Pages

Wednesday 23 December, 2009

அன்பான கிறிஸ்துமஸ் தாத்தா வந்துவிட்டார்!







பெரிய மால் போன்ற வணிக வளாகத்தில் சான்டா கிளாஸ் எனப்படும் கிருஸ்துமஸ் தாத்தா இருப்பது அனைவருக்கும் தெரியும். அது அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்வூட்டுவதும் அனைவருக்கும் தெரியும். கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது ஒரு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் துவங்கியது தான். 

தற்போதய துருக்கி நாட்டில் பட்டார என்ற கிராமத்தில் 3 ஆம் நூற்றாண்டில் பிறந்த செயின்ட நிக்கோலஸ் காலத்தில் இயேசு பிறந்த நாளான்று பரிசு கொடுக்கவேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர். படிப்படியாக இப்படி வழங்கும் எண்ணம் ஒரு சிறப்பனதொருவரால் வழங்கவேண்டும் என்ற எண்ணம் நிக்கொலஸ் காலத்திற்கு பின் தோன்ற ஆரம்பித்தது.



இதை யார் வழங்குவது என்ற எண்ணம் தோன்றியபோது 19 (1873) ஆம் நூற்றாண்டில் கேலிச்சித்திரம் (caricature) மூலம் உருவானது தான்  இந்த சானடா கிளாஸ்.  இது செயின்ட் நிக்கோலஸ் குழுவால்  உருவாக்கப்பட்து. இதில் ஆண் படம் சான்டா, அதன் பெண் படம் கிளாஸ் (சான்டாவின் மனைவி) என்ற உருவங்களில் உருவாக்கப்பட்டது, பின்பு ஒரே மாதிரி உடை அணிந்து கிறிஸ்துமஸ் தாத்தாவாக அதாவது ஒரே உருவம் கொண்ட சான்டாகிளாஸ் (Santa Claus) என்ற உருவம் உருவானது. 


எப்படி திருவள்ளுவர் ஒரு கற்பனை உருவமோ? அது போன்றதோரு உருவம் தான் இந்த கிருஸ்துமஸ் தாத்தா உருவம். இது ஒரே மாதிரி தோற்றத்துடன் சமத்துவத்தை வலியுறுத்துவற்காக அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக  உடை தாயரிக்கப்பட்டு உருவமைக்கப்பட்டது.  இது குழந்தைகளை மிகக்கவரும் விதத்தில் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. மதச்சார்பற்ற இந்த உருவத்தை மதச்சார்ப்புள்ள கிருஸ்துவர் சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர். ""ஏசுநாதர் பிறந்த நாள் மதவிழாவை வணிகமாக்குகின்றனர்"". எனப்படுகிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வன்மையாக முன்வைக்கின்றனர். ஆனால் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் இந்த உருவத்தை விரும்புகிறார்கள் என்பது நிதர்சனம்.


இதுபற்றிய கதைகளும் சுவையயாக கூறப்படுகின்றது. இது குழந்தைகளுக்காக இந்த கதைகள் பின்பற்றப்படுகின்றன. ஐரோப்பா நாடுகளில் உள்ள துருவப்பகுதிகளில் பனிப்பிரேதசத்தில் உள்ள பாறைகளில் மறைந்திருப்பதாகவம், கனடா, அமெரிக்காவில் வடதுருவப்பகுதிகளில் மறைந்திருப்பதாகவும் கதைகள் நிலவுகின்றன. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இவை வெளிவருவதாகவும் கூறப்படுகின்றது.  இதற்காக போட்டிகளும் நடத்தப்படுகின்றது. இந்த போட்டிகளில் பங்கேற்பவர்கள் கடித போக்குவரத்து மேற்கொள்ள  முகவரியாக வடதுருவம், கனடா, அஞ்சல் குறியீட்டு எண்.  ( North pole, Canada, pin-code) போன்றவைகளையும் வெளியிடுகின்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை சான்டா கிளாஸ் வீடுதேடி வந்து வழங்குவார். இந்த போட்டிகளை கண்காணிக்க குழுவும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான விளம்பரங்களும், வருமானமும் வருகின்றது ஆக இதனால் அனைவரும், மதச்சார்பற்ற வழியில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த முறை பின்பற்றப்படுகின்றது.

2008 இல் போன்ஸ்லியா நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா தடைசெய்யப்பட்டது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் யார் வந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற தடையுத்தரவுடன் அமல்படுத்தப்பட்டது.  அந்நாட்டில் இசுலாமியர் அதிகம் வாழ்வதாலும், அது தனது மதச்சார்பை வெளிப்படுத்தும் நாடாக இருப்பதால் இந்த தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டது. மதச்சார்பற்ற கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஏற்பட்ட தடை என்றே அனைவரும் கருதினர்.

மதம் நிறுவனமாக மாறும்பொழுது, அனைத்து மாச்சர்யங்களும் வந்து விழுந்துவிடுகின்றது.  அதை சுற்றி தீயவைக்கும் அனைவரும் வந்துவிடுகிறார்கள். அன்பை காட்டிலும் சிறந்த மதம் உலகில் இருக்க முடியாது. கிறிஸ்துமஸ் தாத்தாவை அந்த அன்புடன் வரவேற்போம்.



----இன்று ஒரு தகவல்- பேராசிரியர் சுப.வீரபாண்டின்

No comments: