Pages

Wednesday 30 December, 2009

இந்திய தேசிய நுகர்வோர் (பூசல்கள்) குறை தீர்ப்பாணையம்




இந்திய தேசிய நுகர்வோர் (பூசல்கள்) குறை தீர்ப்பாணையம் (National Consumer Disputes Redressal Commission) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986, (Consumer Protection Act, 1986) இன் படி இந்தியாவின் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகள் மற்றும் பூசல்களை களையவும். நேர்மையற்ற, மனசாட்சியற்ற வணிக நோக்கர்களிடமிருந்து நுகர்வோர்களை பாதுகாக்கவும் இவ்வாணையம் இந்திய அரசால் கட்டமைக்கப்பட்டது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நுகர்வோரின் இன்னல்களை, துயர்களை துடைக்கும் பொருட்டு மற்றும் அதற்கான வடிவமைக்கப்பெற்ற சட்டத்தை அமல்படுத்தும் ஆணையமாக கடந்த சில ஆண்டுகளில் செயல்பட்டுவருகின்றது. இவ்வாணையம் மக்களின் குறைகளை விரைவில் தீர்க்க அணுகும் ஊர்தியாகவும், மக்களை பாதுகாக்கவும் மற்றும் செலவில்லாத குறை தீர்ப்பாணையமாகவும் மக்கள் அணுகும் விதத்தில் செயல்படுகின்றது.

இச்சட்ட அமலினால் நுகர்வோர் விற்பனையாளர்களிடம் எச்சரிக்கையுடனும்,   விழிப்புடன் இருக்க தங்களை தீர்மானித்துக் கொள்கின்றனர்.

இச்சட்ட அமலுக்கு முன் வாடிக்கையாளர்கள் விழிப்புடனும் அல்லது வாங்குபவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்ற நிலையில் நுகர்வோர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.


குறை தீர்வு மன்றம்

இச்சட்டம் வகுத்துள்ள நிபந்தனையின்படி மைய நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் ஒன்றை மைய அரசின் நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சர் தலைமையிலும்,  மாநிலத்தில் மாநில நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சரின் தலைமையிலும்  நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பொருட்டு மன்றம் அமைத்திடல் வேண்டும். அம்மன்றம் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை களைந்திட அல்லது தீர்வு கண்டிட வேண்டும்.
கட்டமைவு
தேசிய நுகர்வோர் ஆணையம் 1988  ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது. இதன் தலைமை பொறுப்பை அமர்வு அல்லது ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏற்றிருப்பார். தற்பொழுது தலைமை பொறுப்பை ஏற்றிருப்பவர் நீதியரசர் அசோக் பான். இவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் தலைவராகவும் அவருடன் கூடிய ஒன்பது பேர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

ஆணையத்தின் ஏற்பாடு
  • இச்சட்டம் வழங்கியுள்ள முன்னேற்பாடுகள் பொருட்கள் அதே நேரத்தில் சேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.
  • பொருட்கள் என்பவை எவரொருவர் அல்லது கூட்டு சேர்ந்தோ தயாரிப்பது அல்லது உருவாக்குவது மற்றும் அதனை மொத்த வணிகர் ம்ற்றும் சில்லரை வணிகரின் மூலமாக நுகர்வோருக்கு விற்பது. 
  • சேவைகள் என்பவை போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம், கட்டுமானம், வங்கி சார்ந்த (நிதி மனை சார்ந்த-பண இலேவாதேவி), காப்பீடு, மருத்துவ சிகிச்சை இன்னும் பல.,
  • சேவைகளாக பொதுவாக கூறுமிடத்து வாழ்க்கைத் தொழிலர்களான (Professionals) மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், வழக்குரைஞர்கள் இன்னும் பல., இது போன்றவைகளையும் குறிக்கின்றன.
    புகார் அளிக்க
    புகாரை நுகர்வோர் எழுத்துமூலமாக ஆணையத்திற்கு நேரிடையாகவோ அல்லது நுகர்வோரின் அதிகாரம் பெற்றவர் எவரும் அளிக்கலாம். அவர் வழக்குரைஞராக இருக்கவேண்டும் என்பதில்லை.  வழக்குகளையும் (புகார் தாரர்) நுகர்வோரே வழக்காடலாம் அல்லது அதிகாரம் பெற்ற எந்தவோரு நபரும் வழக்காடலாம். மனுதாரருக்கு (நுகர்வோருக்கு) துணை நிற்பவர் (உடன் உறைபவர்) எவரும் இலர் என்பதையுணர்ந்து, அப்புகாரின் நேர்மையைக் கருதி ஆணையமே வழக்குப் பிரதிநிதிகளை நியமிக்கின்றது . இம்முறை மேல்முறையீட்டிலும் பின்பற்றுகின்றது.

    புகார் ஏற்கும் முறை
    மாவட்ட ஆயம்                              ரூபாய் இருபது இலட்சம் வரை
    மாநில ஆணையம்                      ரூபாய் ஒரு கோடி வரை
    தேசிய ஆணையம்                      ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உள்ளவைகள்

    குறிப்பு இதனுள் அடங்கிய பொருள்களின்  மற்றும் சேவைகளின்  மதிப்புகளை அந்த குறிப்பிட்ட பொருள் சேவை இவைகளின் விலை மதிப்பை குறிப்பதாகும். இதன் பொருளை இலவச சேவைகளுக்கோ, ஒப்பந்த அடிப்படையில் சுய தேவைகளுக்காக ஏற்படுத்துகின்ற பொருளின் மதிப்பைக்குறிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சேவை என்பதற்கு மேற்கூறிய விளக்கத்தை ஒரு சுட்டிக்காட்டுபவையாக  எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர எல்லாம் அதனுள் அடங்கியதாக  எடுத்துக் கொள்ளக்கூடாது.

    கட்டணம் கிடையாது
    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மிகவும் மலிவான மாற்று இன்னல் நீக்கும் வழியாக நுகர்வோருக்கு ஏற்கனவே ஏற்பட்ட இன்னல்களை நீக்குவனவாக உரிமையியல் தீர்வின் மூலம் அவர் துயர்களை துடைக்கின்றது. புகார் / மேல் முறையீடு / மனு தாக்கல் செய்வதற்காக இச்சட்டம் வகுத்துள்ளபடி அவர்களிடம் (நுகர்வோரிடம்) எந்தவித கட்டணமோ, செயல் கட்டணமோ வசூலிப்பது கிடையாது.



    காலவிரயமின்றி
    இதன் சட்டமுறைமைகள், எளிமையானதாகவும், சுருக்கமானதாகவும் இருப்பதாலும், இதன் பெருமுயற்சி தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டிருப்பதால் இதன் வழக்குகள் வெகு விரைவில் தீர்வு காணப்படுகின்றன, வெகு விரவில் முடிக்கப்படுகின்றன.

    மேல்முறையீடு
    நுகர்வோருக்கு மாவட்ட ஆயத்தின் தீர்வு திருப்தியளிக்கவில்லையென்றால் மேல்முறையீட்டுக்கு மாநில ஆணையத்தை அணுகலாம் அதிலும் திருப்தியளிக்கவில்லையென்றால் தேசிய ஆணையத்தை அணுகலாம்.

    தேசிய ஆணையம் அமைந்துள்ள இடம்
    தேசிய ஆணையத்தின் பதிவு அலுவலகாமக புது தில்லி, ஜன்பத், உள்ள ஜன்பத் பவனில் பி பிரிவு (பி விங்) 7 வது தளத்தில்  அமைந்துள்ளது. ஆணையம் சனி, ஞாயிறு மற்றும் மைய அரசு விடுமுறை நாட்களைத் தவிர, அனைத்து நாட்களிலும் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 10 மணி முதல் 5 மணி வரை இயங்கும். ஆணையத்தை தொலைபேசி மூலம் அணுகுவதற்கு ஏதுவாக கீழ்கண்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 011-23712109, 23712459, 23389248. தொலை நகல் 23712456.  ஆணையங்கள் நுகர்வோரின் நண்பனாக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய ஆணையங்கள் செயல்படுகின்றன.
     நூல் ஆதாராம் Consumer Protection Act, 1986-K.S,Mahalingam. மற்றும் நூகர்வோர் தமிழ் சட்ட நூல்கள், மத்திய அரசு இணையதளம்.

    இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (The Consumer Protection Act, 1986 ) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.
    இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
    இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004  முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.

    முக்கிய கூறுகள்
    • இச்சட்டம் மைய அரசால்  விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைத் தவிர ஏனைய எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
    • அனைத்துறையின் எதுவாயினும், தனியார் மற்றும் பொதுத் துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது தனி நபர் இவை யாவரையும் கட்டுப் படுத்தும். இச்சட்டம் வகுத்துள்ளதின்படி இவர்கள் நட்டஈடு வழங்க அதே சமயத்தில் தடை செய்யவோ,தண்டணை  வழங்கவோ வழி செய்கின்றது.
    • நுகர்வோரை போற்றிப் பேணுகின்ற உரிமைகளாவன;-
    (1) உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை. (2) பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், எடை, வீரியம், கலப்படமற்ற, தரநிர்ணயம் மற்றும் விலை அறிந்து கொள்ளவும், நேர்மையற்ற வணிகத்தினரிடமிருந்து நுகர்வோர் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை. (3) மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத்தன்மையை நுகரவோருக்கு உறுதிபடுத்துதல் உரிமை. (4) மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிகத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை தெரிவிக்கும் உரிமை (5) நேர்மையற்றை வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை நாடுதல் உரிமை.

    No comments: