Pages

Thursday 26 May, 2011

அதிமுக ஆட்சிக்கு வந்த 10 நாளில் இரண்டாவது படுகொலை.....!

கால் டாக்சி டிரைவர் வெட்டிக்கொலை!
 
சென்னை : ராயப்பேட்டையில் நள்ளிரவில் 
கால் டாக்சி டிரைவரை 
5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது. 
சென்னை தாம்பரத்தில் 
வசிப்பவர் ஜெய்கணேஷ் (36). 
கால் டாக்சி டிரைவர். கடந்த வாரம் 
ஜெய்கணேஷின் தந்தை சுப்பிரமணியம் இறந்தார். 
அவருக்கு நேற்று 
முன்தினம் 8வது நாள் காரியம், ராயப்பேட்டை 
துலுக்கானம் தோட்டத்தில்
 உள்ள அண்ணன் சங்கரின் வீட்டில் நடந்தது.
அதனால் ராயப்பேட்டையில் வசிக்கும் அண்ணன் 
சங்கர் வீட்டுக்கு ஜெய்கணேஷ் 
வந்துள்ளார். மாலையில் தனது அம்மாவை 
பைக்கில் வெளியில் 
அழைத்துச் சென்று இரவில் வீடு திரும்பியுள்ளார்.
 நள்ளிரவு 12 மணிக்கு 
செல்போனில் தனது நண்பர்களிடம் பேசியபடி 
சங்கர் வசிக்கும் வீட்டின் 
தெருமுனையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, திருவான்மியூரைச்சேர்ந்த செந்தில், 
தனராஜ், ராபட், 
ரகு, கவிமணி ஆகிய 5 பேர் வந்து 
ஜெய்கணேஷை சரமாரியாக வெட்டினர். 
15க்கும் மேற்பட்ட 
இடங்களில் வெட்டினர்.
 அவரது அலறல் சத்தம் கேட்டதும் பக்கத்து வீட்டில் 
வசித்தவர்கள் ஓடி வந்தனர். 
அவர்கள் கொலையாளிகளை விரட்டினர். 
ஆனால் கொலையாளிகள் தப்பி விட்டனர்.
இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் சங்கர்
 புகார் செய்தார். 
துணை கமிஷனர் 
கருப்பசாமி, உதவி கமிஷனர் வசந்தகுமாரி, 
இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் 
வழக்குப்பதிவு செய்து கொலையாளி கள்
 5 பேரையும் தேடி வருகின்றனர். 
போலீசார் நடத்திய விசாரணையில், 
முன்விரோதம் காரணமாக 
இந்தக் கொலை 
நடந்துள்ளது தெரியவந்தது. ஜெய்கணேஷ்,
 ராயப்பேட்டையில்தான் வசித்து வந்தார். 
அப்போது நண்பர்களுடன் சேர்ந்து 
அடிதடி வழக்குகளில் ஈடுபட்டார். 
 
 
போலீசார் 
அவரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தனர். இதற்கிடையில், 
அதே பகுதியைச் சேர்ந்த
 பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 திருமணத்துக்கு பிறகு அவர்,
 தாம்பரத்தில் வசித்து வந்தார்.
மேலும், ஜெய்கணேஷ் மனைவியின் 
தங்கையை திருவான்மியூரைச் சேர்ந்த செந்திலின்
 நண்பர் ஒருவர் காதலித்துள்ளார்.
 அதனால் ஆத்திரமடைந்த ஜெய்கணேஷ், 
செந்திலை மெரினாவில் 
வைத்து வெட்டியுள்ளார். அதற்கு பழிக்குப் பழி வாங்க, 
செந்தில் 
காத்திருந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், 
தந்தையின் காரியத்துக்கு 
வந்திருக்கும் தகவலை ராயப்பேட்டை யில் 
உள்ளவர்கள்தான் திருவான்மியூரில்
 வசிக்கும் செந்திலுக்கு தெரிவித்திருப்பார்கள்.
 செந்தில் தனது கூட்டாளிகளுடன் 
வந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. 
செந்தில் மற்றும் கூட்டாளிகளைப் 
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு ள்ளது.
...நன்.றி தினகரன் 26.05.2011 
******************************
 

பொது ஜனம்; இது என்னப்பா? ஆட்சிக்கு 
வந்த 10 நாளுக்குள்ளே 
கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு 
என்று எங்கும் 
ஒரே குதூகல அராஜகமா இருக்கே! 
அவங்க ஆளுங்களுக்கே பாதுகாப்பு
இல்லே போலிருக்கே!
 
பொது ஜனம்; ஆட்சியில என்னய்யா
 அவங்காளு, 
இவங்க ஆளு, நம்மாளுன்னு! 
எல்லோரும் தமிழக 
பொது மக்கள் தானப்பா!
 
பொது ஜனம்; இது உனக்கு தெரியுது! 
அதெல்லாம் பத்தி அவங்களுக்கு
தெரியுமா? என்ன?
 
பொது ஜனம்; என்னப்பா 
அதான் நிறைய ஐ.பிஎஸ் 
அதிகாரிகளையெல்லாம் 
மாத்தியிருக்காங்களே! 
இதுக்குள்ளே 
நீ எல்லாத்தையும் எதிர் பார்க்கறீயே!  
அவங்க தான் 
மந்திரிங்க கிட்டே
அதிமுகவுக்கு சாதகமா 
செயல்படக்கூடிய போலிஸ் 
அதிகாரிங்க, 
இன்ஸ்பெக்டர்ங்க, 
உதவி இன்ஸ்பெக்டர்ங்க 
லிஸ்ட்டை கேட்டு இருக்காங்களே! 

பொது ஜனம்; அப்பக்கூட மக்களுக்கு யார்?
 நன்மை செய்வார்னுங்கற
 லிஸ்ட்டை கேக்கலை!

பொது ஜனம்; அந்தளவு 
புத்திசாலித்தனத்தையெல்லாம் 
அவங்ககிட்ட
 எதிர் பார்க்க முடியுமா?
 
பொது ஜனம்; அப்ப இப்ப 
கொலை, கொள்ளை நடந்தா 
பரவாயில்லையா?
 ஆறு மாசத்துக்கப்புறம் எவ்வளவு பேர்
 உயிரோடு இருக்கிறாங்க என்ற 
கணக்கெடுத்து 
அப்புறமா? கேள்வி கேட்டுக்கலாம். 
இப்ப நேரம் எங்க இருக்குது!
 
பொது ஜனம்; ஆட்சிக்கு 
வந்ததுக்குள்ளேயே இவ்வளவு மக்கள் 
விரோதத்தை பன்றதுக்கு
மட்டும் நேரம் இருக்குதா?
 
பொது ஜனம்; கொலை கொள்ளையை, 
அதிகாரிகளா கண்டு 
பிடிக்கப்போறாங்க!
 
பொது ஜனம்; ஆட்சி மாறுனவுடனே காட்சி 
மாறிடும்ங்கறது 
இது தான் போல இருக்கு!
புற்றீசல் போல கிரிமனல்கள் வெளியே
 வர ஆரம்பிச்சட்டாங்களே!
எல்லோரும் எனகவுன்டர் தானா?
 
பொது ஜனம்; போலி என்கவுன்டர் பண்ணா? 
போலிஸ்காரங்களுக்கு
மரண தண்டனையாமே! உச்சநீதிமன்றம் 
சொல்லியிருக்கே! 
 
பொது ஜனம்; பின்னே கிரிமினல்களை 
அவங்களே உருவாக்குவாங்க!
அப்புறம் அவங்களே போட்டுத்தள்ளுவாங்க! 
இது தான் நாட்டைப் பாதுகாக்கற
லட்சணமா?
 
பொது ஜனம்; கிரிமினல்கள் ஏன் 
உருவாகுறாங்க? என்பதை 
கண்டுபிடிய்யா? எதனால உருவாகுறாங்க!
 மக்களுக்கு விரோதமாப்
போனா! மக்கள் அனைவரும் 
கிரிமினல்களா ஆனாக் கூட
ஆச்சரியப்படுவதற்கில்லை!
 
பொது ஜனம்; நீயே ஒரு குத்தவாளி...
ரொம்ப காலமா! கோர்ட்டுக்கு டிமிக்கி 
கொடுத்துகிட்டு இருக்கே! 
அப்பறம் தானே மத்தவங்களை 
குத்தம் சொல்ல முடியும்! 
 
பொது ஜனம்; ஏம்பா அது ரொம்ப தைரியமான 
பொம்பளைப்பா! 
வந்தவுடன்  என் முதல் வேலை சட்டம் 
ஒழுங்கை பாதுகாப்பது
தான் என்று அறிவிச்சுட்டு வந்தது. 
இதுமாதிரி யாரு சொல்லுவா!
 
பொது ஜனம்; ஆமாம் ஆமாம், 
விவரம் தெரிஞ்ச 
எவரும் இது மாதிரி
 சொல்ல முடியாது!
 
பொது ஜனம்; ரவுடித்தனம், கொலை,
 கொள்ளைகள் செய்யறவங்க
எல்லாம் தைரியமானவங்க தான்! 
இதுல என்ன பெரிய விஷயம் இருக்கு! 
 
பொது ஜனம்; அது தைரியமா 
இருந்தா என்ன?
 கோழையா இருந்தா என்ன? 
முதல்ல மக்களை பாதுகாக்கறதுக்கு 
நடவடிக்கை எடுக்க 
சொல்லுப்பா! அப்புறம் தைரியமா 
சுடுகாட்டுக்கு கூட தனியா
 போய்ட்டு வரட்டும்! 
யாரு! வேணாங்கறா! 

 
பொது ஜனம்; அதிகாரிகளை
 இந்த ஊரிலேயிருந்து 
அடுத்த ஊருக்கு மாற்றப்போரே!
இந்த மாவட்டத்திலேயிருந்து அடுத்த 
மாவட்டத்துக்கு! மாத்தப்போரே!
மாத்தினா மட்டும்!
 
பொது ஜனம்; அந்த மாவட்டத்துல 
மக்கள் இல்லையா! ஆட்டு 
மந்தைகளா இருக்குது! எல்லா 
இடத்துலேயும் மக்கள் தானாப்பா
 இருக்கறாங்க! 
 
பொது ஜனம்; தமிழ்நாட்டுல 
இருக்கற போலிசை வைச்சு
தானே சமாளிக்கணும்! யாரையும்
 வீட்டுக்கு அனுப்ப முடியாதே! 
 
பொது ஜனம்; நம்மளா! தேடிக்கிட்டது, 
இனி எல்லாவற்றுக்கும் 
நீதி மன்றத்துக்கு தான் 
போகனும் போல இருக்கே!
 
பொது ஜனம்; இல்லைன்னா! 
நாக்கையும், மூக்கையும் 
அந்த பொம்பளைக்காக
அறுத்துக்கணும்! அப்பதான் நல்லது
நடக்கும்! அது கூட 
அறுத்துக்கினவங்களுக்கு
மட்டும் தான்!

பொது ஜனம்; ஜெயலலிதாவுக்காக 
நாக்கை அறுத்த பெண்ணுக்கு அரசு
வேலை போட்டுக் 
கொடுத்திருக்காங்களே!
அதை வைச்சு சொல்றியா!
 
பொது ஜனம்; பேசாம 
தலைமைச்செயலகத்தை
 ஐகோர்ட் காம்பவுண்டுக்குள்ளே 
மாத்திட்டா நல்லா இருக்கும்! 

No comments: