Pages

Tuesday 11 October, 2011

பரமக்குடி படுகொலை-வெளிவராத வீடியோத் தகவல்கள்

*********************************************

பொது ஜனம்; போலீசு பிஸ்டலை எல்லாம், கலவரத்துல வெளிப்படையா யூஸ் பண்ணலாமா?....அது சகட்டு மேனிக்கு குறித்தவறித்தான் சுடும். 

பொது ஜனம்; ஊர்வலம் கலவரத்துல, அதை அடக்கறதுக்கு பையோனெட் ரைபிலைத்தான் யூஸ் பண்ணுவாங்க அதையும் ஷோல்டர்ல முட்டுக்கொடுத்துதான் சரியா சுடமுடியும். இவங்க என்ன? கொலைவெறிப்பிடிச்சவன், கொள்ளைக்காரன் சுடற மாதிரி சுடறானுங்களே!

பொது ஜனம்;தற்காப்புக்காக லைசன்சோட சுடறவங்க கூட இது மாதிரி சுடமாட்டேங்களேய்யா?

பொது ஜனம்; உட்கார்ந்து அந்த பையோனட் துப்பாக்கியில் குறிபார்த்து சுடறதுக்குள்ளே மக்கள் சும்மா இருக்கமாட்டாங்கே!

பொது ஜனம்; அப்ப ஏ.கே47 வைச்சு சுடறது தானே!
பொது ஜனம்; அதை அடுத்த தடவை யூஸ் பண்ணுவானுங்க!

பொது ஜனம்; அப்ப! அவங்க குடும்பத்தை நோக்கி ஒரு தடவை சுட்டுட்டு அப்புறம் பொது மக்களை சுடட்டும்!

பொது ஜனம்; மக்கள் என்று ஒத்துகிட்டதுக்கு சரி! மக்கள் வானத்தை நோக்கி சுட்டாலே ஒடிடுவாங்களேய்யா! லத்தியை சுழட்டுனாலே நம்மூர் ஆளுங்க ஓடுவாங்க! லத்தி அடின்னா சும்மாவா! "பொடம்" வைச்சுரும்!  வெளியிலே காயமேத் தெரியாது.

பொது ஜனம்; யோவ்! சும்மா இருய்யா! பத்து பேர் ரைபில் வைச்சு காலை குறிபார்த்து சுட்டாலே போதும். 

பொது ஜனம்; ஆமாய்யா! ஒரு பையோனட் துப்பாக்கிய வைச்சு, 3 கி.மீ தூரத்தில இருந்து கூட குறிதவறாம சுட முடியும். வரிசையா ஆறு பேரை நிக்கவைச்சு சுட்டாக்கூட குண்டு முதல்லே இருக்கறவனை துளைச்சி, பின் ஆறாவதா இருக்கறவனையும் துளைச்சிகிட்டு அந்த பக்கமா வெளியே வந்துரும்! தெரியுமில்லே! என்னமோ! எங்ககிட்டே வந்து பீலா வுடறே!

பொது ஜனம்; இவனுங்க! கொலை வெறியிலே எல்லோரும் சாவட்டம்னு சகட்டு மேனிக்கு சுட்டு இருக்கானுங்க! 

பொது ஜனம்; அதான்! அங்கேயிருந்த  நிராயுதபாணியான பெரியவரை கூட எப்படித் தாக்குறானுங்க பார்! இவனுங்க மனுசனுங்களா! 

பொது ஜனம்; ஏய்யா கொய்யாலே! அப்சல் குரு..அந்த குரு...இந்த குருன்னு பலபேரை கொன்னவனுங்களுக்கே கருணை காட்ட சொல்லி சொல்றானுங்க! அப்புறம் ஏய்யா இந்த கொலைவெறி!

பொது ஜனம்; பஸ்ட்! இந்த செயலை செஞ்சவனுங்களை தூக்கில போடச் சொல்லுங்கய்யா! 

பொது ஜனம்; உச்சநீதிமன்ற சொன்ன வழிகாட்டுதல்கள்ல ஒன்னைக் கூட இவனுங்க பின்பற்றலை! 

பொது ஜனம்; இந்த மாதிரி அளுங்களை காப்பாத்ததான் ஜெயலலிதா பாடுபடுதா? 

பொது ஜனம்; ஜெயலலிதா சொல்லாமலா....? இதையெல்லாம் செஞ்சாங்க!

பொது ஜனம்; சி.பி.ஐ வைச்சு விரைவு நீதிமன்றத்துல இவனுகளுக்கு கடுமையான தண்டனையை விரைவாக வழங்கணும்.


No comments: