Pages

Wednesday 26 January, 2011

பெண்ணியம் பற்றி அதிக அக்கறைப்படுபவர்களிடம் ஒரு சில கேள்விகள்....? கற்புக்கரசிகள் யார்...?




பெண்ணியம் பற்றி அதிக அக்கறைப்படுபவர்களிடம் ஒரு சில கேள்விகள்....? பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தால் என்ன ஆகும் எனப் பயப்படும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவரிடம் சில கேள்விகள்....?

பெண்ணுக்கு ஆண் சுத்ந்திரம் வழ்ங்க வேண்டுமா? அல்லது பெண்ணே சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமா?

மனிதன் என்ற சொல்லுக்குள் அடங்கியவர்கள் தான் பெண், ஆண், திருநங்கைகள் என இம்மூவரும் .

இதில் மனிதவுரிமை எனபது இம்மூவருக்கும் சமமாக இருப்பது தான். இதை இவருக்கு வழங்கினால் என்ன? ஆகும்?......... அவருக்கு வழங்கினால் என்ன ஆகும்? என்று வினவுவதே தவறான ஆணாதிக்க மனப்பான்மை....? எவருடைய சுத்ந்திரத்தையும் எவரும் தட்டிப்பறிக்க முடியாது...இந்த மூன்று பாலினத்தின் சுதந்திரத்தை நிர்ணயிக்கும் உரிமை ஒரு பாலினத்திற்கு மட்டும் வழங்கப்படவில்லை.

மனிதவுரிமை என்ற நீர் நிறைந்த பாத்திரத்தில் அனைவரும் சுதந்திரத்துடன் நீர் பருகவே இந்த சமுதாயத்தில் அந்த பாத்திரம் உருவாக்கப்பட்டது. ஆனால் நிகழ்வில் அவ்வாறு நடைபெறுவதில்லை,,,,

ஆண் அந்த பாத்திரத்தை சுற்றி நின்று மறைத்துக்கொண்டு பெண் மற்றும் திருநங்கைகளுக்கு வழிவிடாமல், மனிதவுரிமை என்ற நீரைப்பருகவிடாமல்  மறைத்துக்கொண்டுள்ளனர், இதில் மீறி ஆணை விலக்கிக்கொண்டு மனிதவுரிமை பாத்திரத்தை அடையும் பெண்ணை பெரிய அதிசயத்துடன் பார்க்கும் பார்வை தான் இந்த சமுதாயத்தில் நிலவுகிறது.

பெண்ணுக்கு ஆண் சுதந்திரம் வழங்கத் தேவையேயில்லை, அந்த அதிகாரமும் அவனுக்கு இல்லை. அனைவரின் மனிதவுரிமையும் ஏற்கனவே அந்த பாத்திரத்தில் நிறைந்து இருக்கிறது. ஆகையால்

பெண்களே! உங்கள் சுதந்திரத்தை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்!

 யாரிடமும் இதற்காக கையேந்தாதீர்கள்!.

பெண்களின் சுயமரியாதையை பெண்கள் தான் காத்துக்கொள்ளவேண்டும்.

எந்த கட்டுப்பட்டித் தனத்திற்கும் ஆட்படத்தேவையேயில்லை. எந்த விமரசனத்தைப் பற்றியும் கவலைப்படத்தேவையில்லை.

பெண்ணியம் பற்றிப் பேசுபவர்கள் சிறு இனிஷியல் விஷயத்தைக் கூட மாற்றுவதில்லை, துறப்பதற்கு மனமில்லை,,,,

பெண், ஆண் திருமணம் புரிந்தால் பெண் தான் ஆணின் தலைப்பெழுத்தை (இனிஷியலை) சூட்டிக்கொள்கிறார். ஆண் அவரின் தகப்பனார் தலைப்பெழுத்தை அப்படியேத் தாங்கி கொண்டிருக்கிறார். பெண் தன் தந்தைப் பெயரின் தலைப்பெழுத்தைக் கூட வைத்துக்கொள்ள உரிமை இல்லை.

தம்பதியர் இருவரினால் பிறந்த பிள்ளைகளுக்கு கூட ஆணின் தலைப்பெழுத்து  (இனிஷியல்) மட்டுமே வைக்கப்படுகிறது.

 ஏன்? பெண், ஆண் என இருவரின் தலைப்பெழுத்தை வைத்தால் என்ன? இந்த உரிமைகளை கூட பகிர்ந்து கொள்ள மனமில்லாமல் வாய் கிழியப் பெண்ணியம் பற்றி பேசுபவர்கள் இந்த உலகில் இன்னும் உண்டு.


எங்கே? எந்த ஆணாவது பெண்ணின் தந்தைப் பெயரின் முதலெழுத்தை சூட்டிக்கொள்கிறார்களா?....ஆண் அவரின் தந்தையின் தலைப்பெழுத்துடன் (இனிஷியலுடன்) இருக்கட்டும், பெண் அவர் தந்தையின் தலைப்பெழுத்துடன் (இனிஷியலுடன்) இருக்கட்டும். இதில் என்ன மாறுபாடு வந்துவிடப்போகிறது. ஒற்றுமைகள் தான் வளரும். இதெல்லாம் சடங்குகள் அல்ல....சடங்குகள் என்ற பெயரில் வளர்க்கப்படும் ஆணாதிக்க மனப்பான்மைகள்.

குடும்பத்தலைவர் என்றால் பெண், ஆண் இருவரும் தான் குடும்பத்தலைவர்.


பெண் மட்டும் திருமணம் ஆனவுடன் பெண்ணின் தந்தையை அப்படியே கழற்றி விட்டுவிடவேண்டும். ஆனால் ஆணுக்கு மட்டும் பெண்ணின் தந்தை சம்பாதித்த சொத்து மட்டும் வேண்டும்.

கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்கள் கூட ரொம்ப பெரிய புரட்சி செய்துவிட்டதாக மார்தட்டிக்கொள்வார்கள்

. என்னப் பெரிய புரட்சி...ஆணின் சமயத்தைதான் பெண் வேண்டாவெறுப்புடன் பின்பற்றவேண்டும். ஆணின் சாதியக்கோட்பாட்டைத்தான் பெண் பின்பற்ற வேண்டும். அங்கேயே காதல் செத்துவிட்டது. இது சமய்ததிற்கான ஆட்சேர்ப்பேத் தவிர இது கலப்புத் திருமணம் அல்ல...

சமயத்தையும் சாதியையும் துறக்காமல் என்ன கலப்புத்திருமணம்? என்ன பெரிய புரட்சி..?

பெண் சுதந்திரத்துடன் அவரின் பிறப்பின் சமயத்தை தழுவ உரிமையிருக்கிறதா? அப்புறம் என்ன? ஈருடல் ஒர் உயிர். ''உனக்காக என் உயிரையும் விட்டுக்கொடுப்பேன் என்பதெல்லாம் சும்மா தானே....!.

பாரதியார் பெண்ணியம் பற்றி புரட்சியாக எழுதினார்....என்று பீய்த்திக்கொள்ளும் பெருமை பீய்த்தக்களையர்களும் உண்டு...

எங்கே! பாரதியார் பெண்ணியம் பற்றி கவிதை எழுதிவிட்டு அவர் வீட்டில் பெண்ணடிமைத்தனத்தைதான் பேணினார்.

இதைத்தான் விவேகானந்தரின் பெண் சீடரான நிவேதிதா அம்மையார் பாரதியாருக்கு சுட்டிக்காட்டினார்.

''உன்வீட்டில் உள்ள குப்பைகளை முதலில் அகற்று.... ஊர் குப்பைகள் தானாக அகன்று விடும்''.

''சாதிகள் இல்லையடி பாப்பா'' என்று பாடிய பாரதி....  மட்டும் பூணூலை மாட்டிக்கொண்டு தன்னுடைய பார்ப்பன ஜாதியை கெட்டியாகப்பிடித்து கொண்டிருந்தால்....சாதி ஒழிந்து விடுமா?....அல்லது பாரதியார் தான் பெரிய மனிதராக ஆகிவிடுவாரா? இல்லை அதை பாப்பாவுக்குத்தான் சொன்னேன் எனக்கில்லை என்ற அர்த்தமாகிவிடுமா?

நம்முள்ளத்திலேயே மிகப்பெரிய மூடநம்பிக்கை இருந்து கொண்டுதான் இருக்கிறது. நம் வீட்டுப்பெண்களையே நாம் மதிப்பதில்லை. இப்படித்தான் ஒரு தனியார் நிறுவனப் பணி நேர்காணலில் ஒருவரிடம் அந்த நிறுவனத்தாரால் கேள்வி கேட்கப்பட்டது.

''பெண்கள் எப்படி இருக்கவேண்டும்.''

அதற்கு விண்ணப்பத்தாரர்...கூறிய பதில்...

.''கற்புக்கரசிகளாக இருக்கவேண்டும்''.கணவனே கண் கண்ட தெய்வம் என்று இருக்கவேண்டும்''

 ''அப்படியா! கற்புக்கரசிகள் என்றால் என்ன? அப்படி யாராவது உள்ளார்களா?''

உடனே விண்ணப்பத்தாரர்.... கோப்பபட்டு

''என்ன இப்படி கூறுகிறீர்கள்....தமிழ் நாட்டில் கண்ணகி, நளாயினி, சாவித்திரி....இப்படி பலர் இருந்தனர்''என்று காணாத கற்புக்கரசிகளை பதிலாக தந்தார்.

என்னப்பா கோப்படுகிறாய்.!..இவ்வளவு பெரிய சமூகத்தில் 3 பேரை மட்டும்தான் கூறுகிறாய்....? அதுவும் காணாதவர்களை பற்றி மட்டும் தான் கூறுகிறாய்....
''ஏன்? நிகழ்வில் இருப்பவர்கள் யாரும் உன்நினைவிற்கு வர வில்லையா...?''

இப்படி சுட்டிக்காட்டியும் புரிந்து கொள்ள முடியாத அந்த மூட விண்ணப்பத்தாரர்....மறுபடியும் பழமைவாதத்தைதான் தன்பதிலாக வைத்தார்....

''இன்னும் நிறையா பேர் இருக்கிறார்கள்....எனக்கு நினைவில்லை....

அதைக்கேட்டு சிரித்த அந்த நேர்காணல் அதிகாரி....

''ஏனப்பா! உன் அம்மா....உன் ஆயா....உன் தங்கை....உன் அக்காள், உன் நெருங்கிய உறவினர்கள் என இவர்கள் எல்லாம் உன் நினைவுக்கு வரவில்லையா? அவர்கள் கற்புக்கரசிகள் இல்லையா...? உன்னை சுற்றி இருப்பவர்களைப் பற்றியே உனக்கு நினைவுக்கு வரவில்லை...தெரியாத கற்புக்கரசிகளைப் பற்றி நினைவில் வைத்துக்கொண்டு என்ன பயன்....''

அப்போது தான் அவருடையத் தவறு அவருக்கு புரிந்த்து....மண்டையை சொரிந்தார் பேண் வரும் அளவிற்க்கு....

இன்னும் சிலர் ஆட்டோவில் இப்படி எழுதி வைத்திருப்பார்கள்....
சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!

எங்கே சிரிக்கும் அம்மாவை நம்பமாட்டாயா? சிரிக்கும் உடன்பிறந்த சகோதரிகளை நம்ப மாட்டயா? சிரிக்கும் எந்த நெருங்கிய பெண் உறவினர்களையும் நம்ப மாட்டியா?

உன்னை உயிர்ப்பித்த தாய்க்குலம் சிரிப்பதைக் கூட நம்பாத நீ என்னத்திற்காக உயிர் வாழவேண்டும்.!

பெண்களை போகப்பொருளாக வர்ணிப்பதை தவிர இவர்களுக்கு வேறெதுவும் தெரியாது....

பெண்களை பொது இடத்தில் விளிப்பது கூட நாகரிகமற்ற முறையில் அவள், இவள் என்று தான் ஆண்களால் விளிக்கப்படுகிறார்...கணவனே கூட ''அவள் அப்படித்தான்'' என்று பொது இடத்திலேயே பலர் முன்னிலையிலேயே விளிக்கிறான்...பெண் தன் கணவனை எந்த இடத்திலும் ''அவன்'' என்று பொது இடத்தில் விளிப்பது கிடையாது. ''அவர்'' என்று தான் மரியாதையுடன் கூறுவார். அதே மரியாதையை பெண்ணுக்கு ஆண் அளிப்பதில்லை.

பெண்கள் மாதந்தோறும் துன்பமுறும் விஷயமான மாதவிடாய்...மறுஜென்மம் எடுக்கும் மகப்பேறுவைப் பற்றி பல ஆண்களுக்கு சிந்திக்க தெரியாது....உயிரைப்பிடித்து கொண்டு உயிர் உருவாக்கும் உன்னதத்தைப் பற்றி பல ஆண்கள் உணர்வதும் கிடையாது.

பெண்களுக்கு இயற்கையிலேயே துன்பம் அதிகம்! இதை உணர்ந்தவன் மனிதன்!

மேலே குறிப்பிட்டதைப் போலத்தான் இந்த பெண்ணியம் பற்றி கருத்து வைப்பவர்களும் தங்களை சுற்றி பெண்ணடிமைத்தனம் எந்தளவில் இருக்கிறது என்பதை உணராமல், அதை மாற்ற ஒரு சிறு முயற்சியும் எடுக்காதவர்கள், இன்னும் பெண்ணியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இதுவரை பெண்ணியம் பற்றி கருத்து வைத்தவர்கள் இந்த இடத்தைக்கூட தொட்டுக்காட்டியது கிடையாது. நம்மை சுற்றி இருப்பவைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதே கிடையாதே! அடுத்த வீடு! அடுத்த நாடு! இதைப்பற்றி பேச சொன்னால் நாள் முழுதும் வாய் வலிக்கும் அளவுக்குப் பேசும் மனப்பான்மை தானே....நாட்டில் பெருத்து இருக்கிறது.

முதலில் பாரதியார் பாடல்களை உதாரணம் காட்டுவதை நிறுத்தவேண்டும்!. அவரே அவர் பாடலில் சுட்டிக்காட்டியபடி பின்பற்றி நடக்கவில்லை.

வேண்டுமென்றால் வியாபாரத்திற்கு அவர் பாடலைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


ஒரு பெண் சமுதாயத்தில் பிறக்கும் பொழுதே திருமணத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு தான் அடிமையாகவே குழந்தையில் இருந்து வளர்க்கப்படுகிறார்...பெண் பிள்ளைகளுக்கு எல்லா வீட்டு வேலைகளும் இளமையிலேயே கற்றுத்தரப்படுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் ஆணாதிக்கம் கற்றுத்தரப்படுகிறது. பெண் இன்னொரு வீட்டிற்கு போகப்போகிறவர் என்ற எண்ணத்தில் தான் வளர்க்கப்படுகிறார். வீட்டில் உள்ள அனைவரது துணிகளையும் துவைப்பது முதல் சமையல் வேலை வரை பெண் தான் செய்யவேண்டும். அதன்பிறகு கல்வியிலும் கவனம் செலுத்தவும் வேண்டும், அதில் முதன்மை பெற வேண்டும்....

திருமணத்திற்கு பின்னும் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடவேண்டும். பின்பு அதே பெண்ணே ஆணாதிக்க மனப்பான்மைக்கு உடன் பட்டவறாக மாற்றவும் படுகிறார். பெண்ணே பெண்ணிற்கு எதிரியாக மாறுவது இப்படித்தான்...அது தான் மாமியார் மருமகள் சண்டைகளாக மாறுவதற்கான காரணம். 

பெண் செய்யும் அத்தனை குற்றத்திலும் ஆண் சம்பந்தப்பட்டிருப்பான். பெண் தனித்து எந்த குற்றத்தையும் புரிந்ததில்லை....எந்த குற்றத்தின் பின்னணியிலும், எப்பொழுதும் ஒரு ஆண் சம்பந்தப்பட்டிருப்பான்....

(அது தந்தை, சகோதரன், காதலன், கண்வன், மகன், மச்சினன், மருமகன், பேரன்....என்று யாராவது ஒரு ஆடவன் சம்பந்தப்பட்டிருப்பான்)

பல சமயங்களிலும், புரணாங்களிலும் பெண்களை இழிவுப்படுத்தி தான் கூறப்பட்டுள்ளது...அதில் பார்ப்பன இந்து சமயம் மிக மோசம்...இன்னும் சில இதர சமயங்களிலும் அப்படித்தான் இழித்து ஆணாதிக்கத்திற்கு ஆதரவாக ஆண் மதவாதிகளால் வஞ்சகமாகப் புகுத்தி எழுதப்பட்டுள்ளது.

இன்னும் இதர சமயங்களில்.....

பாலியியல் தொழில் புரியும் பெண்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்....

''பெண் எப்படி தனியாக பாலியியல் தொழில் புரிய முடியும்!''

அந்த தொழில் புரிய காரணமான ஆணுக்கு எந்த தண்டனையும் கிடையாது....முதலில் இந்த தொழிலுக்கு காரணமான அந்த ஆணைத்தான் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்....(யாரையும் கொல்ல வேண்டாம்...சட்டம் சும்மா விடாது...)

அம்மாதிரி சமயக்குப்பைகளை தயக்கமில்லாமல் கொளுத்துங்கள்!

திரைப்படங்களும் இம்மாதிரி பெண்ண்டிமைத்தனங்களை காசுக்காக காட்சிப்படுத்திக் காட்டும். பெண்ணை கை நீட்டி அடிப்பது போன்ற காட்சிகளை, ஆணாதிக்கத்தை ஊக்குவிப்பது போல், ஆதரிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இக்காட்சிகளை முதலில் தணிக்கைத் துறையினர் அனுமதிக்க கூடாது. அப்படி அடிக்கும் திரைக்கலைஞர்களையும் மக்கள் ஆதரிக்க கூடாது.

பல உடன்பிறந்த சகோதரிகளைப் பெற்றிருக்கும் ஆண் கூட தன் தங்கை, அக்காள் எந்த காதலும் செய்துவிடக்கூடாது...எனபதிலேயே கவனத்துடன் இருக்கிறான்...

அவன் மட்டும் இன்னொருவரின் சகோதரிகளைப் பார்த்து ஜொல்லு விடலாம்...காதல் செய்யலாம் ...காதல் என்ற பெயரில் கயமைத்தனம் புரியலாம்..

தன் சகோதரிகள் எந்த ஆணையும் ஏறெடுத்து பார்க்க கூடாது. எந்த ஆணும் அவன் உடன்பிறந்த தமக்கைகளை ஏறெடுத்தும் பார்க்க கூடாது. பார்த்தால் அவனுக்கும் உதை, அவன் சகோதரிகளுக்கும் உதை.

.இதுதான் ஆணாதிக்கமனப்பான்மை....தனக்கு இருக்கும் அதே உணர்ச்சிகள் தான் அவன் சகோதரிகளுக்கும் இருக்கும் எனபதை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள் தான் இந்த உலகில் அதிகம்.


ஒரு ஆண் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். மனைவி இறந்த மறுநிமிடமே..!. மாறாக பெண்ணிற்கு உணர்ச்சிகளே இருக்க கூடாது. இளம் பெண்ணை திருமணம் புரிந்த கையோடு வீட்டில் விட்டு விட்டு தனியாக பொருள் சம்பாதிக்க வெளிநாடு சென்றாலும் கற்புடன் உணர்ச்சிகளை அடக்கிகொண்டு இருக்கவேண்டும். இவன் மட்டும் போகிற இடத்தில் எல்லாம் மேயலாம் கற்பாவது மண்ணாங்கட்டியாவது.


ஒழுக்கத்திற்கு கூட ஆணுக்கு பல விதிவிலக்குகள்...பெண்ணிற்கு மட்டும் தான் கற்பு..நெறி....

ஆணுக்கு அது தேவையே இல்லை...ஒழுக்கமும் தேவையே இல்லை...இதுதான் இந்த சமூத்தின் மூட நியதி...

பெண்ணியம் பேசுபவர்களே! முதலில் உங்கள் வீட்டுப் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்....நீங்கள் பழமைவாதிகளாக இருந்து கொண்டு ஊருக்கு உபதேசிக்கப் புறப்படாதீர்கள்....!

''பெண்'' குழந்தையில் இருந்து முதுமை அடையும் வரை அடிமையாகவே வாழ்கிறாள்! வாழவைக்கப்படுகிறாள்! ஆண்களால் அடிமைப்படுத்தப்படுகிறாள்...இதை எதிர்ப்பவர் வீட்டிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது,,,,என்பது தான் உண்மை....முதலில் அதைக்களைய முற்படுங்கள்....

வீட்டிற்குள்ளே களையவேண்டிய பெண்ணடிமைத்தனங்கள் நிறைய உள்ளன...கன்னிகாதானம், வரதட்சணை, இனிஷியல், பெண்ணை வேலைக்காரியாக, கொத்தடிமையாக வளர்ப்பது,,,போன்ற நிறைய அடிமைத்தன விஷயங்கள் உள்ளன...

பெண்கள், திருநங்கைகள் அவர்களுடைய சுத்ந்திரத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது, ஆண்கள் அதை தடுக்காமல் அவர்களுக்கான வழியை அடைத்துக்கொள்ளாமல் வழிவிட்டாலேப் போதுமானது. 
....தகவலுக்காக.