Pages

Tuesday 8 April, 2014

பூணூல் போட்டு மதப்பிரச்சாரம் பண்ண பாதிரியார்!..வரலாற்றுப் பார்வை

இராபர்ட்டோ டீ நொபிளி

வர் யார்? என்று பார்ப்பதற்கு முன்...மதுரை வரலாற்றின் சுறுக்கம்...                                            
                                                                                                                                                                                                          மதுரை இஸ்லாமியர்களின் பிடியில் இருந்து  கி.பி 1378 ஆம் ஆண்டில் மீண்டப் பிறகு நாயக்க மன்னர்களின் கையில் வந்தது என்பது வரலாறு.  அதற்கு முன் 40 ஆண்டுகாலம் ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் மதுரையில் பல இந்து சமயக் கோயில்களை கப்ளீகரம் செய்தனர்.  கி.பி 1365 முதல் 1378 வரை இஸ்லாமியர்களின் பிடியில் மதுரை இருந்தது. அப்போது பல இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டன.  இந்துக் கோயில்களில் உள்ள சொத்துக்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.  உருவ வழிபாடு செய்பவர்கள் கொல்லப்பட்டனர், சித்ரவதை செய்யப்பட்டனர். பெண்களும், சிசுக்களும் கூட தலையை வெட்டிக் கொல்லப்பட்டனர். பூஜைகள் இன்றி கோயில்கள் மூடப்பட்டன.  பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.  அவர்களின் பிடியில் இருந்து மதுரையை மீட்டவர், விஜய நகர பேரரசின் மன்னர் ''குமார கம்பணர்''.  இவர் விஜயநகர பேரரசு மன்னரான முதலாம் புக்கரின் வாரிசு. இது வரலாறு. அதன் பின் மதுரை நாயக்க மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.                                                                       



(நாயக்கர்கள் என்பது ஜாதிப் பெயர் அல்ல.   தமிழ் தெலுங்கு கன்னடம் பேசுபவர்களுக்கு என்று மதுரைப் பல பிரிவுகளாக பிரித்து ஆளுநர் பொறுப்பாக விஜயநகர பேரரசர்களால் கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கப்பட்டப் ஆளுநர் பொறுப்புகளுக்குப் பெயர் தான்  நாயக், படையாட்சிகள் என்பது.   அந்த பொறுப்புகளுடன் ஆண்ட நாயக்கர்களால், மதுரைப் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு தமிழ் தெலுங்கு.... பேசுபவர்களுக்கு மீண்டும் பல பிரிவுகளாக கொடுக்கப்பட்டது.  அப்படி பிரித்துக் கொடுக்கப்பட்டப் பகுதியை ஆண்டவர்கள் பாளையக்காரர்கள் எனப்பட்டனர்.  இதுவே பின்னாளில் ஜாதிப்பெயர்களாக மாறிவிட்டது...இதுவும் வரலாறு.)                                                                                                         


அப்படி ஒப்படைக்கப்பட்ட மதுரை, நாயக்க மன்னர்களால் ஒரளவுக்கு சீர் செய்யப்பட்டது.  பல காலமாக நிறுத்தப்பட்டிருந்த பல கோயில் பூஜைகள்  மீண்டும் தொடங்கப்பட்டன.  இஸ்லாமிய மன்னர்களின் கண்ணில் மண்ணைத் தூவுவதற்காக, மண்ணில் புதைக்கப்பட்டு, மறைக்கப்பட்ட சாமி விக்ரகங்கள் வெளியே கொண்டுவரப்பட்டு ஆகம விதிப்படி மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  பூஜைகள் வெகுகாலத்திற்குப் பின் விமரிசையாக  நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நடத்தப்பட்டன.              


நாயக்க மன்னர்கள் இந்து சமயத்திற்கு பாதுகாப்பாக இருந்த அதே சமயத்தில் இன்னொரு விஷயத்திற்கும் ஊக்குவித்தனர். அது தான் கிருத்துவ மதப்பிரச்சாரம். இவர்கள் காலத்தில் தான் முதல் முதலாக கிருத்துவ மதச்சாரம் தமிழகத்தில் நுழைந்தது.                  


முதன் முதலாக 1592 ஆம் ஆண்டு கிருத்துவ மதப்பிரச்சாரத்தை தமிழகத்தில் நுழைத்த பாதிரியார் ''கொன்கால்வ்ஸ் பெர்னான்டஸ்'' (Goncalves Fernandez).  அதன் அமைப்பு ஜெசைட் சொசைட்டி.  (Jesuit Society).  ஆனால் இதை ஆரம்பித்து, இவர் தொடர்ந்து பதினான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு மதப்பிரச்சாரம் பண்ணியும் மதுரையில் ஒரு மதமாற்றமும் நிகழவில்லை.            


அதன்பின் அடுத்து வந்த நாயக்க மன்னரான, முத்து கிருஷணப்ப நாயக்கர் (1601 - 1609) காலத்தில் வந்த, இராபர்ட்டோ டி நொபிலி (Roberto de Nobili) என்னும் ரோமானியக் கிறிஸ்துவர், மதப்பிரச்சாரங்களின் மூலம் ஒரளவுக்கு மதமாற்றத்தை கொண்டுவந்தார்.    
 
இவரால் மட்டும் எப்படி? முடிந்தது?     



''இராபர்ட் டி நொபிலி''  (Roberto de Nobili)
மதப்பிரச்சாரத்துக்கு கிருத்துவ உடையுடன் வரவில்லை.  தன்னை பிராமணராகவே மாற்றிக் கொண்டு காவி உடை, கமண்டலம், மார்பில் பூணூல் சகிதமாகவே வந்து தனது மதப்பிரச்சாரத்தை செய்தார்.  இந்து சமயத் துறவிகள் அணியும் உடைகளை அணிந்தே மக்களோடு மக்களாகவே கிருத்துவ மதப்பிரச்சாரத்தை பரப்பினார் என்பது வரலாறு. இவர் பிராமணர்களை மதப் பிரச்சாரம் செய்து கிருஸ்துவ மதத்துக்கு மாற்றுவதையே இலக்காக கொண்டிருந்தார்.  கிருத்துவ பாதிரி உடை எதுவும் இவர் அணியவில்லை.  தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.          

இவர் சர்ச்சை ''கோவில்'' என்றும் கிருபையை ''அருள்'' என்றும்..இறையருளைப் ''பிரசாதம்'' என்றும்..பாதிரியாரை ''குரு'' என்றும்...பைபிளை ''வேதம்'' என்றும்.. (mass) வழிபடுதலைப் ''பூசை'' என்றும்  இவர் கிருத்துவ ஆன்மீகத்தை குறிப்பிடும் வார்த்தைகளாக இந்து மதத்தைப் போன்றே பயன்படுத்தினார்.  அதனால் இவரின் மதமாற்ற நோக்கம் ஒரளவுக்கு வெற்றியடைந்தது என்றே வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.                                                                           


ஆனால் இவரின் இந்த செயல்பாட்டை, கிருத்துவ மிஷன்களில் உள்ளப் பலரும் எதிர்த்தனர்.  இவர், மதுரையின் பல பாகங்களுக்கும் சென்று சமயப் பிரச்சாரத்தை நடத்தினார்.  ஒரு முறை திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டார்.                                                                                                                                                            

பிப்ரவரி 26, 1605 அன்று போர்ச்சுகீசிய மன்னன், வைஸ்ராய்க்கு எழுதிய கடிதமொன்றில் மதுரை நாயக்கர் பாதிரியார்களுடன் நல்ல உறவு கொண்டிருப்பதாய் எழுதியுள்ளார்.  ஒரு போர்ச்சுகீசிய மன்னரே நாயக்க மன்னர்கள் கிருத்துவ மதப்பிரச்சாரத்திற்கு ஊக்குவிப்பதை எழுதியிருக்கிறார்கள் என்றால் நாயக்க மன்னர்கள் எந்தளவுக்கு கிருத்துவ மதப்பிரச்சாரத்திற்கு உடன்பட்டிருப்பார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.  அதற்கு அன்றைய அரசியல் சூழல் கூட காரணமாக இருக்கலாம்.                                                                   



......ஆதாரங்கள் திரட்டப்பட்டது...நாயக்கர் காலமும் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியும்..மதுரை- ஆலவாய்- மதுரை நகரின் வரலாறு---கடலாடி நரசய்யா..பக் 58-64-70, ஆங்கில விக்கிப்பீடியா தகவல் களஞ்சியம்..மற்றும் இணைய தளம்.

No comments: