Pages

Sunday 28 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-16








தமிழ்த்திருமணம் இணைப்பு (6)

எழுத்து அறிவித்தல் விழா




1. மேற்கு நோக்கி, மஞ்சள் பிள்ளையார், கலசம் அமைக்க பழம் முதலியன படைக்க.
2. பிள்ளைக்கு நீராட்டிப் புத்தாடை உடுத்திச் சின்னங்கள் அணிந்து, எதிரே, கிழக்கு நோக்கி அமரச்செய்க.
3. மன்னவனார் வழிபாடு செய்விக்க, திருமண மந்திரங்கள் உடன், விநாயகர் அகவல் ஓதி, ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
4. கலைமகள் வழிபாடு ஆற்றுவிக்க ‘’ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்’’ என்னும் பாடல் குமரகுருபரரின் சகலகலா வல்லி மாலை, ‘புத்துகத்து உள்உறை மாதே’ என்று தொடங்கும் சரசுவதி சிந்தனை ஆகியவை ஓதி, தேங்காய் உடைத்து ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
5. கலச நீரைப் பிள்ளைக்கு மூன்று மூற் உள்ளங்கையில் விட்டுப் பருகச் செய்க. தலைமீது தெளிக்க, புத்தகங்கள் பலகை, அரிசித் தட்டு மீதும் தெளிக்க.
6. அரிசித்தட்டில், பிள்ளையின் வலச்சுட்டு விரலால் ‘அ, ஆ’ பன்னிரெண்டு, ‘க், ஞ்’ பதினெட்டு, ‘A,B,C, இருபத்தாறு, ‘க, உங, ‘1,2,3 பதினொன்று வரை எழுதச்செய்க. தலைப்பில் ‘உ’ ‘ஓம்’ எழுதித் துவங்குக.
7. பத்தகம், பலகைகளைப் பெற்றோரிடமும் ஆசிரியர் இடமும் மற்ற பெரியவர்களிடமும் தந்து, பிள்ளையை விழுந்து வணங்கச் செய்து பிள்ளையிடம் தரச் செய்க. ஒவ்வொருவரும் மஞ்சள், அரிசி தூவி வாழ்த்துக.


எழுத்தறிவித்தல் விழா நிறைவுற்றது.
தாலி


(தாலி பற்றி பெரியார்....பேராசிரியர் நன்னன்)

மூட நம்பிக்கையையோ, குருட்டுப் பழக்கத்தையோ, ஆன்றி அவையிரட்னையுமோ காரடமாகக் கொண்டு பிற்காலத்தில் ஏற்பட்டதுதான் திருமணத்தில் கணவன் மனைவிக்குத் தாலிகட்டும் வழக்கம். பண்டைத்தமிழகத்தில் வீரர்கள் தாம் கொண்டு வந்த புலிப்பல்லால் தாலி செய்து தம் குழந்தைக்கு அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், சிலப்பதிகாரக் காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் கோவலன் கண்ணகிக்குத் தாலி கட்டியதாகத் தெரியவில்லை. பார்ப்பான் வந்து மறை வழி நடத்திய அத்திருமணத்தில் தீ வந்துவிட்டது; ஆனால், தாலி மட்டும் அப்போது வந்ததாகச் சொல்லப்படவில்லை. ஆகவே, மிகப் பிற்காலத்தில் வந்து புகந்த அப்பழக்கம் இன்று பல பெண்களால் தம் உயிரினும் மேலானதாக கருதப்படும் தகைமையை அவர்களுக்கு தந்துள்ளது. அதை ஒரு பெரும் பேறாகவும் பாக்கியமாகவும் கருதும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிட்டது. அது பற்றிய பெரியாரின் கருத்துகள் ஒரு சிலவற்றை மட்டுமேனும் இச்சிறு பகுதியில் தெரிந்து கொள்வோமா?

மாட்டுச் சந்தையில் தாம் வாங்கிய மாட்டின் மீது தமக்குள்ள உரிமையைக் காட்ட வாங்கியவர் அம்மாட்டுக்குத் தாம் வாங்கிச் செனைற புதிய கயிற்றைக் கட்டிப் பிடிப்பது போல் ஓர் ஆண் தான் தனக்கு உரியவளாக ஆக்கிக் கொண்ட பெண்ணுக்கு அதன் அடையாளமாக கட்டுவதுதான் இத்தால். மற்றும் தாம் வளர்க்கும் விலங்குகளுக்கு நகராட்சி வில்லையைக் கட்டுவது கோல் தாலி கட்டி அப்பெண்ணைத் தன் முரட்டுத் தன்மையால் அடிமை கொள்ளும் சின்னமே அத்தால். பெண்களுக்கு சுயமரியாதையும், அடிமைத் தளையை அறுத்துக் கொண்டு விடுதலை பெறும் வேட்கையும், பகுத்தறிவும் ஏற்பட்டால் இப்பழக்கம் நிலைக்காது என்று பெரியார் கூறுவார்.
ஆணின் அடிமையே பெண் என்பதன் அடையாளமாக கட்டப்படும் அத்தாலி சீர்திருத்த திருமணம் செய்து கொள்பவர்கள் பலராலும் கை விட முடியாத வலிமை கொண்டதாக உள்ளது. சுயமரியாதை திருமணங்கள் பலவற்றுள் பார்ப்பார்,அவர் கூறும் மந்திரங்கள், அவர் செய்யும் சடங்குகள், நல்ல நேரம், சோதிடம், இகுனம் போன்ற பற்பலவும் கைவிடப்பட்டிருக்கும். ஆனால், தாலி ம்ட்டும் கைவிடப்பட முடியாததாக இருக்கும். முழுப் பகுத்தறிவு பெற்ற இரு குடும்பங்கள் உறவு கொள்ளும் திருமணங்களில் மட்டுமே தாலியும் இல்லா முழு சுயமரியாதை திருமணங்கள் நடைபெறுகின்றன. மதம், கடவுள், ஆன்மா, விதி போன்ற பலவற்றையும் விட்டவர்கள் சிலர்கூட சாதியை விடத் தயங்குவது போல் பலமூடப் பழக்கங்களை விட்டவர்களும் தாலியைவிடத் தயங்குகிறார்கள். அத்தகைய அச்சத்தை அத்தாலி ஏற்படுத்தியுள்ளது.

தாலியை பெண்களுக்கு மட்டும் ஆண்கள் கட்டுவதால் அதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும். தநாலி கட்டியவன் அப்பெண்ணுக்கு எசமான் என்றும், தாலி அடிமைச் சின்னம் என்றும் விளங்குகிறது. ஆண் பெண் இருவரும் சம அந்தஸ்த்துள்ளவர்கள் என்பதற்கு இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் தாலி கட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இருவருக்கும் தாலி இல்லாமலிருக்கவேண்டும்.

மன்பதையியல் உயர் உச்சப் பகுத்தறிவு மன்ற நீதியரசு தலைவராயிருந்து தந்தை பெரியார் வழங்கியுள்ள இத்தீர்ப்பு ஆழ்ந்து நோக்கி, அமைதி குன்றாமல் எண்ணி, நடுநிலை பிறழாது நின்று ஆய்ந்து, துணிவாகவும், மன்பதை இயலுக்கு மாசு நேராமலும் வழங்கப்பட்ட தீர்ப்பாக துலங்க காண்கிறோம்.




.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -17

No comments: