Pages

Friday 6 June, 2014

தமிழர்களே, எகிப்திய வளர்ச்சிக்கு காரணமானவர்கள் என்று விவேகானந்தர் கூறுகிறார் -பேராசிரியர்

ரு அரசியல் கண்ணோட்டத்திலே தென்னாட்டுக்காகக் குரல்  எழுப்புகிற முறையில் தமிழ்நாடு – திராவிடநாடு, தமிழ்நாடு, பண்பாடு, நாகரிகம், திராவிட மொழிகள், கலைகள் ஆகியவைகளுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உணர்வோடு, அண்ணா அவர்கள் ‘தென்னாடு அகில இந்தியாவிற்கும் வழங்குவதற்கான ஒரு தனித்தன்மை – சிறப்புடையதான கலாச்சார மேன்மை கொண்டதாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்கள்.  ஒரு வேளை, அண்ணா அவர்கள் சொன்னது என்பதால், அந்தக் கருத்துக்கு அனைத்துத் தரப்பினரும் இசைவு தெரிவிப்பது கடினமல்லவா?



நூறு ஆண்டுகட்கு முன்னரே சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்;


The Madras Presidency is the habitat of the Tamil race whose civilization was the most ancient and a branch of whom called the Sumerians, spread a vast civilization on the banks of the Euphrates, in very ancient times, whose astrology, religious lore, morals furnished the foundation for the Assyrian, and Babylonian civilization, and whose mythology was the source of Christian Bible.  Another branch of the Tamilians spread from the Malabar coast, and gave rise to the wonderful Egyptian civilization, and the Aryans also are indebted to this race in many respects.





சென்னை மாநிலத்தை வாழ்விடமாகமாகக் கொண்டுள்ள தமிழர்கள், மிகவும் தொன்மையானதொரு நாகரிகம் பெற்றவர்களாதலின், அவர்களில் ஒரு பிரிவினரான சுமேரியர்கள், மிகவும் பழங்காலத்திலேயே யூப்ரடீஸ் நதிக்கரையில் விரிந்ததொரு நாகரிகத்தைப் பரப்பியதால், அவர்தம் சோதிடக்கலை, மதப்பழங்கதைகள், ஒழுக்க நெறிகள் ஆகியவையே அசிரியன், பாபிலோனிய நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையானதுமின்றி அவர்தம் புராணச் செய்திகளே கிறித்தவர்களின் விவிலியத்திற்கு (பைபிள்) மூலமாகவும் அமைந்தன.  மேற்குக் கடற்கரையில் (மலபார்) இருந்து சென்று பரவிய மற்றொரு பிரிவான தமிழர்களே – வியக்கப்படும் எகிப்திய நாகரிக வளர்ச்சிக்கும் காரணமாயினர்.  ஆரியர்களும் இந்தத் தமிழ் இனத்திற்குப் பல வகையிலும் கடமைப்பட்டுள்ளனர், என்று கூறியுள்ளார் சுவாமி விவேகானந்தர்.        



சுவாமி விவேகானந்தர் அரசியல்வாதி அல்லர்.  திராவிடர் இயக்கத்தைக் கண்டதால் இப்படிச் சொல்கிறவர் அல்லர்.  உலகத்திற்கெல்லாம் ஒரு கலாச்சாரத்தை வழங்கிய வரலாறு படைத்த ஒரு தொன்மையான இனத்தைச் சார்ந்தவர்கள் வாழுகிற நிலம் தமிழ்நாடு என்று அவர் குறிப்பிட்டார்.  ‘’இந்தியாவிலேயே நல்ல பண்பாடுடைய மக்கள் வாழுகிற பகுதியாக விளங்குவது தென்னாடு!’’ என்று பிறிதோர் இடத்திலே சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டார்.  ஆகவே தென்னாட்டுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது; மறக்கவும் கூடாது.                                                      



..கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிட இயக்கக் கருத்தரங்கம் தொடக்க உரை  நாள் 27.04.1998, இடம் சென்னைப் பல்கலைக்கழகம்..புத்தகம் திராவிட இயக்கம் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி. பக்..13-14-பூம்புகார் பதிப்பகம்.

No comments: