டிருந்தது.  அதன் விளைவு பின்னால்தான் தெரிந்தது.  இவர்கள் சேய்க்கு வரும் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்.

தேர்தல் பிரச்சாரம் படுவேகமாகவும் -உக்கிரமாகவும் நடந்தது.  மற்ற செய்திகள் அனைத்தையும் பின் தள்ளிவிட்டு ராமன் சிலை சம்பவமே முதன்மைப்படுத்தப்பட்டுவிட்டது.  மதவாதிகளுக்கு தேவைப்படும்போதெல்லாம் பயன்படுவது ஒன்று பாம் அல்லது ராம்.  பெரியாரின் செயலால் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும் என்ற செய்தியை மதவாதிகளும் பத்திரிகைகளும் வேக வேகமாக ஊதிவிட்டனர்.  இந்திரா- கலைஞர் கூட்டணியையே இதில் உடைத்து பலவீனப்படுத்த முயன்றார்கள்.

  



இந்திராகாந்தி அம்மையார் அவர் தந்தையார்  நேரு பண்டிதரைப்போல் பகுத்தறிவுவாதியல்ல.  கடவுள் நம்பிக்கையுடைவர் என்றொரு பொதுக்கருத்து அப்போது இருந்தது.  அது ஓரளவு உண்மையும்கூட.  இந்திரா காந்தி அம்மையாரிடம் பத்திரிகையாளர்கள் படையெடுத்தார்கள்.  அவர்கள் பலரின் கையிலிருந்தது பேனா அல்ல.  கூட்டணியை வெட்டி விடும் கத்தரிக்கோல்.

சேலம் மாநாடு -பெரியார் ராமன் சிலையை,  தானே அடித்ததாய் ஒப்புக்கொண்ட செய்திகளை இந்திரா அம்மையாரிடம் காட்டி -இவர்களோடா கூட்டு?  இதை எப்படி நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்?  என கேள்வியாகாக் கூடக் கேட்கவில்லை.  பலர் குமுறினார்கள்.  சிலர் கொந்தளித்தார்கள்.

நேருபண்டிதரின் மகளில்லையா?  இதற்கு எந்தவிதப் பதட்டமும் காட்டாமல் மென்மையாக பதில் சொன்னார்.  ''அதற்கென்ன…  பெரியார் பல ஆண்டுகளாய் இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்?  (கடவுள் படத்தை எரிப்பது- சிலைகளை உடைப்பது)  இப்போது மட்டும் என்ன கோபம்'' என்றார்.
இன்னொரு சம்பவம்.  தேவராஜ் அர்ஸ்.  1970-80களில் மிகவும் பரபரப்பாய் அறியப்பட்ட பெயர்.  இந்திய அரசியல்வாதிகளிலேயே மிகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பெயர் போனவர்.  தங்கமும் -தந்தமும் -வைரகற்களும் இழைக்கப்பட்ட புகைக்குழாயில் (பைப்) தான் புகை பிடிப்பார்.  அவரை சென்னை கன்னிமாரா விடுதியில் மிக ஆடம்பரமான அறையொன்றில் சந்தித்தபோது அந்தக் குழாயை நான் பார்த்திருக்கிறேன்.

தேவராஜ் பற்றி..விக்கி களஞ்சியம் (ஆங்கிலம்)

செல்வாக்கு பெற்ற கர்நாடக முதல்வராய்- பின்னர் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராய் இந்திராகாந்தியாரின் வலதுகரமாய் செயல்பட்டவர்.  பின்னர் மாறுபட்டவர்.  எதிரியாகிவிட்டவர்.  கன்னிமாரா விடுதியில் ஒரு நண்பர் அர்சிடம் ''இந்திரா காங்கிரசை விட்டு விலகிய நீங்கள் ஏன் பெரியாரைப்போல் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஓர் இயக்கம் துவங்கிப் போராடக்கூடாது?''  என்று கேட்டார்.  அர்ஸ் வேகமாய் குறுக்கிட்டார்.  ''என்னை அந்த மாமனிதனோடு ஒப்பிடாதீர்கள்.  நான் வெறும் அரசியல்வாதி.  (No… No…  don't compare me with that great man.  I am after all a politician)  (அப்போது பெரியார் இல்லை)  அர்ஸ் மேலும் தொடர்ந்தார்.

''ஒருமுறை தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம் பற்றி என்னோடு இந்திராகாந்தி ஆலோசனை கலந்தார்.  'மிஸ்டர் அர்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் வளர கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்ட ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் யாரைப் போடலாம்' என்றார் இந்திரா.

நான் (அர்ஸ்) சொன்னேன்.  'ஏன், ஆர்.வெங்கட் ராமனைப் போடலாமே'  (பின்னாளில் ஜனாதிபதியாக இருந்தவர்)  என்றேன்.  எப்போதும் காலையில் குளிக்குமுன் இந்திராகாந்தி ஒரு தைலம் தடவிக் கொண்டு சாவதானமாய் சாய்ந்து அமர்ந்திருப்பார்.  அப்போது யாரையும் சந்திக்கமாட்டார்.  எனக்கு (அர்ஸ்) விதிவிலக்கு.  நான் சொன்னதுதான் தாமதம்.  இந்திரா கோபமாய், நாற்காலியின் முன் பகுதிக்கு வந்துவிட்டார்.

'என்ன அர்ஸ் பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறீங்கள்.  உங்கள் அண்டை மாநில அரசியல் சூழல் கூட தெரியாமல் இருக்கிறீர்கள்.  ஒரு பிராமணரை கட்சித் தலைவராகப் போட்டால் அந்தக் கட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?  அது பெரியார் ஈ.வெ.ரா.வின் பிரச்சாரத்தில் ஊறிய மண்' என்றார் இந்திராகாந்தி''  என்று மூச்சுவிடாமல் வேகமாய் ஆங்கிலத்தில் சொன்ன அர்ஸ்…  ஒருகணம் அப்படியே பேச்சை நிறுத்திவிட்டார்.

அது அவர் இந்திராகாந்தியிடம் கடும் கருத்து வேறுபாடு கொண்டிருந்த- தாக்கிப் பேசிக்கொண்டிருந்த நேரம்.  இருந்தாலும் இந்திராகாந்தியையும் அவருடைய தந்தை நேரு பண்டிதரையும் பாராட்டினார்.  பெரியவர்கள் பெரியவர்கள் தான்.

தேவராஜ் அர்ஸ் மேலும், ''தமிழ்நாட்டின் அரசியல் ரசாயனத்தை இந்திராவுக்கு அவருடைய தந்தை நேரு பண்டிதர் எவ்வளவு துல்லியமாய் கற்பித்திருக்கிறார்.  அதை அந்த அம்மையார் எவ்வளவு ஆழ்மனதில் பதித்திருக்கிறார் பாருங்கள்.  பெரியார் அப்படிப்பட்டவர்''  என்றார்.

ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் முன்னர் 1971 தேர்தலின்போது இந்திராகாந்தி எளிதாய் பெரியார் பற்றி சொன்ன கருத்தின் ஆழம் எப்படி வந்தது என்று எனக்குப் புரிந்தது.  பெரியார் உடலாய் இல்லை, வரலாறாய் வாழ்கிறார்.

மறுபடியும் நினைக்கிறேன்.  அந்த 1971 தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்றிருக்காவிட்டால்?  பெரியார் என்னுடைய செயலைத் தானே செய்ததாய் அறிவித்திருக்காவிட்டால்…?  நான் துன்பத்தின் உளைச்சலில் மடிந்து போயிருப்பேன்.

சிறகில் எனை மூடி அருமை மகன்போல
வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா?
இந்த மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதய்யா…

உறவைப் பிரிக்க முடியாதய்யா!

...திருச்சி செல்வேந்திரன்..சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!...நக்கீரன் வெளியீடு...தொடரும்... பகுதி7-ல்-  தலைப்பு ''
'இந்தியனாய் இருந்து இழந்தோமா? பெற்றோமா? ''



அன்று வந்த சோதனை

 
''எனக்கு ஏற்பட்ட பழி நீங்கிவிட்டது.  முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்'' என்றொரு அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியாரவர்கள்.  தமிழ்நாட்டு அரசியலின் போக்கையே மாற்றிப் போட்டுவிட்ட 1971-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் தெரிந்த பின்னர் தான் மேற்கண்ட அறிக்கை.

தேர்தல் முடிவுகளும் -துவக்கமும் -இடையிலேயும் நடைபெற்ற சம்பவங்கள்தான் அவை.  வழக்கமாய் பயன்படுத்தப்படும் 'வரலாற்றை மாற்றியது' என்ற சொற்பிரயோகம் இதற்குத்தான் முழுக்க முழுக்கப் பயன்படும்.

இந்தத் தேர்தல் முடிவுகள்…

 *வழக்கமான மத்திய-மாநில அரசுகளின் உளவுத்துறைகளின் துல்லியமான தேர்வு முடிவு கணிப்பு அறிக்கைகளையே நூற்றுக்குநூறு மாற்றிக் காட்டினது.

 *இந்திய அரசியலில் நேரு பண்டிதரின் அச்சத்திற்குரிய அறைகூவலுக்கே உரியவர் மூதறிஞர் என்றெல்லாம் பாராட்டப்பட்ட ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஏறக்குறைய அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார்.  அவருடைய வருத்தம் 'தோற்றோம்' என்பதல்ல.  'யாரிடம்' தோற்றோம் என்பதுதான்.  (இது பெரியார் சொன்னது)

   *வெற்றி பெற்றாலும் கலைஞரும் அவருடைய அமைச்சரவையினரும் பெருந்தலைவர் காமராசரிடம் காட்டிய பணிவும் -மரியாதையும் - காமராசரின் அணுகு முறையிலேயும் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன.  "GREAT AS WARRIORS GREATEST AS VICTORS"  (போரில் வீரராகவும் வெற்றியில் மாவீரராகவும்) கலைஞர் நடந்துகொண்டதே காரணம்.
 
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் அந்தத் தேர்தல்தான்.  பதவிக்காலம் இன்னும் ஓராண்டு இருக்கும் போதே முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு 1971-ல் பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தார்.  பலருக்குத் தலைவர் கலைஞர் பேரில் கோபம்.

தங்கள் நாற்பதாண்டுகால பகையை மறந்து ராஜகோபாலாச்சாரியாரும் பெருந்தலைவர் காமராசரும் களமிறங்கியது பலருடைய கலக்கத்திற்குக் காரணமாகி விட்டது.  தேர்தலுக்கு முன் அந்த பெருங்கூட்டணி (GRAND ALLIANCE) யின் வெற்றிக்காக ராஜகோபாலாச்சாரியார் காமராசரை வாழ்த்தி அவர் நெற்றியில் திலகமிட்டார்.  ஆனால் அது வெற்றித் திலகமாய் அமையவில்லை.  காரணம் எளிதானது.  அதற்கு நான்கு ஆண்டுகள் முன்னர் 1967-ல் இதே ராஜகோபாலாச்சாரியார் தி.மு.க வை தேர்தலில் ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  ராஜகோபாலாச்சாரியாரை சேர்ந்தவர்களும்- சார்ந்தவர்களும் 'பெரியாரின் சீடர்களுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறீர்களே' என்று கேட்டார்கள்.  ராஜகோபாலர் வழக்கம் போல் ராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டினார்.  ராமன் சொன்னான், ''யுத்தம் சீதையை மீட்க அல்ல, இராவணனைக் கொல்வதற்கே'' என்று.

''தேர்தலில் தி.மு.க. வுக்கு ஆதரவு தருவது காமராசரை வீழ்த்தவே'' என்றார் 1967-ல்.  அதுபோலவே காமராசருக்கு ராஜகோபாலரின் வெற்றித் திலகம் காமராசரின் வெற்றிக்கல்ல.  கலைஞரை வீழ்த்தவே என்பதை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ சாமான்யமான வாக்காளர்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்தப் பெரிய பிரச்சினைக்குள் சின்னவன் நீ எங்கே வந்தாய்' என்று நீங்கள் கேட்கலாம்.  இங்கிருந்து மறக்க முடியுமா தொடர்கிறது.

கலைஞரின் கூட்டணியில் பெரிய வாக்கு வங்கியோ,  மக்கள் செல்வாக்கோ, தொண்டர்கள் வலிமையோ உள்ள கட்சிகள் இல்லை.

தேர்தலில் போட்டியிடாத -தி.மு.க. வை ஆதரித்த பெரியாரின் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முகவர்களாய் பணியாற்றினார்கள்.  பெரியாரின் அனுமதியோடு அவர்களை அப்பணியில் அமர்த்தியவனே நான்தான்.

ஆர்வமிகுதியால் சில நண்பர்கள் புராண ஆபாசப் படங்களையும் ஊர்வலமாய் எடுத்து வந்தார்கள்.  இது பெரியாருக்குத் தெரியாமல் நடந்தது.  

 ஊர்வலத்தையும் மாநாட்டையும் தடை செய்ய வேண்டுமென்று மாநாட்டிற்குப் பந்தல் அமைக்கத் துவங்கும்போதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொங்கு சதையான இந்து மகாசபை மாவட்ட ஆட்சியரிடமும், கவர்னரிடமும் வேண்டுகோள்கள் கொடுக்கத் துவங்கினார்கள்.  இந்து மகாசபை -இன்றைய பா.ஜ.க.வின் தந்தையர் இயக்கமாகும்.

 
கலைஞரின் ஆட்சிதான் நடந்தது.  காவல்துறையினர் இருதரப்பிற்கும் வழியமைத்து நடுநிலையோடு நடந்து கொண்டார்கள்.  

 ஊர்வல ஒலி முழக்கங்கள் கூட முறைப்படுத்தப்பட்டன.  இந்து மகாசபையினர் நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு இடம் ஒழுங்கு செய்து பாதுகாப்பும் காவல்துறை கொடுத்தது.  ஆனால் அவர்கள் திட்டமிட்டு வந்தது பெரியாரின் பேரிலேயே செருப்பை வீசி -அது பெருங்கலவரமாகி துப்பாக்கிச் சூடு வரை கொண்டு போய் அதைத் தேர்தல் பிரச்சாரமாக்க எண்ணி இருந்தார்கள் என்பது.

 'சோ'வின் 'துக்ளக்' இதழ் வெளியிட்ட கார்ட்டூன்களும் அதையே பல லட்சம் சுவரொட்டிகளாக்கி தி.மு.க.விற்கு எதிராகத் தமிழகம் துவங்கி இந்தியா பூராவும் ஒட்டியதும் நிரூபித்தது.
 

'பெரியார் வாழ்க… பெரியார் வாழ்க' என ஆவேசமாய் முழக்கமிட்டார்கள்.

 பெரியார் வண்டிதான் பக்கத்தில் வருகிறது என்று தவறாக எண்ணிய இந்து மகாசபைக் கூட்டம் காவல்துறையினருக்குத் தெரியாமல் வைத்திருந்த கருப்புக்கொடியைக் குச்சியோடு வெளியே எடுத்து உயர்த்தினார்கள்.  எல்லா கம்புகளிலும் பழைய செருப்புகள்.  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செருப்புக்கொடி ஆர்ப்பாட்டமாகி 'ஒழிக' கோஷத்தோடு அவர்கள் சரமாரியாய் செருப்புகளை வீசினார்கள் எங்கள் பேரில்.
 
லாடம் கட்டிய செருப்பொன்று வண்டியின் மேல் நின்றிருந்த என் மேல்பட்டு ரத்தம் கொட்டியது. எனக்கோ ஆத்திரம்.  என்னுடைய வண்டியைச் சுற்றி இருந்த தோழர்களோ வெறி கொண்ட வேங்கையானார்கள்.  காவல்துறை வளையத்தை உடைத்துக் கொண்டு கருஞ் சட்டை வெள்ளம் உள்ளே பாய -போலீசார் தடியடி நடத்தி கருஞ்சட்டைத் தோழர்களை தடுத்துக் கொண்டிருக்க இந்து மகாசபை கூட்டம் கலைந்தோடியது.

மாநாட்டில் பெரியார் பெண்ணுரிமையை வலியுறுத்தும் தீர்மானமொன்றைத் தனது பாணியில் சற்றுக் கூடுதல் அழுத்தம் கொடுத்து நிறைவேற்றினார்.

அத்தனை ஆதிக்க சாதிப் பத்திரிகைகளும் ஓர் குரலாய் எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள்.  ''ராமனை அவமரியாதை செய்த கட்சிக்கா உங்கள் ஓட்டு?'' என்ற ஒற்றை வரி முழக்கமே எதிரணியின் தேர்தல் திட்டமானது.

நாடெங்கும் பரபரப்பு தங்களுக்குச் சம்பந்தமில்லாதது என்று உணராத மாணவ-மாணவிகளையும் தி.மு.க. அணிக்கு எதிராகக் களம் இறக்கினார்கள்.  சேலம் தி.க. மாநாட்டின் தீர்மானத்திற்காக தி.மு.க. வேட்பாளர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனத் திருச்சியில் அண்ணன் அன்பில் தர்மலிங்கம் (முன்பு நான் படித்த) தேசிய கல்லூரி மாணவர்களால் வாக்குக் கேட்காமல் தடுக்கப்பட்டார். 

 ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையே கடித்த கதையாய் திருச்சியில் பெரியார் சிலையைக் கல் வீசித் தாக்கினார்கள்.  நான் வேகமானேன்.  அப்போது திராவிடர் கழகத் தலைவர் மூத்தவர்கள்  'நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம்'  என்று என்னைத் தடுத்தார்கள்.  'உனக்குத்தான் ஆபத்து' என்றார்கள்.  காரணம் சேலத்தில் நடந்த ஊர்வலத்தில், நடந்த சம்பவங்கள் பெரிதாகி ஊரெங்கும் கண்டன ஊர்வலமாகத் தகராறுகளும் நடக்க நானே காரணம் என்பது சிலரின் கருத்து.

இரண்டு நாட்கள் நான் பெரியாரையே பார்க்கவில்லை.  மூத்த தலைவர்கள் சொன்னதையும் கேட்கவில்லை.  'முள்ளை முள்ளாலேயே எடுக்க முடிவு செய்தேன்.  கட்சி சார்பற்ற மாணவர்களையே முழுவதுமாய் கொண்ட பெரிய ஊர்வலம் நடத்தி நடந்த செயலுக்கு மாணவர்கள் பெரியாரிடம் வருத்தம் தெரிவிக்கச் செய்வது எங்கள் திட்டம்.  திட்டம் வென்றது.  கடும் உழைப்புக்குப் பயன் கிடைத்தது.

இன்றைக்குத் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் இருக்குமிடம் அப்போது பெரிய திடல்.  எங்கு பார்த்தாலும் மாணவர்கள்.  அப்போது பேருந்தில் சென்ற ஒருவர் ஊர்வலத்தில் வந்த மாணவர்களைப் பார்த்து ஏதோ கை நீட்டித் திட்ட மாணவர்கள் பேருந்துக்குள் ஏறி விட -கலவரம் வெடித்தது.  வழியெங்கும் கலவரம்.

ஊர்வலம் பெரியார் மாளிகைக்குப் போயிற்று.  மாணவர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் பெரியாரே வெளியே வந்தார்.
 
...திருச்சி செல்வேந்திரன்..சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!....நக்கீரன் வெளியீடு....தொடர்ச்சி பகுதி 6 ல் தொடரும்..தலைப்பு ''அய்யாவைப் பற்றி அம்மையார்''

Sunday 3 March, 2013

கலைஞரை பாராட்டிய காமராஜர்

திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பாடலூர் அருகில் பெரியார் குடிலும், பெரியார் வளைவும், தனியே நிற்கும் ஒரு ஓட்டுவில்லைக் கொட்டகையும் என்னைப் பொறுத்தவரையில் வெறும் கட்டிடங்கள் அல்ல.  நெஞ்சைவிட்டு நீங்காத நினைவுச் சின்னங்கள்.

நல்லசெல்வம் என்ற ஒரு அருமையான பெரியார் காலத் தொண்டர்.  சட்ட எரிப்புப் போரில் சிறைக்குச் சென்றவர்.  இன்னொருவர் ஆசிரியர்- பெரியார்குடில் முத்துசாமி.  (மூத்த திராவிடர்கழகத் தலைவர் திருவாரூர் தங்கராசுவின் சம்பந்தி)

பெரியார்குடில் -அழகான இயற்கைச் சூழலில் அமைதியாய் அமைந்துள்ள அருமையான கல்வி நிறுவனம்.  இது பெரியார் தொண்டர் முத்துசாமியின் நினைவுச் சின்னம்.  அந்த ஒற்றை ஓட்டு வில்லைக்குடில்,  நல்லசெல்வத்தை நினைவூட்டும் தோட்ட இல்லம்.

இந்த அரும்பணிகளுக்கெல்லாம் துணை நின்ற மிசா வீரர் -முன்னாள் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் ஜே.எஸ்.ராசுவுக்கு நினைவுச் சின்னம்?  நல்லவர்கள் -நன்றியுள்ளவர்கள் -நெஞ்சம்தான்…

இந்த இரூர் பெரியார் வளைவை காமராசர் கையால் திறந்துவைக்க நல்லசெல்வமும் முத்துசாமியும் விரும்பினார்கள்.  காமராசரை நான் நேரில் பார்ப்பது இது இரண்டாம் முறை.  இரவு ஏழு மணிக்குச் சந்திக்க வரலாம் எனத் தலைவர் காமராசர் இல்லத்திலிருந்து பதில் சொன்னார்கள்.  அப்போதெல்லாம் ஆட்டோ ரிக்ஷாக்கள் அதிகம் கிடையாது.  பேபி டாக்ஸிகள்தான்.  ராயப்பேட்டை பழைய உட்லண்ட்ஸ் விடுதியிலிருந்து வண்டி பிடித்து பெருந்தலைவர் வீடுபோய்ச் சேர இரவு எட்டு மணியாகிவிட்டது.

ஒன்பது ஆண்டுகள் அசைக்க முடியாத முதலமைச்சர் இரண்டு இந்தியப் பிரதமர்களை அமைதியாய்த் தேர்ந்தெடுத்த ராஜதந்திரி.  பண்டித நேருவின் மறைவிற்குப்பின் உலகத் தலைவர்களால் ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட மாபெரும் தலைவர்.  கடுமையான பாதுகாப்பு- கூட்டம் -கார்களின் வரிசை இவைகளை எதிர்பார்த்துப்போன எங்களுக்கு பெரும் அதிர்ச்சி யாருமே இல்லை.  அந்த வளாகமே வெறிச்சோடி கிடந்தது.

வீட்டு வாசலில் போய் நின்றோம் யாருமில்லை.  அழைப்புமணி எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.  ஒரு வேளை இல்லையோ….?
முத்துசாமி மெல்ல மேலேறி ''அய்யா… அய்யா…'' என்றார் இரண்டு முறை.  பதில் இல்லை.  சில நிமிடங்கள் இப்படியே ஓடின.  பின்கட்டில் யாரோ குறுக்கே போனார்கள்.  முத்துசாமி 'ஐயா' என்றார்.  அவர் வந்தார்.  வந்த காரியத்தையும் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டு அவர் ஒப்புக் கொண்டதையும் சொன்னோம்.  ஓரிரு நிமிடங்களில் வரவேற்பறை போன்ற இடத்திற்கு படுக்கை அறையிலிருந்து வந்தார் தலைவர்.  எங்களுக்கு அடுத்த அதிர்ச்சி.

சட்டையில்லாத அந்தப் பெரிய உடம்பில் ஒரு குற்றாலம் ஈரிழைத்துண்டு.  இடையில் நாலு முழம் வேட்டி.  காலையில் முகச்சவரம் செய்யவில்லை போலிருக்கிறது.  ஆசிரியர் முத்துசாமி சாதாரணமாக சிறியவர்களிடமும் பணிவாய்ப் பேசுகின்றவர்.

''அய்யா… மன்னிக்கணும்… காலதாமதமாய் வந்து தொந்தரவு செய்யுறோம்… மன்னிக்கணும்… வாடகை வண்டி கிடைப்பதில் தாமதம், போக்குவரத்து நெருக்கடி, மன்னிக்க வேணும்…''

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த ஆற்றல்மிக்க பெருந்தலைவருக்குள் இருந்த எளிய மனிதன் வெளியே வந்தார்.  வழக்கப்படி பேச்சைத் தொடங்கும்முன் அந்த 'ஏ' மட்டும் மாறவில்லை.

'
'ஏ… யாரப்பா நீ… பைத்தியக்காரனா இருக்கே… மன்னிக்கணும்… மன்னிக்கணும்ங்றே… இப்போ இங்கே எவனும் வர்றதில்லைப்பா எங்கிட்டே 'பவர்' இல்லை… எவனும் வர்றதில்லே… சாதாரண ஆளுங்கதான் வெளியூர்லேர்ந்து வர்றான்.  பைத்தியக்காரனா இருக்கியே… மன்னிப்பு… மன்னிப்புன்னு… அதெ உடுன்னேன்.  'பவர்' போயிருச்சப்பா… 'பவர்' இல்லை… யாரும் வர்றதில்லே… டிரைவர்கூட இங்கேயே இருக்கமாட்டேங்கிறான்.  அங்கே ஒரு கடைக்கு போயிர்றான் பீடி குடிக்க.  கூப்பிட வேண்டியிருக்கு… நீ யாரப்பா பைத்தியக்காரனா இருக்கே…'' என்றார்.  அவர் சாதாரணமாய்த்தான் பேசினார்.  எவ்வித பதற்றமோ, ஆதங்கமோ… கோபமோ அவரிடம் இல்லை.

நாங்கதான் கண்ணீர் விடும் நிலைக்கு வந்துவிட்டோம்.  முத்துசாமி உணர்ச்சி வயப்பட்டு விட்டார்.  மயிலைக் குளக்கரையில் கல்லாய் நிற்கும் கபாலியைக் காண ஆயிரக்கணக்கில் நிற்கும் கூட்டத்திற்கு முன் கல்வி தந்த கடவுள் இங்கே இருக்கும் நிலையை எண்ணினேன்.  நாங்கள் நாங்களாக இல்லை.  இயல்புநிலை திரும்ப சிலகணங்கள் ஆயின.  முத்துசாமி வெளிப்படையாய் அழுது விட்டார்.  நாங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டோம்.  மீண்டும் காமராசரே பேச்சைத் துவங்கினார்.


'
'ஏ… விடப்பா… விடப்பா… நீ எல்லாம் யாரு…. உனக்கெல்லாம் நான் என்ன செஞ்சேன்.  செஞ்சவனையெல்லாம் காணோம்… உடு… உடு… வந்த வேலை என்ன… சரியாச் சொல்லு''  

என்றார்.  தலைவர் காமராசர் இரூர் பெரியார் வளைவைத் திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.  அரசியல் கடும் வேலை நெருக்கடிகளால் முறையான மருத்துவப் பரிசோதனைகள் கவனிப்பு இன்றியும் -மன உளைச்சல் -வயது இந்தக் காரணங்களால் காமராசருக்கு ரத்த அழுத்தம் -நீரிழிவு -போன்ற நோய்கள் வெளியில் தெரியாமல் இருந்திருக்கின்றன.  அந்தச் சோர்வு அவர் பேச்சில் தெரிந்தது.

'
'பதினைந்து நாள் கழிச்சு வாங்க சொல்றேன்.  இப்போ நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்லே.  அரசியல் சரியா இல்லே.  நான் சொல்றேன்… பாக்கலாம்… பாக்கலாம்…'' 


என்றபடி எழுந்தார்.  விடைபெற்றுக் கொண்டோம்.

ஏறக்குறைய பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் சார்பில் அன்றைய முதல்வர் கலைஞருக்குச் சென்னை அண்ணாசாலையில் சிலையெடுக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்தது.

கலைஞரின் சிலையைத் திறப்பதற்கு தலைவர் காமராசரைக் கேட்டுக் கொள்வதென முடிவாயிற்று.  அப்போது பெரியார் இல்லை.  தலைவர் காமராசர் 1971 பொதுத்தேர்தல் தோல்விகளுக்குப்பின் உடல்நலம் குன்றி அதிகம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.  எம்.ஜி.ஆர். தி.மு.க. விலிருந்து விலகி அ.தி.மு.க. என்ற அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார்.


தியாகராயர் திருமலைப்பிள்ளை தெருவிலிருந்த தலைவர் காமராசரை பார்த்து ஒப்புதல் கேட்பதற்காக மறைந்த விடுதலை மேலாளர் நாகரசம்பட்டி சம்பந்தத்துடன் சென்றிருந்த குழுவினருடன் நானும் யதேச்சையாய் சென்றிருந்தேன்.


வேறு பல செய்திகளைப் பேசியபின் கலைஞர் சிலை திறப்பு வேண்டுகோளை நண்பர்கள் வைத்தனர்.  பேச்சு… கலைஞர் -அரசு -நிர்வாகம் எனத் திசைமாறியது.  வந்திருந்த முக்கியமான நண்பரொருவர் தன் வழக்கப்படி காமராசரை மகிழ்விக்கும் வண்ணம்-

1954-1962 இடையிலான காமராசர் முதல்வராய் இருந்த கால செய்திகளைச் சொல்லிப் பாராட்டிக் கொண்டிருந்தார்.  முதல்வர் கலைஞர் செய்த சிலவற்றைச் சொல்லி -இதையே காமராசர் முதல்வராய் இருந்தால் இன்னுமும் சிறப்பாய் செய்திருப்பார் என்று காமராசரைப் பாராட்டுவது போல் பேசிக் கொண்டிருக்க காமராசர் திடீரென்று குறிக்கிட்டார்.

''இல்லே… இல்லே… கருணாநிதி நல்லாவே ஒட்றார் நல்லாவே ஒட்றார்.  ஆமா… ஆமா… நம்மாலே இதுமாதிரி முடியாது… எங்க காலம் வேறே… வேறே… எங்க காலம் நேருவோட காலம்… நேருவோட காலம்… இவுங்களுக்கும் நமக்கும் சரிப்படாது… இப்போ… அவருதான் சரி…  அவருதான் சரி…'' (மேலும் காமராசர் சொன்ன வார்த்தைகளையும் இடக்கரடக்கல் கருதித் தவிர்திருக்கிறேன்)  என்று காமராசர் கலைஞரின் நிர்வாகத்தையும் -தனிப்பட்ட முறையிலும் பாராட்டினார்.

'
'நான் கருணாநிதி சிலையைத் திறக்கிறது அரசியல் ரீதியா சரியா இருக்குமோ என்னவோ… எனக்குச் சரியாப் படலே.  எம்.ஜி.ஆர். இப்பவே நாங்க இரண்டு பேரும் (கலைஞரும்-காமராசரும்) ஒண்ணுனு பேசுறார்.  எதுக்கும் கருணாநிதியை கலந்துக்கங்க.  அவருக்கு ஆட்சேபணையில்லேன்னா நான் வர்றேன், நான் வர்றேன்…'' என்றார்.

எல்லோரும் புறப்படுமுன் நான் அவருடைய போர்ட்டிகோவுக்கு வந்து நின்று கொண்டேன்.  கலைஞருக்கும் -காமராசருக்கும் திருவண்ணாமலை இடைத்தேர்தல் கோட்டூர்புரம் கலவரம் -விருதுநகர் தேர்தல் -நாகர்கோவில் இடைத்தேர்தல் வரை நடந்த எத்தனையோ சம்பவங்கள் நினைவிற்கு வந்தன.  காமராசரும் கலைஞரும்  பெருந்தன்மையுடன் அவைகளை மறந்துவிட்டனர்.  கலைஞரைப் பாராட்டியதை எண்ணினேன்.  எனக்கு உடல் சிலிர்த்தது.

மறத்தல் எப்பேர்ப்பட்ட வரப்பிரசாதம்.  ஆனால் அது மாமனிதர்களுக்கே கிடைக்கிறது.  எளியவர்களுக்கல்ல.

காமராசரைக் கொண்டு கலைஞர் சிலையைத் திறந்து வைக்கும் விழா வாய்க்காமலே போய் விட்டது.  நடந்திருந்தால் அது வெறும் சிலைத் திறப்பு விழாவாய் இருந்திருக்காது.  தமிழனின் வரலாற்றில் மூவாயிரம் ஆண்டுகளில் மறக்க முடியாத நினைவுச் சின்னமாய் இருந்திருக்கும்.


...திருச்சி செல்வேந்திரன்..சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!....நக்கீரன் வெளியீடு....பகுதி 5 ல் தொடரும்..தலைப்பு ''அன்று வந்த சோதனை''