Pages

Sunday 17 January, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -4




(ஆ) நடுப்பகுதி



1. இறை வழிபாடு;
மஞ்சளிலுள்ள முன்னவரையும், அன்னையும் தந்தையுமாக இரண்டு செம்புகளில் நிறுவியுள்ள இறைவனையும் இறைவியையும் மணமக்கள் மலர் தூவி வழிபடுவர்.
தாலி கோத்துள்ள மங்கல நாண், ஒரு தட்டில் அரிசியின் மீது தேங்காயில் சுற்றி வைக்கப்பெற்றிருக்கும் தேங்காய்க்கும் மஞ்சள், குங்குமம் இடப்பெற்றிருக்கும். இத்தட்டு அம்மையப்பர் முன்பு வழிபடும்போது வைக்கப் பெற்றிருக்கும்.

2. மங்கல நாணுக்கு அவையினர் வாழ்த்து;
மங்கல நாண் தட்டை மண ஆசிரியரோ, வேறு பெரியவர் ஒருவரோ அவையினரிடம் எடுத்துச் சென்று, தொடச் செய்து வாழ்த்துப் பெறுவர்.
கூடவே இன்னொருவர் ஒரு த்ட்டில் மஞ்சள் அரிசியும் மலரும் கலந்து வைத்துக் கொண்டு செல்வார். மங்கல நாண் சூட்டும்போது தூவி வாழ்த்துவதற்கும் அவையினர் அவ்வரிசி, மலரில் சிறிது எடுத்துக் கொள்வர்.

3. அழல் ஓம்பல்;
(ஒளி வடிவான இறைவனைப் போற்றி) மணமக்கள் முன்பு ஒன்பது வகை மாக்குச்சிகளை இட்டு, நெய்விட்டு ஓமம் வளர்த்துவார் ஆசிரியர். மணமகன் குச்சிகளை ஒவ்வொன்றாக ஓமத்தில் இடுவான். நெய் பெய்வான்; மணமகளும் அப்படியே செய்வாள்.

4. மங்கல நாண் சூட்டல்;
கை விளக்கை மணமகனின் உடன் பிறந்தாள் ஏந்தி மணமகளின் பின்புறம் நிற்க, மங்கல நானண மாப்பிள்ளை இரு கையில், தாங்கி பெண்ணின் கழுத்தில் சூட்டி மூன்று முடிச்சுக்களை இடுவார். கெட்டிமேளம் கொட்னும். அவையினர் அரிசி மலர் சொரிந்து வாழ்த்துவர்.
அம்மங்கல நாண் முடிச்சின்மீது மஞ்சள் இட்டுக் குங்குமம் வைப்பர்; மாப்பிள்ளை, பின் பெண்ணின் பின்புறமாக கையைக்க கொண்டு சென்று நெற்றியில் குங்குமம் இடுவார்.

5. பட்டங்கட்டல்;
மணமக்களின் பழைய உறவினர்களும், மணத்தினார் புதிதாக உறவினர் ஆனவர்களும் தங்கள் தங்கள் ‘மாமிப்பட்டம்’ ‘நாத்திப் பட்டம்’ என்றெல்லாம் உறவின் முறையாக்கூறி, மணமக்களின் நெற்றியில் தங்கத் தகட்டுப் பட்டம் கட்டுவர் சிலர் பொற்காசும் கட்டுவர்.

6. மாலை மாற்றல்;
மணமக்கள் எழுந்து நின்று, மூன்று முறை மாலை மாற்றிக் கொள்வர்.

7. வலம் வரல்;
ஒரு மூத்த இளம் பெண், தன் கையில் தட்டு வைத்த கைவிளக்கை ஏந்தி முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து அறியாச் சிறுமிகள் மளைக் கலசங்களைத் தாங்கிப் போக அடுத்து மாப்பிள்ளைத் தோழர் மணமக்களின் இடக்கைத் சுண்டு விரலால் பிடித்துப் பின் செல்வர். விளக்குத் தட்டில் பந்தலின் மூலைகளில் காசு இடுவர் மணமக்கள் வீட்டார்.

8. அம்மி மிதித்தல்;
பந்தலில் இடம் பெற்றுள்ள அம்மியின் மீது மணமகன் மணமகளின் வலக்காலைப் பற்றி எடுத்து வைத்து, அதன் இரண்டாம் விரலில் வெள்ளிச் சுற்று மோதிரம் அணிவர்.
இடக்கால் இரண்டாம் விரலிலும் இன்னொரு மோதிரம் அணியப் பெறும்.


9. பொரியிடல்;
மணமக்கள் ஒரு சுற்று வந்ததும், ஓமத்தீயின் முன்பு நிற்பர். பெண்ணின் உடன் பிறந்தான், நெல் பொரியைத்தன் இரண்டு கைகளில் ஏந்திப் பெண்ணின் கையில் தர அதைப் பெண் மாப்பிள்ளையின் கையில் பொருந்த வைக்க, இருவருமாக அதைத் தீயில் இடுவர்.
இங்ஙனமே, இரண்டாவது மூன்றாவது சுற்றிலும் செய்த பிறகு மைத்துனனுக்கு மாப்பிள்ளை சந்தனம் தந்து பன்னீர் தெளித்து, மலர் மாலையிட்டு மோதிரம் போடுவார். இதற்குப் பொரி மோதிரம் என்று பெயர்.


 கல்யாணம் என்பது என்ன? பெரியார் கூறுபவை....


""கலியாணம்"" என்பதற்கு ""வாழ்த்து"" என்பது பொருள். அது வாழ்க்கைத் துணை என்னும் பொருளில் இல்லை. ஏதோ கறுப்பு ஆட்டை வெள்ளாடு என்பது போலவும் கொடிய விஷம் உள்ள பாம்பை நல்ல பாம்பு என்பது போலவும் இப்படித்த தப்பான சொற்களை அமைத்துக் கலியாணம், திருமணம் என்றெல்லாம் சொல்லி வருகிறோம். ஆனால் பார்ப்பனர் மட்டும் சரியான வார்த்தைகளையே உபயோகித்து வருகின்றனர். அவைகள் ""தாரா முகூர்த்தம்"" என்பதும், ""கன்னிகா தானம்"" என்பவைகளாகும். ""தானம்"" என்பது வடமொழிச்சொல்ஆகும். ""தாரா முகூர்த்தம்"" என்பதும் வடமொழியே; தமிழ்ச் சொல் அல்ல. தமிழர்களுக்கான காரியங்களில் வட மொழிச்சொல்லாக இருந்தால் அது ஒன்றினாலேயே நன்றாகத் தெரியுமே. அந்த முறை நமக்கில்லை என்று. ஒரு பெண்ணை பெற்று வளர்த்து ஒருவனுக்குத் தாரை வார்ப்பது, தானம் தருவது என்பது கருத்து. நம் பழக்கப்படி ஆணும், பெண்ணும் சம உரிமை கொண்டு, அன்பு பூண்டு ஒற்றுமையுடன் இருத்தல் வாழ்க்கைத் துணை. இது தமிழ்ச் சொல். அவன் வந்த பிறகுதான் இதை யெல்லாம் அழித்து விட்டுப் பெண்ணை அடிமையாக்குகிற நிகழ்ச்சியாக ஆக்கிவிட்டான்.

என்று பெரியார் குறிப்பிடுகிறார்.



-..தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -5

No comments: