Pages

Monday 6 May, 2013

ராமர் தடவிய அணில் குஞ்சும் மதக்கலவரமும்...சுப.வீ (கலைஞர் சிறுகதை)







  • ''''ங்கேயும் எப்போதும் ஒரு மதக்கலவரம் வருவதற்கான ஒரு சூழல் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.''''


    • தம் என்பது அவரவருடைய ''வாழ்க்கை நெறி'' அல்லது ''வாழ்க்கை முறையாக'' இருக்கிற வரையில் யாருக்கும் எந்த சிக்கலும் இல்லை. 


    • அவரவர் நெறியில் அவரவர் வாழ இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் எல்லோருக்கும் ''உரிமை'' இருக்கிறது.


    • ஆனால், எப்போது மதநெறி எப்போது மதவெறியாக மாறுகிறதோ, அந்த நாடு கலவரத்துக்கு உள்ளாகி விடுகிறது. பொதுவாகவே நாம் கணக்கெடுத்துப் பார்த்தால், இரண்டு நாடுகளுக்கு நடந்த போரில் இறந்துப்போன மனிதர்களைக் காட்டிலும், இரண்டு மதங்களுக்கு இடையே நடந்த போராட்டங்களிலும், கலவரங்களிலும் இறந்துபோன மனிதர்களின் எண்ணிக்கை தான் கூடுதலாக இருக்கிறது.

    அதுவும்1992 ஆவது ஆண்டு பாபர் மசூதிஇடிக்கப்பட்டதற்குப் பிறகு இந்தியா முழுவதும் இதுபோன்ற கலவரங்கள் அங்கேங்கே நடந்துகொண்டிருக்கின்றன. ஒருபக்கம் கலவரம் என்றால் இன்னொரு பக்கம் மதநல்லிணக்கம் குறித்த கலை இலக்கியங்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன அப்படிப்பட்டஒரு சிறுகதை, மதம் என்பது அவரவர்வாழ்க்கை நெறியாக இருக்கட்டும், ஏன்மோதிக் கொள்கிறீர்கள் என்கிற உணர்வை ஊட்டுகிற சிறுகதையாக உள்ளது.  அணில்குஞ்சுஎன்பது  அக்கதையின் பெயர்.  மிகஅருமையான கதை அது. எழுதப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  இப்போதும்அந்தக்கதை பொறுத்தமாக இருக்கிறது.

    பாரூக் என்று ஒரு இளைஞன், 10 வயதுஇருக்கும்.  பள்ளிக் கூடத்தை விட்டு வெளியிலே வருகிறபோது, முதலில் ஒரு கூட்டத்திலே பேசுகின்ற ஒரு செய்தி அவன் காதிலே விழுகின்றது.  கொஞ்சதூரம் நடந்து வந்தால், இன்னொருகூட்டத்தில் பேசப்படுகின்ற செய்திகளும் அவன் காதிலே விழுகின்றன.  முதல்கூட்டத்திலே, பாபர் மசூதியைஇடித்தது சரிதான் என்று பேசப்படுகிறதுஇன்னொரு கூட்டத்தில்பாபர் மசூதியை இடித்ததினாலேதான் நாட்டிலே இத்தனை கலவரங்களும் என்றுசொல்லப்படுகிறது. இரண்டையும் கேட்டுக் கொண்டு பாரூக் வருகிறபோது, மரத்தில் இருந்து தொப்பென்று ஒரு அணில் குஞ்சுகீழே விழுகிறது.  அப்போதுதான் பிறந்திருக்கிற, அழகான வேகமாக ஒடமுடியாத ஒரு அணில் குஞ்சு.  அதைப் பார்த்தபோது, அந்த பாரூக் என்கிற சிறுவனுக்கு அந்த அணில்குஞ்சின்மீது ஒரு ஆர்வம் ஏற்படுகிறது.  அதைப் பிடித்து தனதுகைகளிலே வைத்துக் கொள்கிறான்.  அழகாக இருக்கிறது.  அதுசின்ன அணில் குஞ்சு என்பதினாலே அதனுடைய கீழ்ப்பகுதி சிவந்திருக்கிறது.  அதுஅதற்கு மேலும் அழகூட்டுகிறது.  அதன் மேலே இருக்கிறமூன்று கோடுகளையும் அவனும் ஒருமுறை தடவிக் கொடுத்து, அந்த அணில் குஞ்சைத் தன்னுடைய வீட்டுக்குக் கொண்டு வருகிறான்.

    அவனுடையஅம்மா கேட்கிறாள், என்னடா இந்தஅணில் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறாயே என்று.  அம்மா மரத்திலிருந்துதொப்பென்று விழுந்தது,  அழகா இருக்கும்மா அதனால தூக்கிட்டு வந்தேன்என்று சொல்கிறான். அப்போது கறிக்கடை வைத்திருக்கிற அவனுடைய வாப்பாவீட்டுக்குள்ளே வருகிறார்.  அவரும் அந்த அணில்குஞ்சைப் பற்றிக் கேட்கிறார்.  முதலில் அவரும் அழகாய்இருக்கிறது வைத்துக் கொள் என்று தான் சொல்கிறார்.  ஆனால் பாரூக் சொன்னசிலவார்த்தைகள் அவருக்கு கோபமூட்டுகின்றன.  பாரூக் சொல்கிறான் அப்பாஇந்த அணில் குஞ்சுக்கு மேலே மூன்று கோடுகள் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்களா?  இது ராமனுக்கு பாலம் கட்ட இந்த அணில் குஞ்சு உதவியபோது அவர் தடவிக் கொடுத்ததினாலேவந்துச்சாம்எங்க பள்ளிக் கூடத்திலே டீச்சர் சொன்னாங்க என்று  சொன்னவுடனேயே வாப்பாவுக்கு கோபம் வருகிறது.  ஏன்டாராமன் வைத்திருந்த குஞ்செல்லாம் இங்கே ஏன் கொண்டுவருகிறாய்கொண்டுபோய்முதலில் வெளியே விடு என்கிறார்.


    • அணில்குஞ்சு அழகாக இருக்கிறதுஅதை நீ வைத்துக் கொள்என்று சொன்ன அதே மனிதர்தான், மதத்தோடுதொடர்பு படுத்தப்பட்ட உடனேயே கோபப்பட்டு, அப்படி ராமர் தடவிக் கொடுத்த அணில் என்று டீச்சர் வகுப்பிலே சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்றால், அதையெல்லாம்நம் வீட்டிலே வைத்துக் கொள்ளக் கூடாது, அதை முதலிலே கொண்டு வெளியே விடு என்கிறார்.  அந்தப் பையனுக்கு மனம்வரவில்லை


    • அழகாக இருக்கிற இந்த அணிலுக்குள் எப்படி? ''மதம்'' வந்து சேர்ந்தது என்றுஅந்தச் சிறுவனுக்குப் புரியவில்லை

         ஆனாலும், வாப்பாவோடு அதை எல்லாம் கேட்டு வாதாடமுடியாது.  இல்லையப்பாநான் வைத்துக்கொள்கிறேன் என்று கெஞ்சிப்பார்க்கிறான்.  அவர் விடுவதாக இல்லை.  அம்மாஇடையிலே புகுந்து, இரண்டுபேருக்கும் இடையில் ஒரு சமாதானம் செய்கிறாள்.  சரி, நீங்கள் சொன்னதற்கு அப்புறம் அவன் வைத்துக்கொள்ளமாட்டான்., கொண்டு போய் விட்டுவிடுவான். என்று அவள் சமாதானம்செய்கிறாள்.  அந்தச் சமாதானத்தை இரண்டு பேருமே ஏற்றுக் கொள்கிறார்கள்.

         காற்றுப்போவதற்கு வசதியான ஒரு கூண்டுக்குள்ளே இரவு முழுக்க வைத்து,அதற்குத் தேவையான தீனிகளையும் கொடுத்து, அந்த அணிலின் அழகை ரசித்து ரசித்து அந்தப்பையன் பாரூக் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  மறுநாள் காலையில் பொழுதுவிடிகிறபோது சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்.  அப்பாவுக்கு இனிமேலும்வைத்துக் கொண்டிருந்தால் கோபம் வந்துவிடும் என்று அணில் குஞ்சை எடுத்துக் கொண்டு, எடுத்த அந்த மரத்துக்கு அருகிலேயே கொண்டு போய்விட்டு விடலாம் என்று நினைத்து அங்கே போகிறான்.

         போகிறபோது, அந்த ஊரைச் சேர்ந்த ஆராவமுத ஐயங்கார் எதிரிலே வருகிறார்.  என்னடா அம்பி கையிலேஅணில் குஞ்செல்லாம் வைச்சிண்டிருக்கிறே என்று கேட்கிறார்.  இந்தப் பையன் நடந்ததைச்சொல்கிறான்.  இங்கிருந்து நேற்று எடுத்துக் கொண்டு போனேன்.  இது ராமர் தடவிக் கொடுத்தஅணில் என்பதினால வாப்பாவுக்கு கோபம் வந்துவிட்டதுதிரும்பவும் கொண்டுபோய்விட்டுவிடச் சொன்னார், அதற்காகவருகிறேன் என்கிறான்.

          அப்போது ஆராவமுத ஐயங்கார் கேட்கிறார் ''எங்களுடைய ராமர்வைத்திருந்த குஞ்செல்லாம் நீங்கள் ஏன் கொண்டுபோய் வைத்திருக்கிறேள்''.  உங்கள்வீட்டிலெல்லாம் வைத்திருக்க கூடாது இங்கே கொண்டு விட்டு விடுவது தான் சரி,'' என்கிறார்.

    • யாருமேஅதை ஒரு அணிலாக…. ஒரு உயிராகப்பார்க்காமல் ''மதத்தோடு'' இணைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.

         அந்தநேரத்தில் பாரூக்கினுடைய அப்பா அந்த இடத்துக்கு வருகிறார்.  பையனிடம் என்னபேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அவரைப் பார்த்து இவர் கேட்கிறார்.  அவர்நடந்ததை சொன்னபோது வாப்பாவுக்கு மறுபடியும் கோபம் வருகிறது. ராமருக்குஉதவி செய்த அந்த அணில் குஞ்சை நம் வீட்டுக்கு ஏன் கொண்டு வருகிறாய் என்று கேட்டஅதே அப்பா தான், இப்போது ஆராவமுதஐயங்கார் கேட்ட உடனே, ஏன் நாங்கஅணில் குஞ்சை வைத்துக் கொள்ளக் கூடாதுஅது உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? அணில் எல்லோருக்கும்தான் சொந்தம்இதிலே நீங்கள் எப்படிச் சொந்தம் கொண்டாடுவது, உங்கள் மதத்துக்கும் அணிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்வாய்வாதம் வலுக்கிறது.

          சின்னப்பையனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.  கொஞ்ச நேரத்திலே இந்தப்பக்கத்திலே இருந்து இரண்டு பேர் வருகிறார்கள், அந்தப் பக்கத்திலே இருந்து ஒருவர் வருகிறார்.  கொஞ்சம் கொஞ்சமாக விவாதம்சூடேறுகிறது.  அணில் குஞ்சை ஒரு இஸ்லாமியர் தன் வீட்டில் வைத்துக் கொள்ளலாமா? கூடாதா? என்கிற ஒரு தேவையற்ற விவாதம், அந்த இடத்திலே ஒரு சண்டையாக மாறுகிறது.   பலரும் கூடுகிறார்கள்.  இந்தநேரத்தில் பாரூக்கின் அம்மாவும் அங்கே வந்து சேருகிறாள்.   அவள் சொல்கிறாள், போகிற போக்கைப் பார்த்தால், இந்த அணில் குஞ்சினால் பத்துக் கொலை விழும் போலஇருக்கிறது, வேண்டாம் பாரூக் விட்டுவிடு என்கிறாள்.  அதை விடுவதற்குத்தானே வந்தேன் அம்மா, அதற்குள் இவ்வளவு பெரிய சண்டை வந்துவிட்டதே என்கிறான்.

    அமைதியாக…அன்பாக இருந்தவர்களிடத்திலே மதம் இப்படிகலவரத்தை தூண்டி விடுகிறது என்று இந்தக் கதை மிக அழகாகச் சொல்கிறது.  அதற்குப்பிறகும் அதை வைத்துக்கொண்டிருக்க மனமில்லாமல் அந்தப் பையன் அணில்குஞ்சை கீழேவிட்டு விடுகிறான். அப்போது மரத்திலிருந்து ஒரு பருந்து ஒடி வந்து அந்தஅணில் குஞ்சைக் கவ்விக் கொண்டு போய்விடுகிறது.

      இந்த ஊரில் மதக்கலவரம்வந்துவிடாமல் இருக்க வேண்டுமென்று அந்த அணில்குஞ்சு தன்னைத் தியாகம் செய்துகொண்டுவிட்டது என்று அந்தக் கதை முடிகிறது.




    • எங்கேயும்எப்போதும் ஒரு மதக்கலவரம் வருவதற்கான சூழல் இந்த நாட்டில் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற ஒரு அருமையான சிறுகதையாகஇந்தக் கதை இருக்கிறது.

    இந்தக்கதையை எழுதிய எழுத்தாளர் யார் என்று சொல்ல நான் மறந்துவிட்டேன்அத்தனைபேரும் அறிந்த எழுத்தாளர் தான் அவர்.

    நம்முடைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிற கதைதான் இந்த "அணில்குஞ்சு" என்கிற சிறுகதை.

    .…பேரா.சுப.வீ...ஒன்றே சொல் நன்றே சொல்..கலைஞர்தொலைக்காட்சி…தொகுதி 3 பக்..99-103

    No comments: