Pages

Monday 9 May, 2011

ஜிகாத்-அல்கொய்தா பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மற்றும் கொள்கைகள்...பகுதி-3



 ஜிகாத்...JIHAT-3
புஷ்.....

“”உளவுத்துறை மூலமாக கிடைத்த ஆதாரங்கள் மூலமாகவும், இப்போது நம் காவலில் இருக்கும் நபர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் மூலமாகவும், சதாம் உசேன், அல்கொய்தா உள்ளிட்ட பல தீவிரவாத இயக்கங்களுக்கு, உதவிகள் செய்தும் பாதுகாப்பு அளித்தும் வருவதாக தெரியவந்துள்ளது.””

அமெரிக்கர்களோட கவனம் என்னை நோக்கி திரும்பர வரைக்கும், அவங்க வேதனையையும் வலியையும் கொஞ்சம் கொஞ்சமா! அதிகரிச்சுகிட்டேயிருப்பேன் என்று பின்லேடன் சொல்றாரு! அவங்க கிட்ட அணு ஆயுதம் இருந்தா அவங்க அதை பயன்படுத்துவாங்க! அதைத்தான் முதல் தாக்குதல் ஆயுதமா பயன்படுத்தறதோட நோக்கமாக இருக்கும்.

புஷ்....

“”அம்ரிக்கா அராசங்கள் ஐ.நா சபை பாதுகாப்புக் குழுவிடம், பிப்பரவரி 5 ஆம் தேதி நடப்பு உண்மைகளை, பரிசீலனை பண்ணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகள் குழுக்களோடு ஈராக்கிற்கு இருக்கும் தொடர்பு சம்பந்தமான உளவுத்துறையின் தகவல்களை உள்துறைச் செயலர் பௌல் இப்போது விளக்குவார்.

“”ஈராக்கிற்கும், அல்கொய்தா எனும் பயங்கரவாத வலைப்பின்னலுக்கும் இடையில கொடூர நோக்கத்தோட கூடியப் பிணைப்பு இருக்குங்கறதுக்கான திடமான ஆதாரங்கள் நமக்கு கிடைச்சிருக்கு!. அதாவது இது பழமைவாதிகள் இயக்கங்களுக்கும், நவீன கொலைகார வழிமுறைக்குமான பிணைப்பு! அதொட இது ஒன்னும் பெரிய ரகசியம் இல்லை.

காலின் பௌல் ஒரு நிழலாக இருக்கும் ஜோடானைச் சேர்ந்த பயங்கரவாதி மூலமாக ஈராக்கின் சதாம் உசைனுக்கும் அல்கொய்தாவுக்கும் இருக்கும் தொடர்பை விளக்கினார்.

ஈராக் இன்னைக்கு ஒசாமா பின்லேடனுக்கும் அவரோட தளபதிகளோட உடந்தையா இருக்கருவருமான அபு முசாப் அல் ஜர்க்காவி (Abu Musab al-Zarqawi) என்கிற தலைமையில இயங்குற ஒரு கொடூரமான பயங்கரவாத அமைப்பை களத்தில இறக்கிவிட்டிருக்கு.



ஜர்க்காவி உண்மையில் அல்கொய்தா உறுப்பினர் அல்ல. அத்துடன் செனட்டின் உளவுத்துறைக் குழுவுக்கு சதாம் உசைனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதி செய்திருந்தது.

ஆப்கானிஸ்தான்ல இருந்த காலகட்டங்கள்ல கூட அபு முசாப் அல் ஜர்க்காவி எப்பவும் பின்லேடன் கிட்டேயிருந்து தனித்து சுதந்திரமா இழங்கிறதுல ரொம்ப விருப்பமா இருந்தாரு.

பின்லேடன் அவரை அல்கொய்தாவுக்கு பணியாற்ற அழைச்சாரு! அவர் அல்கொய்தாவில சேர மறுத்துட்டாரு! பின்லேடன் அவரை ஏழு தடவைக்கு மேல கூப்பிட்டும் மறுத்தாட்டாரு!

அவரு அல்கொய்தாவில சேரவேயில்லை. அவருக்குன்னு சொந்தமா முகாம்களும், சொந்தமா அபிப்பிராயங்களும், சொந்தமா ஆதரவாளர்களும் இருந்தாங்க!

அவரு அல்கொய்தாவிலேயிருந்து விலகியே இருந்ததோட ஆப்கானிஸ்தானுல இருந்தபோது பின்லேடனுக்கு அவரோட மேலாதிக்கத்தை ஏத்துகிட்டு அவருக்கு கட்டுபட்டு நடக்கிறதா சபதம் செஞ்சு கொடுக்கவுமில்லை.

செப்டம்பர் ,11 க்குப் பிறகு, அமெரிக்கர்கள் தலிபான் ஜர்க்காவி மீதும் அவருடைய ஆதரவாளர்கள் அடங்கிய சிறிய படையணியினர் மீதும் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் வடக்கு ஈராக்கிற்குள் தஞ்சமடைந்தனர்.

அமெரிக்கர்கள் ஈராக்கிற்குள் படையெடுப்பு நடத்தியபோது, ஜர்க்காவி தானே சுயமாக பின்லேடன் அல்லது அல்கொய்தா அடையாளங்கள் எதுவுமில்லாமல் தனிப்பட்ட யுத்தத்தை தொடங்கினார்.

கணக்கற்ற அளவில் பொறுப்பேற்காத வகையில் ஜர்க்காவியின் ரத்த வெறியாட்டம் நடைபெறாதவரையில் அல்கொய்தாவுக்கு அதில் பங்கு இருந்ததில்லை. அது அல்கொய்தாவையே உறுத்தியது.

மேற்கத்திய உளவுத்துறையால் இடைமறித்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில், ஈராக்கில் ஜிகாத் தந்துகொண்டிருக்கும் ஒரு மகத்தான ஆதரவை இழந்துவிடவேண்டியது வரும் என்று ஜர்க்காவிக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

அந்த கடிதம் பொதுமக்களை படுகொலை செய்யறதை நிறுத்தணும்னு ஜவாஹிரியால ஜர்க்காவிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஜர்க்காவி அதனால ரொம்ப கோவப்பட்டு ஜவாஹிரிகிட்ட “”நீங்க ஒன்னும் எனக்கு உபதேசம் பண்ணவேண்டாம், எனக்கு உத்தரவு போடவேண்டாம். நீங்க யுத்த களத்தில இருந்து ரொம்ப தூரத்துல இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு”” சொல்லிட்டாரு!

இந்த கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், ஜர்க்காவிக்கு அல்கொய்தாவின் அஙகிகார ஆதாரம் தேவைப்பட்டது.

அவங்க ரொம்ப சாதாரணமா ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருந்தாங்க. தனது அமைப்புக்கு சர்வதேச தீவிரவாத அங்கிகாரம் கிடைக்காத நிலையில ஜர்க்காவி இருந்தாரு! அது கடற் கொள்ளையரோட கொடி மாதிரி, கொடியை உயர்த்தினா நீங்க யார்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடும். தன்னோட பிரயோர்த்தனங்களுக்கு அந்த முத்திரை வேணும்னு விரும்பினாரு!

அந்த பேரம் எப்படி? முடிந்தது என்பது நமக்கு தெரியாமல் இருந்தாலும், அது இரு தரப்புக்கும் நன்றாக பொருந்தி வந்தது. தங்களுடைய மலையக மறைவிடத்திலிருந்தே ஈராக்கிற்கு அல்கொய்தாவின் பகுதி மீது தாங்கள் ஆதிக்கம் செலுத்தி அதை கட்டுக்குள் வைத்திருப்பதாக காட்டிக்கொள்ள பின்லேடனுக்கும் ஜவாஹிரிக்கும் அது சாத்தியமாயிற்று. அத்துடன் ஈராக்கில் நடப்பவற்றுக்கும் தாங்கள் தான் பொறுப்பு என்று கூறிக்கொண்டார்கள். ஜர்க்காவியும் ஈராக்கில் இருக்கும் அல்கொய்தாவிற்கு தான் தான் தலைவர் என்று கூறிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருடைய இறுதிக்கு நாள் குறிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவம் த்ங்களுடைய விசேஷப் படையணி இறுதியாக கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு குண்டு அவருடைய வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

புஷ்....
“”ஜர்க்காவி இறந்துட்டாரு! அவரு இல்லாம இந்த பயங்கரவாதிகளோட கிளர்ச்சியை சுலபாமா நடக்காதுன்னு நாம எதிர்பார்க்கலாம். ஆனால் ஈராக்கில நடக்கிற அந்த அவசியத்தேவையான கஷ்டமான பணித் தொடர்ந்து நடந்துகிட்டிருக்கு!””

ஒசாமா பின்லேடன் எது நடக்கணும்னு எதர்பார்த்தாரோ? அதே வகையில தான் அமெரிக்காவோட செயல்பாடுகள் எல்லாம் நடந்திகிட்டி,ருந்தது.

அது இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான முழு அளவில நடந்த யுத்தாமாயிருந்த்து. அது அல்கொய்தாவுக்கு புது உறுப்பினர்களை சேர்க்கறதுக்கு உதவியாவும் அதோட மதக்கோட்பாட்டை நிறுவ வசதியாவும் அது அமைஞ்சது. அதைத்தான் அவர் விரும்பியிருந்தார்னா? அவரு என்ன? எதிர்பார்த்தாரோ? அது அப்படியே நடந்தது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நீண்ட காலமாக நடந்து வரும் இது மாதிரியான போர்கள் பின்லேடனுடைய ஒட்டு மொத்த யுக்திக்கு சாட்சியாக அமைந்து உள்ளன.

மேற்கத்திய உலகமான ஐரோப்பா, மற்றும் அமெரிக்காவோட வலுவான அவங்க சொந்த மண்ணுல போய் சண்டை போடறது ரொம்ப ரொம்ப கஷ்டமான காரியம்ணு அவரு எங்கிட்ட சொல்லியிருக்காரு! அதனால அவங்க அமெரிக்காவ தஙவகளுக்கு சேதம் இல்லாத இடத்துல சண்டைக்கு இழுக்கணும்னு திட்டம் போட்டிருக்காங்க!

பின்லேடன் இதை ரத்தம் சிந்தி தீர்க்க இயலாத ஒரு போராட்டம நிலை என்று குறிப்பிட ஆரம்பிச்சாரு! அதுமட்டுமில்லாம அமெரிக்க ராணுவத்தை தன்னால நிச்சயமா தோற்கடிக்க முடியாதுண்ணு ரொம்பத் தெளிவா உணர்ந்துகிட்டாரு! அதனால நம்மால தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு பொருளாதாரத்தை அதிகளவு பயன்படுத்தற அளவுக்கு இருக்கிற மாதிரியான முறையில அவர் தாக்கவேண்டியிருந்தது. பின்லேடன் எல்லார் கிட்டேயும், நான் செய்யவேண்டியது எல்லாம் இந்த அல்கொயதா பேனர்ல யாராவது இரண்டு பேரை உலகத்துல எந்த பக்கத்துக்கு அனுப்பினாலும், அமெரிக்க அவங்களை பின்தொடர்ந்து போகும், ராணுவத்தை அனுப்பி பணத்தை செலவு செய்யும்னாரு! அவரு நினைச்சா மாதிரி நாங்க ஒசாமா பின்லேடனுக்கு எதிரா கணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு பணத்தை தண்ணியா செலவு பண்ணியாச்சு! அதொட இந்த ஈராக் யுத்தத்துல இந்த பொருளாதாரம் ரத்தக் களறியாடிச்சி. இந்த கோணத்துல பொருளாதார ரீதியா ரத்தம் சிந்தி தீர்க்க இயலாத ஒன்றன போராட்ட நிலை என்று வர்ணிக்கிறது சரியானது தான்.

பின்லேடன் எங்கிருக்கிறார் என்று நமக்குத் தெரியாது? பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதி ஒரமாக இருக்கும் பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிகளில் மூன்று ராணுவங்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு காடு போன்ற நாடு. அதில் கிட்டத்தட்ட எல்லா கட்டிடங்களும் சிறிய கோட்டைப் போன்று இருக்கின்றன.

எங்கெல்லாம் அடிப்படைவாதிகள் இருக்கிறார்களோ? அங்கெல்லாம் நிச்சயமாக ஒரு உள்ளூர் தலிபான் இருப்பார்.

பின்லேடனை உயிருடனோ? பிணமாகவோ பிடித்து தருபவருக்கு, இரண்டு கோடியே ஐம்பது லட்சம் டாலர் வெகுமதியாக அறவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னமேயே அவருடைய தலைக்கு விலை வைக்கப்பட்டிருந்தது. அவர் அதை சட்டை செய்தது இல்லை.

ஒசமா...
“”அமெரிக்கா பண்த்தை வழிபடறதோட, எல்லோரும் அதைப்போலவே இருப்பாங்கன்னு நினைக்கறாங்க! நான் அந்த வெகுமதி அறிவிப்பு பலன் தரும்னு நினைச்சிருந்தா உடனே என்னுடைய மெய்க்காப்பாளர்களை மாத்திருவேன்னு அல்லாகிட்டை சப்தம் பண்ணினேன். ஆனால் இதுவரைக்கு நான் ஒருத்தரைக்கூட மாத்தினது இல்லை.””

சரித்திரத்திலேயே முதன் முறையாக பாக்கிஸ்தான் ராணுவம், இங்கு ராணுவத்திலிருந்து 80,000 துருப்புகளை ஆயத்தமாக நிறுத்தியது. பல ஆயுத பிரயோக மோதல்களுக்குப் பிறகு, அது சிறதளவு பின்வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டது. ஆனால் பாக்கிஸ்தானின் ராணுவத் தலைமையானது, பின்லேடன் இப்பொழுது செயல்பட்டு கொண்டிருக்கும், ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு தலைமை வகிக்கவில்லை என்று அறிவித்தது.



பாக்கிஸ்தான் ராணுவத் தலைமை.....

பொதுமக்கள் மனங்கள்ளேயும், இதயங்கள்ளேயும் அது சட்டவிரோத இயக்கம்ணு பெரிசா பதிஞ்சிருக்கு! அல்கொய்தா தலைமை அது எங்கிருந்தா   லும் சரி அவங்களால இன்டர்நெட் மூலமாவோ இல்லை ரேடியோ மூலமாவோ, டெலிபோன் மூலமாவோ தொடர்பு கொள்ள முடியாத நிலையில இருக்காங்க! ஏன்னா அவங்க தீவிர கண்காணிப்பில இருக்காங்க! அல்கொய்தா தலைமை ஒரு தகவல் அனுப்பி அதற்கு பதில் போய் சேர வே கிட்டத்தட்ட இரண்டு மாசத்துக்கு மேல ஆயிடுச்சி! ஏன்னா? எல்லாமே மானிடர்கள் தான் கொண்டு போயிருக்காங்க!

அல்கொய்தா கிட்டத்தட்ட சமாதி கட்டப்பட்ட நிலையில் தான் இருக்குங்கறதை நாங்க நிறையவே உறுதிப் படுத்திக்கிட்டோம். அதனோட முதுகெலும்பு உடைக்கப்பட்டாச்சி. அது தன்னோட படைகளோட தொடர்பு கொள்ள முடியாது. அது தனிமைப் படுத்தப்பட்டாச்சு. இப்போ அது சாதரண அமைப்பா தான் இருக்கும்ணு நான் நம்பறேன்!

அல்கொய்தாவின் வீடியோ அது இன்னமும் செயல் பட்டுகொண்டிருக்கும் ஒரு அமைப்பாக தெரிகிறது என்றுதான் காட்டுகிறது. ஆனால் அல்கொய்தா இப்போது அல்கொய்தா வாதமாகவும் ஆகி வருகிறது. அதாவது உலகில் சுயமாக தொடங்கப்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கிறது. 1998 இல் பின்லேடனை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபரான ஜான் மில்லர் தற்போது எப் பி ஐ (FBI) யில் பணியாற்றி வருகிறார்.

நீங்க ஒரு பயங்கரவாதி விஷயமாகவோ இல்லை மாபியா குடும்ப விஷயமாகவோ இல்லை ஒரு தலைமையகத்தை வைச்சிகிட்டு இயங்கற அமைப்பு விஷயமாகவோ வேலை செய்யறீங்கன்னா அதோட மையத்தை கவனிக்கணும். அவைகளோட தகவல் தொடர்பை கவனிக்கணும். அவைகளோட தலைமையை பின்தொடரணும். அங்க கண்காணிக்க எந்த மையமோ இல்லை. ஏன்னா? அந்த மையம் வேற எங்க வேண்டுமானாலும் இருக்கலாம்.

நாம அல்கொய்தாவை ஒரு கட்டுகுள்ள இயங்கற அமைப்பா இல்லாம அழிச்சிட்டோம்னா ஒருவிதத்துல அதுல சேர்ரவங்களுக்கு தேவைப்படறது எல்லாம் ஒரு கருத்தும், லேப்டாப்பும் போதுங்கற அளவுக்கு அதை ஒரு நிறுவனக் கிளையா மாத்திட்டோம்.

வலைத் தளமும் 5000 ஜிகாதிய இணையத் தளங்களும் முடிந்தளவு தொலைதூரங்களுக்கு, அதாவது பாலி, மேட்ரிட்,  கசாபிளாங்க், இஸ்தான்பூல் மற்றும் இலண்டனில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு அல்கொய்தாவின் கொள்கைகளை பரப்பி வருகின்றன.

நடந்து முடிந்த சம்பவங்களின் தொகுப்பு, ஈராக், காசா, லெபனான் ஆகிய இடங்களில் அடக்குமறையை கேள்விக்குறியாக்கியதோடு, இஸ்லாமியப் பிரதான ஒட்டத்தில் ஒரு அங்கமாக, மதத்துக்கான புனிதப் போராக, தற்கொலைத் தாக்குதலுக்கு தயாரான, அவர்களின் எண்ணிக்கை பெருகிவருவது போல தோன்றியது.

நாங்க மக்களை எச்சரிக்கை பண்ணியாகணும். அவங்க தங்களோட கடந்த காலமான பின்லேடன் மற்றும் ஜவாஹிரியோட வழிகளை பின்பற்றக் கூடாது. அவங்க எந்தளவுக்கு அடக்கு முறைக்கும், மிரட்டலுக்கும் ஆளாகியிருந்தவங்களா இருந்தாலும் நாம குரானோட போதனைகளை கடைப்பிடிக்கணும், இந்த தவறான விளக்கங்களை ஏத்துக்க கூடாது. நான் அவங்களோட வன்முறை நிறைஞ்ச வழிகளை ஆதரிக்க மாட்டேன். ஆனா ஏன் குரானுக்கு தவறான விளக்கம் கொடுத்தாங்கன்னு புறிஞ்சிகிட்டேன்.. ஏன்னா? அவங்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளும் வன்முறைகளும், அதாவது,  ஹூம்மா அது என்னை பாதிக்குது.

நாங்க எதை நம்புறமோ? அதுக்காக எல்லாத்தையும் துற்க்க தயாராக இருக்கேன். இங்க ஜனநாயக ரீதியா தேர்ந்தெடுக்கப்பட்ட அராசாங்கங்கள், காலங்காலமா உலகம் பூரா இருக்கும் எங்க மக்களுக்கு எதிரா கொடுமைகள் பண்ணிகிட்டே இருக்கீங்க! அது எல்லாத்துக்கும் நீங்க தான் நேரடியா பொறுப்பேத்துகிட்டு அவங்களை அணைத்துக் காட்டணும். எங்க வார்த்தைகட்கு அந்தளவுக்கு அர்த்தம் உண்டு. அதோட ரத்தம் சிந்தாம இருக்கறதுக்கு நாங்க ஒண்ணும் கோழைகள் இல்லை.

ஒன்பது பதினொன்னுக்கப்புறம் (9/11) பின்லேடன் அமெரிக்காவத் தாக்காம இருந்ததுக்கு காரணம் என்னென்னா? கூட்டாளிகள் அந்த இரட்டை கோபுரத் தகர்ப்புக்கு முன்னாடி வரைக்கும் அவர் அமெரிக்கர்களை போதுமான அளவு எச்சரிக்கலைன்னு பின்லேடனை அதிகளவு விமர்சனம் பண்ணியிருக்காங்க! அதனால் நாங்க எங்க கொள்கையை மாத்திக்கலைன்னா மறுபடியும் தாக்குதலுக்கு ஆளாவோம்னு, பின்லேடன் அமெரிக்க மக்களுக்கு தனிப்பட்ட முறையில ஆறு தனித்தனி எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டிருக்காரு! அதனால் அது உண்மையான்னு சோதிச்சு பார்த்துக்கலாம், அவரு அதை பண்ணியிருக்காரு!. அவர் அமெரிக்க மக்கள் தலைவரா இருக்கற அதிபர் புஷ்ஷூக்கு மூணு வேறுபட்ட சமயங்கள்ல இஸ்லாம் மதத்துக்கு மாறச்சொல்லி சந்தர்ப்பம் கொடுத்திருக்காரு! நான் உங்க வழிகாட்டியா இருப்பேன்னும் சொல்லியி,ருக்காரு! இப்ப மேற்கத்திய நடைமுறைக்கேற்றார் போல் பார்த்தா இந்த இரண்டு விஷயமுமே ராம்ப தமாஷாத்தான் தெரியும். ஆனா இந்த இரண்டு கோரிக்கையுமே யுத்தம் நடத்த நபி காரணமா சொன்ன வசனங்களை பூர்த்தி பன்றதா இருக்கு!

ஒன்னு அவர்ங்களை எச்சரிக்கை பன்றது.
இரண்டு மதம் மாற அவங்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கறது.

அடுத்து மூனாவது பிரச்சினையா கண்டுபிடிச்சு எடுத்துகிட்டது ரொம்ப பிரபலமான அரேபிய ஷேக் ஒருத்தர் பெருவாரியா படுகொலை செய்யக்கூடிய ஆயுதங்களை, அதுவும் குறிப்பா அணு ஆயுதங்களை பயன்படுத்தறது சம்பந்தமா போட்டுகிட்ட ஒரு ஒப்பந்தம். அது அணு ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு கோடி அமெரிக்கர்களை கொல்றதற்கு முஜாகிதினுக்கு அதிகாரம் கொடுத்திருக்கு! இப்ப அவரால எந்த கோணத்திலேயும், எதை வைச்சும் எதை வேணும்னாலும் பண்ண முடியும். அதோட அவங்க நம்மள அமெரிக்காவிலத் தாக்க தயாராக இருக்காங்க என நான் நினைக்கிறேன்.

ஒசாமா பின்லேடன் ஒரு யுத்தத்தை மேற்கத்திய உலகுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அந்த யுத்தம் மேற்கத்திய பாதிப்பு எதுவும் இல்லாத ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ய ஸ்தாபிதத்துடன் தான் முடிவடையும் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஒரு கெடுநாளும் குறித்து இருக்கிறார். அது 2020 ஆம் ஆண்டு. ஒரு காலத்தில் அவர் ஆப்கானிஸ்தானிலிருந்த பொழுது, இஸ்லாமியர்களை தனது ஜிகாத்தில் வந்து சேரும்படி அழைப்பு விடுத்தார். இப்போது மிகத்தீவிரமான ஜிகாத் விளக்கத்தை உலகம் முழுமைக்கும் அவர்கள் கொண்டு செல்லவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஒசாமா....

“”கடவுள் எனக்கு உதவி செய்வார் என நான் நம்பறே! அதோட இறை நம்பிக்கை உள்ளவங்களை ஜிகாத்தை ஏத்துக்க வைப்பாரு! நம்ம மதம் வெற்றியடைய நாம இதைத்தான் செய்யணும்னு கடவுள் விரும்பறாரு!””
 ??????????????

,நன்றி டிஸ்கவரி சேனல். தமிழில்.ஒளிபரப்பியது..02.05.2011  குறிப்பு ஒசாமா பின்லேடன் அமெரிக்க உளவுப்படையால் கொல்லப்பட்டதும் அன்றுதான் ...அதிகாலை பாகிஸதான்...அப்போதாபாத் நகரில்.




No comments: