Pages

Friday 26 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-14



தமிழ்த்திருமணம் இணைப்பு(4) 
(அறுபது/எண்பது ஆண்டு நிறைவு மணி மணம் முத்து மணம்
செய்யும் முறை(சுருக்கமாக)

ஆசிரியர் வடக்கு நோக்கி அமர்க.
மஞ்சறில் மன்னவனார் அமைக்க. அறுபது/எண்பது கலசங்கள் நிறுவுக. இடையில் நிகழும் ஆண்டுகளுக்குப் பெரிய குடங்கள் இரண்டில் அம்மையப்பரை எழுந்தருளச் செய்க.
எதிரில், கிழக்கு நோக்கி, மணி / முத்து மணமக்கள் அமர்க. மணமக்களுக்கு மக்களும் மருமக்களும் திருவடிப் பூசை செய்க.

முன்னவனாரை மணமக்கள் எழுந்து நின்று கை கூப்பிக் கொள்க. பின் வரும் மந்திரங்களை ஓதுக.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம கை’


‘நன்றுடையானை தீயது இல்லானை, நரைவெள்ளேறு
ஒன்றுடையானை, உமையொருபாகம் உடையானை,
சென்று அடாயாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற, என் உள்ளம் குளிரும்மே!

‘என்னில் யாரும் எனக்கு இனியார் இல்லை,
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுள்ளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு,
என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே!

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னைஎன் பிழையைப் பொறுப்பானை
பிழையெலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா
எம்மானை, எளிவந்த பிரானை,
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி
ஆரூரானை மறக்கலும். ஆமே’!

‘செம்மை நலம் அறியாத, சிதடரொடும் திரிவேனை,
மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன்-தான்
நம்மையும் ஓர் பொருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவர்? அச்சோவே


இருவரும் ஒவ்வொரு கலசத்திற்கு அருகே சென்று பிறந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டாக’’.............ஆண்டு வடிவான இறைவா போற்றி’’ என்று சொல்லி மலர் தூவுக.
இருவரும் மணையில் அமர்ந்து, காலனைக் காலால் கடிந்த திருக்கடவூரில், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் அருளிய மந்திரங்கள் ஓதி, மலர் தூவுக.
திருஞானசம்பந்தப் பெருமானின் ‘திலுஎழு கூற்றிருகைப் பதிக’ மந்திரங்களையும்,
கோளாறு பதிக மந்திரங்களையும் ஓதி, அழல் ஓம்புக.
வலம் வந்து, தனியே, விசுப்பலகையில் கிழக்கு நோக்கி மணமக்கள் அமர்க. சுற்றிலும் பிள்ளைகள், பெண்கள், மருமக்கள் நிற்க.
அறுபது கலசங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மணமக்களுக்குத் திருமஞ்சனம் செய்க. (இம்மந்திரத்தை ஓதிக்கொண்டே)

‘இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே!


‘நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
திருமஞ்சனத்துக்குப்பின் மணமக்கள் சம்பந்திகள் வழங்கும் புத்தாடை அணிந்து மணமனையில் வந்து அமர்க.
மேற்கு நோக்கி, மணமக்கள் எதிரில், அம்மையப்பர் கலச்ங்கள் எழுந்தருளப் பண்ணித் திருமண மந்திரங்களை ஓதி, மணமக்கள் மலர் தூவச் செய்க.

‘ஓசை ஒலியெலாம்’
என்று தொடங்கும் பதிகம் ஓதி, அழல் ஓம்புக.

மணி/முத்து மணமங்கல நாண் சூட்டுக
மாலை மாற்றிக் கொண்டு, வலம் வருக.
முதிவர்களை மணமக்கள் வழிபடுக.
இளையவர்கள் மணமக்களை வழிபடுக.
பலரும் வாழ்த்துக.


குறிப்பு; எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு 80 கலசங்களும், இடையில் 81 ஆண்டுக்காக அம்மையப்பர் கலசங்களும் அமைக்க வேண்டும். பிற யாவும் 60க்குப் போலவே.


விதவை மணம்

(பெரியார் கூறுபவையாக பேராசியர் நன்னன் சுயமரியாதை திருமணம்)
விதவைத் தன்மை என்பது கடவுள் செயலாக இருந்தால் ஊர் தோறும் குப்பைத் தொட்டிகளும் , ஓடைப் புறம் போக்குகளும், கள்ளி மேடுகளும் ஊருணிகளும் எப்படிப் பிள்ளைகள் பெற முடியும்?

நடைமுறையில் ஆண் ஒருவனைத் திட்டும் போது மட்டும் அவனைக் கம்மினாட்டி என்று திட்டுகிறார்களே தவிர பிறவகையில் மனைவியை இழந்த ஆண் ஒருவனை விதவன், கைம்மை ஆண், என்றன போன்ற சொற்களால் குறிக்கும் வழக்கம் இல்லை. மனைவியை இழந்த ஆண் அந்நிலையில் நெடுங்காலமாம் இருப்பதில்லை. கூடிய விரைவில் அவன் மற்றொரு பெண்ணை மனைவியாக அடைந்து விடுகாறன். அதனால், அந்நிலையில் உள்ள ஆணைக் குறிக்க தனியே ஒரு சொல் தேவைப்படாது. ஆனால் கணவனை இழந்த மனைவி எஞ்சியுள்ள தன் வாழ் நாள் முழுவதும் அந்நிலையிலேயே அஃதாவது கைம்மை நிலையிலேயே இருந்து தீர்வதால் அந்நிலையிலுள்ள பெண்களைத் தனியே குறிக்க ஒரு சொல் தேவைப்படும். அதனால் கைம்பெண் , விதவை என்னும் சொற்கள் ஏற்பட்டு வழங்கிவருகின்றன. சொல்லைப் போலவே கைம்மைத் துன்பமும் பெண்ணுக்கு மட்டுதே இருக்கம். ஆணுக்கு அத்துன்பம் கூடிய விரைவில் மறைந்து போகும். ஏனெனில், அவன் மறுமணாளனாக மாறி விடுவான். ஆகவே, நாட்டில் கணவனையிழந்த பெண்கள் மட்டுமே மிகுதியாக இருப்பர். மனைவியை இழந்த ஆண் எனப்படுவோர் மிகமிக அரியராகவே இருக்க நேரும்.

தமிழகத்தில் பெரியாராலும் பிற பகுதிகளில் அவரைப் போன்று இப் பணியிலீடுபட்ட சீர்திருத்த செம்மல்களாலும் அறிவு பெற்ற மாந்தர் பலர் கணவனையிழந்த ஒரு பெண்ணுக்கு மறுமணம் செய்விக்கும்மோது அதனை மனைவியை இழந்த கணவன் ஒருவனுக்கு நடைபெறும் மறுமணத்தை விதவன் மணம் என்பது போன்றதொரு சொல்லால் குறிப்பிடும் வழக்கம் இல்லை. இதிலும் ஆணுக்கொரு முறை பெண்ணுக்கு மற்றொரு முறை என்றுதான் உள்ளது.

இக்கயமை கலந்த கொடுமையைப் பொரியார் பின் வருமாறு விளக்குகிறார்;
உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனேயாயினும் தன் மனைவியார் இறந்து பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் வனப்பு மிகுந்த- எழில் பொருந்திய இளம் சகோதரிகளையே த்தன் மணத்திற்கு தேர்ந்தெக்கிறான். ஆயின், ஓர் பெண்மகள் தன் கொழுநனை இழந்து விட்டால், அவள் உலக இன்பத்தையே சுவைத்தறியாதவளாக இருப்பினும், தன் ஆயுட்காலம் முற்றும் அந்தோ! தன் அயற்கை கட்புலனை இறுக மூடி, மனம் நொந்து வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டுவிடுகிறது. என்னே அநியாயம்.111
 
.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -15

No comments: